வாட்ஸ் அப் வர்த்தக மோசடி ; கோடிகளை இழந்த தொழில் அதிபர் !! அதிர்ச்சி தரும் உண்மை
ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கோடிக் கணக்கில் ஏமாந்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் - போலீசார் விசாரணை

வாட்ஸ் அப்பில் வந்த வர்த்தக முதலீடு விளம்பரம்
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகேந்திரன் என்பவருடைய செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அந்த தகவலில், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை சோதித்து பார்க்க விரும்பிய மகேந்திரன் முதலில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தார். அதில் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்திருக்கிறது.
இதனால் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ரூ.1.23 கோடி வரை முதலீடு செய்திருக்கிறார். ஆனால் ஆசை காட்டி , மோசடி கும்பல் இவர் முதலீடு செய்த ரூ.1.23 கோடியையும் சுருட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மகேந்திரன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 41 வயதாகும் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த இவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதே போன்று பல தொழில் அதிபர்களிடம் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது. இதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
IAS அதிகாரியை மோசடி செய்த கும்பல்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி கிருஷ்ணகுமார் என்பவர் ரூ.6.58 கோடியை இழந்தார். அவரிடம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 10-வது குற்றவாளியாக ஈரோட்டை சேர்ந்த மாதேஷ்குமார் (வயது 41) என்பவரும் இப்போது கைது செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் 11 பேர் கைதாகி உள்ளார்கள்.






















