<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chennai</title><atom:link href="https://tamil.abplive.com/chennai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 04:10:05 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/woman-murdered-by-paramour-with-spade-near-udumalaipettai-balappampatti-crime-news-tnn-270862</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/woman-murdered-by-paramour-with-spade-near-udumalaipettai-balappampatti-crime-news-tnn-270862#respond</comments><pubDate>Wed, 12 Aug 2026 02:45:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/woman-murdered-by-paramour-with-spade-near-udumalaipettai-balappampatti-crime-news-tnn-270862</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; விபத்தில் உருவான கள்ளத் தொடர்பு &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் பானுமதி ( வயது 45 ) இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து தனது மகள் பிரியங்காவுடன் தனியாக வசித்து வந்தார் பானுமதி.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இந்த நிலையில் பானுமதி இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். பானுமதி ஒரு நாள் வேலை முடிந்து பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்த போது ஒரு விபத்தில் ஆனைமலையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் காயம் அடைந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அங்கு அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதிலிருந்து இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. பானுமதியும் அவ்வப்போது பிரபாகரனிடம் கை செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கள்ளக் காதல் கை விட எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பானுமதி தனது மகள் பிரியங்காவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பானுமதிக்கும் பிரபாகரனுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதை பார்த்த பானுமதியின் மருமகன் அவருடனான கள்ளத் தொடர்பை துண்டிக்குமாறு எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அதை தவிர்த்து வந்துள்ளார் பானுமதி.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் பிரபாகரன் விடாது அவரை தொலைபேசியில் அழைத்து பேசுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் பானுமதி உடுமலை போலீசில் பிரபாகரன் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன் பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் பிரபாகரன் பானுமதியை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதி இல்லத்திற்கு வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவர் மீது பானுமதி போட்ட வழக்கை வாபஸ் வாங்குமாறும் பானுமதி பேரில் அவருக்கு சிம் கார்டு வாங்கி தருமாறும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதை பார்த்த அருகில் இருந்த பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்த மயில்சாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரையும் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து, அங்கு பானுமதியை கொலை செய்துவிட்டு அமர்ந்திருந்த பிரபாகரனை கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் தொடர்ச்சியாக காயம் அடைந்த மயில்சாமியை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பானுமதியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, இது குறித்து மயில்சாமி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாலப்பம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/12/a767d883423b169453c3d81e9eafda4d17864828761231310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:31:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-panruti-school-teacher-arrested-child-sexual-abuse-case-tnn-270846</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; மாணவிக்கு பாலியல் தொல்லை &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் செயல் பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயதான ஆங்கில ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 2 - ம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு செல்ல விடாமல் அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் ( வயது 24 ) என்பவர் பாலியல் தொல்லை அளித்தக்கதாக கூறப்படுகிறது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பொது மக்கள் சிலர் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து , இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் குற்றச் சாட்டப்பட்ட ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் , பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் அகஸ்டீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/790add92dcb89b2a1cf12d5b418a5a4817864640581611310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-ymca-school-rewards-class-10-students-with-free-flight-trip-tnn-270843</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-ymca-school-rewards-class-10-students-with-free-flight-trip-tnn-270843#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 20:01:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-ymca-school-rewards-class-10-students-with-free-flight-trip-tnn-270843</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை கோட்டை பகுதியில் இயங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) சிறார் நகர் உயர்நிலைப்பள்ளி, சமுதாயத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இலவசக் கல்வியை வழங்கி வருகிறது. கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், பூ விற்பனையாளர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் இங்கு பயின்று வருகின்றனர். கடந்த 1947-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி திரு. லாரன்ஸ் சி. பர் என்பவரால் வீடற்றவர்களுக்கான இரவுப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி, தற்போது 79 ஆண்டுகளாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கல்விப் பணியாற்றி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நவீனக் கல்வியும் இலவச வசதிகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கட்டணம் எதுவுமின்றி ஸ்மார்ட் போர்டு (Smart Board) வசதியுடன் கூடிய நவீனத் தொழில்நுட்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இலவச சீருடை, இலவசக் காலணி, இலவச உணவு, அடையாள அட்டை மற்றும் இலவசப் புத்தகப் பை போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளும் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;100% தேர்ச்சியும் பறந்த சர்ப்ரைஸும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளியின் தாளாளரும் பொதுச் செயலாளருமான (C.E.O) ஆசீர் பாண்டியன், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியை எட்டினால், அனைவரையும் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை ஊக்கமாகக் கொண்டு உழைத்த மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 100% தேர்ச்சியைச் சாதனை படைத்தனர். மாணவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், தாளாளர் ஆசீர் பாண்டியன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, எட்ட முடியாத கனவாக இருந்த விமானப் பயணத்தை சாத்தியமாக்கினார். 100% தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்களின் பரவசம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விமானத்தில் பயணித்த மாணவர்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், &quot;ஒரு காலகட்டத்தில் தங்களுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் விமானத்தை கீழிருந்து தான் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று அதே விமானத்தில் நேரடியாகப் பயணித்தது வாழ்நாளில் மறக்க முடியாத, மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியளித்த அனுபவமாக அமைந்தது&quot; எனப் பரவசத்துடன் கூறினர். ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் செய்த இந்த அசத்தலான செயல் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/6a4a497629e80055cd2daa60772e3f5b17864586959011319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirupathur-jolarpettai-son-kills-mother-illegal-affair-crime-tnn-270746</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirupathur-jolarpettai-son-kills-mother-illegal-affair-crime-tnn-270746#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 09:17:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tirupathur-jolarpettai-son-kills-mother-illegal-affair-crime-tnn-270746</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; தகாத உறவு - எச்சரித்த மகன் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பனூர் MGR நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை அவருடைய மனைவி கஸ்தூரி ( வயது 53). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மகன் சத்தியமூர்த்தி ( வயது 26 ) மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மகள் திருமணமாகி தருமபுரி பகுதியில் வசித்து வருகிறார்&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் , கஸ்தூரியின் கணவர் அண்ணாதுரை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி குடும்பத்தை காப்பாற்ற பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் கஸ்தூரியின் மகன் சத்திய மூர்த்தி சென்னையில் பானிபூரி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் , கஸ்தூரிக்கும் வேறொரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த உறவு குறித்து கஸ்தூரியின் மகனுக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தாயார் கஸ்தூரியை சத்தியமூர்த்தி பலமுறை அவரது மகன் கண்டித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கஞ்சா போதையில் தாக்குதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் அந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து வந்த கஸ்தூரியின் மகன் சத்திய மூர்த்தி ஆத்திரமடைந்து கஞ்சா போதையில் கஸ்தூரியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். மகன் தாக்கியதில் கஸ்தூரி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு டி எஸ் பி முரளி தலைமையிலான போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது தாய் கஸ்தூரியை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அவரது மகன் சத்திய மூர்த்தி தப்பி செல்லாமல் வீட்டின் அருகே அமர்ந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர், அவரை கைது செய்த ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகாத உறவில் பெற்ற தாயை மகனே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/350d84f67190ce008961320bab5d2abb17864199664891310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dubai-to-chennai-airport-gold-smuggling-woman-arrested-with-1-4-crore-gold-paste-tnn-270748</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dubai-to-chennai-airport-gold-smuggling-woman-arrested-with-1-4-crore-gold-paste-tnn-270748#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 08:59:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dubai-to-chennai-airport-gold-smuggling-woman-arrested-with-1-4-crore-gold-paste-tnn-270748</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்பிலான 920 கிராம் தங்கப் பசையை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 34 வயது இந்தியப் பெண் பயணியைக் கைது செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சந்தேகத்தின் பேரில் ஆய்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துபாயில் இருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று திங்கள்கிழமை அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்திருந்த ஜன்னத் ஹம்சா (34) என்ற இந்தியப் பெண் பயணியின் நடத்தை అధికారుளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை நிறுத்திச் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர் பரஸ்பர முரணாகப் பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உள்ளாடைக்குள் ஒளித்து வைக்கப்பட்ட தங்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவரது பதில்களில் திருப்தியடையாத அதிகாரிகள், அவரைச் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று உடைமைகளை முழுமையாகப் பரிசோதித்தனர். எனினும், அவரது பைகளில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெண் சுங்கத்துறை அதிகாரிகள் ஜன்னத் ஹம்சாவைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அந்த தீவிர சோதனையில், அவர் தனது உள்ளாடைக்குள் 24 கேரட் சுத்தமான தங்கப் பசையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடரும் சுங்கத்துறை விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 920 கிராம் தங்கப் பசையின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.1.4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கப் பசையைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பெண் பயணியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயணி ஏற்கனவே அடிக்கடி சுற்றுலா விசா மூலம் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளதால், அவர் சர்வதேசக் கடத்தல் கும்பலின் &quot;குருவியாக&quot; செயல்பட்டாரா மற்றும் இந்த தங்கத்தை சென்னையில் யாருக்காகக் கடத்தி வந்தார் என்பது குறித்துச் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/c59c28519e109626bdc3cdc5af03185817864189113311319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/forecasts-for-kanchipuram-and-chengalpattu-including-rain-chances-and-temperature-updates-tamil-nadu-weather-report-for-august-11-tnn-270741</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/forecasts-for-kanchipuram-and-chengalpattu-including-rain-chances-and-temperature-updates-tamil-nadu-weather-report-for-august-11-tnn-270741#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 07:16:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/forecasts-for-kanchipuram-and-chengalpattu-including-rain-chances-and-temperature-updates-tamil-nadu-weather-report-for-august-11-tnn-270741</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும். பகல் நேரங்களில் வழக்கமான வெப்பம் பதிவானாலும், பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்ட வானிலை நிலவரம் - Kanchipuram Weather Forecast&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று காலை முதலே பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்படுகிறது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும். தொடர்ந்து மாலையில் வளிமண்டல மேலடுக்கு மாற்றம் காரணமாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் ஈரப்பதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் பகலில் புழுக்கம் அதிகமாக உணரப்படும். இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகக் குறையக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடலோர மாவட்டமான செங்கல்பட்டில் இன்று மிதமான கடல் காற்று வீசுவதுடன், நாள் முழுவதும் பகுதி மேகமூட்டமான சூழலே காணப்படும். மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக மாமல்லபுரம், மதுராந்தகம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய லேசான மழை அல்லது சாரல் மழை பெய்யக்கூடும். இரவு நேரத்தில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/be6bca4d26f900d066386c60abf496361786242729805485_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-august-11th-latest-rain-alert-270736</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-august-11th-latest-rain-alert-270736#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 06:20:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-august-11th-latest-rain-alert-270736</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TN weather Rain Update (11-08-2026):&lt;/strong&gt; சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வானிலை மையம் எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &amp;ldquo;தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னதுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/agriculture/5-most-useful-machines-for-small-farmers-details-in-pics-270671&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடுத்த 3 நாட்களுக்கான வானிலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;12-08-2026 மற்றும் 13-08-2026:&lt;/strong&gt; மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;14-08-2026:&lt;/strong&gt; மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/iIFOQD8tDlc?si=5JmfHgP9FRBEze5Q&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11-08-2026 முதல் 14-08-2026 வரை:&lt;/strong&gt; வடஉள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3' செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஓட்டியும் இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மீனவர்களுக்கான எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தமிழக கடலோரப்பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11-08-2026 முதல் 14-08-2026 வரை:&lt;/strong&gt; தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வங்கக்கடல் பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11-08-2026:&lt;/strong&gt; தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 ஓலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 லலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ வீசக்கூடும். ம் இடையிடையே 60 மீட்டர் வேகத்தம்&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;அரபிக்கடல் பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11-08-2026 முதல் 14-08-2026:&lt;/strong&gt; மத்தியமேற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/20/d5c2416ef6c077897bbd7d7699a7624d1732066820378102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!]]></title><link>https://tamil.abplive.com/crime/4-crore-hydroponic-weed-seized-at-chennai-airport-malaysian-courier-arrested-tnn-270719</link><comments>https://tamil.abplive.com/crime/4-crore-hydroponic-weed-seized-at-chennai-airport-malaysian-courier-arrested-tnn-270719#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 20:08:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/4-crore-hydroponic-weed-seized-at-chennai-airport-malaysian-courier-arrested-tnn-270719</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பெரும் அளவில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிரீன் சேனலில் சிக்கிய கடத்தல் பயணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் இறங்கியவர்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் வந்திருந்த 35 வயதுடைய மலேசிய நாட்டு ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் தன்னிடம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறி கிரீன் சேனல் (Green Channel) வழியாக வெளியேற முயன்றபோது, ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட 4 கிலோ கஞ்சா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விசாரணையின் போது அப்பயணி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவரைச் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரது உடமைகளைச் சோதனையிட்டனர். அதில் அவரது சூட்கேசில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பார்சல்களைக் கண்டுபிடித்தனர். அந்த பார்சல்களில் 4 கிலோ 33 கிராம் எடையுள்ள உயர்தர, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சர்வதேச கடத்தல் கும்பல் பின்னணி குறித்து தீவிர விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மலேசியப் பயணியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய மேல்விசாரணையில், அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் &quot;குருவியாக&quot; (Courier) செயல்பட்டு வந்ததும், அக்கும்பல் கொடுத்த பார்சலை சென்னைக்குக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இந்த பார்சலை சென்னையில் பெற இருந்த நபர் யார், பின்னணியில் இயங்கும் போதைக்கடத்தல் வலையமைப்பு குறித்துச் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/c5719125294e4ed5606c376ac6cf695517863726370471319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mtc-revises-tender-rules-for-1-520-electric-buses-in-chennai-extending-delivery-timelines-while-tightening-manufacturing-capacity-norms-for-oems-tnn-270718</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mtc-revises-tender-rules-for-1-520-electric-buses-in-chennai-extending-delivery-timelines-while-tightening-manufacturing-capacity-norms-for-oems-tnn-270718#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 19:57:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mtc-revises-tender-rules-for-1-520-electric-buses-in-chennai-extending-delivery-timelines-while-tightening-manufacturing-capacity-norms-for-oems-tnn-270718</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;MTC Tightens Tender Rules for 1,520 E-Buses in Chennai:&lt;/strong&gt; சென்னையில் 1,520 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. டெண்டருக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பேருந்துகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான காலக்கெடு தளர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், தயாரிப்பு நிறுவனங்களுக்கான தகுதிச் சான்றுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டெண்டர் விதிகளில் மாற்றங்கள் மற்றும் பின்னணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மாநகரில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 1,000 பன்னிரண்டு மீட்டர் நீள குளிரூட்டப்பட்ட பேருந்துகள், மெட்ரோ இணைப்புக்கான 220 பேருந்துகள் மற்றும் 300 ஏழு மீட்டர் நீளப் பேருந்துகள் என மொத்தம் 1,520 மின்சாரப் பேருந்துகளை இயக்க டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. பேருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்குப் போதிய உற்பத்தித் திறன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் புதிதாகச் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் சந்தையில் நிலவும் சவால்களைக் கருத்தில் கொண்டு, பேருந்துகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து நிவாரணம் வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;1,000 பெரிய மின்சாரப் பேருந்துகளுக்கான புதிய கட்டுப்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மிகப்பெரிய அளவிலான 1,000 பன்னிரண்டு மீட்டர் குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தில், ஒரு பேருந்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட மாதாந்திர இயக்கம் 6,500 கிலோமீட்டரிலிருந்து 6,000 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தச் செலவின ஒப்பந்த முறையில் (GCC) கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணம் செலுத்தப்படுவதால், இந்த முடிவு போக்குவரத்துக் கழகத்தின் நீண்டகால நிதிச் சுமையைக் குறைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் தாங்கள் ஏலம் கேட்கும் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 60 சதவீதப் பேருந்துகளைத் தயாரிக்கும் அளவிற்குத் தங்களுக்கு உற்பத்தித் திறன் உள்ளது என்பதைச் சான்றளிக்க வேண்டும். இதற்குச் பட்டயக் கணக்காளரின் தணிக்கைச் சான்றிதழ் (UDIN உடன்) சமர்ப்பிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுத் தயாரிப்பு அனுபவம் தொடர்பான பிரிவுகள் இந்த டெண்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. விபத்து அல்லது அசம்பாவிதங்களால் பேருந்துகளுக்குச் சேதம் ஏற்பட்டால், பணிமனை மேலாளரின் கள ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பின்னரே உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மெட்ரோ இணைப்புக்கான 220 சிறிய ரக மின்சாரப் பேருந்துகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முதல் மற்றும் கடைசிப் மைல் இணைப்பு வசதியை வழங்கும் பொருட்டு 220 சிறிய ரக மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் 5 மீட்டர் மற்றும் 7 மீட்டர் நீளமுள்ள பேருந்துகள் அடங்கும். இந்தப் பேருந்துகளை ஒப்படைப்பதற்கான ஒவ்வொரு கட்டக் கெடுவும் மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முழுப் பேருந்துகளையும் ஒப்படைக்க 12 மாதங்கள் வரை அவகாசம் கிடைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடத்துநர்கள் இல்லாத இந்தச் சேவையில், பயணிகள் டிஜிட்டல் முறையிலோ அல்லது ஆப் மூலமாகவோ பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அமைக்கப்படும். NCMC கார்டுகள், QR கோடு, UPI மற்றும் ரொக்கப் பணம் செலுத்தும் வசதிகளும் இதில் சேர்க்கப்படும். பயணச்சீட்டு முறையில் ஏற்படும் முறைகேடுகளுக்கு இயக்குபவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றமின்றித் தொடர்கிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;300 சுற்றறிக்கை பேருந்துகள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மக்களின் குறுகிய தூரப் பயன்பாட்டிற்கான 300 ஏழு மீட்டர் நீளப் பேருந்துகளின் விநியோகக் கெடுவும் 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கான பயிற்சி சாதனங்கள் வழங்கும் விதியில் முக்கியத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒவ்வொரு பணிமனைக்கும் ஒரு போலிப் பயிற்சி சாதனம் (Simulator) வழங்க வேண்டும் என இருந்த நிபந்தனை மாற்றப்பட்டு, 100 பேருந்துகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் மொத்தம் மூன்று சாதனங்கள் மட்டும் வழங்கினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்துகளில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளைச் சேமித்து வைக்கும் காலம் 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் இரண்டு வாசல்கள் அமைக்கும் விதியும் மாற்றமின்றித் தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் தரமான மற்றும் நம்பகமான மின்சாரப் பேருந்துச் சேவையைச் சென்னை மக்களுக்கு வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/cc4819a534db102c4c8d3a205750e28417863720250821319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/crime/ambattur-pudur-gold-jewelry-imitation-theft-cctv-270706</link><comments>https://tamil.abplive.com/crime/ambattur-pudur-gold-jewelry-imitation-theft-cctv-270706#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 17:27:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/ambattur-pudur-gold-jewelry-imitation-theft-cctv-270706</guid><description><![CDATA[&lt;p&gt;அம்பத்தூர் புதூரில் நகைக் கடைகளில் கவரிங் நகையை மாற்றி வைக்க முயற்சி செய்தவரை ஊழியர்கள், பொதுமக்கள் மடக்கி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அம்பத்தூர் கே.கே.நகர் ரோடு, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நகைகள் வாங்குவது போல் சென்றுள்ளார். அப்போது கடை ஊழியர்களிடம் இருந்து அசல் தங்க நகைகளை வாங்குவது போல் நடித்து யாரும் கவனிக்காத நேரத்தில் அசல் தங்க நகைகளுக்கு பதிலாக தன்னிடம் வைத்திருந்த போலி கவரிங் நகைகளை மாற்றி வைத்து திருட முயன்றுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/4de192dad0caa3579e01d2a94c3f6e771786362820787113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதேபோல் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் ஒரே பாணியில் திருட முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என நகைக்கடை உரிமையாளர் வெளியான சிசிடிவி காட்சி வீடியோவில் கூறுகிறார். இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அவரை கண்காணித்துள்ளனர். அவரை அடையாளம் கண்ட நகைக்கடையின் உரிமையாளர் அவரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் நகை கடையில் இருந்து செல்வம் தப்பித்து ஓட முயற்சி செய்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/x_LYCz-JlNE?si=YDu5Cq8R35FMCcyU&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் நகைக்கடை ஊழியர் மற்றும் நகை வாங்க வந்திருந்த சிலர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதூர் போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் இதற்கு முன்பு இதேபோன்று வேறு நகைக் கடைகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா? அவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் ஒரே பாணியில் திருட முயன்ற சம்பவம் அம்பத்தூர் புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-does-car-consume-more-petrol-reasons-and-tips-269893&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/87bca5f29725128a3fa347554054c1b31786362928674113_original.jpg" width="220"/></item></channel></rss>