பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும்.


அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.  பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பட்சமாக மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


கீழ்காணும் பகுதிகளில் இன்று ( பிப்.18 ) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


தாம்பரம் :


முல்லை நகர் டி.என்.எச்.பி., ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் ரோடு. 


கீழ்கட்டளை :


பஜனை கோவில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர்.


கோடம்பாக்கம் :


வடபழனி பகுதி முழுவதும், சூளைமேடு பகுதி முழுவதும், ரங்கராஜபுரம், ஆற்காடு சாலை முழுவதும்.


அம்பத்தூர் :


மேனாம்பேடு பானு நகர், ஞானமூர்த்தி நகர், கங்கை நகர், சந்திர சேகாபுரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் தொழிற்பேட்டை, தெருக்கு நிலார் சாலை, ரெட்டி தெரு, காவேரி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ கட்டிடம், நடேசன் தெரு.


அரும்பாக்கம் :


ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அம்பேத்கர் தெரு எஸ்ஏஎம் விளையாட்டு கிராமம் காந்தி தெரு.


கொடுங்கையூர் :


ஆண்டாள் நகர், அபிராமி அவென்யூ, தென்றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், விஜயலட்சுமி நகர், கே.எம்.கார்டன், தாமோதன் நகர், வியாசர்பாடி புதுச்சேரி.


செம்பரம்பாக்கம்: 


பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம், பொன்னேரியில் இலுலிப்பட்டு, அழிஞ்சிவாக்கம், ஜெகந்நாதபுரம், பெரியபாளையம் சாலை, பிருந்தாவன் நகர், குதிரைப்பள்ளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.



மின் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு:


தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.


 நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.


2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.