Chennai Power Cut: சென்னை மக்களே.! பிப்ரவரி 21-ம் தேதி சனிக்கிழமை எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Chennai Power Shutdown (21-02-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், பிப்ரவரி 21-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர்
- மனஞ்சேரி
- மேத்தா நகர்
- ஆண்டாங்குப்பம்
- குருவாயூரப்பன் நகர்
- கே.எம்.கே.நகர்
- ஸ்ரீதேவி நகர்
மாத்தூர்
- பெரிய மாத்தூர்
- சின்ன மாத்தூர்
- ஆவின் குவார்ட்டர்ஸ்
- சிபிசிஎல் நகர்
- எம்சிஜி அவென்யூ
- சின்ன சாமி நகர்
- காமராஜ் சாலை
- மஞ்சம்பாக்கம்
- அசிசி நகர்
- அகர்சென் காலேஜ் ரோடு
- மேற்குத் தோட்டம்
- கதகுழி
- திடீர் நகர்
- பாய் நகர்
- சங்கீதா நகர்
- சக்தி அம்மன் நகர்
- திருப்பதி நகர்
- ஜெயராஜ் நகர்
- குமார ராஜன் நகர்
- சுபாஷ் நகர்
- பானு நகர்
- கேவிடி டவுன்ஷிப்
- சந்தோஷ் காலனி
- லட்சுமி நகர்
- அன்னை நகர்
- ஜெயா நகர்
- பயசம்பாக்கம்
- கருமாரி நகர்
- மூகாம்பிகை நகர்
- கொசப்பூர் பகுதி
- தீயப்பாக்கம்
- சென்ட்ரபாக்கம்
- கண்ணம்மாபாளையம்
- வடபெரும்பாக்கம் தொழிற்பேட்டை
- பார்வதிபுரம்
- சீனிவாசா மாடர்ன் டவுன்
- கன்னி அம்மன் நகர்
திருமழிசை
- அன்னைகாட்டுச்சேரி
- காவல்ச்சேரி
- சோரஞ்சேரி
- சித்காடு
- திருமணம்
- அமுதூர்மேடு
- வயலாநல்லூர்
- திருக்கோயில்பத்து
ஐயப்பன்தாங்கல்
- பிரின்ஸ் ஹைலேண்ட் அபார்ட்மென்ட்ஸ்
- துலிவ் தக்ஷின் அபார்ட்மென்ட்ஸ்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.























