Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில்  மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது. 

Continues below advertisement

சென்னையில் நாளைய மின்தடை: 30.06.2025

இந்நிலையில், நாளை(30.06.2025) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (30.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

ஜேஜே நகர் மேற்கு:

வேணுகோபால் தெரு, பள்ளித் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு, பனீர் நகர், முகப்பேர் மேற்குப் பகுதி 

பெசன்ட் நகர் மூன்றாம் அவென்யூ:

1) 4வது பிரதான சாலை 2) 32 முதல் 35 குறுக்குத் தெரு, 3) 3வது அவென்யூ 4) 5வது அவென்யூ 5) ஆல்காட் குப்பம் 6) சுங்க காலனி 1வது தெரு 7) திருவள்ளுவர் நகர் 8) பஜனை கோவில் தெரு 9) ஓரூர் எல்லை அம்மன் கோவில் தெரு

கடப்பேரி ராதாநகர்

ஜிஎஸ்டி சாலை, பார்வதி மருத்துவமனை, கட்லாஞ்சாவடிசிட்லபாக்கம் 1 செயின்ட் மெயின் ரோடு, பழைய ஹஸ்தினாபுரம் சாலை, சந்தான கிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெரு மற்றும் ராமமூர்த்தி தெருவின் ஒரு பகுதி.

மேற்கு தாம்பரம்

கிருஷ்ணா நகர் (1&8 தெரு), வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.