பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பல் மருத்துவர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனைக்கு அருகே ஒரு பல் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர் மீது சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


அதன்படி மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன் ஷெரின் என்ற மருத்துவர் மூலம் அப்பெண்ணிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்தப் பெண் திருமணமாகி கணவரை இழந்தவர். அதேபோல் நிஷாந்த் ரவிச்சந்திரன் திருமணமாகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவர் நிஷாந்த் இந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது. 


இதன்காரணமாக இருவரும் பல முறை தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர் நிஷாந்த் போதை பொருளுக்கு அடிமையாகி அவருடைய நண்பர்களுடன் இந்த இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அதை தாங்க முடியாமல் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த ஒரு வருடமாக மருத்துவர் நிஷாந்த் நான்குக்கும் மேற்பட்ட விதவை பெண்களை இதுபோன்று ஆசை காட்டி ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, இவர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்கள் இது தொடர்பாக புகார் அளித்தால் அவர்களுடம் எடுத்த ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவர் நிஷாந்த், தோழி ஷெரின் மற்றும் ஒரு கூட்டாளி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மருத்துவர் நிஷாந்த் மேலும் சில பெண்கள் யாராவது இதுபோன்று ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல் மருத்துவர் ஒருவர் இப்படி பல பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அவருக்கு போதைப் பொருள் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண