<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chennai</title><atom:link href="https://tamil.abplive.com/chennai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 05:14:55 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA["சிலிண்டர் எஃபெக்ட்:  பரோட்டா, பிரியாணி விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/commercial-lpg-cylinder-price-hike-chennai-parotta-biryani-price-increase-tamil-news-258082</link><comments>https://tamil.abplive.com/news/chennai/commercial-lpg-cylinder-price-hike-chennai-parotta-biryani-price-increase-tamil-news-258082#respond</comments><pubDate>Fri, 1 May 2026 17:28:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/commercial-lpg-cylinder-price-hike-chennai-parotta-biryani-price-increase-tamil-news-258082</guid><description><![CDATA[&lt;p&gt;வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பரோட்டா, பிரியாணியின் விலை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில், உணவக உரிமையார்களும், வாடிக்கையாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேற்காசிய போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ள சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விலையேற்றம் மக்கள் மத்தயில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உணவக உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/e2384fb1f2265095a5ad558c159464651777635929412113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், &amp;nbsp;அதிகமான வாடிக்கையாளர்கள் வந்த நிலையில், குறைந்த வாடிக்கையாளர்கள் வருவதாகவும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மத்திய அரசு விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பரோட்டா, பிரியாணி விலை உயர்வு&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒருசில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல்,&amp;nbsp;&lt;br /&gt;பரோட்டா5 ரூபாயாக உயர்ந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;சிலிண்டர் விலை எவ்வளவு உயர்வு?&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.993 ஆக உயர்ந்து ரூ.3237க்கு விற்பனையாகிறது. மேலும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 261 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-eating-betel-leaves-empty-stomach-health-benifits-258065&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/d7a2db55353ac73c056f6578c6b1f5601777636323850113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[LPG சிலிண்டர் முன் பதிவில் புதிய விதிகள் !! இன்று முதல் அமல் - முழு விவரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/lpg-cylinder-booking-new-rules-otp-delivery-mandatory-price-hike-updates-tnn-258041</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/lpg-cylinder-booking-new-rules-otp-delivery-mandatory-price-hike-updates-tnn-258041#respond</comments><pubDate>Fri, 1 May 2026 10:40:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/lpg-cylinder-booking-new-rules-otp-delivery-mandatory-price-hike-updates-tnn-258041</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;எரிபொருள் தட்டுப்பாடு - சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடுகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே, சிலிண்டர் முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன&lt;/p&gt;
&lt;p&gt;வர்த்தக சிலிண்டர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஈரான் அமெரிக்க போர் தொடங்கிய பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வணிக சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.196 முதல் ரூ.218 வரை நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்ந்தது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய மாற்றம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இன்று முதல் சிலிண்டர் வினியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்த பட்சம் 21 நாட்கள் என்று இருந்தது. தற்போது 25 நாட்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கிராமப் பகுதிகளில் இது 45 நாள்கள் வரை உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே ஓடிபியை அடிப்படையாக வைத்து சிலிண்டர் விநியோகம் தற்காலிக அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இனி இது நிரந்தரமாக மாற்றப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை வாடிக்கையாளர்கள் அடையாளத்தை உறுதி செய்யா விட்டால் அவர்களுக்கு இ.கே.ஒய்.சி அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. ஏற்கனவே பயோமெட்ரிக் உறுதி செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் மட்டும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம். சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அவ்வாறு குழாய் மூலம் எரிவாயு சேவை பெறுவோர் சிலிண்டர்களை திரும்ப அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சிலிண்டர் டெலிவரி செய்யும் போது, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் 4 இலக்க ஓடிபிஐ, டெலிவரி செய்பவரிடம் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதற்கு மேல் முயற்சித்தால் கணினி மூலம் தானாகவே நிராகரிக்கப்படும். தவறான நபர் கையில் சிலிண்டர் செல்வதைத் தடுக்கவும், கள்ளச் சந்தையை ஒழிக்கவும் இந்த புதிய ஓடிபி முறை 100% கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/97af794d992da56b66294cf9237e170e17776122224701310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-elderly-woman-murder-robbery-velliyanai-arrest-tnn-258023</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-elderly-woman-murder-robbery-velliyanai-arrest-tnn-258023#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 23:59:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-elderly-woman-murder-robbery-velliyanai-arrest-tnn-258023</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கை - கால்கள் கட்டிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலப்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் 79 வயதுடைய தாயாரம்மாள். இவர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை லந்தகோட்டையில் வசிக்கும் தனது மகள் மனோரஞ்சிதத்துடன் செல்போனில் பேசி விட்டு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணை அருகே கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர் அருணாச்சலம் அந்த வழியாக சென்றுள்ளார். வீட்டு வேலைகளை செய்யும் தாயாரம்மாள் அன்றைய தினம் நேரமாகியும் எழாததால் சந்தேகம் அடைந்து வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கை, கால்கள், மற்றும் வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் தாயாரம்மாள் கிடந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் அருணாச்சலம் மூதாட்டியின் மகள் மனோரஞ்சிதத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்த நிலையில், அவர் சாலப்பட்டிக்கு விரைந்து வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;காணாமல் போன நகை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தாயாரின் சடலத்தை பார்த்த மனோரஞ்சிதம் அவர் அணிந்திருந்த அரை சவரன் தோடு மற்றும் கால் சவரன் மூக்குத்தி ஆகியவை இல்லாததை கவனித்து இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 19 வயதுடைய பாண்டீஸ்வரன் என்பவர் தான் மூதாட்டி தயாரம்மாளை கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீசார் சென்னை சென்ட்ரல் போலீசாரை அலர்ட் செய்த நிலையில் சென்ட்ரல் போலீசார் பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னை விரைந்த வெள்ளியணை போலீசார், கொலையாளி பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விலை குறைவு..கடன் வசதி.. - பழைய வீடு வாங்குவதில் இருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் !!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/buying-resale-homes-checklist-and-guide-tnn-258021</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/buying-resale-homes-checklist-and-guide-tnn-258021#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 23:17:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/buying-resale-homes-checklist-and-guide-tnn-258021</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;பழைய வீடுகள் விற்பனை படு ஜோர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சென்னை போன்ற நகரங்களில் புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடுகளின் விலை வெகுவாக உயர்ந்து வருவது மக்களுக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பழைய வீடுகளை வாங்குவதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் புதிய வீடுகளுக்கு இணையாக பழைய வீடுகள் விற்பனை சந்தை தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குள் உள்ள பழைய வீடுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;கடன் கொடுக்க வங்கிகள் ஆர்வம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தற்போது வங்கிகளும் இதற்கு கடன் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பதால் இது போன்ற வீடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. நீங்கள் ஒரு பழைய வீட்டை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அது தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;முதலில் எந்த பகுதியில் பழைய வீடு வாங்க போகிறோம் என்பதுடன் அதை கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பாருங்கள். அந்த கட்டடம் அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்களின் உண்ம தன்மை என்ன என்று பாருங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கு அடுத்தபடியாக அந்த கட்டடம் எப்போது கட்டப்பட்டது அதற்கான கட்டட அனுமதி வரைபடம் உட்பட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்யுங்கள். அதில் வரைபடத்தில் உள்ளபடியே வீடு கட்டி முடிக்கப்பட்டு பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் கட்டடத்தின் மதிப்பு என்னவாக குறிப்பிட வேண்டும் என்பதை மதிப்பீட்டாளர் வாயிலாக கணக்கு பார்க்க வேண்டியது அவசியம். இத்துடன் அந்த கட்டடத்தில் விரிசல்கள், உடைப்புகள் எதுவும் காணப்படுகிறதா என்று பாருங்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சில இடங்களில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமான துாண்கள், பீம்களில் உள்ள விரிசல்கள் மறைக்கப்பட்டு வீட்டை விற்று விடுகின்றனர். எனவே, இது போன்ற பிரச்சனையில் சிக்கி ஏமாறாமல் இருக்க, தொழில்நுட்ப ரீதியான ஆய்வு செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்த கட்டடம் எப்போது, எப்படி கட்டியிருந்தாலும் பரவாயில்லை, அதன் தற்போதைய ஸ்திர தன்மை குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். தொழில் முறை கட்டட அமைப்பியல் பொறியாளர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;கடன் கொடுக்கும் வங்கிகள் இது தொடர்பாக ஆய்வு செய்வதாக கூறினாலும், அது பெரும்பாலும், பெயரளவுக்கே இருக்கும். எனவே நீங்கள் தனியார் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்து கட்டடத்தின் உறுதி தன்மை குறித்த உண்மை நிலவரத்தை அறியலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். சில இடங்களில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமான துாண்கள், பீம்களில் உள்ள விரிசல்கள் மறைக்கப்பட்டு வீட்டை விற்று விடுகின்றனர் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/27c726cc43f426276625bdbe3d0edcba17775712354361310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கால்வலி வராமல் இருக்க மாடிப்படி உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? - இதோ கட்டுமான டிப்ஸ்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-building-a-house-on-a-budget-essential-planning-for-staircases-tnn-258020</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-building-a-house-on-a-budget-essential-planning-for-staircases-tnn-258020#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 22:15:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/new-building-a-house-on-a-budget-essential-planning-for-staircases-tnn-258020</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;பட்ஜெட் அடிப்படையில் வீடுகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு நம் பட்ஜெட் அடிப்படையில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;பெரும்பாலான இடங்களில் வீட்டுக்கான அனைத்து பாகங்களையும் கவனமாக பார்த்து அமைப்பவர்கள் கூட, மாடிப்படி விஷயத்தில் மிகுந்த அலட்சியமாக செயல்படுகின்றனர். வீட்டுக்கான மாடிப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வரைப்படம் தயாரிக்கும் போது திட்டமிடல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;உங்கள் புதிய வீட்டை கட்டும் போது அதற்கான வரைபடம் தயாரிக்கும் போதே மாடிப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் கவனமாக திட்டமிட வேண்டும். வரைபட நிலையிலேயே இதற்கான இடத்தை தேர்வு செய்து விட்டால் எதிர்காலத்தில் நெருக்கடியை தவிர்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாக வீடுகளில் உட்புறம் அல்லது வெளிப்புறத்தில் மாடிப்படி அமைக்கப்படும். தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ற வகையில் மாடிப்படி அமையும் இடம், அளவு போன்ற விஷயங்கள் வேறுபடும் என்பதை உரிமையாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;மாடிப்படி என்ன அளவு இருக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தனி வீடு என்றால் மாடிப்படி அமைக்கும் போது அதன் அகலம், மூன்று அடி அளவுக்கு இருந்தால் போதும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு என்றால், ஒரே சமயத்தில் அதிக நபர்கள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் மாடிப்படியின் அகலம் அதற்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கு அடுத்தபடியாக மாடிப்படி அமைக்கும் போது அதில் கால் வைக்கும் இடத்தின் அகலம் , பாதம் முழுமைக்கும் போதுமானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, படியின் உயரம், ஆறு அங்குலம் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மாடிப்படிக்கான கட்டுமான பணியில், ரைசர் எனப்படும் உயரத்தை கடைபிடிப்பதில் தான் பல்வேறு தவறுகள் நடக்கின்றன. இதற்கு பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் செங்கலின் உயரம், நான்கு அங்குலம் தான் இருக்கும். இதில், இரண்டு செங்கலை ஒன்றின் மீது ஒன்று என்ற அடிப்படையில் அடுக்கினால், எட்டு அங்குலம் அளவுக்கு உயரம் அதிகரிக்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;கால்வலி ஏற்படுவதை தவிர்க்க&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒரு செங்கலை பயன்படுத்தினால் மேற்பூச்சுடன் சேர்த்து, ஐந்து அங்குலம் தான் வரும். இதற்கு ஒரு செங்கலை முழுமையாகவும், அடுத்த செங்கலை உடைத்தும் பயன்படுத்தும் போது ஆறு அங்குல உயரத்தை உறுதி செய்ய முடியும். இவ்வாறு சரியான உயரத்தை உறுதி செய்து மாடிப்படி அமைத்தால் அதை பயன்படுத்துவோருக்கு கால் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;தரை பகுதியில் இருந்து மேல் தளம் வரை எத்தனை படிகள் அமைக்க வேண்டும் என்பதை ஆறு அங்குல உயரத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இந்த வழிமுறைகளை கவனமாக கடைப்பிடித்தால் வீட்டுக்கான மாடிப்படியை எவ்வித பிரச்னையும் இன்றி பயன்படுத்தலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;கட்டட வரைபட தயாரிப்பின் போது மாடிப்படி அமையும் இடம் மட்டுமல்லாது அதன் உயரம், அகலம் தொடர்பான விபரங்களையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். மாடிப்படிக்கான கட்டுமான பணியில், கால் வைக்கும் இடத்துக்கான உயரம் ஆறு அங்குலமாக இருப்பதை துல்லியமாக கடைப்பிடித்தால் பயன்பாட்டு நிலையில் கால் வலி ஏற்படாது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/b3b3f4afdba4073120009d7d2a15e7f017775674555751310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-woman-molested-in-chennai-57-year-old-plumber-arrested-tnn-257976</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-woman-molested-in-chennai-57-year-old-plumber-arrested-tnn-257976#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:31:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-woman-molested-in-chennai-57-year-old-plumber-arrested-tnn-257976</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;தனியாக வசித்து வரும் மூதாட்டி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 76 வயதான மூதாட்டி சுந்தரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இவருக்கு நான்கு மகன்களும் ஒரு&amp;zwnj; மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்த நிலையில் நான்கு மகன்களுக்கும் கமலா தனியாக இருந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பின்னர் நான்கு மகன்களும் சேர்ந்து மகள் கீதாவிற்கு திருமணம் செய்து வைத்த நிலையில் பிள்ளைகள் அனைவரும் குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர். எனவே மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கீதா தனது கணவருடன் புரசைவாக்கத்தில் வாழ்ந்து வருவதால் தினமும் மாலை நேரத்தில் புளியந்தோப்பில் தனியாக உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;பிறப்புறுப்பில் வெளியான ரத்தம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;வழக்கம் போல் கீதா தாய் வீட்டிற்கு சென்று அவரை குளிக்க வைக்க சென்ற போது கமலாவின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தாயிடம் இது குறித்து கேட்ட போது , வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான பிளம்பர் மருதப்பன் என்பவன் வீட்டில் புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து மூதாட்டியை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது மகள் கீதா , இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடந்தது குறித்து மேற்கொண்டு மருதப்பன் மீது வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய அவரை தனிப்படை அமைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மருதப்பன் மீது வேறு ஏதேனும் புகார் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் அரசு சார்பில் அவருக்கு தேவையான உதவிகளை காவல் துறையினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/67a6e314042dbd07b3796e8f0814b0c017775396385091310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["வெளியே தலை காட்டாதீங்க.. நெருப்பாய் சுடப்போகும் சென்னை!" – நாளை 105.8 டிகிரியைத் தொடும் வெப்பம்]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-meteorological-department-warned-daytime-temperatures-in-chennai-could-exceed-105-8-degrees-fahrenheit-tomorrow-257991</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-meteorological-department-warned-daytime-temperatures-in-chennai-could-exceed-105-8-degrees-fahrenheit-tomorrow-257991#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:23:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-meteorological-department-warned-daytime-temperatures-in-chennai-could-exceed-105-8-degrees-fahrenheit-tomorrow-257991</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சென்னையில் பகல் நேர வெப்ப நிலை நாளை 105.8 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டாக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;/h3&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சென்னையில் நாளை சுட்டெரிக்கும் வெயில்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;இன்று (30-04-2026):&lt;/strong&gt; வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;நாளை (01-05-2026):&lt;/strong&gt; வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அதிகபட்ச வெப்ப நிலை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;30-04-2026 முதல் 04-05-2026 வரை:&lt;/strong&gt; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் சற்று உயரக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/K_I2oxPFMf4?si=fw5-I3lCUpEsj57f&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;30-04-2026 முதல் 04-05-2026 வரை:&lt;/strong&gt; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;30-04-2026 முதல் 04-05-2026 வரை:&lt;/strong&gt; அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a title=&quot;மேலும் படிக்க: Heat wave : &amp;lsquo;மக்களே உஷார் - பாதிக்கும் ஈரப்பத வெப்ப அலை&amp;rsquo; காரணத்தை விளக்கிய அறிவியலாளர்கள்..!&quot; href=&quot;https://tamil.abplive.com/news/india/humid-heatwave-impacting-over-1-billion-indians-scientists-reveal-key-causes-257731&quot; target=&quot;_self&quot;&gt;மேலும் படிக்க: Heat wave : &amp;lsquo;மக்களே உஷார் - பாதிக்கும் ஈரப்பத வெப்ப அலை&amp;rsquo; காரணத்தை விளக்கிய அறிவியலாளர்கள்..!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;30-04-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 வோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூ, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;01-05-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;02-05-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;03-05-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;04-05-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;05-05-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;06-05-2026:&lt;/strong&gt; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மீனவர்களுக்கான எச்சரிக்கை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;30-04-2026 முதல் 04-05-2026 வரை:&lt;/strong&gt; வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 5 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/navel-put-these-4-types-of-oil-in-navel-know-the-benefits-257857&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/e467357e88caefae19b264c93e1493d81777539156936113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" தினமும் குடிச்சா உன் பொண்டாட்டி எப்படி வருவா " கேள்வி கேட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kalrayan-hills-double-murder-drunk-husband-arrested-tnn-257924</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kalrayan-hills-double-murder-drunk-husband-arrested-tnn-257924#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 23:37:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kalrayan-hills-double-murder-drunk-husband-arrested-tnn-257924</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;குடிபோதைக்கு அடிமையான நபர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70 )&amp;nbsp;இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி காந்தி உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பின்னர் ராமசாமி தனது இரண்டாவது மனைவியான பொன்னம்மாள் ( வயது 67 ) என்பவருடன் காட்டுக்கொட்டை பகுதியில் தனியாக தங்கி வாழ்ந்து வந்தனர். ராமசாமியின் முதல் மனைவியின் மகன் குப்புசாமிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் குப்புசாமி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். எனவே பேத்தி மேகலாவை ராமசாமி வளர்த்து பெருக்கஞ்செடி கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;ஒன்றாக சேர்ந்து இருக்க வற்புறுத்தல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தொடக்கத்தில் மனைவி மீது பாசமாக இருந்த சதீஷ் நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். பின்னர் தொடர்ந்து தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி மேகலாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த மேகலா கடந்த இரண்டு வருடங்களாக சதீஷை பிரிந்து தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார். ஆனால் சதீஷ் விடாமல் மேகலாவை போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் தன்னுடன் வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; தினமும் குடிச்சிட்டு வந்தா உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக மேகலா திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 - ம் தேதி மனைவியை தேடி அவரது தாத்தா ராமசாமி வீட்டிற்கு சென்ற சதீஷ் மேகலாவை பற்றி தகவல் கேட்டு முதிய தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது ராமசாமி தினமும் குடிச்சிட்டு வந்த உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா&amp;nbsp; என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த அம்மிக்கல்லை பயன்படுத்தி ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாளை தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;விரக்தியில் அம்மிக்கல் போட்டு கொலை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியாலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி இருவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் வயது முதிர்ந்த தம்பதியினரை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி சதீஷை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சேலம், கெங்கவல்லி, கருமந்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சல்லடை போட்டு தேடி வந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது சதீஷ் தர்மபுரி மாவட்டத்தில் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தர்மபுரி சென்ற காவல் துறையினர் சதீஷை மடக்கி பிடித்து கைது செய்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/7af55d86da371aae31413c2b80d1f7061734177034874211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tamil Nadu Exit Poll: "விஜய்யின் கோட்டையாகிறதா சென்னை?" - தவெக பிடிக்கப்போகும் தொகுதிகள் எத்தனை? மிரள வைக்கும் தேர்தல் கணிப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-vijay-stronghold-tvk-seats-prediction-chennai-257904</link><comments>https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-vijay-stronghold-tvk-seats-prediction-chennai-257904#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 19:53:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-vijay-stronghold-tvk-seats-prediction-chennai-257904</guid><description><![CDATA[&lt;p&gt;மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணியே முந்துகிறது என்று மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி 28 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் 5 மாநில சட்டப்பேரவை முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில், பெரும்பாலும் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மேற்கு மண்டலத்தில் முந்தும் திமுக கூட்டணி&lt;/h2&gt;
&lt;p&gt;இதில், மின்னம்பலம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி முந்துகிறது. மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 28, அதிமுக கூட்டணி 19, தவெக 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 30, அதிமுக கூட்டணி 21, தவெக 0, மற்றவை 1 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், தென் மண்டலத்தில் திமுக கூட்டணி 39, அதிமுக கூட்டணி 18, தவெக 0, மற்றவை ஒரு தொதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/f16c37f24f06f6f1b9953c9479c335cf1777472159273113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;சென்னை மண்டலம்&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;திமுக கூட்டணி 31&lt;/p&gt;
&lt;p&gt;அதிமுக கூட்டணி 4&lt;/p&gt;
&lt;p&gt;தவெக 2&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மற்றவை 0&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மத்திய மண்டலம்&lt;/h2&gt;
&lt;p&gt;திமுக கூட்டணி 27&lt;/p&gt;
&lt;p&gt;அதிமுக கூட்டணி 10&lt;/p&gt;
&lt;p&gt;தவெக 0&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மற்றவை 0&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/16/9b37251d26324ffde29c288b675aec341776337860509113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை கொடுக்கிறார்கள் " நடிகர் பார்த்திபன் உருக்கமான பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/actor-parthiban-caste-religion-less-certificate-chennai-high-court-order-tnn-257890</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/actor-parthiban-caste-religion-less-certificate-chennai-high-court-order-tnn-257890#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 18:03:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/actor-parthiban-caste-religion-less-certificate-chennai-high-court-order-tnn-257890</guid><description><![CDATA[&lt;div class=&quot;text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp&quot;&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சாதி - மதமற்றவர் என சான்றிதழ் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சாதி மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில், தன்னை &quot;சாதி - மதமற்றவர் &quot; என அறிவித்துச் சான்றிதழ் வழங்கக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாத நிலையில் கோர்ட்டை அவர் நாடினார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஒரு வார காலத்திற்குள் &quot;சாதி, மதம் அற்றவர்&quot; என்பதற்கான சான்றிதழை வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், கடந்த 27 -ம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர், பார்த்திபன் எந்தச் சாதியையும் மதத்தையும் சாராதவர் எனச் சான்றிதழ் வழங்கினார். இதன் மூலம் சட்டபூர்வமாகத் தனது சாதி, மத அடையாளங்களை அவர் துறந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் கோர்ட்டில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;அதன் பின்னர் நீதிபதி கூறியதாவது ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஜாதி, மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர , சான்றிதழ் அவசியம் இல்லை. விளம்பரத்துக்கு வேண்டுமானால் இந்த சான்று பயன்படும். ஜாதி மத மற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;நம் நடத்தை மூலம் தான் அதை காட்ட வேண்டும். சாதி, மதமற்றவர் என சான்று வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே சான்று வழங்க உத்தரவிடுகிறேன் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி நடிகர் பார்த்திபன் ஜாதி மத மற்றவர் என்ற சான்றிதழை பெற்றுக் கொண்டார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;நடிகர் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மனநிலை பாதிக்கப்பட்ட பார்த்திபனின் பணிவான வணக்கம். என்னை எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் எனக்கு இந்த சாதி, மதம் தேவையில்லை என அப்படி ஒரு சான்றிதழை வாங்கி இருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;ஜாதி - மதம் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என பல தலைவர்கள் கூறியுள்ளார்கள். அப்படிபட்ட ஒரு முயற்சியில் நான் செயல்படுத்த முன்னெடுக்கும் போது ஏன் இவ்வளவு பிரச்னை செய்கிறார்கள் ?&lt;/p&gt;
&lt;p&gt;ஜாதி மதம் தேவை என்று சொல்பவர்களை தவறாக சொல்லவில்லை. இது ஒரு புதிய விழிப்புணர்வு முயற்சி. திரை துறையில் முதலில் ஜாதி, மதமற்றவர் என சான்று வாங்கியுள்ளேன். இயக்குனர் விக்ரமன் கூட &amp;nbsp;கால் பண்ணி உங்க லிஸ்டில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறினார். ஒரு பெரிய லிஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு. முதலில் இது போன்ற சான்றிதழ் வாங்க முடியுமா என்பது தெரியாது. அதை வாங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.&lt;/p&gt;
&lt;p&gt;அவ்வாறு அதை வாங்கியதால் என்னை சிலர் பாராட்டுகிறார்கள், மிக சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவன் என சொல்கிறார்கள். ஆனால் இதை வழங்கியது சோழிங்கநல்லூர் தாசில்தார். மாண்புமிகு நீதியரசர் என்னை பாராட்டி இதை கொடுத்திருக்கிறார். இவை அனைத்தையும் செய்தவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவன் என அவர்கள் யாரை சொல்கிறார்கள். என்னை போல் பலர் சாதி மதமற்றவர் சான்றிதழ் வாங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;நல்லவனாக இருக்கக் கூட ஒரு சான்றிதழ் தேவை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;என்னை பற்றிய விமர்சனங்கள் தேவையில்லை. நீதிபதி என்னை பாராட்டும் போது கூட இந்த நாட்டில் நல்லவனாக இருக்கக் கூட ஒரு சான்றிதழ் தேவைப்படுகிறது என கூறி இந்த சான்றிதழை வழங்கினார். 35 வருட எனது சினிமா பயணத்தில் நல்ல கருத்துகளை சொல்லியிருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டுக்கு தேவையான, மக்களுக்கு தேவையான நல்ல நல்ல பல திட்டங்களை எனது பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் மூலம் செய்து இருக்கிறேன். தொடர்ந்து நல்ல சினிமா படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/19e953dab99d4e92a5b851075a5f921d17774661942661310_original.jpg" width="220"/></item></channel></rss>