தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி; முதலமைச்சரின் இந்த செயல்தான் காரணம் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
முதலமைச்சர் தினம் தினம் சிந்தித்து உலக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவதால் தான் தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய காரணம் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில் துறை அமைச்சர் டி .ஆர்.பி ராஜா பேசியதாவது:
முதலமைச்சருக்கு நாம் நன்றி கூற வேண்டும்
திராவிட நாயகன் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உச்சாங்களை தொட்டு வருகிறது. பொருளாதாரத்தில் 9.69 சதவீதம் என்ற உச்சத்தை தமிழ்நாடு தொட்டுள்ளதாகவும், அனைத்து துறைகள், அனைத்து பகுதிகள் வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதால் இந்த இலக்கை அடைந்துள்ளோம். இந்தியாவின் மிக பிரமாண்டமான பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கடந்த 4 ஆண்டுகளில் நம் முதலமைச்சர் பெற்று தந்துள்ளார். நாம் முதலமைச்சருக்கு நன்றியை கூற வேண்டும். பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளது அதற்க்கு காரணம் உற்பத்தி வளர்ச்சி அடைந்து அது சேவை துறைக்கு மாறுகிறது அதை தொடர்ந்து அனைத்து துறைகளும் வளர்ச்சியை அடைந்துள்ளது. பரவலாக்கபட்ட வளர்ச்சி காரணமாக கிராம புரங்கள் வரை வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் , கொரோனா காலம் தாண்டி , அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தேக்கம் அனைத்தையும் மீறி கடந்த 4 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அடைந்துள்ளோம்.
ஒன்றிய அரசின் அரவணைப்பில் உள்ள மாநிலங்களை விட தமிழ்நாடு அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிகாமல் செயல்பட்டால் நாம் இன்னும் அதிகமாக வளர்ச்சி அடைந்து இருக்கலாம். தமிழ் நாட்டிற்க்கு சரியாக தர வேண்டியதை ஒன்றிய அரசு கொடுத்தால் நாம் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்.
முதலமைச்சரின் உழைப்பு தான் அனைத்திற்கும் காரணம் தமிழ் நாட்டின் போட்டி மற்ற நாடுகளுடன் தான் முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் உலக அளவில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ப்ப முடிவுகள் எடுக்கப்பட்டு வளர்ச்சி நோக்கி பயணித்து வருகிறோம்.
அமெரிக்கா வரி விதிப்பு - பாதிப்பு இல்லை
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த தாக்கம் காரணமான சேவை துறை உள்ளிட்ட துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அனைத்தையும் கருத்தில் கொண்டு நம் முதலமைச்சர் சிந்திப்பதால் தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். அமெரிக்கா வரி விதிப்பு கொள்கையால் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு இருக்காது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.





















