தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.


இந்நிலையில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மகள், பேரன், பேத்தி ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நல்லக்கண்ணுவுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை  செய்யப்பட்டத்தில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அவரது மகள், பேரன், பேத்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.