சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஓட்டம்... இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டி...
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘கிரீன் பில்ட் ரன்’ மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பசுமை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ‘கிரீன் பில்ட் ரன்’ எனும் மாரத்தான் போட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்
“பசுமையான சுற்றுச்சூழலுக்காக ஓடுங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 2 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார், பசுமை கட்டிடங்கள், ஆற்றல் சேமிப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சி ஆகியவை இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானவை என தெரிவித்தார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.























