தீபாவளி சிறப்பு ரயில் ;

Continues below advertisement

தீபாவளி பண்டிகை யொட்டி , செங்கல்பட்டு - திருநெல்வேலிக்கு வரும் 17 முதல் 26 - ம் தேதி வரை வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் , பயணியர் வந்து செல்ல வசதியாக , செங்கல்பட்டு - கடற்கரை இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி , செங்கல்பட்டு - கடற்கரைக்கு மதியம் 1:45 , 2:20 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதே போல் , கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:40 , மதியம் 1:00 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Continues below advertisement

ஆந்திராவின் சூலார் பேட்டை , விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், கேரளாவின் திருவனந்தபுரம் பணிமனையில், மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், அத்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் ; 

1. சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:40 ,

2. சூலுார் பேட்டை - நெல்லுார் காலை 7:50 ,

3. நெல்லுார் - சூலுார்பேட்டை 10:20 ,

4. சூலுார்பேட்டை - சென்ட்ரல் பகல் 12:35 ,

5. ஆவடி - சென்ட்ரல் காலை 4:25 மணி ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.

ஒரு சில பகுதிகளில் ரத்து ; 

1. சென்ட்ரல் - சூலுார் பேட்டை அதிகாலை 4:15 , 5:00 மணி ரயில்கள் எளாவூர் வரை மட்டுமே செல்லும்.

2. சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 6:45 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும்.

3. சூலுார்பேட்டை - கடற்கரை காலை 7:25 மணி ரயில் , எளாவூரில் இருந்து இயக்கப்படும்.

4. தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் , முண்டியம்பாக்கம் செல்லாமல் திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.

5. விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில் , திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும். இன்று 15, 18 - ம் தேதிகளில் இச்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

6. கேரள மாநிலம் குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில் , வரும் 17, 22, 24 - ம் தேதிகளில் , கோட்டயம் வழியாக மாற்றுப் பாதையில் செல்வதால் , எர்ணாகுளம் , ஆலப்புழா வழியாக செல்லாது.

7. எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில் , வரும் 30 நவம்பர் 3 ம் தேதிகளில் , மாற்றுப் பாதையில் செல்வதால், 85 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

8. எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில் , வரும் நவம்பர் 1ம் தேதி மாற்றுப் பாதையில் செல்வதால் , 50 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.