<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chennai</title><atom:link href="https://tamil.abplive.com/chennai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 17:53:01 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[NEET Protest : ’ரீமாண்ட் பண்ணிடுவேன்’ மாணவர்களை எச்சரித்த SI – நடந்தது என்ன ?]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/scuffle-erupts-between-police-and-sfi-during-anti-neet-protest-call-at-thiruvottiyur-government-arts-college-268613</link><comments>https://tamil.abplive.com/news/chennai/scuffle-erupts-between-police-and-sfi-during-anti-neet-protest-call-at-thiruvottiyur-government-arts-college-268613#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:22:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ வசந்த் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/scuffle-erupts-between-police-and-sfi-during-anti-neet-protest-call-at-thiruvottiyur-government-arts-college-268613</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தலைநகரான டெல்லியில் நீட் முறைகேட்டை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யவும் கோரி இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றார்கள். குறிப்பாக, கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பெரும் பங்காற்றி வரும் நிலையில், நாடு முழுவதும் இடது சாரி இயக்க மாணவர் அணியினரும் அவர்களுடன் கைகோத்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தமிழ்நாட்டில் பரவிய போராட்டம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையின் பல இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், மாணவ இயக்கங்கள் போராடத் தொடங்கியுள்ளன. தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட தனி இடமே ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;போராட்டத்தில் ஈடுபட்ட SFI மாணவ அமைப்பினர் &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனையடுத்து சென்னை திருவொற்றியூர் அரசு கல்லூரிக்கு சென்ற SFI மாணவர்கள் சுமார் 20 பேர் கல்லூரி மாணவர்களை போராட்ட களத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடவேளையில் மாணவர்களை வெளியில் இருந்து வந்தவர்கள் தொந்தரவு செய்வதாக கூறி காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;கல்லூரி வந்த போலீசார்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனையடுத்து, அரசு கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் வகுப்பில் இருக்கும் மாணவர்களை போராட்டத்திற்கு அழைக்கக் கூடாது என கூறியுள்ளனர். இதனால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியிருக்கிறது. இந்நிலையில், எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமானுவேல், சஞ்சய் உள்ளிட்ட 4 மாணவர்களை விசாரணைக்காக காவல்துறையினர் தங்களுடைய போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு பிற மாணவர்களும் மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;A scuffle broke out between police personnel and members of the SFI after the student organisation called on students of Thiruvottiyur Government Arts College to join the anti-NEET protest. &lt;a href=&quot;https://t.co/tZWM94fn1T&quot;&gt;pic.twitter.com/tZWM94fn1T&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Raja Shanmugasundaram (@SRajaJourno) &lt;a href=&quot;https://x.com/SRajaJourno/status/2079878535209234751?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 22, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;ரீமாண்ட் பண்ணிடுவேன் &amp;ndash; எச்சரித்த எஸ்.ஐ.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனையடுத்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட மாணவர்களை பார்த்து ஆவேசமடைந்த காவல்துறையினர் படிக்கிற வேலையை விட்டுட்டு என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பியதாகவும், தேவையில்லாமல் பிரச்னை செய்தால் &amp;lsquo;ரீமாண்ட்&amp;rsquo; செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/f6632fe7e6da0dd3c505996c96713bdf1784717494818108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரூ.63 லட்சம் அவுட் !! சினிமா பாணியில் நடந்த தங்க மோசடி !! உணவகத்தில் நடந்தது என்ன ?]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-gold-trader-duped-63-lakhs-four-arrested-egmore-tnn-268539</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-gold-trader-duped-63-lakhs-four-arrested-egmore-tnn-268539#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:42:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-gold-trader-duped-63-lakhs-four-arrested-egmore-tnn-268539</guid><description><![CDATA[&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; குறைந்த விலையில் தங்கம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 17-ந்தேதி , நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து , குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும் , அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார். இதனையடுத்து , தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&quot; தங்கத்தையும் - ரசீதையும் எடுத்து வருகிறேன் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும் , பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.&lt;/p&gt;
&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;p&gt;இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி , மேலே சென்று பணத்தை வைத்து விட்டு , தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன் எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.&lt;/p&gt;
&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;p&gt;சிறிது நேரத்தில் சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி , அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார். அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல் , அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;காவல் நிலையத்தில் புகார் - 5 பேர் கைது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது , அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;p&gt;இது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார் , ஸ்ரீராம் , ராம் குமார் மற்றும் உதய் கிரண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடிக்கு மூளையாக செயல்​பட்ட சக்​திவேல் ( வயது 23 ) என்​பவரும் பிடிபட்​டுள்​ளார்.&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/d5c90c854749a837b31384707962475a17847011011261310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/marakkanam-nadukuppam-village-administrative-officer-signature-forgery-land-registration-268549</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/marakkanam-nadukuppam-village-administrative-officer-signature-forgery-land-registration-268549#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:42:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/marakkanam-nadukuppam-village-administrative-officer-signature-forgery-land-registration-268549</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: மரக்காணம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் (V.A.O.) கையெழுத்து மற்றும் அரசு முத்திரையைப் போலியாகப் பயன்படுத்தி, விவசாயி ஒருவரின் நிலத்தை அபகரித்து பத்திரப்பதிவு செய்த நபரை மரக்காணம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் இந்தச் சம்பவத்தில் அம்பலமாகியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். விவசாயியான இவரது தாத்தா அரிகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமாக நடுக்குப்பம் கிராமத்தில் சர்வே எண் 155/1-ல் நிலம் உள்ளது. அரிகிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு, இந்த நிலத்திற்கு வீரப்பன் உள்ளிட்ட 9 பேர் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களாக உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது மகன் முருகன் (32) ஆகிய இருவரும் இந்தச் சொத்தின் மீது கண் வைத்துள்ளனர். நிலத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன், உண்மையான 9 வாரிசுதாரர்களையும் முற்றிலும் மறைத்து, தாங்களே அரிகிருஷ்ணனின் வாரிசுகள் எனக் கூறிச் சென்னையில் இருந்து போலி இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு&lt;/h2&gt;
&lt;p&gt;அத்துடன் நிற்காமல், நடுக்குப்பம் மேற்கு கிராம நிர்வாக அலுவலரின் (V.A.O.) கையொப்பம் மற்றும் அரசு அலுவலக முத்திரையைப் போலியாகப் பயன்படுத்தி, போலி 'அடங்கல்' ஆவணத்தைத் தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த போலி ஆவணங்களைக் கொண்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மரக்காணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தைத் தங்கள் பெயருக்கு வெற்றிகரமாகப் பத்திரப்பதிவும் செய்து முடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;வெளிச்சத்திற்கு வந்த உண்மை&lt;/h2&gt;
&lt;p&gt;தன் நிலத்தின் ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிந்த நிலத்தின் உரிமையாளர் வீரப்பன், நடுக்குப்பம் மேற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் நேரடியாகச் சென்று, &quot;எங்கள் நிலத்திற்கு நீங்கள் எவ்வாறு தவறான ஆவணங்களைக் கொடுத்தீர்கள்?&quot; என நியாயம் கேட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு ஆவணங்களை வாங்கிப் பரிசோதனை செய்தார். அப்போது, அந்த ஆவணங்களில் இருப்பது தன் கையொப்பம் இல்லை என்பதும், அரசு அலுவலக முத்திரை போலியாக உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் அம்பலமானது.&lt;/p&gt;
&lt;h2&gt;காவல் நிலையத்தில் புகார் &amp;amp; வாலிபர் கைது&lt;/h2&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து, தனது போலி கையொப்பம் மற்றும் அரசு முத்திரையைப் பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர் மரக்காணம் காவல் நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் உடனடியாகப் புகார் அளித்தார். மேலும், நிலத்தின் வாரிசுதாரர்களில் ஒருவரான ரகுராமன் என்பவரும் இது குறித்து தனியாகப் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (32) என்பவரை மரக்காணம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!&lt;/h2&gt;
&lt;p&gt;இவ்வளவு பெரிய நில மோசடி நடைபெறும்போது, மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் சார்-பதிவாளர் ஆகியோர் முறையான வாரிசுச் சரிபார்ப்போ அல்லது கள ஆய்வோ (Field Inspection) செய்யாமல் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது எவ்வாறு? என்ற வலுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்று அரசு அதிகாரிகளின் போலி முத்திரைகள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்தி மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேறு யாரேனும் நிலங்களை அபகரித்துள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/2ef713e5565e1af4e684e05d57d5583b1784701255083194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" ஊட்டிக்கு போறோம் தேடாதீங்க " நண்பர்கள் கூறிய பொய் !! தலை துண்டிக்கப்பட்ட தொழிலாளி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-kadayanallur-man-murder-case-arrest-tnn-268522</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-kadayanallur-man-murder-case-arrest-tnn-268522#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 09:55:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-kadayanallur-man-murder-case-arrest-tnn-268522</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; ஊட்டியில் சுற்றுலா - தேட வேண்டாம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த வலசை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) கூலித் தொழிலாளியான இவர் கடந்த 6 - ம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி சேர்ந்தமரம் போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அப்போது மகேந்திரனின் நண்பர்கள் அவருக்கு போன் செய்து உங்களது கணவருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளோம் தேட வேண்டாம் என கூறினர். இதை உண்மை என நம்பிய புவனேஸ்வரி , போலீசில் புகார் கொடுக்காமலே வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;ஆனால், 10 தினங்கள் கடந்த போதும் மகேந்திரன் வீட்டிற்கு வராததுடன் செல்போனிலும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த புவனேஸ்வரி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கடந்த 14 - ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் வாலிபர் மாயம் என வழக்குப் பதிந்து போலீசார் தேடி வந்தனர்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;முள் செடியில் தூக்கி வீசப்பட்ட சடலம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகேந்திரனின் மொபட், மேலகடையநல்லூர் &amp;ndash; காசிதர்மம் செல்லும் சாலையில் குளத்துக்கரை அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.&lt;/p&gt;
&lt;p&gt;அதாவது, மேல கடையநல்லூரைச் சேர்ந்த 3 சிறார்கள் உட்பட 4 பேர் மகேந்திரனை கொலை செய்ததுடன், அவரது உடலை கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் மதுரை &amp;ndash; தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மடத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத முள்செடிகள் நிறைந்த பகுதியில் சிறிய கிணற்றில் போட்டதும் தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து போலீசார் 3 சிறார்களை அழைத்துச் சென்று அந்த கிணற்றில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கத்திக் குத்து காயத்துடன் கிடந்த மகேந்திரன் உடலை கைப்பற்றினர். ஆனால், தலையை காணவில்லை. குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் புதைத்ததாக சிறார்கள் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்று தலையை மீட்டனர். இதையடுத்து வாலிபர் மாயம் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இச் சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மகேந்திரனுக்கு மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிறுவனுடன் பழக்கம் இருந்துள்ளது. மது அருந்த சிறுவனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவனிடம் மகேந்திரன் ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் மற்றொரு சிறுவனை செல்போனில் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். பின் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து மகேந்திரனிடம் சண்டை போட்ட போது மகேந்திரன் இருவரையும் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் 23 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை அழைத்து வந்துள்ளார். நான்கு பேரும் சேர்ந்து மகேந்திரனை தாக்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மயங்கி விழுந்தவரை கடையில் கத்தி மற்றும் கயிறு வாங்கி வந்து வயிறு பகுதியில் கத்தியால் குத்தியும் தலையை துண்டாக வெட்டியும் கொலை செய்துள்ளனர். உடலை அருகில் இருந்த ஒரு கிணற்றில் கயிற்றை கட்டி தள்ளி விட்டு, தலையை ஒரு பேக்கில் வைத்து குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் அருகே புதைத்துள்ளனர். பின்னர் இரவில் அங்கு உள்ள விடுதி ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் ஊருக்கு திரும்பி உள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே பாலத்தில் 2 அடுக்குகள்! சென்னை துறைமுகம் - மதுரவாயல் பாலப்பணிகள் முடிவது எப்போது? அதிகாரிகளின் மாஸ் தகவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-port-maduravoyal-double-decker-flyover-to-be-ready-by-november-2027-all-you-need-to-know-tnn-268520</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-port-maduravoyal-double-decker-flyover-to-be-ready-by-november-2027-all-you-need-to-know-tnn-268520#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 08:34:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-port-maduravoyal-double-decker-flyover-to-be-ready-by-november-2027-all-you-need-to-know-tnn-268520</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மாநகரத்தின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகளை விரைவுபடுத்தி, திருத்தப்பட்ட இலக்கின்படி வரும் 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுமார் 21 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த உயர்மட்ட மேம்பாலம், சுமார் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவடையும் போது, சென்னையின் நகர்ப்புறப் போக்குவரத்தும் சரக்கு வாகனப் போக்குவரத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஈரடுக்கு மேம்பாலத்தின் கட்டமைப்பு சிறப்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டம் சென்னை துறைமுகத்திலிருந்து கோயம்பேடு வரை இரண்டு அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் அடுக்கு (Upper Deck) முற்றிலும் சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கொள்கலன் (கான்டெய்னர்) மற்றும் கனரகச் சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக 6 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. கீழ் அடுக்கு (Lower Deck) பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்காக 4 வழிச்சாலையாக இயங்கும். கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை உள்ள பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மையத்தடத்தின் வழியாக ஒற்றை அடுக்கு மேம்பாலமாகத் தொடரும். இந்த பாலமானது நேப்பியர் பாலம் அருகே உள்ள சென்னை துறைமுகத்தின் 10-வது கேட் பகுதியில் தொடங்கி, கூவம் ஆற்றின் கரையை ஒட்டிச் சென்று கோயம்பேடு வழியாக மதுரவாயல் சந்திப்பில் நிறைவடைகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நகர்ப்புற வாகனங்களுக்கான இணைப்புச் சாலைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நகரப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், கீழ் அடுக்கில் மொத்தம் 13 இறங்குதளங்கள் (Ramps) அமைக்கப்படுகின்றன. இதில் 7 நுழைவுப் பாதைகளும் 6 வெளியேறும் பாதைகளும் அடங்கும். கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர் டேங்க் சாலை மற்றும் கல்லூரிச் சாலை ஆகிய முக்கிய இடங்களில் வாகனங்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதிகள் செய்யப்படவுள்ளன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரிச் சாலையில் பிரத்யேக நுழைவுப் பாதைகளும், காமராஜர் சாலை மற்றும் ஸ்பர் டேங்க் சாலையில் பிரத்யேக வெளியேறும் பாதைகளும் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம், நகரின் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து இடையூறின்றி மேம்பாலத்தில் எளிதாக நுழையவும் வெளியேறவும் முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழை தாமதத்திற்குப் பின் வேகமெடுக்கும் பணிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செம்பாக்கம் பகுதியில் உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான வார்ப்பு மையத்தில் (Casting Yard) இந்த பாலத்திற்கான மிகப்பெரிய கான்ஃக்ரீட் தூண்கள் மற்றும் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை மற்றும் காலநிலை சவால்கள் காரணமாக முதற்கட்டப் பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்ட போதிலும், தற்போது கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. தற்போது நாளொன்றுக்கு பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டுமானத்தை மேலும் விரைவுபடுத்துவதற்காக வேலை நேரத்தை தினமும் 16 மணி நேரமாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்ட பாலத்திற்கான கான்ஃக்ரீட் அமைக்கும் பணிகள் கூவம் ஆற்றின் கரையோரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போக்குவரத்து நெரிசல் குறைப்பும் எதிர்காலத் தேவையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்தமுள்ள 21 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கூவம் ஆற்றின் கரையோரமாகவே இரட்டை அடுக்கு அமைப்பாகச் செல்கிறது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்கள் மேல் அடுக்கைப் பயன்படுத்துவதால், நகரச் சாலைகளில் கான்டெய்னர் லாரிகளின் நடமாட்டம் வெகுவாகக் குறையும். அதேவேளையில், கீழ் அடுக்கு மத்திய சென்னை, கோயம்பேடு மற்றும் மதுரவாயல் இடையே சிக்னல் இல்லாத விரைவுப் பாதையாகச் செயல்பட்டு பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடக்கத்தில் இந்த மேம்பாலத்தை நாளொன்றுக்கு சுமார் 20,000 உள்ளூர் வாகனங்களும் 5,500 கனரக வாகனங்களும் பயன்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டிற்குள் தினசரி உள்ளூர் வாகனங்களின் பயன்பாடு 52,000-க்கும் அதிகமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2047-இல் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் ஆண்டிற்கு 200 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுவதால், இத்திட்டம் சென்னை மாநகரத்தின் எதிர்காலப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கு மிக முக்கியத் தூணாக அமையும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/ea6ee9241b3b457ab4eace18ce40b38c17846894031581319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை ரிப்போர்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-july-22nd-latest-rain-warning-268514</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-july-22nd-latest-rain-warning-268514#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 06:54:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-july-22nd-latest-rain-warning-268514</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TN weather Rain Update (22-07-2026):&lt;/strong&gt; சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வானிலை மையம் எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;strong&gt; &amp;ldquo;&lt;/strong&gt;தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று&amp;nbsp;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-cant-you-see-at-night-details-in-pics-268417&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடுத்த 3 நாட்களுக்கான மழை கணிப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;23-07-2026:&lt;/strong&gt; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;24-07-2026:&lt;/strong&gt; வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/KN2HBxG9BGM?si=rXikPQZrEtD3M0Xz&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;25-07-2026:&lt;/strong&gt; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 25-07-2026 வரை:&lt;/strong&gt; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 25-07-2026 வரை:&lt;/strong&gt; உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3&amp;deg; செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;TVK Vijay:&amp;rdquo;தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்&amp;rdquo; பாஜக அரசுக்கு CM விஜயின் தவெக வன்மையான கண்டனங்கள்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/cm-vijays-tvk-condemns-rahul-gandhi-arrest-extend-support-to-cjp-protest-ask-ban-neet-tn-politics-268508&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: TVK Vijay:&amp;rdquo;தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்&amp;rdquo; பாஜக அரசுக்கு CM விஜயின் தவெக வன்மையான கண்டனங்கள்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37&amp;deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27&amp;deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மீனவர்களுக்கான எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தமிழக கடலோரப்பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 23-07-2026 வரை:&lt;/strong&gt; தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;அரபிக்கடல் பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22-07-2026 முதல் 25-07-2026 வரை:&lt;/strong&gt; மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/19/4ac1accd4e198bbd46b3f38b1dd77ce71734576572124102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னை மக்களே உஷார் !! நாளை 5 மணி நேரம் மின் தடை – பாதிக்கப்பட்ட பகுதிகளின் முழு பட்டியல்]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-july-22-2026-list-of-affected-areas-tnn-268506</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-july-22-2026-list-of-affected-areas-tnn-268506#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 23:38:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-july-22-2026-list-of-affected-areas-tnn-268506</guid><description><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;பராமரிப்பு பணி காரணமாக மின்தடை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னையில் ( 22.07.2026 - புதன்கிழமை ) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் மதியம் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் 2:00 மணிக்கு மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கோவிலம்பாக்கம் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர் , சுபிக்ஷா அவென்யூ , சுசிலா நகர் , பெரியார் சாலை , வடக்குப்பட்டு பிரதான சாலை , திருவேங்கடம் நகர் , திருவள்ளூர் தெரு , நாவின்ஸ் , விஷ்ராந்தி , செல்வகணபதி நகர், சத்யா நகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ராமாபுரம் ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோயில் தெரு.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முகலிவாக்கம் ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சுரேஷ் நகர் , உதயா நகர் , குருசாமி நகர் , சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ் 1, நாராயணன் நகர் பேஸ் 1, 2 , தட்டான்குளம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடையாறு ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பல்லாவரம் ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கீழ்க்கட்டளை ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஈஸ்வரி நகர், நியூ காலனி , வேம்புலி அம்மன் கோயில் தெரு , சித்ரா டவுன்ஷிப் , ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் , லத்தீப் காலனி , காமராஜர் நகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆலந்தூர் ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ் , மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ்&amp;nbsp; அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பெரும்பாக்கம் ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;டி.எச்.எஸ்.சி.பி பிளாக் எண் ஏ.ஐ, ஏ.ஜே, ஏ.கே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7வது குறுக்குத் தெருக்கள் வரை.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாங்காடு ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர் , முத்துசாமி நகர் , வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை. ஆவடி: சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை , சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/22674af63bbe2ddc621965d5b9fe1bab17846572662381310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" ஜி.எஸ்.டி மோசடி வழக்கும்...கடத்தல் பிளானும் " டீக்கடையில் விரித்த வலை !! சிக்கிய கும்பல்]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-businessman-kidnapped-extortion-four-arrested-tnn-268502</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-businessman-kidnapped-extortion-four-arrested-tnn-268502#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 23:10:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-businessman-kidnapped-extortion-four-arrested-tnn-268502</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;ரூ.50 லட்சம் கேட்டு காரில் கடத்தல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் கமலேஷ் ஆபிரகாம் ( வயது 57 ) தொழிலதிபரான இவர் சென்னை சேத்துப்பட்டில் தற்போது வசித்து வருகிறார். இவர், சவுகார்பேட்டையில் அலுமினியம் மொத்த வியாபாரமும், திருவேற்காட்டில் பழைய இரும்பு வியாபாரமும் நடத்தி வருகிறார். வழக்கம் போல் கமலேஷ் ஆபிரகாம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்திற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று , தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாமை கத்திமுனையில் காரில் நடத்தினர். அப்போது தொழிலதிபர் சத்தம் போட்ட போது, மர்ம கும்பல் தங்களிடம் துப்பாக்கி இருப்பதாகவும், சத்தம் போட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தொழிலதிபர் சத்தம் போடாமல் இவர்களுடன் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது மர்ம கும்பல் பூந்தமல்லி நோக்கி காரில் செல்லும் போது, ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தொழிலதிபர் ரூ.1 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு மர்ம நபர்கள் உங்களை கொல்ல ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு தொழிலதிபர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு ஒரு வழியாக பேரம் பேசி ரூ.30 லட்சம் பணம் தருவதாக தொழிலதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரகசியமாக பின் தொடர்ந்த போலீசார்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பின்னர் தொழிலதிபரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் பணம் , செல்போன் பெற்றுக் கொண்டு , அவர் அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கி விட்டு விட்டு சென்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பிறகு ரூ.50 லட்சம் பணம் கேட்டு தன்னை கடத்திய சம்பவம் குறித்து தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விசாரணை நடத்தி வந்தனர். அதற்கிடையே தொழிலதிபரை கடத்திய கும்பல் பணம் கேட்டு மீண்டும் தொழிலதிபரை தொடர்பு கொண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது தொழிலதிபர் பணம் ஏற்பாடு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய நபர் பணத்துடன் பிராட்வேயில் உள்ள தேநீர் கடை அருகே பணத்தை கொண்டு வரும்படி கூறியுள்ளார். இது குறித்து தொழிலதிபர் போலீசாரிடம் தெரிவித்தார். பிறகு போலீசார் யோசனைப்படி பணத்துடன் தொழிலதிபர் பிராட்வே பகுதிக்கு சென்றுள்ளார். அவரை ரகசியமாக போலீசாரும் பின் தொடர்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கட்டத்தில் தொழிலதிபரிடம் பணத்தை பெறும் போது அங்கு மறைந்து இருந்த போலீசார் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய போது, வடசென்னையை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 33 ) , ஜெய் சரவணன் ( வயது 20 ), ராம்குமார் ( வயது 23 ), பொன்னிவளவன் ( வயது 25 ) என தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;கடத்தப்பட்ட தொழிலதிபர் மீது ஜிஎஸ்டி மோசடி மற்றும் கள்ள நோட்டுகள் பயன்படுத்திய வழக்கு நிலுவையில் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரை திட்டமிட்டு காரில் கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/989a8302cf8bcdae94d5033d8d451cf517846556202681310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" என் கணவரை பிடிக்கல " வெளியூரில் ரூம் போட்டு திருமணம் மீறிய உறவு - சிக்கிய எலக்ட்ரிஷியன்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pollachi-cop-bribe-audio-viral-electrician-extramarital-affair-case-tnn-268460</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pollachi-cop-bribe-audio-viral-electrician-extramarital-affair-case-tnn-268460#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 20:39:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pollachi-cop-bribe-audio-viral-electrician-extramarital-affair-case-tnn-268460</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; என் கணவரை பிடிக்கல விவகாரத்து செய்ய போறேன் &quot;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முகேஷ். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அந்த பெண் எனக்கு என் கணவரை பிடிக்கவில்லை , விவாகரத்து செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;எனவே இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பெண் முகேஷுடன் சேர்ந்து வெளியூருக்கு சென்று அறை எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர். எனவே நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அந்த பெண்ணின் கணவன் அவரை தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கணவன் - மனைவி தற்கொலை முயற்சி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதன் காரணமாக கோபமடைந்த முகேஷ் தொடர்ந்து அந்த பெண்ணை தன்னுடன் வருமாறு தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் - மனைவி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரச்சனைக்கு காரணமான முகேஷ்யை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் விசாரணை மேற் கொண்டு இனி மேல் பிரச்சனை செய்யக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் முகேஷிடம் காவல் உதவி உதவியாளர் ஜான்சன் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிய வரவே சிறிது நேரத்திலேயே தொலைபேசியில் முகேசை தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன் 'SI ஜான்சன் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கச் சொன்னார் நீங்க எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டு பேசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது முகேஷ் 'நான் வெளியில் இருக்கிறேன் காலையில் கோவை சென்று விடுவேன் இப்போது வர முடியாது. காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும் பணம் எனக்கு வேண்டாம் இந்த பிரச்சனையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும் என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் திருமணம் ஆகவில்லை எனக் கூறி தான் அந்தப் பெண் என்னிடம் பழகினார் எனவும் இனி மேல் நான் எந்த பிரச்சனைக்கு வரமாட்டேன் என முகேஷ் புலம்பும் ஆடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/f9304fc0bb50f39cd674a5a2d3a233d917846467552951310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சொந்த ஊருக்கு போறவங்களுக்கு ஹேப்பி நியூஸ்! சிறப்பு பஸ்-க்கு டிக்கெட் உடனே உடனே புக் பண்ணுங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/tamil-nadu-transport-corporation-special-buses-weekend-chennai-tiruvannamalai-coimbatore-madurai-268486</link><comments>https://tamil.abplive.com/news/chennai/tamil-nadu-transport-corporation-special-buses-weekend-chennai-tiruvannamalai-coimbatore-madurai-268486#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 19:47:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/tamil-nadu-transport-corporation-special-buses-weekend-chennai-tiruvannamalai-coimbatore-madurai-268486</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;24/07/2026 (வெள்ளிக்கிழமை) 25/07/2026 (சனிக்கிழமை) மற்றும் 26/07/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 (சனிக்கிழமை) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/07/2026 வெள்ளிக் கிழமை அன்று 120 பேருந்துகளும்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;25/07/2026 சனிக்கிழமை அன்று 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாதவரத்திலிருந்து 24/07/2026 மற்றும் 25/07/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொருநாளும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 26/07/2026 (ஞாயிற்றுக்கிழமை அன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6487 பயணிகளும் சனிக்கிழமை 2387 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7089 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பேருந்து எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-apache-rtr-160-4v-special-edition-mileage-price-and-advanced-technological-features-267328&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/c482e35aeff32c01bf23cce4fe4763bb1784643389622113_original.jpg" width="220"/></item></channel></rss>