சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(14.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 14-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன்தாங்கல்
- காட்டுப்பாக்கம்
- செந்தூர்புரம்
- ஸ்ரீ நகர்
- விஜயலட்சுமி நகர்
- ஜானகியம்மாள் நகர்
- சொர்ணபுரி நகர்
- அடிசன் நகர்
- சீனிவாசபுரம்
- கிருஷ்ணா நகர்
- மாருதி நகர்
- நூம்பல்
- மவுண்ட் பூந்தமல்லி சாலை
- ஆயில் மில் சாலை
- அட்கோ நகர்
- சுப்பையா நகர்
- கிருஷ்ணவேணி அம்மாள் நகர்
- வசந்தம் நகர்
- சிவராமன் கிருஷ்ணா நகர்
- விஜயலட்சுமி அவென்யூ
- ஸ்டெப் ஸ்டோன்
- போஹன்வில்லா
- வசந்தபுரம்
- முத்து நகர்
- பொன்முத்து நகர்
- பரணிபுதூர்
தாம்பரம்
- சிட்லபாக்கம்
- பாம்பன்சாமிகள் சாலை
- சி.வி. ராமன் தெரு
- லெனின் தெரு
- சுதா அவென்யூ மற்றும் 2-வது தெரு
- வள்ளியம்மை தெரு
- கலைவாணர் தெரு
- யு.வி. சுவாமிநாதன் தெரு
- வியாசர் தெரு
- விஸ்வாமித்திரர் தெரு
- சரஸ்வதி நகர்
- வீரவஞ்சி தெரு
- குரு ஹோம்ஸ்
- பரத் அவென்யூ
- கல்யாணசுந்தரம் தெரு
- சத்ரபதி சிவாஜி தெரு
காரம்பாக்கம்
- சமயபுரம் மெயின் ரோடு
- 1 முதல் 9-வது தெருக்கள்
- ஸ்ரீ ராம் நகர்
- காந்தி நகர்
- தேவி நகர்
- அருணாச்சலம் நகர் கார்டன்
- கோலவிழி அடுக்குமாடி குடியிருப்பு
அடையார்
- கால்வாய்க் கரைச் சாலை
அம்பத்தூர் தொழிற்பேட்டை
- தெற்குப் பகுதி
- 1-வது மற்றும் 2-வது பிரதான சாலை
- முகப்பேர் தொழிற்பேட்டை சதர்ன் அவென்யூ
- ரெட்டி தெரு
- கவரை தெரு
- முனுசாமி தெரு
- SSOA வளாகம்
- கல்யாணி எஸ்டேட்
- நடேசன் நகர்
போரூர்
- நாசரத்பேட்டை
- பனிமலர் பொறியியல் கல்லுாரி
- வரதராஜபுரம்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
