சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 13-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர்

சோழபுரம் மெயின் ரோடு, விவேக் நகர், நேரு நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, மருத்துவமனை ரோடு, அர்ஜூனா நகர், எம்டிஎச் சாலை.

Continues below advertisement

அலமதி

வன்னியன்சத்திரம், காஞ்சி காமகோடி நகர், ராமாபுரம், கல்லிக்குப்பம், கன்னிகாபுரம், புதுக்குப்பம்.

பல்லாவரம் மேற்கு

சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம், பான்ட்ஸ் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி சாலை சிக்னல்.

திருமுல்லைவாயல்

பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர், முல்லை நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.