ஹவுரா முதல் கன்னியாகுமரி 

 

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி சென்ற அதிவிரைவு ரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  கொல்கத்தாவில் இருந்து  கன்னியாகுமரிக்கு இயக்கபடும், வாராந்திர சிறப்பு ரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.சென்னை எழும்பூர் வந்த நிலையில், முனபதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பதிலாக அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.

 



வாக்கு வாதம்

 

கன்னியாகுமரி வரை செல்லும் வாராந்திர சிறப்பு இரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்தவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த நிலையிலும் வட மாநிலத்தவர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிக அளவு பெண்கள் பயணித்த பெட்டியில் முறையற்ற முறையில் ஆடைகளை அணிந்து இருந்த வடமாநிலத்தை சேர்ந்த சிலர் முன்பதிவு செய்திருந்த இடத்தில் அமர்ந்து இருந்து இடம் கொடுக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.



 

முன்பதிவு

 

இந்நிலையில் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இரயில் பயணிகளுக்காக நிறுத்தப்பட்ட நிலையத்தில் ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் ரயில்களில் முறையான பயணச்சீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்வதால் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தனர்.



 

அவசர எண்

 

இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் என யாரும் கழிவறைக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல முறை இந்த சம்பவங்கள் குறித்து தகவல் தெரவிக்க அவசர எண்ணை பயன்படுத்தியும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் 1மணி நேரத்திற்கு மேலாக செங்கல்பட்டு ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலில் ஏறிய வடமாநிலத்தவர்கள் ஒருவர் கூட முறையான டிக்கெட் பெறமாமல் முன்பதிவு பெட்டிகளில் ஏறி அராஜகத்தில் ஈடுபட்டதால் பயணிகள் பெரும் அவதியுற்றனர்.

 



 

போலிசார் அனுப்பி வைத்தனர்

 

 

சம்பவ இடத்திற்க்கு வந்த இரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர போலிசார் முன்பதிவு பெட்டிகளில் இருந்த வடமாநிலத்தவர்களை இறக்கி வேறு இரயில்களில் அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் வேலைக்கு வரும் நிலையில் முன்பதிவு பெட்டிகளில் ஏறி  அமர்த்து அராஜகத்தில் ஈடுபடுவதாக இரயில் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில் நிலையம் நள்ளிரவில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.