<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்</title><atom:link href="https://tamil.abplive.com/news/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 03:57:25 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சீர்காழியில் அஜித் பிறந்த நாளும் அசைவ விருந்தும்...!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkali-actor-ajith-kumar-55th-birthday-celebration-fans-tnn-258110</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkali-actor-ajith-kumar-55th-birthday-celebration-fans-tnn-258110#respond</comments><pubDate>Fri, 1 May 2026 22:28:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkali-actor-ajith-kumar-55th-birthday-celebration-fans-tnn-258110</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகவும், பன்முகத்தன்மை கொண்ட கார் பந்தய வீரராகவும் திகழும் நடிகர் அஜித்குமாரின் 55-வது பிறந்தநாள் மே 1 -ம் தேதி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் மிக விமர்சையாக நடைபெற்ற கொண்டாட்டங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட அஜித் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். ரியாஸ் தலைமை தாங்கினார். கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தீவிர அஜித் ரசிகர் கிஷோர், இந்த பிறந்தநாள் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்திருந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் தொடக்கமாக, அஜித்குமாரின் உருவம் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான கேக் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். ரியாஸ் கேக் வெட்டி, அங்கு திரண்டிருந்த சிறுவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார். &quot;தல&quot; என அன்போடு அழைக்கப்படும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அசைவ விருந்து&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடம்பர கொண்டாட்டங்களுடன் நின்றுவிடாமல், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் இந்த விழா அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேகமாக அசைவ மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் முக்கிய நிகழ்வாக, கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானோருக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். ரியாஸ் மற்றும் ரசிகர் கிஷோர் ஆகியோர் கையால் மதிய உணவு வழங்கப்பட்டது. சுடச்சுட பரிமாறப்பட்ட இந்த உணவை உண்டு மகிழ்ந்த கிராம மக்கள், ரசிகர்களின் இந்த நற்பணியைப் பாராட்டி அஜித்குமார் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரசிகர்களின் நெகிழ்ச்சிப் பேச்சு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் பேசிய மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். ரியாஸ் தெரிவித்ததாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;எங்கள் நாயகன் அஜித் சார் எப்போதும் சொல்லும் 'வாழு வாழ விடு' என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப, அவரது பிறந்தநாளை ஆடம்பரமாக மட்டும் கொண்டாடாமல், எளிய மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இன்று கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கியது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.&quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏற்பாட்டாளர் கிஷோர் பேசுகையில், &quot;திரையில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழும் அஜித்குமார் அவர்களின் 55-வது பிறந்தநாளை எங்களது கிராமத்தில் கொண்டாடியது பெருமையாக உள்ளது. மாவட்டத் தலைவரின் வழிகாட்டுதலின்படி இந்த நற்பணித் திட்டம் சிறப்பாக நடைபெற்றது,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரண்ட ரசிகர்கள்: விழாக்கோலம் பூண்ட சீர்காழி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தக் கொண்டாட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அஜித் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அஜித்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களால் கீழப்பெரும்பள்ளம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் #HappyBirthdayAjithKumar என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வரும் நிலையில், கிராமப்புறங்களில் நடைபெறும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் அஜித்தின் ரசிகர் மன்றங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/1589b821a9a0694d714d1008045ea87e1777654698426186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-sirkazhi-karaimedu-youth-murder-tnn-258109</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-sirkazhi-karaimedu-youth-murder-tnn-258109#respond</comments><pubDate>Fri, 1 May 2026 21:59:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-sirkazhi-karaimedu-youth-murder-tnn-258109</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பனை நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவரை அவரது உறவினரே நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா காரைமேடு மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். தற்போது கோடை காலம் என்பதால், இருவரும் இணைந்து பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டி எடுத்து வந்து, சூரக்காடு பகுதியில் சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனை செய்து வந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உறவினர்கள் என்பதால் இருவரும் ஒருமித்த கருத்துடன் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விற்பனை செய்த பணத்தை வைப்பதிலும், கணக்கு பார்ப்பதிலும் இவர்களுக்குள் மனக்கசப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விற்பனைக்கான தொகையை மருதுபாண்டியன் தன்னிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கார்த்திக் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நள்ளிரவு நடந்த கோர சம்பவம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், நேற்று இரவு கார்த்திக் வழக்கம் போல மருதுபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, மருதுபாண்டியன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். கார்த்திக் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்துடன் கார்த்திக் ஆவேசமாக எழுந்துள்ளார். வீட்டின் தகரக் கதவை பலவந்தமாகத் திறந்து உள்ளே சென்ற கார்த்திக், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருதுபாண்டியனிடம், &quot;மூன்று நாட்களாகப் பனங்காய் விற்ற பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை?&quot; என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மருதுபாண்டியன் சுதாரிப்பதற்குள், கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மருதுபாண்டியனின் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மருதுபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி, ரத்தக் கறையுடன் நின்றிருந்த கார்த்திக்கைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸ் விசாரணை மற்றும் கைது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து உடனடியாக சீர்காழி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரத்த வெள்ளத்தில் கிடந்த மருதுபாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக் குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது, அதே பகுதியில் மது போதையில் சுற்றித் திரிந்த கார்த்திக்கைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆரம்பக் கட்ட விசாரணையில், நுங்கு விற்பனை செய்த பணத்தை மருதுபாண்டியன் தராமல் ஏமாற்றியதால், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகக் கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிராமத்தில் நிலவும் பதற்றம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நெருங்கிய உறவினர்களாக இருந்து, ஒன்றாகத் தொழில் செய்து வந்த இருவருக்குள் பணத்திற்காக நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் காரைமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மருதுபாண்டியனுக்குத் திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். ஒரு சிறிய பணத்தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு (IPC 302) பதிவு செய்துள்ள சீர்காழி போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாகச் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/3f4835a116b827774711e1b452016c3d1777652931648186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?]]></title><link>https://tamil.abplive.com/auto/bajaj-pulsar-ns400z-gets-rs-24-500-cheaper-349-cc-engine-launched-automobile-news-258106</link><comments>https://tamil.abplive.com/auto/bajaj-pulsar-ns400z-gets-rs-24-500-cheaper-349-cc-engine-launched-automobile-news-258106#respond</comments><pubDate>Fri, 1 May 2026 21:46:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/bajaj-pulsar-ns400z-gets-rs-24-500-cheaper-349-cc-engine-launched-automobile-news-258106</guid><description><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் பஜாஜ். இவர்களின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனம் பல்சர். பல்சரின் பல்வேறு வேரியண்ட்களும், மாடல்களும் இந்திய சந்தையில் படுஜோராக விற்பனை அடைந்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;Pulsar NS400Z:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த சூழலில், பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய இரு சக்கர வாகனம் Pulsar NS400Z. இந்த பைக் 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரூம்ப் மற்றும் கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றத்திற்கு பிறகு இந்த இரு சக்கர வாகனம் அறிமுகமாவதால் இதன் விலை இதன் வழக்கமான விலையைக் காட்டிலும் ரூபாய் 24 ஆயிரத்து 500 குறைவாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விலை என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்து 92. இதற்கு முன்பு 373.2 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் தற்போது வாடிக்கையாளர்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. க்யூக் ஷிப்டர், ட்ராக்ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி, ரேடியல் சக்கரங்கள், ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதிகள் உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மைலேஜ்:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த பைக் 6 கியர்களை கொண்டது. 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் எடுத்துள்ளது. 174 கிலோ எடை கொண்டது. 12 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வரை உள்ளது. 35 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 157 கிலோமீட்டர் வரை அதிகபட்ச வேகத்தில் செல்லலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டும். 384 கிலோமீட்டர் வரை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் செல்லலாம். ரோட், ரெயின், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஃப்ரோட் மோடில் உள்ளது. டிஸ்க் முன்பக்கமும், பின்பக்கமும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ், மோனோஷாக் அப்சார்ப்ர்ஸ் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மில்லி மீட்டர், 1.9 லிட்டர் ரிசர்வ் டேங்க் வசதி உள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. நேவிகேஷன் வசதி கொண்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;எந்த கார் வாங்கினால் காசு மிச்சமாகும்? - சிஎன்ஜி vs ஹைப்ரிட் vs மின்சார கார்கள்!&quot; href=&quot;https://tamil.abplive.com/auto/cng-hybri-electric-car-which-is-best-for-daily-use-automobile-news-258059&quot; target=&quot;_self&quot;&gt;எந்த கார் வாங்கினால் காசு மிச்சமாகும்? - சிஎன்ஜி vs ஹைப்ரிட் vs மின்சார கார்கள்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/amazing-benefits-of-eating-mint-pudina-in-summer-258066&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/3e85a20c4d33edbf5cb5bd681e019cdb1777652067526102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Patriot Review: உளவு பார்க்கப்படும் மக்கள்.. மிரட்டலான கதை.. எப்படி இருக்கு பேட்ரியாட் படம்?]]></title><link>https://tamil.abplive.com/entertainment/mammootty-mohanlal-fahadh-faasil-starring-patriot-movie-review-in-tamil-258105</link><comments>https://tamil.abplive.com/entertainment/mammootty-mohanlal-fahadh-faasil-starring-patriot-movie-review-in-tamil-258105#respond</comments><pubDate>Fri, 1 May 2026 21:28:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/mammootty-mohanlal-fahadh-faasil-starring-patriot-movie-review-in-tamil-258105</guid><description><![CDATA[&lt;p&gt;மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள மலையாளத்தில் வெளியான பேட்ரியாட் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;Patriot படம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மலையாளத்தில் இயக்குனர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள படம் &amp;ldquo;பேட்ரியாட் (Patriot). இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் , நயன்தாரா மற்றும் ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்த படம் மே 1ம் தேதி இன்று வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பற்றிய விமர்சனத்தைக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;படத்தின் கதை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அறிவியல் ஆய்வாளரான டாக்டர் டேனியல் ஜேம்ஸ் (மம்மூட்டி) என்பவருடன் DRW என்ற அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு பொய்யான வழக்கு காரணமாக அவரின் வேலை பறிபோகும் நிலை ஏற்படுகிறது. இதனால் லண்டனுக்கு செல்லும் முடிவை எடுக்கிறார். அங்கு விமதன் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறார். அதில் பொதுமக்கள் தங்கள் மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் மூலம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறார்கள் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Karunas Slams Vijay | &amp;quot;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; முதலமைச்சரா? இது என்ன காமெடி&amp;rdquo; வச்சுசெய்த கருணாஸ் | TVK Vijay&quot; src=&quot;https://www.youtube.com/embed/6nqw_YswSvk&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்படியாக ஃபகத் ஃபாசில் நடத்தும் நிறுவனத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு சாதனங்களில் ரகசியமாகப் பொருத்தப்படும் ஒரு கண்காணிப்புச் செயலியை மம்மூட்டி அம்பலத்தப்பட்ட முயல்கிறார். ஆனால் அவர் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி மேலும் ஆராய்ச்சி செய்யும் மம்மூட்டிக்கு &amp;nbsp;இந்திய ஆயுதப் படைகளில் பணியாற்றும் பல உறுப்பினர்களின் உதவியுடன் தேசிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு சதி பற்றி தெரிய வருகிறது. இதனை எப்படி மம்மூட்டி முறியடித்தார் என்பதே இப்படத்தின் கதையாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;நடிப்பு எப்படி?&lt;/h2&gt;
&lt;p&gt;மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்தே ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அளவில் மகேஷ் நாராயணன் திரைக்கதை அமைத்துள்ளார். பல துணைக்கதைகள் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் நிலையில் எல்லாம் படத்துடன் இணைவதால் தொய்வு தெரிவதில்லை. அவை அனைத்தும் படத்தின் இடைவேளையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அமைகிறது. மோசடிகள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது போன்றவை சாதாரண மக்களுக்கு எதிராக அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது பற்றி தெரிவிப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் ஆச்சரியமூட்டுவதாக அமையும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் ஆணி வேராக மம்மூட்டி செயல்படுகிறார். முழு படத்தையும் தன்னுடைய நடிப்பு மூலம் ஈடு செய்கிறார். ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ரேவதி, இந்திரன்ஸ், பிரகாஷ் பெலவாடி என அனைவரும் கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். கர்னல் ரஹீம் நாயக்காக வரும் &lt;a title=&quot;மோகன்லால் &quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/actor-mohan-lal-stepping-down-in-amma-organisation-184837&quot; target=&quot;_self&quot;&gt;மோகன்லால் &lt;/a&gt;சிறிது நேரம் வந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; ஆனால் &lt;a title=&quot;நயன்தாரா&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/nayanthara&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;நயன்தாரா&lt;/a&gt; கேரக்டருக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு இடத்தில் படம் தொய்வடைவதாக இருந்தாலும், அடுத்த காட்சி மூலம் அதனை சரிசெய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. சண்டை காட்சிகள் சில இடங்களில் தனித்து தெரிவது மைனஸாக உள்ளது. ஆனால் விமான சண்டை காட்சி, மருத்துவமனை சண்டைக் காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பொறுமையும், ரசிக்கும் மனப்பான்மையும் இருந்தால் பேட்ரியாட் நிச்சயம் உங்களை கவரும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/3f4d4a57a77d2fb6fd4275ebee48bf2817776509637271322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Sasikumar: "சசிகுமார் எனும் ஃபீனிக்ஸ் பறவை.." புகழாரம் சூடிய நந்தன் பட இயக்குனர்!]]></title><link>https://tamil.abplive.com/entertainment/director-ira-saravanan-said-actor-director-sasikumar-is-phoenix-bird-258104</link><comments>https://tamil.abplive.com/entertainment/director-ira-saravanan-said-actor-director-sasikumar-is-phoenix-bird-258104#respond</comments><pubDate>Fri, 1 May 2026 20:52:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/director-ira-saravanan-said-actor-director-sasikumar-is-phoenix-bird-258104</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர் சசிகுமார். இவர் தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தின் வெற்றி குறித்து சசிகுமாரின் நண்பரும், இயக்குனருமான இரா.சரவணன் பதிவிட்டுள்ளதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;டூரிஸ்ட் ஃபேமிலி:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;ldquo;சசிகுமார் அவ்வளவுதான்&amp;rdquo; எனப் பலரும் முடிவு கட்டிவிட்ட நேரத்தில், பீனிக்ஸ் பறவையைப்போல் அவரை எழ வைத்த படம் &amp;lsquo;டூரிஸ்ட் ஃபேமிலி&amp;rsquo;. படம் ரிலீஸாகி இன்றோடு ஒரு வருடம். படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் சசி சார் போன் பண்ணினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;நல்லா ஷூட் பண்றாங்க. படம் அருமையா வந்துட்டு இருக்கு. ஆனா, பட்ஜெட் மட்டும் ஜாஸ்தியாகும் போல&amp;hellip; யுவராஜ்கிட்ட பேசி கொஞ்சம் சிக்கனமா பண்ணச் சொல்லுங்க. நம்மளை நம்பி முதல் போடுறாங்க. நாளைக்கு அவங்க சங்கடப்பட்டு நின்னுடக் கூடாது&amp;rdquo; என்றார் சசிகுமார் சார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;&amp;ldquo;சசிகுமார் அவ்வளவுதான்&amp;rdquo; எனப் பலரும் முடிவு கட்டிவிட்ட நேரத்தில், பீனிக்ஸ் பறவையைப்போல் அவரை எழ வைத்த படம் &amp;lsquo;டூரிஸ்ட் ஃபேமிலி&amp;rsquo;. படம் ரிலீஸாகி இன்றோடு ஒரு வருடம்&amp;hellip;&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் சசி சார் போன் பண்ணினார். &amp;ldquo;நல்லா ஷூட் பண்றாங்க. படம் அருமையா வந்துட்டு&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/FqONAHtgKb&quot;&gt;pic.twitter.com/FqONAHtgKb&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; இரா.சரவணன் (@erasaravanan) &lt;a href=&quot;https://twitter.com/erasaravanan/status/2050190000134979877?ref_src=twsrc%5Etfw&quot;&gt;May 1, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூபாய் 100 கோடி வசூல்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தம்பி யுவராஜுக்கு போன் பண்ணி பல விஷயங்களைப் பேசிவிட்டு இறுதியாக, &amp;ldquo;படத்தைக் கொஞ்சம் சிக்கனமா பண்ணுங்க தம்பி&amp;hellip;&amp;rdquo; என்றேன். எதிர்முனையில் பதில் இல்லை. &amp;ldquo;இப்பெல்லாம் சசி சாருக்கு பெரிய பிசினஸ் இல்லப்பா.. அகலக்கால் வைக்காதீங்க&amp;rdquo; என்றேன் வெளிப்படையாய்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;சார், தயவுபண்ணி சசி சாரை குறைச்சு மதிப்பிடாதீங்க. அவர் 100 கோடி பிசினஸ்க்கு வொர்த்தான ஹீரோ. இந்தப் படம் நிச்சயம் ஒரு மேஜிக் பண்ணும். நீங்க பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்காதீங்க சார்&amp;rdquo; என்றார் யுவராஜ். அவர் சொன்னது போலவே 100 கோடிக்கான வசூல் பட்டியலில் இணைந்து வாகை சூடியது &amp;lsquo;டூரிஸ்ட் ஃபேமிலி&amp;rsquo; படம்!&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பந்தய குதிரை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;ldquo;சசி சார் அவ்வளவுதான்&amp;rdquo; எனச் சொன்னவர்களே அவருடைய தேதிக்காக இன்றைக்கு க்யூவில் நிற்கிறார்கள். பந்தயக் குதிரையாக மறுபடியும் பாய்ச்சல் காட்டத் தொடங்கிவிட்டார்&amp;nbsp;சசிகுமார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அத்தனை பேரும் கோடி நன்றிக்குரியவர்கள்.&amp;nbsp;&amp;ldquo;இங்கே யாரும் அகதி இல்லை&amp;rdquo; என ஓங்கி உரைத்த &amp;lsquo;டூரிஸ்ட் ஃபேமிலி&amp;rsquo; நிச்சயம் காலம் கடந்தும் பேர் சொல்லும் காவியமாக நிலைத்திருக்கும்!&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;சசிகுமார் முதன்முதலில் இயக்கி நடித்த திரைப்படம் சுப்பிரமணியபுரம். இந்த படம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததால் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, வெற்றிவேல் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை அளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்பின்பு, சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில், அயோத்தி, கருடன், நந்தன் என தரமான படங்களில் நடித்தார். இந்த சூழலில், கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. இனிமேல் தான் இருக்கு கதையே.. கௌதம் ட்வீட்!&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/gautham-vasudev-menon-emotional-tweet-about-dhruva-natchathiram-release-258102&quot; target=&quot;_self&quot;&gt;Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. இனிமேல் தான் இருக்கு கதையே.. கௌதம் ட்வீட்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/amazing-benefits-of-eating-mint-pudina-in-summer-258066&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/4951e29b6e185bbf3897c9632d3e20ed1777648893108102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Anbumani Ramadoss: வெற்றி நமதே.. விழிப்புடன் இருங்கள்.. அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!]]></title><link>https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103</link><comments>https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103#respond</comments><pubDate>Fri, 1 May 2026 20:39:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103</guid><description><![CDATA[&lt;p&gt;வாக்கு எண்ணிக்கை நாளில் அதிமுக, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் நிலையில் பதிவான வாக்குகள் அனைத்து மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியான நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களாக செயல்படுபவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி பாமக தலைவர் &lt;a title=&quot;அன்புமணி ராமதாஸ் &quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/chief-minister-deprived-tamil-nadu-s-20-women-mps-of-the-opportunity-anbumani-alleges-256747&quot; target=&quot;_self&quot;&gt;அன்புமணி ராமதாஸ் &lt;/a&gt;வெளியிட்டுள்ள பதிவில், &amp;ldquo;தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக - பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;EPS Family Tiruchendur Darshan| பக்தி பரவசத்தில் EPS மனைவி முருகன் கோயிலில்மகன் மருமகளுடன் தரிசனம்&quot; src=&quot;https://www.youtube.com/embed/eZrUhvlDU-E&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு - பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க. பா.ஜ.க. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்&amp;rdquo; என அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/1cadf91bdaf113e601dc02aaddc5253b17776480947871322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. இனிமேல் தான் இருக்கு கதையே.. கௌதம் ட்வீட்!]]></title><link>https://tamil.abplive.com/entertainment/gautham-vasudev-menon-emotional-tweet-about-dhruva-natchathiram-release-258102</link><comments>https://tamil.abplive.com/entertainment/gautham-vasudev-menon-emotional-tweet-about-dhruva-natchathiram-release-258102#respond</comments><pubDate>Fri, 1 May 2026 20:06:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/gautham-vasudev-menon-emotional-tweet-about-dhruva-natchathiram-release-258102</guid><description><![CDATA[&lt;p&gt;துருவ நட்சத்திரம் படம் வெளியாவதை சிலர் தடுக்க முயன்றதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான படம் &amp;ldquo;துருவ நட்சத்திரம்&amp;rdquo;. &amp;nbsp;காதல் மற்றும் ஆக்&amp;zwnj;ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட கௌதம் மேனன் இந்த படத்தை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;முதலில் சூர்யா நடிக்கவிருந்து இதில் விலக ஹீரோவாக விக்ரம் உள்ளே வந்தார். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா,பார்த்திபன், சிம்ரன், ப்ரித்விராஜ் சுகுமாறன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ள &lt;a title=&quot;துருவ நட்சத்திரம்&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/director-gautham-menon-apologies-to-fans-for-dhruva-natchathiram-not-releasing-today-152193&quot; target=&quot;_self&quot;&gt;துருவ நட்சத்திரம்&lt;/a&gt; டீசர் 2018ம் ஆண்டு வெளியானது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Karunas Slams Vijay | &amp;quot;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; முதலமைச்சரா? இது என்ன காமெடி&amp;rdquo; வச்சுசெய்த கருணாஸ் | TVK Vijay&quot; src=&quot;https://www.youtube.com/embed/6nqw_YswSvk&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கொரோனா ஊரடங்கிற்குப் பின் துருவ நட்சத்திரம் படம் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் போனது. இதற்கிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் பல படங்களில் நடிக்கச் சென்றார். தனக்கு கடன் இருப்பதால் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். பார்க்கும் அத்தனை படங்களிலும் அவர் இருந்தால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வருத்தமடைந்தனர். அதேசமயம் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.2023ம் ஆண்டு முதல் அவ்வப்போது துருவ நட்சத்திரம் பற்றி அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடைசி நேரத்தில் படம் வெளியாகாமல் போவதும் வாடிக்கையாக இருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியான நிலையில் பைனான்ஸ் பிரச்னையால் சிக்கியுள்ள துருவ நட்சத்திரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிட வேண்டும் என உத்தரவை பிறப்பித்தார். இதனால் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், &amp;ldquo;சிலர் எனது திரைப்பணியை அழிக்கவும், நூற்றுக்கும் மேற்பட்டோரின் உழைப்பால் உருவான எனது திரைப்படம் வெளியாவதைத் தடுக்கவும் முயன்றனர்.&lt;br /&gt;ஆனால் எனது சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீது எனக்கு ஒரு தீர்வு உண்டு என்று உறுதியளித்து, என்னை அந்தப் பாதையில் வழிநடத்திச் சென்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்போது, ​​மிக முக்கியமான ஒருவரான நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி எனக்கான பாதையை அமைத்துத் தந்துள்ளார்; இதன் மூலம், இறுதியாக அந்த இருண்ட சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் தென்பட்டுள்ளது. 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாவதற்கு வழிவகுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவு, முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி நிர்வாகம் அரிதாகவே பின்பற்றப்படும் இத்துறையில், சிக்கலில் சிக்கும் எத்தகைய திரைப்படங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.&amp;nbsp; இங்கிருந்து, இனி எமது பயணம் மேன்மையை நோக்கியே அமையும்&amp;rdquo; என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/38f1ae1c74a65164c14baef45ab4727917776461392041322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/tn-election-2026-result-day-may-4-sweets-crackers-flowers-sale-heavy-258101</link><comments>https://tamil.abplive.com/news/politics/tn-election-2026-result-day-may-4-sweets-crackers-flowers-sale-heavy-258101#respond</comments><pubDate>Fri, 1 May 2026 19:56:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/tn-election-2026-result-day-may-4-sweets-crackers-flowers-sale-heavy-258101</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆட்சி யாருக்கு?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பட்டாசு விற்பனை படுஜோர்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு ஆதரவாக முடிவுகள் வெளியாகும் என்று ஆவலுடன் உள்ளனர். இதற்காக, அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாட்டத்திற்காக பட்டாசுகளும் தயாராக வாங்கி வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சிவகாசியில் உள்ள பல்வேறு பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, பட்டாசு தயாரிப்பும் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் பட்டாசுகளை ஆர்டர் அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பூ, இனிப்பு, பொன்னாடைகள் விற்பனை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்துவதற்கு பலரும் மாலை வாங்கிச் செல்வது வழக்கம். இதனால், மாலைகள் விற்பனையும் நாளை மறுநாள் சூடுபிடிக்கும். பூக்களும் வழக்கத்தைவிட அதிகளவு இறக்குமதி செய்ய பூ வியாபாரிகள் தயாராக உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுமட்டுமின்றி வெற்றியைக் கொண்டாட இனிப்புகளும் மிகப்பெரிய அளவில் வழங்கப்படும் என்பதால் இனிப்புகள் விற்பனையும் அதிகளவு இருக்கும். இதுதவிர, பொன்னாடைகள், பூங்கொத்துக்கள் விற்பனையும் அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்காகவும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி போஸ்டர் அடிப்பது வழக்கம் என்பதால், போஸ்டர்கள் அடிக்கும் அச்சு நிறுவனங்களிலும் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மிகப்பெரிய எதிர்பார்ப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த தேர்தலில் நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பாலான நிறுவனங்கள் திமுக-வே வெற்றி பெறும் என்று கணித்துள்ளனர். இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, தவெக தமிழ்நாட்டில் அதிகளவு இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாத சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;TVK Vijay: 'பொது அறிவு இருக்காது&amp;rsquo; - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/actress-vinodhini-vaivaidynathan-slams-tamilnadu-women-who-cast-their-vote-for-tvk-vijay-258075&quot; target=&quot;_self&quot;&gt;TVK Vijay: 'பொது அறிவு இருக்காது&amp;rsquo; - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-to-check-watermelon-is-sweet-or-not-know-tips-in-tamil-258099&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/d0bfed2e5688723b969122af6c0b78541777645287597102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100#respond</comments><pubDate>Fri, 1 May 2026 19:31:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-vaiko-asked-tvk-performance-in-tamil-nadu-elections-2026-258100</guid><description><![CDATA[&lt;p&gt;தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தவெக ஆச்சரியம் அளிக்கும்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பேசினார். அதில், &quot;தேர்தல் முடிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நான்கு கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. ஒரு கருத்துக் கணிப்பு அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக உள்ளது. மற்றொரு கருத்துக் கணிப்பு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறது. இப்படியாக&amp;nbsp; &amp;nbsp;தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னுடைய நம்பிக்கை திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Karunas Slams Vijay | &amp;quot;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; முதலமைச்சரா? இது என்ன காமெடி&amp;rdquo; வச்சுசெய்த கருணாஸ் | TVK Vijay&quot; src=&quot;https://www.youtube.com/embed/6nqw_YswSvk&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;தமிழக வெற்றிக் கழகம்&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/actress-vinodhini-vaivaidynathan-slams-tamilnadu-women-who-cast-their-vote-for-tvk-vijay-258075&quot; target=&quot;_self&quot;&gt;தமிழக வெற்றிக் கழகம்&lt;/a&gt; இந்த தேர்தலில் ஒரு வலுவான சக்தியாக திகழும். மேலும் அது ஆச்சரியங்களை அளிக்கக்கூடும். முடிவுகள் அறிவிக்கப்படும்போது ​​மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவாக ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது&amp;rsquo; எனவும் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எனது மிகப்பெரிய சாதனை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மே தினம் பற்றி வைகோ பேசுகையில், &amp;ldquo;1886 ஆம் ஆண்டு மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு என்ற தங்களது உரிமைகளைக் கோரி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது தொழிலாள வர்க்கத்தின் இந்த மாபெரும் எழுச்சியை அடக்க காவல்துறையும் இராணுவமும் தங்கள் பலத்தைப் பயன்படுத்தின. இதில் பலர் கொல்லப்பட்டனர். 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானபோது, ​​அவர் மே 1 ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்து அதைக் கொண்டாடினார். 1990 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ​​நான் இந்தப் பிரச்சினையை எழுப்பி, மே தினத்தை மத்திய அரசு விடுமுறையாக அறிவிக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் அதற்கு இணங்கி, அதே நாளில் அதை அறிவித்தார். எனது பொது வாழ்வில், மே 1 ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது எனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்&quot; என தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாஜக ஊடுருவ முயற்சி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026 ஆம் ஆண்டு கேரளா மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் குறித்த கேள்விக்கு,&amp;nbsp; &quot; இரு மாநிலங்களிலும் பாஜக ஊடுருவ முயற்சிக்கிறது. கேரளாவில் அது மிகவும் கடினமாக இருக்கும். அவர்களால் முடியாது. ஆனால் மேற்கு வங்கத்தில் நிலைமை வேறுவிதமாக இருக்கலாம். இருந்தாலும் நாம் பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும்&amp;rdquo; என்றும் வைகோ கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/5af9d6324c05327a10ddad4a4822642117776439780541322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்]]></title><link>https://tamil.abplive.com/news/india/5-tamil-nadu-people-died-in-jabalpur-boat-tragedy-258098</link><comments>https://tamil.abplive.com/news/india/5-tamil-nadu-people-died-in-jabalpur-boat-tragedy-258098#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:43:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/5-tamil-nadu-people-died-in-jabalpur-boat-tragedy-258098</guid><description><![CDATA[&lt;p&gt;மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் &amp;nbsp;சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;மத்தியப் பிரதேசத்தின்&quot; href=&quot;https://tamil.abplive.com/crime/33-year-old-killed-by-married-lover-body-dumped-in-septic-tank-in-bhopal-crime-affair-murder-250161&quot; target=&quot;_self&quot;&gt;மத்தியப் பிரதேசத்தின்&lt;/a&gt; ஜபல்பூரில் பர்கி அணைக்கு அருகில் உள்ள நர்மதா ஆற்றில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து படகு பயணம் மேற்கொள்கின்றனர். இப்படியான நிலையில் நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் படகில் ஆற்றில் பயணித்தனர். அப்போது திடீரென வானிலை கடுமையாக மோசமடைந்தது. இதனால் பலத்த காற்று அடைத்ததால் படகு கவிழ்ந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Mamata Banerjee | வாக்கு இயந்திரங்களில் மோசடி! பகீர் CCTV காட்சி! நேரிலேயே போன மம்தா | West bengal&quot; src=&quot;https://www.youtube.com/embed/pOohWyqOxDU&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதில் படகில் இருந்த அனைவரும் நீருக்குள் மூழ்க தொடங்கினர். அவர் லைஃப் ஜாக்கெட் போடாமல் இருந்தது, நீச்சல் தெரியாததால் ஏற்பட்ட பயம் காரணமாக அனைவரும் நீரில் பரிதவித்தனர். இதுவரை அந்த சுற்றுலா படகில் இருந்து 28 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இன்னும் 6 பேரை தேடும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை இணைந்து படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த படகில் பயணித்த பல பயணிகள் அதனை இயக்கியவரிடம் நிலைமை மோசமாக இருப்பதால் திரும்பி செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அதனை படகை இயக்கியவர் கேட்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சுற்றுலாப் பயணிகளின் அபாயக் குரலைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த&amp;nbsp; கட்டுமானத் தொழிலாளர்கள் முதலில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் கயிறு மூலம் நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். நேற்று நான்கு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை 5 உடல்கள் மீட்கப்பட்டது. இதனை மத்தியப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் தர்மேந்திர பாவ் சிங் லோதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பான உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தத் துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அறிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மீட்கப்பட்டவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களில் ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் அடங்குவர். இன்று காலை அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. குழந்தையைக் காப்பாற்றும் தீவிர முயற்சியில் தாய் மகனை மார்போடு அணைத்தபடி மீட்கப்பட்டது பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இதனைக் கண்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தர்மேந்திர பாவ் சிங் லோதி கண் கலங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விபத்தில் அங்கு வேலை பார்க்கும் தமிழ்நாட்டின் திருச்சி அண்ணாநகரைச் சேர்ந்த காமராஜ் என்பவரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவரது உறவினர்கள் கோடை விடுமுறைக்காக அங்கு சென்றிருக்கும் நிலையில் படகு பயணம் மேற்கொண்டனர். படகு கவிழ்ந்த நிலையில் அதில் பயணம் செய்த காமராஜ், கார்குழலி, சௌபாக்கியம் ஆகியோருடன் தமிழ்வேந்தன், மயூரன் ஆகிய சிறுவர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/1c34a82cdbf205ad02bee7821940a65417776406459951322_original.jpg" width="220"/></item></channel></rss>