<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chennai</title><atom:link href="https://tamil.abplive.com/chennai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 09:59:40 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-high-wind-july-2nd-latest-rain-warning-265798</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-high-wind-july-2nd-latest-rain-warning-265798#respond</comments><pubDate>Thu, 2 Jul 2026 06:14:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-rain-alert-chennai-weather-forecast-tamilnadu-today-meteorological-department-high-wind-july-2nd-latest-rain-warning-265798</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TN weather Rain Update (02-07-2026):&lt;/strong&gt; சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, &amp;ldquo;சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 03 ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று&amp;nbsp;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-is-baby-born-after-9-months-details-in-pics-265693&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடுத்த 2 நாட்களுக்கான வானிலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;03-07-2026:&lt;/strong&gt; கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;04-07-2026:&lt;/strong&gt; கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37&amp;deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sWpXZ12pE3o?si=UkhvDrB0EYF2BG8T&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மீனவர்களுக்கான எச்சரிக்கை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தமிழக கடலோரப்பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;05-07-2026: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வங்கக்கடல் பகுதிகள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;&lt;strong&gt;02-07-2026:&lt;/strong&gt; மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்&amp;rdquo; எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/30/61527e0455562e4ce7b4f93b28b62c951730272189757102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/krishnagiri-rajasekar-kills-girlfriend-commits-suicide-with-mother-tnn-265797</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/krishnagiri-rajasekar-kills-girlfriend-commits-suicide-with-mother-tnn-265797#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 23:40:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/krishnagiri-rajasekar-kills-girlfriend-commits-suicide-with-mother-tnn-265797</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;என்னையும் என் தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் என்பவர் மகன் 30 வயதுடைய ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தாயுடன் தங்கி கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கடையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அப்போது ராஜசேகருக்கு பெங்களூர் ஆடுகோடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நளினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து போன் மற்றும் நேரில் சந்தித்து பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி இருவரும் தொடர்ந்து வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இதற்கிடையில் ராஜசேகர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரூத்ரப்பா என்பருக்கும், ராஜசேகருக்கும் பொது வழியில் செல்வது குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த (ஜூன் 28) நள்ளிரவில் ராஜசேகர் மற்றும் அவருடைய அம்மா மஞ்சுளா ஆகிய இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய மெசேஜ்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராஜசேகர் &quot;நானும் , எனது தாய் மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ள போகிறோம், அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்தரப்பா, அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் தான், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். &quot; என்னையும் என் தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும் &quot; என கடிதம் எழுதி கன கடை உரிமையாளர் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;செல்போனில் வந்த கடித்தை பார்த்து அதிர்ந்த அவரது நண்பர்கள் நள்ளிரவில் கொலமங்கலம் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீசார் இருவரையும் செல்போன் டவர் லொகேஷன் வைத்து தேடிய போது தேன்கனிக்கோட்டை தண்டரை ஏரி பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் போலீசார் சென்று ஏரியில் தேடிய போது ராஜசேகர், தாய் மஞ்சுளா ஆகிய இருவரின் உடல் துணியால் கட்டப்பட்ட நிலையில் மிதந்து உள்ளது. இருவரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;எரிக்கப்பட்ட நிலையில் பெண் உடல்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இது குறித்து வழக்குப் பதிவு செய்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ராஜசேகரின் காதலி நளினா பெங்களூர் ஆடுகோடி பகுதியில் ஹாஸ்டலில் தங்கி பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். அவருக்கு தாய் , தந்தை யாரும் இல்லை என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ராஜசேகர் நளினியை தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல கடந்த வாரம் காதலி நளினியுடன் மாதேஸ்வரன் என்கிற மலைக்கு சென்ற ராஜசேகர் அவரை கொலை செய்து உடலை காட்டு பகுதியில் எரித்து விட்டு வீட்டிற்கு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பௌகாவி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20 முதல் 25 வயது உடைய பெண் கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் இருப்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;ஆதாரங்களை சேகரித்த காவல் துறையினர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலில் கருகிய நிலையில் நகைகள், வாட்சு உள்ளிட்டவற்றை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதில் ராஜசேகர் கார் அப்பகுதியில் உள்ள டேல்கேட்டிற்கு சென்று வந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதை வைத்து விசாரித்த போது இறந்து பெண் பெங்களூரை ஆடுகோடி பகுதியில் தங்கி உள்ள நளினி என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விடுதியில் உடன் தங்கியுள்ள நளினியின் தோழிகளிடம் விசாரித்ததில் ராஜசேகர் நளினியை காதலித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;எனவே கார் எண்ணை வைத்து முகவரியை கண்டறிந்து கர்நாடக போலீசார் , ராஜேசுக்கு போன் செய்து &quot;உங்கள் கார் மண்டியா மாவட்டம் டோல்கேட் பகுதியில் சென்றுள்ளது அங்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது அது குறித்து உங்களுக்கு தெரியுமா ? என விசாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதில் பதட்டமடைந்த ராஜசேகர் கொலை வழக்கில் சிக்கிக் கொள்வோம் என பதட்டம் அடைந்து நிலப் பிரச்சனையில் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;காதலியை கொலை செய்து விட்டு கொலையை திசை திருப்ப தாயுடன் சேர்ந்து வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/31/3645ce692183b692dc05975e22e543de1730397097913211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-double-murder-case-accused-gets-double-life-imprisonment-tnn-265792</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-double-murder-case-accused-gets-double-life-imprisonment-tnn-265792#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 22:55:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tenkasi-double-murder-case-accused-gets-double-life-imprisonment-tnn-265792</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;கடந்த 2022 - ம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நாளன்று இரவு சுமார் 11 மணியளவில் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியது.&amp;nbsp; அடவிநயினார் கோவில் அணைக்கு செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அப்துல்கனியின் மனைவி , 70 வயதான சைத்தான் பீவி தனியாக உறங்கிக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது குடிபோதையில் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த முகம்மது காசிம் ( வயது 19 ) என்ற நபர்&amp;nbsp;மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலின் போது சைத்தான் பீவி உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;யார் அது ? சத்தம் போட்ட பேரன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மூதாட்டி உயிரிழந்த பிறகு, அவரது உடலை நிர்வாண நிலையில் வீட்டிலிருந்து வெளியே தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அவரது பேரன் காஜீர் அலி , இருட்டில் என்ன நடக்கிறது என்று புரியாமல் &quot;யார் அது ? &quot; என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காஜீர் அலியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் , அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று , இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மேக்கரை கிராமம் வண்ணாத்திப்பாறை சாலை பகுதியைச் சேர்ந்த முகம்மதுகனியின் மகன் முகம்மது காசிம் ( வயது 19 ) என்பவரே இந்த இரட்டை கொலை வழக்கின் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;இரட்டை ஆயுள் தண்டனை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அவரை கைது செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து சாட்சிகள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் புலனாய்வு ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், முகம்மது காசிம் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டதாக கூறி தீர்ப்பளித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கும், அவரது பேரன் காஜீர் அலியை கொலை செய்ததற்கும் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு உத்தர விட்டார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/13/dd43c44d3231a9cfb2922f19d34fc59d1728797798277651_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-leader-pocso-case-srivilliputhur-virdhunagar-tnn-265766</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-leader-pocso-case-srivilliputhur-virdhunagar-tnn-265766#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 21:51:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-leader-pocso-case-srivilliputhur-virdhunagar-tnn-265766</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊத்துவேன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ். கொடிக்குளம் பேரூராட்சியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் ( வயது 30 ). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு ஒரு தலைபட்சமாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் சிறுமி அருகே உள்ள கடைகளுக்கு சென்று வரும் போதெல்லாம் ஜோசப் துரத்தி வந்து பேசுவதாகவும், தன்னை காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த தொடர் மிரட்டல் மற்றும் பின் தொடர்ந்து வருவது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் சிறுமி. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஜோசப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக பெற்றோர் கூமாபட்டி காவல் துறையினரை அணுகிய போது புகார் எடுக்க தாமதப்படுத்தியதாகவும் பின்னர் மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டு அலைக் கழித்ததாகவும் தெரிவித்துள்னர். வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; நிர்வாகி ஜோசப் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்த செய்தியை காவல் துறையினர் மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/7af55d86da371aae31413c2b80d1f7061734177034874211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/forest-minister-ranjithkumar-handed-over-modern-weapons-and-patrol-vehicles-to-officials-under-the-tamil-nadu-forest-force-modernization-scheme-tnn-265770</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/forest-minister-ranjithkumar-handed-over-modern-weapons-and-patrol-vehicles-to-officials-under-the-tamil-nadu-forest-force-modernization-scheme-tnn-265770#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 20:36:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/forest-minister-ranjithkumar-handed-over-modern-weapons-and-patrol-vehicles-to-officials-under-the-tamil-nadu-forest-force-modernization-scheme-tnn-265770</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், வனப் பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முதலமைச்சரின் தலைமையிலான அரசின் வனத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கொள்முதல் செய்யப்பட்ட 250 நவீன ஆயுதங்கள் மற்றும் புதிய வாகனங்களின் இயக்கத்தை வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் தொடங்கி வைத்தார். குறிப்பாக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின்' (TBGPCCR) கீழ், 3.91 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 54 புதிய மகிந்திரா பொலிரோ ரோந்து வாகனங்களையும் அவர் கொடியசைத்து இயக்கி வைத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் சவால்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாநிலத்தின் மிகவும் தொலைதூர மற்றும் சவாலான வனப்பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனப்பகுதிகளில் வேட்டையாடுதல் தடுப்பு ரோந்துப் பணிகள், வனவிலங்கு குற்றங்களைத் தடுத்தல், வன எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பது போன்ற ஆபத்தான சூழல்களில் முன்களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக உதவி கிடைக்காத அடர்ந்த வனப்பகுதிகளில் வேலை செய்யும் இவர்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும் நவீன உபகரணங்கள் அவசியமாக இருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொள்முதல் செய்யப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் ஒருபகுதியாக முன்களப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 250 நவீன ஆயுதங்களில், 204 பன்னிரெண்டு போர் (12-Bore) பம்ப் ஆக்சன் துப்பாக்கிகள் (pump action guns) அடங்கும். இவை மடக்கக்கூடிய பக்கவாட்டு தோள்தாங்கியுடன் (Side-Folding Butt) வடிவமைக்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் தடுப்பு ரோந்துப் பணிகள், இரவுநேரக் கண்காணிப்பு மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களைக் கையாளுவதற்கு ஏற்றவாறு இந்தத் துப்பாக்கிகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சட்ட அமலாக்கம், வனக் கண்காணிப்பு மற்றும் அவசரக்கால பதிலளிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்காக 'குளோஸ் என்கேஜ்மென்ட் சிஸ்டம்' (CES) உபகரணங்களுடன் கூடிய 46 (9 mm) தானியங்கி கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நவீன ஆயுதங்கள் வனவிலங்கு குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெரிதும் உதவும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய மகிந்திரா பொலிரோ ரோந்து வாகனங்களின் பங்களிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், கள அளவிலான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 54 மகிந்திரா பொலிரோ வாகனங்கள் முதற்கட்டமாக வனச்சரக அலுவலர்கள் (Range Officers) மற்றும் இதர கள அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொலைதூர வனப்பகுதிகளில் இவர்களின் இயக்கத் திறனை மேம்படுத்த இந்த வாகனங்கள் உதவும். வழக்கமான வன ரோந்துப் பணிகள், காட்டுத்தீ மேலாண்மை, காடுவளர்ப்பு திட்டங்களை கண்காணித்தல் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளன. முக்கியமாக, காட்டுத்தீ, மனித-வனவிலங்கு மோதல்கள் மற்றும் வன ஆக்கிரமிப்புகள் போன்ற அவசர காலங்களில் வனத்துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று உடனடி நடவடிக்கை எடுக்க இந்த வாகனங்கள் வழிவகை செய்யும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர். ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, திட்ட இயக்குநர் எஸ். ராமசுப்பிரமணியன் மற்றும் வனத்துறையின் மூத்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வன வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் இந்த நவீன முன்னெடுப்புகள் மிக முக்கியப் பங்காற்றும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/02bbc8f0d57fbc27223fbc10b394ed1117829183456701319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pallavaram-chennai-has-caused-shock-a-daughter-in-law-hacked-her-father-in-law-to-death-with-a-sickle-after-he-sexually-harassed-her-tnn-265761</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pallavaram-chennai-has-caused-shock-a-daughter-in-law-hacked-her-father-in-law-to-death-with-a-sickle-after-he-sexually-harassed-her-tnn-265761#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 19:14:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pallavaram-chennai-has-caused-shock-a-daughter-in-law-hacked-her-father-in-law-to-death-with-a-sickle-after-he-sexually-harassed-her-tnn-265761</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரைக் கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இளம்பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்த பாலியல் அத்துமீறல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர், தன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது மகனுக்குத் திருமணமாகி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கணவரை இழந்து தவித்த அந்த இளம்பெண்ணிற்கு, அவரது மாமனார் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நள்ளிரவில் நடந்த விபரீதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தன்று நள்ளிரவிலும் அந்த நபர் இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. மாமனாரின் தொடர் அத்துமீறலால் மிகுந்த ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த சிறிய காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த ரத்தக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீசார் விசாரணை மற்றும் கைது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்து, தற்காப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/822fba50ccb7dc9e51ed30e7c1f1e85117829134499551319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["மனிதநேயம் இன்னும் சாகலப்பா.." தாம்பரம் அரசு பஸ் டிரைவர் செய்த காரியம்.. குவியும் பாராட்டுகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tambaram-where-a-bus-driver-with-the-cooperation-of-passengers-drove-a-woman-who-had-fainted-directly-to-a-government-hospital-is-drawing-widespread-praise-tnn-265745</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tambaram-where-a-bus-driver-with-the-cooperation-of-passengers-drove-a-woman-who-had-fainted-directly-to-a-government-hospital-is-drawing-widespread-praise-tnn-265745#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:09:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tambaram-where-a-bus-driver-with-the-cooperation-of-passengers-drove-a-woman-who-had-fainted-directly-to-a-government-hospital-is-drawing-widespread-praise-tnn-265745</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மேற்கு தாம்பரத்தில் இருந்து இன்று மாலை திருவான்மையூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பயணித்த பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக கூச்சலிட்டு ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் தகவல் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர், சிறிதும் தாமதிக்காமல் மாற்றுச் சிந்தனையுடன் செயல்பட்டார். வழக்கமான வழித்தடத்தில் செல்வதை நிறுத்திவிட்டு, பேருந்திலிருந்த பயணிகளுடன் நேரடியாக தாம்பரம் குரோம்பேட்டையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை நோக்கி பேருந்தை விரைவாக இயக்கினார். ஓட்டுநரின் இந்த அவசர கால முடிவுக்கு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;உயிர்காத்த கூட்டு முயற்சி&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மருத்துவமனை வளாகத்திற்குள் பேருந்து நுழைந்ததும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் மயக்கமடைந்த பெண்ணை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆபத்தான கட்டத்தில் சுயநலமின்றி, சக மனிதரின் உயிரைக் காக்க பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளும் ஓட்டுநருக்கு ஆதரவாக நின்று ஒத்துழைப்பு அளித்தது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;குவியும் பாராட்டுகள்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சரியான நேரத்தில், சாதுரியமாகவும் மனிதாபிமானத்தோடும் செயல்பட்டு ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற உதவிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சக பயணிகளின் இந்தச் செயலை சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடையேயும் பலரும் பாராட்டி வருகின்றனர். 'மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது' என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/4f41cec1db2417c43ee3d636dbf1fce617829057604931319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க " மனைவி மீது சந்தேகம் - இறுதியில் நடந்ந சோகம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dindigul-crime-father-kills-toddler-son-with-poison-palani-tnn-265715</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dindigul-crime-father-kills-toddler-son-with-poison-palani-tnn-265715#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:20:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dindigul-crime-father-kills-toddler-son-with-poison-palani-tnn-265715</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;மனைவி மீது சந்தேகம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிரபாகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குடும்பத்துடன் வசித்து வந்த பிரபாகரனுக்கு, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தினந்தோறும் பிரபாகரன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; யார் கூட கள்ள தொடர்பு வச்சிக்கிட்டு இருக்க&lt;/strong&gt; &quot;&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p&gt;நாளுக்கு நாள் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த (ஜூன் 27) தேதி இரவு &quot;எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க&quot; என கேட்டு பிரபாகரன் மனைவி ரூபியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது ரூபியும் எதிர்த்து வாக்கு வாதம் செய்யவே மன வருத்தமடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு , பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனை தொடர்ந்து கடையில் விஷம் வாங்கி வந்த பிரபாகரன் அதனை மூன்று கிளாஸ்களில் ஊற்றி மனைவி மற்றும் மகன்களை குடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபி விஷம் குடிக்க மறுத்த நிலையில் அவரை பிரபகாரன் அரிவாளால் வெட்டியுள்ளார். எனவே பதட்டமடைந்த ரூபி தனக்கு அருகில் இருந்த முதல் மகனை அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதற்கிடையில் பிரபாகரன் கொடுத்த விஷத்தை 3 வயது மகன் நாகராஜ் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சிறுவன் உயிரிழப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;விஷம் அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுவன் நாகராஜின் உடல் நிலை மோசமடைந்து வாயில் நுரை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உடனடியாக குழந்தையை பழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தச் சம்பவம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;முதற்கட்ட விசாரணையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பிரபாகரன் குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல திட்டமிட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/7af55d86da371aae31413c2b80d1f7061734177034874211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நேரத்தோடு வீட்டுக்கு போய் சேருங்க.. சென்னையில் இன்று இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-tamil-nadu-puducherry-heavy-rain-thunderstorm-meteorological-department-265728</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-tamil-nadu-puducherry-heavy-rain-thunderstorm-meteorological-department-265728#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 15:46:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-tamil-nadu-puducherry-heavy-rain-thunderstorm-meteorological-department-265728</guid><description><![CDATA[&lt;div&gt;சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை&amp;nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;வரும் 3ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும்&lt;/div&gt;
&lt;div&gt;வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/uYoV6cMbLvM?si=snqO9ddw7lCSHccV&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;வரும் 4ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;மேலும், வரும் 5 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;சென்னை மற்றும் புறநகரில் மழைக்கு பாதிப்பு&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவுக் அதிகபட்ச வெப்பநிலை 37&amp;deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29&amp;deg; செல்சியஸை ஒட்டியும்&amp;nbsp; இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/simple-one-vs-honda-active-e-specification-price-comparison-265641&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/3db5762d2fb305436ff479016ca37cd41782469339881113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கள்ள உறவு - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? - பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர கூலித் தொழிலாளி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/perundurai-woman-murder-construction-worker-arrested-tnn-265695</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/perundurai-woman-murder-construction-worker-arrested-tnn-265695#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 12:56:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/perundurai-woman-murder-construction-worker-arrested-tnn-265695</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கட்டுமான பணியில் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில் கடந்த 21 - ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து நில உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பல நாட்களாக உயிரிழந்திருந்ததால் உடல் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், உயிரிழந்தவர் ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியைச் சேர்ந்த 65 வயதான வளர்மதி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி விஜயகுமார் என்பவரே கொலையாளி என்பது உறுதியானது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; நீ எல்லாம் ஒரு ஆம்பளையா &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;விசாரணையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருவரும் காஞ்சிகோவில் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது அவர்களுக்குள் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. சம்பவத்தன்று விஜயகுமார் மதுபானம் வாங்கிக் கொண்டு வளர்மதியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதிகளவில் மது அருந்தியிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால், &quot; நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? &quot; என்று வளர்மதி அவமதித்து பேசியதாகவும் , இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதே நேரத்தில், வீட்டிற்கு சிலிண்டர் வாங்குவதற்காக விஜயகுமாரிடம் வளர்மதி ரூ.5,000 கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த பணத்தை திருப்பிக் கேட்டதாலும் தகராறு தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஆத்திரமடைந்த விஜயகுமார், தன்னிடம் இருந்த கத்தியால் வளர்மதியின் கழுத்தை சரமாரியாக அறுத்து படுகொலை செய்து விட்டு, அவரது உடலை அங்கேயே வீசி விட்டு தப்பியோடியுள்ளார். பின்னர், உயிரிழந்த பெண் அணிந்திருந்த காதுத் தோட்டை பறித்து சென்று அடமானம் வைத்து ரூ.22 ஆயிரம் பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்த காஞ்சிகோவில் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item></channel></rss>