ஆங்கிலேயர்களிடம்இருந்துஇந்தியநாடுவிடுதலைபெற்று, 75 வதுஆண்டுகளாவதைமுன்னிட்டுநாடுமுழுவதும்உற்சாகமாககொண்டாடஏற்பாடுகள்நடைபெற்றுவருகின்றன. சுதந்திரத்திற்காகநாடேபோராடியபோது, சுதந்திரப்போராட்டத்தில்கோவைமாவட்டம்மிகமுக்கியபங்களிப்பைவழங்கிஇருக்கிறது. போராட்டங்கள், இரயில்கவிழ்ப்பு, விமானபடைத்தளஎரிப்பு, சிறைவாசம்எனகோவைமக்கள்போராடி, பலதியாகங்களைசெய்துள்ளனர். அதிலும்விடுதலைபோராட்டத்தில்பங்கேற்றதற்காகசூலூர்சுற்றுவட்டாரபகுதிமக்கள்திமிர்வரிசெலுத்தியுள்ளனர். இன்றையதலைமுறையினர்அறியாதகோவையில்நடந்தவிடுதலைப்போராட்டத்தின்முக்கியநிகழ்வுகள்இதோ...

கோவைக்கோட்டைபோர்

ஆங்கிலேயர்கள்வருகைகாலத்தில்மைசூர்அரசர்களாகஇருந்தஹைதர்அலி, திப்புசுல்தானின்ஆளுகையின்கீழ்கோவைமாவட்டம்இருந்துவந்தது. தற்போதுகோட்டைமேடுஎனஅழைக்கப்படும்பகுதியில், ஒருகோட்டைஇருந்தது. ஹைதர்அலிகாலத்தில்கோவைக்கோட்டைநன்குபலப்படுத்தப்பட்டுஇருந்தது. அப்போதுஅக்கோட்டைச்சிறைக்குள்பலமுக்கியமானஎதிரித்தலைவர்களைசிறைபிடித்துவைத்துள்ளனர். இந்தக்கோட்டைக்காகஆங்கிலேயர்களுடன்மூன்றுமுறைபோர்நடைபெற்றுள்ளது.

1768 ம்ஆண்டில்மைசூர்போர்நடந்துகொண்டிருந்தபோது, கர்னல்உட்என்றஆங்கிலேயஅதிகாரிகோவைக்கோட்டையைஎளிதாககைப்பற்றிக்கொண்டார். சிறிதுகாலத்தில்ஹைதரின்படைத்தலைவர்களில்ஒருவரானபாஸில்உல்லாக்கான்படைகளைத்திரட்டிவந்து, ஆங்கிலேயப்படைகளைவீழ்த்திகோட்டையைகைப்பற்றினார்.

1782 ம்ஆண்டில்கர்னல்புல்லர்டன்என்பவர்கோவைக்கோட்டையைபிடித்ததகவல்அறிந்ததிப்புசுல்தான், நேரடியாககோட்டையைமுற்றுகையிட்டுவென்றார். பின்னர்1790 ம்ஆண்டில்மீண்டும்ஆங்கிலேயர்கள்கோட்டையைபிடிக்க, மைசூர்படைகளால்நடத்தியபோரில்ஆங்கிலேயர்கள்சரணடைந்தனர். கோவைக்கோட்டைதொடர்ந்துபிரச்சனைக்குஉரியதாகஇருந்துவந்ததால், அக்கோட்டைஅழிக்கப்பட்டது. 1799ம்ஆண்டில்திப்புசுல்தான்போரில்கொல்லப்பட்டபின்னர், கோயம்புத்தூர்முழுமையாகஆங்கிலேயர்கள்வசம்சென்றது.

கோவையில்காந்தியடிகள்

விடுதலைபோராட்டக்காலத்தில்1921, 1927, 1934 ம்ஆண்டுகளில்காந்தியடிகள்கோவைக்குவருகைதந்துள்ளார். தற்போது..சி. மைதானம்எனஅழைக்கப்படும்காரனேஷன்பூங்காதிடலில்நடந்தபொதுக்கூட்டங்களில்காந்தியடிகள்உரையாற்றியுள்ளார். 1934ம்ஆண்டில்அரிஜனநலநிதிதிரட்டகோவைவந்தகாந்தியடிகள், ஒய்.எம்.சி.. கிராமபுனருத்தாரணநிலையத்தைபார்வையிட்டார். அங்குகாந்தியடிகள்ஒருநாவல்மரக்கன்றைநட்டார். கப்பலோட்டியதமிழன்..சிதம்பரம்பிள்ளைகோவைசிறையில்சிறைவாசம்அனுபவித்தார். அவர்இழுத்தசெக்குஇன்றும்காட்சிப்பொருளாகவைக்கப்பட்டுள்ளது. ..சி. சிறையில்இருந்துவெளிவந்தபின்னர்சிலகாலம்கோவையில்ஒருநியாயவிலைக்கடையைநடத்தியுள்ளார்.

சிங்காநல்லூர்இரயில்கவிழ்ப்பு

செய்அல்லதுசெத்துமடிஎன்றமுழக்கத்துடன்1942 ம்ஆண்டில்காங்கிரஸ்கமிட்டிகூட்டத்தில்வெள்ளையனேவெளியேறுதீர்மானம்முன்வைக்கப்பட்டது. இதையொட்டிகோவைஒண்டிபுதூர்பகுதியில்சொக்கங்காளிதோட்டத்தில்நடந்தகூட்டத்தில்100 க்கும்மேற்பட்டோர்பங்கேற்றனர். அதில்இராணுவத்தளவாடங்களைஏற்றிச்செல்லும்இரயில்களைகவிழ்ப்பது, சூலூர்விமானதளத்தைகொளுத்துவது, சிறைகளைஉடைத்துகைதிகளைவிடுதலைசெய்தல், அரசுஅலுவலகங்களைகைப்பற்றிபோட்டிஅரசுநடத்துதல்ஆகியதிட்டங்கள்தீட்டப்பட்டன. இத்திட்டங்களைசெயல்படுத்ததனித்தனிகுழுக்கள்அமைக்கப்பட்டன.

உதகைஅரவங்காட்டில்இராணுவத்தளவாடதொழிற்சாலையில்இருந்துவெடிமருந்து, போர்க்கருவிகளோடுசரக்குஇரயில்போத்தனூர்வழியாகஈரோடுசெல்வதுபோராட்டக்காரர்களுக்குதகவல்கிடைத்தது. சிங்காநல்லூர்குளத்தேரிபகுதியில்ஆகஸ்ட்13ம்தேதியன்றுநள்ளிரவில்இரயில்தண்டவாளங்களைதகர்த்ததால், சரக்குஇரயில்தடம்புரண்டது. பெட்டிகள்குளத்தில்கவிழ்ந்தன. உயிர்சேதம்எதுவும்இல்லை.

சூலூர்விமானதளம்எரிப்பு

சூலூர்விமானதளம்போராட்டக்காரர்களின்அடுத்தஇலக்காகஇருந்தது. ஆகஸ்ட்26 ம்தேதியன்றுஅத்தளத்தில்இருந்தகொட்டகைகளும், லாரிகளும்தீவைத்துகொளுத்தப்பட்டன. ஆனால்எதிர்பாராதவிதமானஇரண்டுபேர்உயிரிழந்தனர். அங்கிருந்துதப்பிச்சென்றஒருவன், சூலூர்காவல்துறையினருக்குதகவல்தெரிவித்தான். இதையடுத்துபோராட்டக்காரர்கள்ஒவ்வொருவராகபிடித்துசித்ரவதைசெய்யப்பட்டனர். பலர்சிறைவாசம்அனுபவித்தனர்.

ஒருகுழுசிங்காநல்லூர், பள்ளபாளையம்பகுதியில்இருந்தகள்ளுக்கடைகளுக்குதீவைத்தது. பலகுழப்பங்களால்போராட்டக்காரர்கள்திட்டமிட்டபடிதிட்டங்கள்செயல்படுத்தமுடியாமல்போனது. இப்போராட்டங்களில்பங்கேற்றபஞ்சாலைத்தொழிலாளர்களைபிடிக்க, பஞ்சாலைகளுக்குள்காவல்துறைபுகுந்தது. பஞ்கஜாமில்லுக்குள்காவல்துறையினர்சென்றபோது, தொழிலாளர்களுடன்மோதல்ஏற்படகாவலர்கள்நடத்தியதுப்பாக்கிசூட்டில்2 தொழிலாளர்கள்உயிரிழந்தனர்.

திமிர்வரி

ஆகஸ்ட்புரட்சியில்பங்கேற்றநூற்றுக்கானோர்மீதுவழக்குகள்பாய்ந்தன. கொடும்சித்ரவதைக்குஉள்ளாக்கப்பட்டன. கடுங்காவல்தண்டனைகள்வழங்கப்பட்டன. இராணுவவிமானதளம்நாசமாக்கப்பட்டதற்கானஇழப்புத்தொகையை, அதற்குக்காரணமானபொதுமக்களேஏற்கவேண்டுமெனஆங்கிலேயஅரசுஅறிவித்தது. வழக்கமாகச்செலுத்தும்வரிகளோடுதிமிர்வரியையும்சேர்த்துசெலுத்தவேண்டும்எனசூலூர்சுற்றுவட்டாரஊர்மக்கள்கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இத்தகையபோராட்டங்களாலும், தியாகங்களாலும்கோவைசுதந்திரப்போராட்டத்தில்நிலையானஇடத்தைப்பிடித்துள்ளது. இன்றுசுதந்திரம்அனுபவிக்கும்ஒவ்வொருவரும்இத்தியாகங்களைநினைவில்கொள்ளவேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண