முதல் கணவரை உதறி, இரண்டாவது கணவராக அரசை ஏற்றுக் கொண்ட அன்னபூரணி. அரசு, இறந்த பின், அவர் நினைவாக சிலை வைத்து அன்னபூரணி வழிபட்டதாக அவரே கூறியிருந்தார். "இருவரும் எங்களுக்குள் சக்தி இருப்பதை உணர்ந்து தான் இணைந்தோம், அந்த சக்தி தான் எங்களை பயிற்றுவித்தது. எங்களுக்குள் செயல்பட்டது. பின், அரசு உடலை அந்த சக்தி எடுத்துக் கொண்டது. அவருக்குள் இருந்த சக்தி, என்னுள் இருந்த சக்திக்குள் ஒன்றிணைந்து, ஒரே சக்தியானது. பின் அந்த சக்தி, பலரை மகிழ்விக்க, அவர்கள் குழந்தையாய், நான் தாயாய் மாற வைத்தது" என அன்னபூரணி தெரிவித்திருந்தார்.
பாகுபலி லிங்கம் போல பெயர்த்து எடுக்கப்பட்ட, அன்னபூரணி அரசு அம்மாவின் சிலை தற்போது எங்கே இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 'ஆன்மிகக் அட்வைஸ்' கொடுப்பதற்காக அன்னபூரணி அரசு அம்மா 700 ரூபாய் கட்டணம் வாங்கி அட்வைஸ் கொடுத்து வரும் நிலையில், 'அன்னபூரணி அம்மாவின் எழுச்சிக்கு' காரணமாக இருந்த அரசின் சிலை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் சிலைகளுடன் சிலையாக காட்சி அளிக்கிறது. அனுமன் சிலை அருகில், புத்தரின் அரவணைப்பில் அரசு தற்போது, மகாராஜா போல் மகாபலிபுரம் சுற்றுலா பயணிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு உள்ளார்.