<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>coimbatore</title><atom:link href="https://tamil.abplive.com/coimbatore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 27 Jun 2026 07:20:29 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-25-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264947</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-25-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264947#respond</comments><pubDate>Wed, 24 Jun 2026 13:44:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-25-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264947</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 25, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PnMkrE9eSuk?si=C_2YyTucQyZYmpFf&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கோவை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-should-bike-chain-be-changed-264585&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/images/dw/74880985_607.jpg" width="220"/></item><item><title><![CDATA[சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/woman-receives-life-sentence-for-killing-child-considered-obstacle-to-affair-264936</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/woman-receives-life-sentence-for-killing-child-considered-obstacle-to-affair-264936#respond</comments><pubDate>Wed, 24 Jun 2026 12:19:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/woman-receives-life-sentence-for-killing-child-considered-obstacle-to-affair-264936</guid><description><![CDATA[&lt;p&gt;கோயம்புத்தூர் மாவட்டம் தம்மம்பதி பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்பவருக்கு, அவரது கணவர் மணிகண்டனுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சரோஜினி கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தனது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாகக் கருதிய குழந்தையை சரோஜினி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2012ஆம் ஆண்டு தம்மம்பதி பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்து சரோஜினி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து குழந்தையின் தந்தையான மணிகண்டன் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சரோஜினி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கு வால்பாறை நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், போலீசார் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது சொந்த குழந்தையை கொலை செய்த சரோஜினிக்கு ஆயுள் தண்டனை விதித்து வால்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;14 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தம்மம்பதி பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/24/2645153f0c3a4dc427390b24db4df6311782283773501108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்... பேருந்தை முந்த முயன்றபோது நேர்ந்த பயங்கரம்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-road-accident-teen-thrown-under-bus-wheel-in-heart-stopping-incident-264873</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-road-accident-teen-thrown-under-bus-wheel-in-heart-stopping-incident-264873#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 17:30:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-road-accident-teen-thrown-under-bus-wheel-in-heart-stopping-incident-264873</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;ஆத்துப்பாலம் பகுதியில் சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. வளைவு பகுதியில் திரும்பியபோது இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் அது சாலையில் கவிழ்ந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விபத்தில் வாகனத்தை இயக்கிய சிறுவன் சாலையின் ஓரமாக விழுந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு சிறுவன் பேருந்தின் பின்சக்கரத்திற்கு அருகே விழுந்தார். எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்சக்கரம் அவரது உடலின் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இருசக்கர வாகனங்களை இயக்குவதில் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் பெறாத வயதினர்கள் வாகனங்களை இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.&amp;nbsp;விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/23/fb02ec888c390e7364a798f042f9f3061782215998060108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/rs-10-crore-gold-and-silver-scam-in-coimbatore-gujarat-traders-go-missing-police-launch-manhunt-264871</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/rs-10-crore-gold-and-silver-scam-in-coimbatore-gujarat-traders-go-missing-police-launch-manhunt-264871#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 17:12:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/rs-10-crore-gold-and-silver-scam-in-coimbatore-gujarat-traders-go-missing-police-launch-manhunt-264871</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை பெரியகடை வீதியில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளுடன் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகள் தலைமறைவான சம்பவம் நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கோவை பெரியகடை வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை, கொள்முதல் செய்யும் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலம் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்த குமார் சோனி மற்றும் விஜய் அம்பாலால் சோனி ஆகியோர், சமீபத்தில் அப்பகுதியில் தங்கம், வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி வியாபாரம் செய்து வந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆரம்பத்தில் நகை வியாபாரிகளிடம் இருந்து தங்கம் மற்றும் நகைகளை வாங்கி, உரிய நேரத்தில் பணம் வழங்கியதால் அவர்கள் மீது வியாபாரிகள் நம்பிக்கை கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் நகைகளை விற்பனைக்காக அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், சுமார் 6 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 5 கிலோ வெள்ளிக் கட்டிகள் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களுடன் குமார் சோனி மற்றும் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அம்பாலால் சோனி திடீரென தலைமறைவாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தகவலறிந்த கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தலைமறைவான இருவரும் டெல்லி, சூரத், தானே உள்ளிட்ட பல நகரங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தலைமறைவான இருவரையும் கைது செய்ய கோவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/23/24fe1de4bc7cbb2ca3cf33501963fd251782214906823108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவை மக்களே உஷார்! - நாளை  (24-06-2026) எத்தனை இடங்களில் பவர் கட்? பட்டியலை பாருங்க]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-24-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264863</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-24-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264863#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 16:12:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-24-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-264863</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஜூன் 24, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/kYesRDYp0Tc?si=B_2JGorcOU2H9QXy&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கோவை மாவட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் கோ, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/08/47b0c3363142e02338ce4a7968c0f7ef1762601227241240_original.png" width="220"/></item><item><title><![CDATA[" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-youth-killed-by-friends-over-love-affair-tnn-264778</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-youth-killed-by-friends-over-love-affair-tnn-264778#respond</comments><pubDate>Mon, 22 Jun 2026 23:03:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-youth-killed-by-friends-over-love-affair-tnn-264778</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;நண்பனின் தங்கையுடன் காதல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரும் நெருங்கிய நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது. எனவே பாரதிராஜா வீட்டிற்கு கண்ணன் அடிக்கடி சென்று வந்த நிலையில் பாரதிராஜாவின் தங்கைக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பாரதிராஜா கண்ணன் மீது கடும் ஆத்திரமடைந்திருக்கிறார். எனவே காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தும் கண்ணன் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;நண்பனை கொலை செய்ய முடிவு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்துள்ளது. நாளடைவில் கண்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த பாரதிராஜா, தனது பிற நண்பர்களான வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் உதவியுடன் அவரை தனியாக வரவழைக்க திட்டமிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி வசந்த குமாரும், மணிகண்டனும் சேர்ந்து கடந்த (ஜூன் 11) ஆம் தேதி நியூ அம்மன் நகர் பகுதியில் உள்ள ஐயர் தோட்டத்து வீட்டுக்கு வருமாறு கூறி கண்ணனை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு பாரதிராஜாவுடன் ஏற்கனவே அவரது நண்பர்களான ருத்தீஷ் நசீர் உசேன் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;கண்ணனிடம் காதல் தொடர்பாக 'பஞ்சாயத்து' பேசிய அவர்கள், நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ என பாரதிராஜாவின் தங்கையுடனான உறவை கை விடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் கண்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் கண்ணனை சரமாரியாக தாக்கிய நிலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க முயன்ற குற்றவாளிகள், அவரது உடலை அருகில் இருந்த தோட்டக் கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;அழுகிய நிலையில் சடலம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த நிலையில், கடந்த (ஜூன் 13) ஆம் தேதி மேட்டுப்பாளையம் மணி நகர் அருகே உள்ள தனியார் தோட்டக் கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் , மிகவும் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரிசியன் கண்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் அவர் கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், நண்பனின் தங்கையைக் காதலித்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், பின்னர் அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பிக்கப் வேன் மீது பாய்ந்த பொலிரோ கார்... டாஸ்மாக் முன் நொடியில் நடந்த பயங்கரம்...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/shocking-cctv-video-bolero-suv-rams-parked-pickup-van-near-tasmac-in-coimbatore-264278</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/shocking-cctv-video-bolero-suv-rams-parked-pickup-van-near-tasmac-in-coimbatore-264278#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 12:02:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/shocking-cctv-video-bolero-suv-rams-parked-pickup-van-near-tasmac-in-coimbatore-264278</guid><description><![CDATA[&lt;p&gt;இதோ 300 வார்த்தைகளுக்குள் செய்தி வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது:&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;டாஸ்மாக் அருகே நின்றிருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ கார்: சி.சி.டி.வி காட்சிகள் வைரல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கோவை மாவட்டம் அன்னூர் &amp;ndash; சிறுமுகை பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அருகே நின்றிருந்த பிக்கப் சரக்கு வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த பொலிரோ கார் மோதிய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் அமைந்துள்ள &amp;lsquo;11 டு 11&amp;rsquo; டாஸ்மாக் கடை முன்பாக பிக்கப் சரக்கு வாகனம் ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மஹிந்திரா பொலிரோ கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக பாய்ந்து சென்று பிக்கப் வாகனத்தின் பின்பகுதியில் பலமாக மோதியது.&lt;/p&gt;
&lt;p&gt;மோதலின் தாக்கத்தால் இரு வாகனங்களும் சேதமடைந்தன. விபத்தின் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் மதுபானக் கடை அருகே இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் வாகனங்களில் இருந்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விபத்து முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;டாஸ்மாக் கடை அருகே விபத்து நிகழ்ந்ததால், கார் ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா, அதிக வேகமா அல்லது தூக்கக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்தாரா என்பது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விபத்து மீண்டும் ஒருமுறை சாலைப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான வாகன ஓட்டத்தின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/ccd2e2eb6d5a026526014602b9c90feb1781764307350108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோடை வெயிலுக்கு பிரேக் போட்ட சாரல் மழை... காலையிலேயே குஷியான கோவையன்ஸ்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/drizzle-brings-relief-from-summer-heat-in-coimbatore-residents-enjoy-a-pleasant-morning-264273</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/drizzle-brings-relief-from-summer-heat-in-coimbatore-residents-enjoy-a-pleasant-morning-264273#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 11:33:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/drizzle-brings-relief-from-summer-heat-in-coimbatore-residents-enjoy-a-pleasant-morning-264273</guid><description><![CDATA[&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீரென பெய்த இதமான சாரல் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்குச் சென்ற பொதுமக்கள் குடைகளைப் பிடித்தபடி தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து காந்திபுரம், ரயில் நிலையம், உக்கடம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;காலை 8 மணியளவில் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பரபரப்பான நேரத்தில் மழை பெய்ததால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சற்று சிரமத்தை எதிர்கொண்டனர். இருப்பினும், நீண்ட நாட்களாக நிலவி வந்த வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைத்ததாக பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் குடைகளைப் பிடித்தபடி சென்ற காட்சிகள் பல இடங்களில் காணப்பட்டன. அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் மழையில் நனைந்தபடி பணிக்குச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;இந்த திடீர் சாரல் மழையால் மாநகரில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. சில தாழ்வான சாலைகளில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், மழை காரணமாக பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;கோடைக் கால வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் அளித்த இந்த இதமான சாரல் மழை, கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/a26084ec14f459cac2871d4d180d883e1781762581576108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி]]></title><link>https://tamil.abplive.com/crime/coimbatore-chain-snatching-case-police-arrest-suspect-and-recover-stolen-gold-chain-264271</link><comments>https://tamil.abplive.com/crime/coimbatore-chain-snatching-case-police-arrest-suspect-and-recover-stolen-gold-chain-264271#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 11:16:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/coimbatore-chain-snatching-case-police-arrest-suspect-and-recover-stolen-gold-chain-264271</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இளம் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து தப்பிச் சென்ற வழிப்பறி குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து, நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மதுக்கரை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது பெண் ஒருவர் கடந்த 11.06.2026 அன்று தொப்பம்பாளையம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவின்பேரில், மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், மரப்பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நிஜாருதீன் @ அசரத் நிசார் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தங்கச் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது உறுதியானது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பறிக்கப்பட்ட தங்கச் செயின் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்ற வழக்குகளிலும் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/2d8dd51d608f52e3554eece36725cea21781761537624108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-court-sentences-man-to-10-years-in-prison-for-rape-of-28-year-old-woman-264269</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-court-sentences-man-to-10-years-in-prison-for-rape-of-28-year-old-woman-264269#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 11:10:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-court-sentences-man-to-10-years-in-prison-for-rape-of-28-year-old-woman-264269</guid><description><![CDATA[&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;கோவை மாவட்டத்தில் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;கடந்த 2021-ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் வன்புணர்ச்சிக்கு ஆளானதாக புகார் அளித்தார். இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலசுப்பிரமணி (43) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் (மகிளா கோர்ட்) நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி இன்று (17.06.2026) தீர்ப்பளித்தார். அதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p class=&quot;isSelectedEnd&quot;&gt;இந்த வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு மேற்கொண்ட விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்றத்தில் சாட்சிகளை திறம்பட ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் தலைமை காவலர் கீதா (WHC 325) ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பாராட்டினார்.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணை மற்றும் தண்டனை வழங்கப்படுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/c7f5d95db66b630094979a01926a92e61781761177480108_original.jpg" width="220"/></item></channel></rss>