சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 23-ம் தேதி, அதாவது நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தரமணி

வி.ஹெச்.எஸ் மருத்துவமனை, சர்தார் படேல் சாலை, தரமணி, ஸ்ரீராம் நகர் 1 முதல் 4 தெருக்கள், பள்ளிப்பேட்டை, ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மற்றும் காலனி, பள்ளிப்பேட்டை மெயின் ரோடு, பஜனைகோயில் தெரு, யோகி தோட்டம், புதுத்தெரு, கந்தசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

சிறுசேரி

சிறுசேரி சிப்காட் நாவலூர், தாழம்பூர் பகுதி, சிறுசேரி மற்றும் காரணை கிராமம், ஏகாட்டூர், ஓஎம்ஆர் நாவலூர், புதுபாக்கம், எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சந்தியா தோட்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.