<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>coimbatore</title><atom:link href="https://tamil.abplive.com/coimbatore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 22 May 2026 15:39:27 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-pocso-court-sentences-man-to-20-years-jail-for-assaulting-2-year-old-girl-261159</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-pocso-court-sentences-man-to-20-years-jail-for-assaulting-2-year-old-girl-261159#respond</comments><pubDate>Fri, 22 May 2026 12:45:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-pocso-court-sentences-man-to-20-years-jail-for-assaulting-2-year-old-girl-261159</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணணன் என்பவர், தனது உறவினர் முறையிலான இரண்டு வயது சிறுமியை கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு கடும் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ்கண்ணணனை கைது செய்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளி ராஜேஷ்கண்ணணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கையின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/22/f392b13a6375016df6e801f5d5a8aeb91779434061567108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-police-launches-high-tech-master-command-and-control-centre-with-1500-cctv-cameras-261148</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-police-launches-high-tech-master-command-and-control-centre-with-1500-cctv-cameras-261148#respond</comments><pubDate>Fri, 22 May 2026 11:03:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-police-launches-high-tech-master-command-and-control-centre-with-1500-cctv-cameras-261148</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்ட காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் அவசர நடவடிக்கைகளை மேலும் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் வகையில், &amp;ldquo;மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்&amp;rdquo; (MCCC) எனும் அதிநவீன கட்டுப்பாட்டு மையம் கோவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தின் 4-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் திறந்து வைத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;போலீஸின் புதிய ஸ்மார்ட் திட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;திறப்பு விழாவில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யா பாரதி, கோவை சரக காவல் துணை தலைவர் சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் IPS, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் IAS உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட CCTV மற்றும் ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்கள் ஒரே இடத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. மத்திய LED வீடியோ வால் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு மென்பொருட்கள் மூலம் முக்கிய பகுதிகள், எல்லைப் பாதுகாப்பு சாவடிகள் மற்றும் பொது இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், அனைத்து காவல் நிலையங்களின் கண்காணிப்பு வெப்கேம்கள், &amp;lsquo;டயல்-100&amp;rsquo; அவசர உதவி சேவை, Kakki Beat மற்றும் Smart Kavalar செயலிகள், சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு, சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு, NDPS பிரிவு உள்ளிட்டவை இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்டறிந்து குற்றச் சம்பவங்களை குறைக்க முடியும் என்றும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க இந்த மையம் பெரிதும் உதவும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/22/35b7e5a4a031c0e964d34a1f5f2e7d631779427966718108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோவை பாஜக மையக்குழு கூட்டம்... தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த முக்கிய எச்சரிக்கை...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/tamil-nadu-government-must-follow-centre-s-guidelines-bjp-tamilisai-soundararajan-261117</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/tamil-nadu-government-must-follow-centre-s-guidelines-bjp-tamilisai-soundararajan-261117#respond</comments><pubDate>Thu, 21 May 2026 18:19:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/tamil-nadu-government-must-follow-centre-s-guidelines-bjp-tamilisai-soundararajan-261117</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மையக்குழு ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் வழிமுறைகள் நாட்டின் நலனுக்காக உருவாக்கப்படுபவையாக இருப்பதால், தமிழக அரசு அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;p&gt;கோவையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த மையக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், &amp;ldquo;மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியவர்கள், முன்பு எதிர்த்த சக்திகளோடு தற்போது இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது&amp;rdquo; என்று குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் மக்கள் ஆதரவை இழந்து ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ளதாகவும், மக்கள் நலத்திட்டங்களில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் விமர்சித்தார். &amp;ldquo;மக்கள் மாற்றத்தைக் கவனித்து வருகின்றனர்&amp;rdquo; என்றும் கூறினார்.&amp;nbsp;இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்க்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அதை மாநில அரசுகள் நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்தார். &amp;ldquo;மத்திய அரசின் உத்தரவுகள் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக அல்ல; நாட்டின் முன்னேற்றத்திற்காக&amp;rdquo; என அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது சனாதனம், வந்தே மாதரம் போன்ற விஷயங்களை அரசியலாக்கியதாக குற்றம்சாட்டிய அவர், இனி உணர்ச்சிப்பூர்வ அரசியலைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றார்.&amp;nbsp;மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து ராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், &amp;ldquo;அந்த பயணங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வளங்களை பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படுகின்றன&amp;rdquo; என்று விளக்கமளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இறுதியாக, புதிய நிர்வாகிகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, பாஜக நிர்வாகிகளை மேலும் உற்சாகத்துடன் செயல்பட வழிகாட்டுவதே இந்த மையக்குழு கூட்டத்தின் நோக்கம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/21/3d0ec802b81e0a2c4d170fe54ab099fa1779367724102108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Coimbatore power cut: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்களின் லிஸ்ட் வெளியானது - உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-22-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261057</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-22-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261057#respond</comments><pubDate>Thu, 21 May 2026 13:25:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-22-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261057</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 22, 2026, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ON_kJgE3fo4?si=RM2TC_5BkW7Kf-t5&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை&lt;/h2&gt;
&lt;p&gt;விளாங்குறிச்சி&lt;/p&gt;
&lt;p&gt;தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;காளப்பட்டி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ரேஸ் கோர்ஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பதுவம்பள்ளி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/cheapest-electric-scooter-full-charge-range-260993&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/21/c164160c14d73c4fb6e32157189db1f41779350048382113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் ? – நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/aiadmk-facing-internal-issues-after-elections-says-bjp-leader-nainar-nagendran-261047</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/aiadmk-facing-internal-issues-after-elections-says-bjp-leader-nainar-nagendran-261047#respond</comments><pubDate>Thu, 21 May 2026 12:49:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/aiadmk-facing-internal-issues-after-elections-says-bjp-leader-nainar-nagendran-261047</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், கட்சியின் மையக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கு பிந்தைய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நாளை தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;கோவையில் மையக் குழு கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து பேசிய அவர், &amp;ldquo;இதற்கு எந்த பிரத்தியேக காரணமும் இல்லை. கடந்த முறை சென்னை நகரில் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கோவையில் நடத்தப்படுகிறது&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், &amp;ldquo;தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக இடையேயான உறவு அமைதியாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால் தேர்தலுக்கு பிறகு அக்கட்சியில் உள்கட்சி பிரச்சினைகள் நிலவி வருவதால், அதுகுறித்து எதுவும் கருத்து சொல்ல முடியாது&amp;rdquo; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், &amp;ldquo;தேர்தல் காலத்தில் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. அது தொடர்பாக மையக் குழு கூட்டத்திலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை&amp;rdquo; என்றும் கூறினார்.&amp;nbsp;அதிமுக உள்கட்சி பிரச்சினையை தீர்க்க பாஜக உதவுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார். இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/21/869ab9ab4786d6ccde3c3253f42a5a221779347880481108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேர்தல் தோல்வி குறித்து அண்ணாவை குறிப்பிட்ட தி.மு.க. எம்.பி கனிமொழி – வைரலாகும் பேச்சு...]]></title><link>https://tamil.abplive.com/news/politics/kanimozhi-mp-speaks-on-ai-social-media-and-rational-thinking-at-coimbatore-event-260971</link><comments>https://tamil.abplive.com/news/politics/kanimozhi-mp-speaks-on-ai-social-media-and-rational-thinking-at-coimbatore-event-260971#respond</comments><pubDate>Wed, 20 May 2026 15:49:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/kanimozhi-mp-speaks-on-ai-social-media-and-rational-thinking-at-coimbatore-event-260971</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., சமூக வலைதளங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பகுத்தறிவு மற்றும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்து பேசியது கவனம் பெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;சுயமரியாதை திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், தற்போதைய தலைமுறையில் பெண்கள் உயர்கல்வி கற்று, யு.பி.எஸ்.சி போன்ற உயர்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராகி நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலைக்கு வந்திருப்பது திராவிட இயக்க தலைவர்கள் பல ஆண்டுகள் போராடியதன் பலன் என குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், &amp;ldquo;ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக் கூடாது, குறிப்பிட்ட ஜாதியினர் கல்வி கற்கக் கூடாது என்ற நிலை இருந்தது. அந்த சிந்தனைகளை உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார். இன்று பெண்கள் தங்களுக்கென ஒரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடிய நிலையில் உள்ளனர்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;சமூக வலைதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை குறித்து பேசிய கனிமொழி, &amp;ldquo;இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. யார் தகவலை கூறுகிறார்கள்? அவர்களின் தகுதி என்ன? என்பதை பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்&amp;rdquo; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல், &amp;ldquo;சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ தளங்களும் சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதிகமாக கேள்வி கேட்டால் &amp;lsquo;மன்னிக்கவும், எனக்கு தெரியாது&amp;rsquo; என்று பதிலளிக்கிறது. அதனால் தகவல்களை பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்று தந்தை பெரியார் வலியுறுத்தினார்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிட்ட அவர், &amp;ldquo;தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பு. அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். தொடர்ந்து மக்களோடு பயணிப்போம்&amp;rdquo; என கூறினார். கனிமொழியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/20/c94e46067335fa8383499b1ea45a5d531779272294159108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடந்த ஆண்டை மிஞ்சிய கோவை தேர்ச்சி விகிதம் – மாணவிகள் அசத்தல்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/girl-students-top-coimbatore-sslc-results-with-97-09-pass-percentage-260967</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/girl-students-top-coimbatore-sslc-results-with-97-09-pass-percentage-260967#respond</comments><pubDate>Wed, 20 May 2026 15:34:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/girl-students-top-coimbatore-sslc-results-with-97-09-pass-percentage-260967</guid><description><![CDATA[&lt;p data-start=&quot;0&quot; data-end=&quot;235&quot;&gt;கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p data-start=&quot;237&quot; data-end=&quot;482&quot;&gt;கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 37 ஆயிரத்து 844 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 36 ஆயிரத்து 742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 97.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p data-start=&quot;484&quot; data-end=&quot;794&quot;&gt;தேர்வு எழுதியவர்களில் 18 ஆயிரத்து 506 மாணவர்கள் மற்றும் 19 ஆயிரத்து 338 மாணவிகள் இடம்பெற்றிருந்தனர். இதில் 17 ஆயிரத்து 760 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தரப்பில் 18 ஆயிரத்து 952 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p data-start=&quot;796&quot; data-end=&quot;1026&quot;&gt;கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு அது 97.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p data-start=&quot;1028&quot; data-end=&quot;1239&quot;&gt;மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்த பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதன் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p data-start=&quot;1241&quot; data-end=&quot;1387&quot; data-is-last-node=&quot;&quot; data-is-only-node=&quot;&quot;&gt;மேலும் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகங்கள் மற்றும் கல்வித்துறை சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/20/c9a9e65853c64c0831635da0bd7e00ad1779271420810108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஷப்பாாாா... என்ன வெயிலு!” – சவரில் ஜாலியாக குளித்த பேரூர் கல்யாணி யானை...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-perur-kalyani-elephant-enjoys-cooling-shower-bath-amid-summer-heat-260966</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-perur-kalyani-elephant-enjoys-cooling-shower-bath-amid-summer-heat-260966#respond</comments><pubDate>Wed, 20 May 2026 15:24:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-perur-kalyani-elephant-enjoys-cooling-shower-bath-amid-summer-heat-260966</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை பேரூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள கல்யாணி யானைக்காக கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கோவையில் நிலவி வரும் கடும் வெயிலால் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் ஒரு பகுதியாக, பட்டீஸ்வரர் கோவிலின் கல்யாணி யானை வழக்கமாகக் குளிக்கும் குளியல் தொட்டியின் அருகே புதிதாக பலமுனை தானியங்கி சவர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சவர்களில் இருந்து மேலிருந்து மழை போல குளிர்ந்த நீர் பொழியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், யானையின் உடல் முழுவதும் குளிர்ச்சியடைகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;குளிர்ந்த நீர் சாரலின் கீழ் கல்யாணி யானை மகிழ்ச்சியுடன் குளியல் போடும் காட்சி பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தும்பிக்கையை உயர்த்தி தலையசைத்து உற்சாகமாக நீரில் நனைந்து விளையாடும் யானையின் செயல்பாடுகள் அங்கு வந்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கல்யாணி யானைக்கு இந்த சிறப்பு சவர் குளியல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் யானையின் உடல்நலனை கருத்தில் கொண்டு உணவு மற்றும் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கோடை வெப்பத்திலிருந்து யானையை பாதுகாக்க கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பக்தர்கள் மற்றும் விலங்கு நேயர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கல்யாணி யானையின் ஆனந்த குளியல் காட்சி தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/20/8a54f3710497491790564a46f1dd78a11779270671507108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Coimbatore power cut: கோவையில் மின்தடை அறிவிப்பு - நாளை எந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? - லிஸ்ட் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-21-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260945</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-21-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260945#respond</comments><pubDate>Wed, 20 May 2026 12:57:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-21-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260945</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 21, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/nbgNm7m8vhs?si=iGMu5lrbA1h_7mWq&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எம்.ஜி.ரோடு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பீளமேடு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எஸ்.என்.பாளையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/does-wearing-a-helmet-really-cause-hair-loss-260863&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/08/67c43d0fcecd7351816e032fda275d8e1751943704533614_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை 7 மணி நேரம் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-20-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260818</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-20-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260818#respond</comments><pubDate>Tue, 19 May 2026 13:35:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-20-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260818</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 20, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/q85OaWFtOyQ?si=y1Has0NwLOkBBHLs&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை&lt;/h2&gt;
&lt;p&gt;கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர். தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-to-make-drumstick-soup-260524&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/09/17/f550a35314bee5404ff969023138fedf1758095947034240_original.png" width="220"/></item></channel></rss>