<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>dharmapuri</title><atom:link href="https://tamil.abplive.com/dharmapuri/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 17:29:28 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மனைவி, மகளை கொன்று தற்கொலை; இறப்பதற்கு முன் தொழிலதிபர் வெளியிட்ட கடைசி வீடியோ!]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-businessman-dies-by-suicide-after-killing-wife-and-daughter-final-video-released-before-death-265710</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-businessman-dies-by-suicide-after-killing-wife-and-daughter-final-video-released-before-death-265710#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:50:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-businessman-dies-by-suicide-after-killing-wife-and-daughter-final-video-released-before-death-265710</guid><description><![CDATA[&lt;p&gt;மகள் , மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை &amp;nbsp;... பரவலாகும் வீடியோ&amp;nbsp; ...&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தற்கொலை செய்துகொண்டது ஏன் ?&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தனது சொத்துக்களை மனைவியின் தம்பிகளுக்கு போகவேண்டும் என்றும் யாருக்கெல்லாம் கடன் வழங்க வேண்டும் என்றும் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த &amp;nbsp;வீடியோவை அன்பியுள்ளார் . மகள் ,மனைவியை &amp;nbsp;கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஏன்? இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வந்து பேரும் அதிர்ச்சியை தந்தது உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தற்கொலை முயற்சி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரியில் ரியல்எஸ்டேட்டில் வேலைபார்த்தும் &amp;nbsp;,அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தோஷ் .கடந்த சில மாதங்களாக &amp;nbsp;தொழிலில் ஏற்பட்ட &amp;nbsp;நெருக்கடி மற்றும் &amp;nbsp;கடன்சுமையால் மனஉளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்தது . வீட்டில் உள்ள தனது மனைவி சரண்யாவைகழுத்தை அருத்தும் , தனது மகள் சாத்விகாவை &amp;nbsp;சுத்தியால் அடித்தும் , இதனை தொடர்ந்தும் தனது வீட்டை விட்டு வெளியேறி &amp;nbsp;தனது இருசக்கர வாகனத்தில் தருமபுரி கிருஷ்ணகிரி நெடுஞ்சசாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் முன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வீடியோவில் பகிரப்பட்டவை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அந்த வீடியோவில் தான் யாருக்கெல்லாம் கடன் தரவேண்டும் என்றும் தனது சொத்துக்கள் மனைவியின் தம்பி போய் சேரவேண்டும் என்றும் வீடியோவில் சந்தோஷ் கூறப்பட்டதாக தெரியவந்ததுள்ளது . சம்பவம் அறிந்து வந்த போலீசார் &amp;nbsp;வீட்டில் கொலைசெய்த்து இருந்த சரண்யா மற்றும் சாத்விகா உடல்களைமிட்டு பேர்தபரிசோதனைக்கு &amp;nbsp;தருமபுரி அரசு மருத்துவ கல்லுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். &amp;nbsp;விபத்தில் உயிரிழந்த சந்தோஷ் உடலையும் அதியமான்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பேர்தபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;போலீசார் விசாரணை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கடன்சுமையால் நடந்ததா இல்லை வேற ஏதாவது காரணமா என்று தருமபுரி போலீசார் உறவினரிடம் &amp;nbsp;விசாரணை நடத்தி வருகின்றனர் .மனைவி மகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதில் ஏதாவது &amp;nbsp;காரணம் உள்ளதா என்றும் இவருக்கும் உறவினருக்கும் வேறு ஏதாவது பிரச்சனைய அல்லது குடும்பத்தில் வேற ஏதும் பிரச்சனையா &amp;nbsp;என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .இச்சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது .&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/f3e714e88070f61626dc1abaa143d8ea17829053314661345_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-mekedatu-dam-padayatra-biligundulu-poompuhar-cauvery-delta-265732</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-mekedatu-dam-padayatra-biligundulu-poompuhar-cauvery-delta-265732#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:16:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-mekedatu-dam-padayatra-biligundulu-poompuhar-cauvery-delta-265732</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி / பிலிகுண்டுலு: தமிழகத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி, காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 4 நாட்கள் தொடர் விழிப்புணர்வு நடைபயணப் பரப்புரை தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் இன்று (ஜூலை 01) தொடங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜூலை 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை காவிரி நீர் பாசனப் பகுதிகளில் நடைபெறும் இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் போது, மேகதாது அணையால் தமிழகத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட விரிவான புள்ளிவிவரங்களின் தொகுப்பு பின்வருமாறு:&lt;/p&gt;
&lt;h2&gt;மேகதாது அணை: தமிழகத்தை வஞ்சிக்கத் தீட்டப்பட்ட சதி!&lt;/h2&gt;
&lt;p&gt;குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகத்தில் 320 கி.மீ-உம், தமிழகத்தில் 416 கி.மீ-உம் பாய்கிறது. தமிழக எல்லைக்குள் நுழைவதற்குச் சரியாக 4 கி.மீ முன்பாக, காவிரியும் அதன் துணை ஆறான அக்ராவதியும் கலக்கும் 'மேகதாது' என்ற இடத்தில் 325 அடி உயரத்திலும், 2,411 அடி அகலத்திலும் பிரம்மாண்ட கான்க்ரீட் அணையைக் கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பெங்களூரில் இருந்து 90 கி.மீ தொலைவில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் சொந்த தொகுதியான கனகபுராவில் அமையவுள்ள இந்த அணையின் கொள்ளளவு திட்ட அறிக்கையின்படி 67.16 டி.எம்.சி என்று கூறப்பட்டாலும், அது 70 டி.எம்.சி-க்கும் கூடுதலாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;பாலைவனமாகும் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்:&lt;br /&gt;தமிழகத்தில் 11 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகத் திகழும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரும் நிறுத்தப்படும். இதனால் 16 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன ஆதாரத்தை இழந்து கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாவட்ட வாரியாகப் பாதிக்கப்படும் பாசனப் பரப்பளவு (ஏக்கரில்):&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;தஞ்சாவூர்: 4 லட்சம் ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;திருவாரூர்: 4 லட்சம் ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;நாகை &amp;amp; மயிலாடுதுறை: 3.50 லட்சம் ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;திருச்சி: 2.40 லட்சம் ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;கடலூர்: 1.10 லட்சம் ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;புதுக்கோட்டை: 28,000 ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;அரியலூர்: 24,000 ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;கரூர்: 22,500 ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;ஈரோடு: 17,230 ஏக்கர்&lt;/li&gt;
&lt;li&gt;நாமக்கல்: 11,327 ஏக்கர்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;இந்த 11 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கும் கீழே சென்று ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் மிக விரைவாகப் பாலைவனமாக மாறும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;சென்னை உள்பட 25 மாவட்டங்களுக்குக் குடிநீர்ப் பஞ்சம்!&lt;/h2&gt;
&lt;p&gt;காவிரிப் பாசனப் பகுதிகள் மட்டுமன்றி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரித் தாயே விளங்குகிறார். மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் குடிநீரின்றித் தவிக்கும். மேலும், தமிழக அரசின் முக்கியத் திட்டங்களான:&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்&lt;/li&gt;
&lt;li&gt;மேட்டூர் உபரி நீர் திட்டம்&lt;/li&gt;
&lt;li&gt;தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்&lt;/li&gt;
&lt;li&gt;அரியலூர் சோழர் பாசனத் திட்டம்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;ஆகிய அனைத்துப் பெருந்திட்டங்களும் செயல்படுத்த முடியாமல் முற்றிலும் முடங்கிப் போகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;நூறு ஆண்டுகால காவிரி உரிமைப் பறிப்பு: அதிர்ச்சிப் பட்டியல்&lt;/h2&gt;
&lt;p&gt;1924-ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாகாணங்கள் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 575.75 டி.எம்.சி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் உரிமை 70% வரை திட்டமிட்டுக் குறைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;காலவாரியாகத் தமிழகம் இழந்த காவிரி நீரின் அளவு (டி.எம்.சி-யில்):&lt;/h2&gt;
&lt;p&gt;1972 (காவிரி உண்மை கண்டறியும் குழு பரிந்துரை) &amp;ndash; 489 டி.எம்.சி&lt;/p&gt;
&lt;p&gt;1976 (எமர்ஜென்சி கால இந்திராகாந்தி சமரசத் திட்டம்) &amp;ndash; 389 டி.எம்.சி&lt;/p&gt;
&lt;p&gt;1980 (கர்நாடகா தயாரித்த ஒருதலைப்பட்ச திட்டம்) &amp;ndash; 375 டி.எம்.சி&lt;/p&gt;
&lt;p&gt;1991 (காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணை) &amp;ndash; 205 டி.எம்.சி&lt;/p&gt;
&lt;p&gt;2007 (காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு) &amp;ndash; 192 டி.எம்.சி&lt;/p&gt;
&lt;p&gt;2018 (உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு) &amp;ndash; 177.25 டி.எம்.சி&lt;/p&gt;
&lt;h2&gt;கர்நாடகத்தின் பொய்ப் பரப்புரையும் உண்மையும்!&lt;/h2&gt;
&lt;p&gt;&quot;மேகதாது அணையால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்குத்தான் கூடுதல் லாபம், கடலில் வீணாகக் கலக்கும் உபரி நீரைச் சேமித்துத் தமிழகத்திற்கு வழங்குவோம்&quot; என கர்நாடக ஆட்சியாளர்கள் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். 1924 முதல் இன்று வரை ஒருமுறை கூட நடுவர் மன்றம் அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அளவிலான தண்ணீரை கர்நாடகம் முறையாகத் திறந்ததே இல்லை. தங்களின் 4 அணைகளின் கொள்ளளவான 114.57 டி.எம்.சி மற்றும் ஏரிகளின் கொள்ளளவான 30 டி.எம்.சி-யும் நிரம்பி வழிந்து, தங்களால் தேக்க முடியாத 'மழைக்கால உபரி நீரை' மட்டுமே தமிழகத்திற்குத் திறந்து விடுகிறார்கள். இப்போது மேகதாதுவில் மேலும் 70 டி.எம்.சி-யைத் தேக்கினால், தமிழகத்திற்கு அந்த உபரி நீரும் கிடைக்காது.&lt;/p&gt;
&lt;h2&gt;இதற்கு என்னதான் தீர்வு?&lt;/h2&gt;
&lt;p&gt;மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க 24.10.2018 அன்று மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை உடனடியாக ரத்து செய்வது மட்டும்தான் இந்தச் சிக்கலுக்கு ஒரே தீர்வு. இதற்கு மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடுமையான அரசியல் அழுத்தத்தையும், சட்டப் போராட்டங்களையும் கொடுக்க வேண்டும். இச்சிக்கலைத் தீர்க்க மீண்டும் 'புதிய நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டால் தமிழகத்தின் எஞ்சிய உரிமைகளும் பறிபோகும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்திற்கு எதிராகத் தீட்டப்படும் இந்த மேகதாது சதித் திட்டத்தை முறியடிக்க மக்களிடம் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ள இந்த எழுச்சிப் பயணம், காவிரிப் பாசனப் பகுதிகள் வழியாகச் சென்று ஜூலை 4-ஆம் தேதி பூம்புகாரில் பிரம்மாண்டமாக நிறைவடைகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/b55881b0c085a7df9eef598efc0aec5e1782902752299194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மேகதாதுவில் அணை வந்தால் தமிழகத்திற்கு சாக்கடை நீரும் கிடைக்காது! - அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-mekedatu-dam-cauvery-water-tamil-nadu-environment-tnn-265731</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-mekedatu-dam-cauvery-water-tamil-nadu-environment-tnn-265731#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:07:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-mekedatu-dam-cauvery-water-tamil-nadu-environment-tnn-265731</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;ஒகேனக்கல்: &quot;மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டிவிட்டால், அங்கிருந்து தமிழகத்திற்கு இனி கழிவுநீர் கூட கிடைக்காது. காவிரி டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் வறண்ட பாலைவனமாகிவிடும்,&quot; என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தமிழகத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவேரி நீர் பாசன பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து விவசாய சங்க தலைவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடைபயண பரப்புரையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கியிருக்கிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தர்மபுரி மாவட்டம் பில்லிகுண்டு-வில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேட்டி:&lt;br /&gt;நம்முடைய நோக்கம் மேகதாவில் கர்நாடகா ஆணையை கட்டக்கூடாது அவ்வாறு கட்டினால் அது இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானது.&amp;nbsp;&lt;br /&gt;தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி ஆறு தான். காவேரி ஆரை நம்பி ஐந்தரை கோடி தமிழ்நாடு மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் விவசாயத்திற்கு காவிரி நதி நரை நம்பி தான் இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;காவிரி பிரச்சனை என்பது சுமார் 200 ஆண்டுகளாக கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருக்கக்கூடிய பிரச்சனை. சென்னை மாகாணம் மைசூர் சமஸ்தானத்துடன் போட்ட ஒப்பந்தத்தை அவர்கள் கடைபிடிக்கவில்லை. வழக்கமாக ஜூலை ஒன்றாம் தேதி இந்த இடத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓட வேண்டும் ஆனால் தற்போது கழிவுநீர் மட்டும்தான் இங்கே இருக்கிறது. இதற்கு மேலே மேகதாதுவில் குறுக்கில் அணை கட்டி விட்டால் இந்த கழிவு நீர் கூட இனி தமிழ்நாட்டிற்கு வராது. மேட்டூர் அணையில் 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 40 tmc தண்ணீர் மட்டுமே இருக்கிறது அது குடிநீருக்காக நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம் விவசாயத்திற்காக திறக்க முடியாத மோசமான சூழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் மேகதாவில் அணைகட்டி விட்டால் இந்த குடிப்பதற்கான தண்ணீர் கூட நமக்கு இனி வராது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கர்நாடக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை கடந்த 13 ஆண்டுகளில் ஒருமுறை கூட கடைப்பிடித்தது இல்லை. மேகதாது அணை கட்டுவதற்கான காரணம் பெங்களூருவின் குடிநீர் வசதிக்காக என கர்நாடக அரசு சொல்கிறது ஆனால் பெங்களூருவின் குடிநீருக்கு 10 டிஎம்சி தண்ணீர் போதும் பிறகு எதற்காக 70டிஎம்சி யில் அணை கட்டுகிறார்கள்?&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;இப்போது குடிநீருக்காக அணையை கட்டுகிறோம் என சொல்லிவிட்டு பிறகு அதை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தினால் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா எதுவும் செய்ய முடியாது.&lt;br /&gt;ஏனென்றால் கடந்த காலங்களில் தமிழ்நாட்டிற்கு உடனடியாக 11 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அதற்கு கூட கர்நாடக அரசு செவி மடுக்க மறுத்துவிட்டது இப்படிப்பட்ட கர்நாடகத்தை நம்பி எப்படி மேகதாதுவில் அணை கட்ட நாம் அனுமதிக்க முடியும்? தற்போது மேகதாதில் அணைக்கட்ட கர்நாடகம் துடித்துக் கொண்டிருக்க கூடிய இடம் 12,500ஏக்கர் அடர்த்தியான மரங்கள் நிறைந்த வனப்பகுதி. இந்த வனத்தில் யானைகள் புலிகள் நான்கு கொம்புகள் கொண்ட மான் போன்ற அரிய வகை வனவிலங்குகள் வசித்து வரக்கூடிய பகுதி இந்த வனத்தை அழித்துவிட்டு நீங்கள் அணை கட்டுவோம் என்று சொல்வது சுற்றுச்சூழலுக்கும் எதிரானது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூட இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச அளவில் இந்தியா பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது அதன்படி நம் காடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் அந்த காடுகளை அழிப்பதற்கு அனுமதிக்க முடியாது. மேகதாதில் எவ்வளவு பெரிய அணையை கட்டினால் பெங்களூரு பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் வரும் என்று கூட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.&amp;nbsp; சீனாவில் உலகத்திலேயே பெரிய அணை ஒன்றை கட்டினார்கள் அதன் பிறகு அதனை சுற்றி பலமுறை பூகம்பங்கள் வந்தது எனவே இது போன்ற எச்சரிக்கைகள் எல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் கர்நாடக அரசு இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கர்நாடகத்தில் 2028 பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இது போன்று அரசியல் ரீதியாக மக்களை தோண்டி வட்டு செயல்பட்டு வருகிறார். கர்நாடகா அரசின் இந்த சதி செயலை தமிழக அரசு சட்டரீதியாக செயல்பட்டு முறியடிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து வழக்கு தொடர்ந்து அதை தள்ளி வைத்துக் கொண்டே செல்கிறார்கள் அதுபோன்று தமிழக அரசும் தொடர்ச்சியாக வழக்கு தொடர்ந்து இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேகதாதில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பேரிடர் ஆகும். காவிரி விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே உள்ள நடுவர் மன்றமே போதுமானது புதிதாக நடுவர் மன்றம் வேண்டுமென தமிழக அரசு முடிவு செய்து இருப்பது தேவையற்றது இது கர்நாடகாவின் கருத்து போல உள்ளது. தயவுசெய்து தமிழக அரசு இதில் ஈகோ பார்க்காமல் மீண்டும் சட்ட திருத்தம் கொண்டு வந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;1974 இல் கர்நாடகாவில் உள்ள காவிரி பாசன பரப்பு 6.8 லட்சம் ஏக்கர் ஆக இருந்தது.&lt;/li&gt;
&lt;li&gt;1991இல் 12 லட்சம் ஏக்கர் ஆக உயர்ந்தது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;2006 இல் அது 18 லட்சம் ஏக்கராக உயர்ந்தது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;2021 இல் அது 21 லட்சம் ஏக்கராக உயர்ந்தது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;நேரத்தில் தமிழ்நாட்டில் 1974 இல் காவேரி பாசன பரப்பு 29 லட்சம் ஏக்கராக இருந்தது. ஆனால் இன்று அது 20 லட்சம் ஏக்கர் ஆக குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்பது லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு குறைந்துள்ளது ஆனால் கர்நாடகாவில் சுமார் 14 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு அதிகரித்துள்ளது.&amp;zwnj; மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டி விட்டால் மேலும் 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு அங்கு அதிகரிக்கும் ஆனால் நாம் விவசாயமே செய்ய முடியாமல் நம்முடைய காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும்.&amp;nbsp;ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்படி தமிழக இளைஞர்கள் தன்னார்வமாக வந்து போராடினீர்களோ அதுபோல தமிழக இளைஞர்கள் வந்து போராட வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கோவை, ராமநாதபுரம், சென்னை, கன்னியாகுமரி என்று அனைத்து பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் இது பெரிய பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;மதுரையில் மேலூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் விளையும் மேல்தான் தமிழ்நாடு முழுவதும் அரிசியாக பயன்படுத்தப்படுகிறது எனவே டெல்டா மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு என்பதை நாம் உணர வேண்டும். மேகதாது அணையை கட்டி விட்டால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,ராமநாதபுரம் குடிநீர் திட்டம்,மதுரையில் மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் மேட்டூர் உபரி நீர் திட்டம் இப்படி பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் ரத்தாகும் எனவே தமிழ்நாட்டில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;கர்நாடகாவில் காங்கிரசும் பிஜேபியும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள் எனவே மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் மீண்டும் ஆட்சிப் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள். நாட்டிற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் எனவே நமக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் மட்டுமே.&amp;nbsp; அந்தமான் நிக்கோபார் தீவுகளில் The Great Nicobar Project என்ற ஒரு ப்ராஜெக்ட் அறிவித்து இருக்கிறார்கள். சீனா-வின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. திட்டம் வந்தால் மரங்கள் வெட்டப்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ராகுல் காந்தி அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார் அவருடைய எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதி என்று இருக்கக் கூடாது.கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டினால் இங்கே நம்முடைய சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அதற்காக ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும். நாங்கள் ராகுல் காந்தியிடம் சண்டை போடவில்லை. ராகுல் காந்தியிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறோம். உங்களுடைய காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் இடம் பேசி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். செய்தியாக வேண்டும்&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/c05235ac861011f384e10a9e868e30b31782902183232194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 25-06-2026) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் இருக்காது?]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-shutdown-24-06-2026-know-timings-areas-264955</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-shutdown-24-06-2026-know-timings-areas-264955#respond</comments><pubDate>Wed, 24 Jun 2026 14:02:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-shutdown-24-06-2026-know-timings-areas-264955</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜூன் 25, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PnMkrE9eSuk?si=C_2YyTucQyZYmpFf&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;தர்மபுரி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;ஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலும்பிச்சைனஹள்ளி, பெரியம்பட்டி, பெகரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-should-bike-chain-be-changed-264585&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/08/67c43d0fcecd7351816e032fda275d8e1751943704533614_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: ஒகேனக்கல், பென்னாகரத்தில் நாளை ( 24-06-2026) பவர் கட்! இன்னும் எங்கெல்லாம் இருக்காது?]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-24-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264870</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-24-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264870#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 17:06:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-24-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264870</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜூன் 24, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/kYesRDYp0Tc?si=yDqUxLyVXWvk93ZJ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;தர்மபுரி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* பென்னாகரம்&lt;br /&gt;* ஒகேனக்கல்&lt;br /&gt;* ஏரியூர்&lt;br /&gt;* பெரும்பாலை&lt;br /&gt;* சின்னம்பள்ளி&lt;br /&gt;* பாப்பாரப்பட்டி&lt;br /&gt;* நாகரை&lt;br /&gt;* நெருப்பூர்&lt;br /&gt;* நாகதாசபட்டி&lt;br /&gt;* தாசம்பட்டி&lt;br /&gt;* பிக்கிலி&lt;br /&gt;* கடமடை&lt;br /&gt;* ஆலமரத்துப்பட்டி&lt;br /&gt;* வத்தலாபுரம்&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-should-bike-chain-be-changed-264585&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/23/e186de8ffd3f1f9beb9c30e6f98acc661782214415250113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தருமபுரிக்கு காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் தேவை - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி கோரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-needs-the-cauvery-surplus-water-scheme-and-sipcot-sowmya-anbumani-urges-in-the-assembly-264729</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-needs-the-cauvery-surplus-water-scheme-and-sipcot-sowmya-anbumani-urges-in-the-assembly-264729#respond</comments><pubDate>Mon, 22 Jun 2026 13:58:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-needs-the-cauvery-surplus-water-scheme-and-sipcot-sowmya-anbumani-urges-in-the-assembly-264729</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், தருமபுரி தொகுதி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி முதன்முறையாகப் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தருமபுரி மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் தொழிற்சாலை மற்றும் தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உரையாற்றினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது அதில் தர்மபுரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்று பேசினார். இந்த சட்டப்பேரவையில் நான் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த பாமக நிறுவனர் டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கும் பாமக தலைவர் அன்புமணி மற்றும் என்னை வாக்களித்து தேர்வு செய்த தர்மபுரி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.&amp;nbsp;ஆளுநர் உரையில் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி அன்புடன் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.&amp;nbsp; சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரக்கூடிய இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி இந்த சமூக நீதி கணக்கெடுப்பின் மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சி விவசாயிகளை கடவுளாக பார்க்கிறது கடும் மழையிலும் வெயிலுள்ளும் உழைக்கக்கூடிய அவர்கள் கடன் வாங்கி தான் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் வெறும் பத்தாயிரம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் தமிழ்நாட்டில் இருக்கிறது கடந்த 2021 முதல் 2023 வரை 1968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகமான நிகழ்வுகள் இருக்கிறது.&amp;nbsp;எனவே விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது 50 சதவீத கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது அது போதாது முழுமையாக கடன் ரத்து செய்யப்பட வேண்டும்.&amp;nbsp;விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய அதிகாரிகள் தடையாக இருப்பார்கள் தமிழ்நாட்டின் கடன் நிதி சுமை என்று சொல்லுவார்கள் அதனை கேட்க வேண்டாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்றி எதற்கு காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தான் அந்த குற்றங்கள் இந்த ஆட்சியிலும் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது பொறுத்தது போதும் தமிழக முதலமைச்சர் பொங்கி எழ வேண்டும்.&amp;nbsp; தர்மபுரி தமிழ்நாட்டின் மிகவும் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது பல கிராமங்களில் &amp;nbsp;குடி நீர் கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். இத்தனைக்கும் தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு பெரிய ஆறுகள் ஓடுகிறது அதாவது காவிரி மற்றும் தென்பெண்ணை என்ற இரண்டு ஆறுகள் ஓடியும் அந்த ஆறுகளை அவர்களால் கண்களால் பார்க்க முடிகிறது தவிர அந்த ஆற்றில் இருந்து அந்த மாவட்டத்திற்கு எந்த பயனும் இல்லை எனவே தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் அந்த மாவட்டமே பயன்பெறும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;தர்மபுரி மாவட்டத்தில் போதுமான வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் 3 லட்சம் இளைஞர்கள் வெளி ஊர்களில் சென்று வேலை செய்யக்கூடிய அவல நிலை இருக்கிறது அங்கு சிப்காட் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவர தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் ஏற்கனவே இரண்டு முறை பூமி பூஜை போடப்பட்டு இன்னும் அந்த பணிகள் கிடப்பில் தான் இருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கனிமவள கொள்ளை தடுத்து வருமானத்தை முறைப்படுத்தினால் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் வருமானம் அதிகரிக்கும் எனவே அதில் தமிழக அரசு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.&amp;nbsp;சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றினால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படும் 21 மாநிலங்களில் அந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் அந்த சட்டத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;சௌமியா அன்புமணி வைத்த கோரிக்கை... உடனே நிறைவேற்றிக் கொடுப்பதாக சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்!&lt;/h2&gt;
&lt;p&gt;அப்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகருக்கும் ரயில் நிலையங்கள் இருக்கிறது தமிழ்நாட்டிலேயே தர்மபுரி மாவட்டத்தின் தலைநகருக்கு ரயில் நிலையம் இல்லை. தர்மபுரி மொரப்பூர் ரயில் நிலையம் 84 ஆண்டு கால பிரச்சனை.&amp;nbsp;உரிய நிலம் இல்லாத காரணத்தால் அங்கு ரயில் நிலையம் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.&amp;nbsp;பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதற்கான நிதியை கேட்டு பெற்றுவிட்டார். ஆனால் அதற்கு உரிய நிலத்தை பெற்று தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு தான் இருக்கிறது எனவே தமிழக அரசு தர்மபுரி மொரப்பூர் ரயில் நிலையம் கட்டுவதற்கு தேவையான இடத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அதற்கு பதில் கொடுத்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்:&lt;/strong&gt;&amp;nbsp;இந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் உடனடியாக தனி தாசில்தாரை நியமனம் செய்து தேவையான நிலத்தை பெற்று கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பதில் அளித்தார்.&amp;nbsp;அமைச்சர் செங்கோட்டையன் பதிலுக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/22/dc4061a26d576c786a5b917d18c06f081782116868977194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை  (04-06-2026) மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் - இதோ முழு லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-04-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-262575</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-04-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-262575#respond</comments><pubDate>Wed, 3 Jun 2026 15:13:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-04-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-262575</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 04, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/m4PAB6AAk60?si=Og9oxWAxBKaADZoV&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;h2&gt;தருமபுரி&lt;/h2&gt;
&lt;p&gt;மாம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;அனுமந்தீர்த்தம்&lt;/p&gt;
&lt;p&gt;கைலாயபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;காட்டேரி&lt;/p&gt;
&lt;p&gt;சட்டையம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;சாந்திராபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;கீழ்மொரப்பூர்&lt;/p&gt;
&lt;p&gt;கணபதிபட்டி&lt;/p&gt;
&lt;p&gt;கீரைப்பட்டி&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;br /&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/mango-shake-or-banana-shake-which-is-best-for-your-summer-health-262463&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/15409879dff68af41b036fcc9a0ddc421780479632487113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 30-05-2026) மின் தடை! எங்கெல்லாம் இருக்காது?]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-30-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261997</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-30-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261997#respond</comments><pubDate>Fri, 29 May 2026 19:21:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-30-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261997</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 30, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/MA5GLTpigVI?si=ETgr8o5ipBw9eB1g&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தர்மபுரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பழைய பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டி கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல் நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலை கொட் டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, ரெயில் நிலையம்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/honda-shine-125-power-mileage-engine-features-fuel-capacity-261800&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/29/f4ae6830593aee47d2420329dd7b3a911780062585924113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/india-s-2nd-most-dangerous-road-modern-accident-prevention-measures-at-thoppur-261469</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/india-s-2nd-most-dangerous-road-modern-accident-prevention-measures-at-thoppur-261469#respond</comments><pubDate>Mon, 25 May 2026 14:14:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/india-s-2nd-most-dangerous-road-modern-accident-prevention-measures-at-thoppur-261469</guid><description><![CDATA[&lt;p&gt;தர்மபுரி: இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான கணவாய் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் சாலையில் பிரத்யேக சிவப்பு நிற எச்சரிக்கை வண்ணம் பூசும் புதிய தொழில்நுட்பம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தொப்பூர் கணவாய் என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை இணைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய மலைக் கணவாய் மற்றும் பள்ளத்தாக்கு ஆகும். தேசிய நெடுஞ்சாலை 44-இல் (NH-44) அமைந்துள்ள இப்பகுதி, அதன் செங்குத்தான சரிவுகள் மற்றும் தொடர்ச்சியான கோர விபத்துகளால் மிகவும் அறியப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;12 ஆண்டுகளில் 500 உயிர்கள் பலி: பின்னணி என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதி, மிகக் கடுமையான வளைவுகளையும், செங்குத்தான இறக்கங்களையும் கொண்டது. இதனால், கட்டுப்பாட்டை இழக்கும் கனரக வாகனங்கள் இங்கு அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இந்த கணவாய் பகுதியில் நடந்த விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;905 கோடியில் பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம்&lt;/h2&gt;
&lt;p&gt;தொடர் விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தொப்பூர் கணவாய் பகுதியில் 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம் (Elevated Flyover) அமைக்கும் பணி தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாலய இலக்குடன் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் 2028-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் நவீன எச்சரிக்கை அமைப்புகள்: மேம்பாலப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்கத் தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;சோலார் பிளிங்கர் விளக்குகள்:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;கணவாய் பாதையின் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு, வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த 20 இடங்களில் சூரியசக்தியால் இயங்கும் 'சோலார் பிளிங்கர் லைட்டுகள்' அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்குத் தானியங்கி முறையில் எச்சரிக்கை விடுத்து, வாகனங்களை 30 கி.மீ. வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்சார பிளிங்கர் விளக்குகள்:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் (CSR initiative) மேலும் 35 இடங்களில் மின்சாரத்தால் இயங்கும் பிளிங்கர் விளக்குகள் பொருத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மஞ்சள் நிற வேக வரம்பு குறியீடுகள்:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;கணவாய் சாலையின் நடுவே ஆங்காங்கே வாகனங்களின் வேக வரம்பு &quot;30 கி.மீ.&quot; என்பதை ஓட்டுநர்கள் எளிதாக அறியும் வண்ணம் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;இந்தியாவில் 2-வது முறையாக 'ரெட் டேபிள் டாப்' தொழில்நுட்பம்!&lt;/h2&gt;
&lt;p&gt;விபத்து தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக, சோதனை அடிப்படையில் 'ரெட் டேபிள் டாப்' (Red Table Top) எனப்படும் புதிய சிவப்பு நிற விபத்து எச்சரிக்கை வண்ணம் சாலையில் பூசப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கணவாய் பகுதியின் மிக முக்கிய வளைவான ஆஞ்சநேயர் கோவில் வளைவுப் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு இந்த சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தூரத்திலிருந்தே இந்த சிவப்பு வண்ணத்தைப் பார்க்கும் ஓட்டுநர்களுக்கு, &quot;இது மிகவும் ஆபத்தான பகுதி&quot; என்ற எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே தோன்றும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமே இத்தகைய சிவப்பு நிற எச்சரிக்கை சாலை சமிக்ஞை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக தற்பொழுது தொப்பூர் கணவாய் சாலையில் இத்தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த தொடர் நவீன நடவடிக்கைகள் மூலம், 'இது மிக அபாயகரமான விபத்து பகுதி' என்பதை ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே உணர்த்தி, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் முற்றிலும் தவிர்க்க முடியும்&quot; என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/25/3d370bba58271d0166a7034fd17f52431779698440312194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-new-bus-stand-corruption-high-level-inquiry-must-be-conducted-anbumani-ramadoss-urges-261217</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-new-bus-stand-corruption-high-level-inquiry-must-be-conducted-anbumani-ramadoss-urges-261217#respond</comments><pubDate>Fri, 22 May 2026 19:27:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-new-bus-stand-corruption-high-level-inquiry-must-be-conducted-anbumani-ramadoss-urges-261217</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தருமபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நகருக்கு வெளியே கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும், மக்களின் துயர் துடைக்க உள்மாவட்ட பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில், நகருக்கு வெளியே கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு &amp;nbsp;பகுதிகளில் இருந்து நகருக்கு வந்து செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பழைய பேருந்து நிலையத்திலிருந்து &amp;nbsp;பேருந்துகளை இயக்க மறுத்து, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரி பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் 1978&amp;amp;ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்தப் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும், இன்னொரு பகுதியிலிருந்து &amp;nbsp;புறநகர் மற்றும் நீண்ட தொலைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், முந்தைய திமுக ஆட்சியில், தருமபுரிக்கு கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கான தீர்மானம் நகராட்சியில் நிறைவேற்றப் பட்டு, பென்னாகரம் சாலையில் உள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்தால் கொடையாக வழங்கப் பட்ட 10 ஏக்கர் நிலத்தில், ரூ.39.14 கோடியில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. திமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் கடந்த பிப்ரவரி 8&amp;amp;ஆம் நாள் எந்த முன்னறிவிப்பும் இன்றி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. அன்று இரவிலிருந்தே அனைத்து பேருந்துகளின் இயக்கமும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்திற்கு கட்டப்பட்டது கூடுதல் பேருந்து நிலையம் தான் என்பதால் பழைய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்; &amp;nbsp;வேண்டுமானால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்ட மற்றும் தொலைதூர பேருந்துகளை மட்டும் இயக்கியிருக்கலாம். ஆனால், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப் பட்டதால் வெளியூர்களில் இருந்து தருமபுரிக்கு வந்து செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் நகரப் பகுதிக்குள் தான் உள்ளன. நகரத்திற்குள் உள்ள கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணி செய்கின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளும் நகருக்குள் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் &amp;nbsp;வந்து செல்வது வழக்கம். ஆனால், இவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் 5 கி.மீக்கு அப்பால் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால், தருமபுரி நகருக்கு வரும் ஒவ்வொருவரும் பல கி.மீ கூடுதலாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற தாமதமும், கூடுதல் செலவும் ஏற்படுகின்றன. &amp;nbsp;புதிய &amp;nbsp;பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல ஒவ்வொருவரும் &amp;nbsp;ரூ.20 முதல் ரூ.100 வரை செலவழிக்க &amp;nbsp;வேண்டியுள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைகள் வணிகத்தை முற்றிலுமாக இழந்துள்ளன. இதனால், வணிகர்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த ஆட்சியின் பேரவைக் கூட்டத்தில் அப்போதைய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் வினா எழுப்பினர். அதற்கு பதிலளித்த அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை கே.என். நேரு, தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், அமைச்சர் வாக்குறுதி அளித்தும் கூட அதன் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;எனினும், மாவட்ட நிர்வாகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட அழுத்தத்தைத் &amp;nbsp;தொடர்ந்து அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன் அவையும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இதனால், தருமபுரி பழைய பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அது &amp;nbsp;சாதாரணமான பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டு விட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி புதிய சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், கடந்த 15&amp;amp;ஆம் நாள் தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசிய போது, குறைந்தபட்சம் தருமபுரி மாவட்டத்திற்குள் இயங்கும் பேருந்துகளை மட்டுமாவது பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது தொடர்பாக 4 நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த &amp;nbsp;மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தருமபுரி மாவட்ட மக்களின் பாதிப்பும், துயரமும் தொடர்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கி இப்போதைய மாவட்ட நிர்வாகம் வரை அனைத்துத் தரப்பினரும் தருமபுரி மாவட்ட மக்களின் நலன்களையும், வசதியையும் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம், தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை அமைப்பதில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்ட ஊழல் தான். எந்தவொரு நகரத்திலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் போது மக்களால் எளிதில் அணுகக் கூடிய இடத்தில் தான் கட்டப்பட வேண்டும். ஆனால், தருமபுரியில் 5 கி.மீ தொலைவுக்கு அப்பால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு காரணம் தனியார் நிறுவனம் லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கம் தான்.&lt;/p&gt;
&lt;p&gt;சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், அதன் உரிமையாளர்களும் ஏ.ரெட்டிஅள்ளி பகு&lt;/p&gt;
&lt;p&gt;தியில் பல நூறு ஏக்கர் நிலங்களை வைத்திருக்கிறார்கள். அந்த நிலங்களின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அந்த நிறுவனம் 10 ஏக்கர் நிலத்தை கொடையாகத் தந்துள்ளது. இதற்காக முந்தைய திமுக ஆட்சியின் அமைச்சர்கள், &amp;nbsp;தருமபுரி மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்தின்அதிகாரிகள் ஆகியோருக்கு பெரும் தொகை கையூட்டாக கொடுக்கப்பட்டதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்கான தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தங்களுக்கு சாதகமாக செயல்படக் கூடிய ஒருவரை திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தி நகராட்சித் தலைவராக்கியதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், தனியார் கொடையாக கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் அந்த நிறுவனத்திடமே திமுக அரசு தாரை வார்த்திருப்பது தான். இதனால் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, தள்ளுவண்டிகள், மிதிவண்டிகள் போன்றவற்றில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சிறு மற்றும் குறு வணிகர்களை பேருந்து நிலையத்திற்குள் நுழைய விடாமல் நிர்வாகம் விரட்டியடிக்கிறது. பழைய பேருந்து நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5.5 கோடி வருவாய் கிடைத்து வந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை கட்டி நடத்தும் தனியார் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.55 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு சலுகை அளித்துள்ளது. இந்த வகையில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது கூடுதல் ஊழல் ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக அந்த நிறுவனத்துடன், முந்தைய ஆட்சியின் அமைச்சர்களும், &amp;nbsp;அதிகாரிகளும் கூட்டுச் சதி செய்திருப்பதை அனுமதிக்க முடியாது. தருமபுரியில் மட்டுமின்றி, இராசிபுரம், ரிஷிவந்தியம், கும்பகோணம் உள்ளிட்ட பல நகரங்களில் புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதில் இதேபோல் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நகரங்களிலும் திமுக நிர்வாகிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்தும் நோக்குடன் அவற்றுக்கு அருகிலேயே பேருந்து நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த வகையில் மட்டும் திமுகவினருக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மக்களின் நலன்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், தங்களின் சொத்து மதிப்பை உயர்த்தும் வகையில் தான் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழல் செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறாக முந்தைய திமுக ஆட்சியில் தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் &amp;nbsp;விஷயத்திலும்,, அதேபோல் தமிழ்நாட்டின் பல நகரங்களில் பேருந்து நிலையம் அமைப்பதிலும் நடைபெற்ற கூட்டுச் சதி மற்றும் ஊழல் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உயர்நிலை விசாரணை நடத்த &amp;nbsp;நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அவர்கள் ஆணையிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதுமட்டுமின்றி, தருமபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி, தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் &amp;nbsp;செல்லும் பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க ஆணையிட வேண்டும். இதை செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/09/13/a4dd75257f3a7df2a1cf45f715f1cd101757745612890113_original.jpg" width="220"/></item></channel></rss>