”பழங்குடியினருடன் குதூகல நடனம்” - மலைவாழ் மக்களுடன் இணைந்த வேலுமணி...
பழங்குடியின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி பழங்குடியின மக்களுடன் இணைந்து நடத்திய பிரச்சாரம் கவனம் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அவர், தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சீங்கம்பதி கிராமம் சென்றார். மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழும் இந்தப் பகுதியில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உற்சாகமாக இருந்தது. கிராம மக்கள் பாரம்பரிய இசை மற்றும் தாளங்களுடன் நடனமாடி அவரை வரவேற்றனர்.
மலை கிராமத்தில் வேலுமணியின் ஸ்மார்ட் பிரச்சாரம்
இந்த நிகழ்வில், பொதுமக்களுடன் கலந்துகொண்ட எஸ்.பி. வேலுமணி, அவர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடியதும் குறிப்பிடத்தக்கது. அதிகாரப் பதவிகளைத் தாண்டி சாதாரண மக்களுடன் கலந்து பழகிய அவரது இந்த அணுகுமுறை, அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர், கிராம மக்களுடன் கலந்துரையாடிய அவர், மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள், வாழ்வாதாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகளை கேட்டறிந்தார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், கடந்த காலத்தில் தொகுதியின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகளை விளக்கி, அ.தி.மு.க கட்சியின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்வு, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் சூழ்நிலையை மேலும் உற்சாகப்படுத்தியதுடன், மலைவாழ் மக்களிடையே அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்






















