2000/- அபராதத் தொகை


செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000/- அபராதத் தொகையாக விதிக்கப்படும் நடைமுறை 01.01.2022 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும், பிடிக்கப்படும் கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2000/- அபராதத் தொகையாக செலுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கால்நடை வளர்ப்பவர்களின் வீடு அல்லது கால்நடை பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் ஓட்டிச் செல்லலாம். தவறும் பட்சத்தில், 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமைக் கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும்


சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பொது ஏலத்திட விட நடவடிக்கை


மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும். னவே, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொது வெளியில் திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கால்நடைகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11 (1) உட்பிரிவு (h) (i) & (j)-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் ர.ராகுல் நாத்  தெரிவித்துள்ளார்.


நிம்மதி பெருமூச்சு


 சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் காரணத்தினால் ,போக்குவரத்து நெரிசல் மட்டும் ஏற்படாமல் பல விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதிகளில் மாடுகளை தேடி அலையும் காரணத்தினால், பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அறிவிப்பு மீண்டும் வெளியிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது பொதுமக்களிடையே நிம்மதி ஏற்பட்டுள்ளது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண