Corona LIVE Updates : பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் செல்வதை ரத்துசெய்ய வேண்டும் - தமிழக அரசு
Corona LIVE Updates : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்கவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே தடுப்பூசி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ABP NADULast Updated: 24 Apr 2021 10:07 AM

Background
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 13 ஆயிரத்தை கடந்திருப்பது...More
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 13 ஆயிரத்தை கடந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நேற்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 78 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நேற்று மாநிலம் முழுவதும் 78 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்கவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே தடுப்பூசி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர். தமிழக அரசு ஆக்சிஜன் தேவையை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு..
டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது