Diwali Tasmac Sale : காஞ்சிபுரத்தில் களைகட்டிய மது விற்பனை..! மதுப்பிரியர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மதுபான விற்பனை பல மடங்கு அதிகரித்தது.

Continues below advertisement
தீபாவளி பண்டிகையானது   தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்  டாஸ்மாக் கடைகள் மூலம் பண்டிக்கை காலங்களில்  முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டுமே 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது.

மேலும் இந்தாண்டு தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 33 கோடிக்கு கூடுதலாக மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில்  தீபாவளி திரு நாளான நேற்று காலை முதலே மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கொருவரை முண்டி அடித்துக்கொண்டு மதுப்பிரியர்கள் மதுபானங்களை அள்ளிச் சென்றதால், சிறிது தள்ளு முள்ளுகளும் ஏற்படுகிறது. மேலும் இதனால் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறிது போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டது. தீபாவளியை மதுபானங்களுடன் குதுகலமாக கொண்டாடுவதற்கு மதுப்பிரியர்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர்.
 

தீபாவளி வியாபாரம் 
 
 
பண்டிகை காலங்களிலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கல்லா கட்டும். இந்நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் டாஸ்மாக்கில் 461.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. நேற்று முன்தினம் மதுரை மண்டலத்தில் 55.78 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 52.36 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 51.52 கோடி ரூபாய்க்கும், திருச்சி மன்றத்தில் 50.66 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48.47 கோடி ரூபாய்க்கும் என மொத்தமாக 464.21 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னையில் மட்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக்கில் 90.16 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola