சென்னை தேனாம் பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்கத்தின் சார்பாக தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற்றது. 


இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேஷம், உத்தர பிரதேஷ்ம், ஒரிசா,  ஆந்திர பிரதேஷ் மற்றும்  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்பனர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் பயிற்சியில் பங்கேற்ற நபர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்த கூட்டத்தில் IDD ஆய்வகங்களுக்கான தேசிய அயோடின் குறைபாடு கோளாறுகள் கட்டுப்பாட்டு திட்ட ஆய்வக கையேடும் வெளியிடப்பட்டது.


இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது ; 


ஒரு குழந்தையின் ஆயிரம் நாள் வளர்ச்சி பெரும் பகுதி இந்த அயோடின் சார்ந்தது இருக்கிறது. இந்த பயிற்சி ஆய்வுகளில் குறித்த விழிப்புணர்வையும் இது பற்றியும் பயிற்சியும் மற்றவர்களுக்கும் அளிக்கும் நான்கு நாட்கள்  பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை 8 மாநிலங்களில் சார்ந்த 22 அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியது. இது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகளை பெங்களூரு, புனே, ஹைதராபாத் செல்ல வேண்டிய நிலை இருந்தது. கொரோனா உருமாற்றம் மற்றும் அதன் வீரியம் குறித்து ஆய்வு செய்ய 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டது.


தேசிய அயோடின் குறைபாடு கோளாறு கட்டுப்பாடு திட்டம் நேஷனல் அயோடியன் டிசாஸ்டர் இந்திய அரசாங்கத்தால் அளவை மதிப்பிடுவதற்கும் போதுமான அளவு அயோடின் கலோரி கலந்த உப்பு விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது தமிழ்நாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


தமிழ்நாட்டில் நோய் தடுப்பு துறைகள் செயல்படுவது பெரிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது அதற்காக தொடர் ஆராய்ச்சிகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழகத்தில் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு திட்டம் பொது சுகாதாரத் துறையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2017ல் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு வீரியமிக்க டெங்குவாக பரவி வருகிறது. இப்படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வீரியமிக்க டெங்கு உருவாகிக் கொண்டிருக்கிற காரணத்தினால் இந்த டெங்கு குறித்த ஆராய்ச்சியில் செய்யப்பட வேண்டும் என்பது அவசியமான ஒன்று. 


இந்தியாவில் முதன் முறையாக கொரோனாவுக்கு என அமைக்கப்பட்ட மரபணு பகுபாய்வு கூடத்தில் அடுத்த கட்ட நகர்வாக, டெங்கு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேதி பொருட்கள் மூலம் டெங்கு வீரியம்  குறித்து ஆய்வு செய்யப்படும். அந்த வகையில் டெங்கு உடைய வீரியம் தன்மை குறித்து ஆராய்வதற்கு மரபணு பகுப்பாய்வு கூடம் அடுத்த இரண்டு நாட்களில் பயன்படுத்த உள்ளது. இந்தியாவில் முதன் முறையாக டெங்கு வீரியம் குறித்த ஆய்வு செய்வது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


சுகாதார ஆய்வாளர்கள் எல்லா வகையான உடலை பதப்படுத்தக்கூடிய எல்லா வகை உப்பும் தமிழக அரசு சார்பாக வெளியிடப்படக்கூடிய உப்பு. அதில் போதுமான அளவு அயோடின் அளவு உள்ளது என்பது ஆராய்ச்சி மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் அமைப்பு சார்பில் விற்பனையாக கூடிய விநியோகப்பட்டு வருகிற ஒப்புக்கொடுத்தான ஆராய்ச்சிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். ஏதாவது குறைபாடுகள் கண்டறிந்து தெரிவிக்கப்பட்டால் நிச்சயமாக கிராமங்கள் பகுதிகள் சுகத்துடன் ஆய்வாளர்கள் நம்மை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.