Just In

டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!

நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்.. இந்திய விமானப்படையுடன் கைகோர்த்த கடற்படை.. சவாலை சமாளிக்குமா?

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா: விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!

அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?

”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்
ஊழியர்களுக்கு எஸ்.யூ.வி கார் பரிசு.. வேலை செஞ்சா இங்க செய்யணும்.. அள்ளி கொடுத்த முதலாளி..!
விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு
அரசு இணையதளங்கள், விளம்பரங்களில் மறைந்த முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Continues below advertisement

முன்னாள் முதல்வர் கருணாநிதி
அரசு இணையதளங்கள், விளம்பரங்களில் மறைந்த முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றை திரிப்பதுடன், மற்ற முதல்வர்கள் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழிவகுத்து விடும் என்பதால், அரசு இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.