சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், நவம்பர் 23-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement


சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நுங்கம்பாக்கம்


கல்லூரி சாலை 33/11 கி.வி. துணை மின்நிலையத்தில், ஐந்து 33.கி.வி. பழைய பிரேக்கர்கள் அகற்றப்பட்டு, அவசர மற்றும் அத்தியாவசிய பணியாக புதிய பிரேக்கர்கள் நிறுவப்பட உள்ளன. இதற்காக கீழ்கண்ட இடங்களில், இன்று மின் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நாளையும் மின் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • கல்லூரி சாலை

  • நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை

  • மூர்ஸ் சாலை

  • கே.என்.கே சாலை

  • வாலஸ் கார்டன் 1 முதல் 3-வது தெரு

  • ரட்லேண்ட் கேட் 1 முதல் 6-வது தெரு

  • சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-வது தெரு

  • ஆண்டர்சன் சாலை

  • ஹாடோஸ் சாலை 1, 2-வது தெரு

  • நவாப் ஹபிபுல்லா 1, 2-வது அவென்யூ

  • பைக்ராஃப்ட் கார்டன் தெரு



மேற்கண்ட இடங்களில் பணிகள் முடிந்த உடன், மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.