பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற உள்ள ஆலோசனையில் 13 கிராம மக்களின் கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.


அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், நாளை அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.


 இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து மனு அளிக்க நடைப்பயணம் மேற்கொள்வதாக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். இந்நிலையில் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேச்சுவார்த்தையில், ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஒருங்கிணைப்பு குழு அதனை மறுத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


இந்த பேச்சுவார்த்தை குறித்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இளங்கோ கூறுகையில் , தொடர்ந்து விளைநிலங்கள்,  நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் நாளை போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதும் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்த நிலையில்,  பரந்தூரில் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினர்.விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள் விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்து நாளை கண்டிப்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து இக்கூறிக்கையில் அளிப்போம் என தெரிவித்த நிலையில், இன்று போராட்டம் செய்துவந்த பொதுமக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கொண்டு இருந்தனர் அப்போது வந்த அரசு அதிகாரிகள் உடனடியாக போராட்ட குழுவிடம், நடத்திய பேச்சு வார்த்தையில், நாளை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.