கோவைகாந்திபுரம்அருகேஉள்ளசித்தாபுதூர்பகுதியில்பாஜககோவைமாவட்டதலைமைஅலுவலகம்உள்ளது. இந்தநிலையில் நேற்றிரவுஇருசக்கரவாகனத்தில்வந்தஅடையாளம்தெரியாதநபர்கள்பாஜகஅலுவலகத்தைநோக்கிபெட்ரோல்குண்டைவீசியுள்ளனர். அப்போதுபெட்ரோல்குண்டுபாஜகஅலுவலகத்திற்குஅருகேவிழுந்தது. அதேசமயம்பெட்ரோல்குண்டுவெடிக்காததால், அசாம்பாவிதங்கள்மற்றும்பாதிப்புகள்எதுவும்ஏற்படவில்லை.

இதேபோலஒப்பணக்காரவீதியில்வடமாநிலத்தைசேர்ந்த லட்சுமணன்என்பவருக்குசொந்தமானமாருதிஎன்றதுணிக்கடைமீதும்பெட்ரோல்குண்டுவீசப்பட்டுள்ளது. இதில்கடையின்முன்பாகஇருந்தஅட்டைமீதுவிழுந்துதீப்பற்றியுள்ளது. கடையில்இருந்தவர்கள்உடனடியாகதீயைஅணைத்ததால்அசாம்பாவிதங்கள்தவிர்க்கப்பட்டது. கோவையில்அடுத்தடுத்துஇரண்டுஇடங்களில்பெட்ரோல்குண்டுவீசப்பட்டசம்பவம்பதட்டத்தைஏற்படுத்தியது. அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச்சிற்கான காரணம் மற்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள்குறித்துகாவல்துறையினர்விசாரணைநடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பா..க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா... நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறித்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக மோகன் என்பவர் இருந்து வருகிறார். இவர் காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மகன் மகேந்திரன் வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் முன்பாக கண்ணாடிகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும் கடையின் ஷட்டர் மீது பெட்ரோல் சிந்தியிருந்துள்ளது. இதையடுத்து அக்கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அதிர்ஷ்டவசமாக அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து இரத்தினபுரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடை உள்ளது. இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடைகளின் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற பணியாளர்கள் பார்த்த போது, அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் வெளியே நின்றவாறு, உள்ளே பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சில பிளைவுட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண