தமிழ்நாட்டில் ஏப்ரல் 23, 2026 நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள “ஹார்ன்பில்” (இருவாட்சி பறவை) சின்னத்தை மனிதச் சங்கம வடிவில் உருவாக்கும் நிகழ்ச்சி “HORNBILL VOTE WAVE 2026” என்ற தலைப்பில் நடைபெற்றது. ரோட்டரேக்ட் கிளப் ஆப் யுஐடி ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில், 1445 மாணவர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்று, ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வின் சின்னமாக அந்தப் பறவையின் உருவத்தை துல்லியமாக வடிவமைத்தனர்.
இந்த நிகழ்வு, யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இணைத் தலைவர் டாக்டர் மைதிலி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை கலெக்டர் சன்கீத் ஐஏஎஸ், வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.
மாணவர் நலத்துறை டீன் டாக்டர் ஷர்மிளா, இந்நிகழ்வின் முழுமையான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைத்தார். மேலும், ட்ரோன் நிபுணர் வீர விஷ்ணு உள்ளிட்டோர் நிகழ்வை பதிவு செய்தனர். பேராசிரியர்கள், ரோட்டேரியன்கள், ரோட்டராக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் முயற்சியை பாராட்டினர்.
இந்த நிகழ்வை All India Book of Records குழுவினர் பார்வையிட்டு, சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.
“Hornbill Vote Wave 2026” நிகழ்வு, இளைஞர்களிடையே வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது.
