ஊட்டிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! கோடை விடுமுறையில் பயணிக்க ரெடியா? டிக்கெட் முன்பதிவு விவரம் இதோ!
மார்ச் 27 முதல் ஜூலை 5 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

- கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
- மேட்டுப்பாளையத்திலிருந்து மார்ச் 27 முதல் ஜூலை 5 வரை இயக்கப்படும்.
- ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 28 முதல் ஜூலை 6 வரை இயக்கப்படும்.
- சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரயில்வே இந்த சிறப்பு ரயிலை சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
கோடைக்காலம் நெருங்கி வரும் வேளையில் ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி வருகிறது, தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது, தேர்வுகள் முடிந்த பின்னர் கோடைவிடுமுறையை கொண்டாட மக்கள் மலைவாசல் தளங்களை நோக்கி படையெடுப்பர், குறிப்பாக ஊட்டி என்பது மக்களின் முதல் சாய்ஸாக உள்ளது. ஊட்டிக்கு செல்ல விரும்பும் மக்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயற்கையை ரசித்துக்கொண்டு செல்ல ஊட்டி மலை ரயிலில் செல்வதை விரும்புவர். வழக்கமாக செல்லும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிவுற்ற நிலையில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்க்கப்படும் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில் வருகை & புறப்பாடு
அதன் மார்ச் 27 முதல் ஜூலை 5 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை அடையும்.
அதேபோல், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 28 முதல் ஜூலை 6 வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மறு சேவை இயக்கப்படும். இந்த ரயில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும்.
கோடை காலத்தில் நீலகிரிக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமான ரயில் சேவை:
நீலகிரி மலை ரயில் தற்போது மேட்டுப்பாளையத்திற்கும் நீலகிரியில் உள்ள உதகமண்டலத்திற்கும் இடையில் இயங்குகிறது, இது மலைகள் வழியாக ஒரு அழகிய பயணத்தை வழங்குகிறது. இந்த ரயில் வழக்கமாக காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணியளவில் ஊட்டியை அடைகிறது, இது இப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்க பயணிக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் தொடங்கி கோடை விடுமுறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிக தேவை காரணமாக, பல பயணிகளால் டிக்கெட்டுகளைப் பெற முடியாததால், கோடை காலத்திற்கான சிறப்பு சேவைகளை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























