கோவைகாந்திபுரம்அருகேஉள்ளசித்தாபுதூர்பகுதியில்பாஜககோவைமாவட்டதலைமைஅலுவலகம்உள்ளது. இந்தஅலுவலகத்திற்குபாஜகநிர்வாகிகளும், கட்சிதொண்டர்களும்தினசரிவந்துசெல்வதுவழக்கம். பாதுகாப்புகாரணங்களுக்காக24 மணிநேரமும்பாஜகஅலுவலகத்தில்பாதுகாப்புபணியில்காவல்துறையினர்ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவுஇருசக்கரவாகனத்தில்வந்தஅடையாளம்தெரியாதநபர்கள்பாஜகஅலுவலகத்தைநோக்கிபெட்ரோல்குண்டைவீசியுள்ளனர். அப்போதுபெட்ரோல்குண்டுபாஜகஅலுவலகத்திற்குஅருகேவிழுந்தது. அதேசமயம்பெட்ரோல்குண்டுவெடிக்காததால், அசாம்பாவிதங்கள்மற்றும்பாதிப்புகள்எதுவும்ஏற்படவில்லை.

இதேபோலஒப்பணக்காரவீதியில்வடமாநிலத்தைசேர்ந்த லட்சுமணன்என்பவருக்குசொந்தமானமாருதிஎன்றதுணிக்கடைமீதும்பெட்ரோல்குண்டுவீசப்பட்டுள்ளது. இதில்கடையின்முன்பாகஇருந்தஅட்டைமீதுவிழுந்துதீப்பற்றியுள்ளது. கடையில்இருந்தவர்கள்உடனடியாகதீயைஅணைத்ததால்அசாம்பாவிதங்கள்தவிர்க்கப்பட்டது. கோவையில்அடுத்தடுத்துஇரண்டுஇடங்களில்பெட்ரோல்குண்டுவீசப்பட்டசம்பவம்பதட்டத்தைஏற்படுத்தியது. அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச்சிற்கான காரணம் மற்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள்குறித்துகாவல்துறையினர்விசாரணைநடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பா..க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா... நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறித்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக இருந்து வருகிறார். இவர் காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மகன் மகேந்திரன் வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் முன்பாக கண்ணாடிகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும் கடையின் ஷட்டர் மீது பெட்ரோல் சிந்தியிருந்துள்ளது.

இதையடுத்து அக்கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அதிர்ஷ்டவசமாக அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து மோகன் அளித்த தகவலின் பேரில் இரத்தினபுரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை தனது கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும் மோகன் தெரிவித்தார்.