ரெட் சிக்னல் கொடுத்த அதிகரிகள்! போரூர்-வடபழனி மெட்ரோவுக்கு வந்த சிக்கல்.. CMRL விளக்கம்
Porur Vadapalani Metro: போரூர் மற்றும் வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்போது அனுமதி தர இயலாது என்று ரயில்வே பாதுக்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போரூர் மற்றும் வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்போது அனுமதி தர இயலாது என்று ரயில்வே பாதுக்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்:
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இம்மாதத்தில் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. ஆரம்பத்தில் போரூர் வரை மட்டுமே ரயில்களை இயக்க மட்டுமே மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
வடபழனி வரை இயக்க திட்டம்:
தற்போது பயன்பாட்டுள்ள முதல் வழித்தடத்தில் இணைக்கும் பொருட்டு வடபழனி வரை பாதையை திறக்க மெட்ரோ அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த பாதை திறக்கப்பட்டால் போரூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்த்தனர்.
அதிகாரிகள் ஆய்வு:
கடந்த வாரம் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வடபழனி போரூர் பாதையில் இரண்டு காரணங்களால் இந்தப் பகுதி தற்போது பயணிகள் இயக்கத்திற்குத் தயாராக இல்லை என்றுட் தெரிவித்தார். இருப்பினும், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பாதையில் இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.
அதிகாரிகள் சொன்னது என்ன?
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அதிகாரிகளின் தகவல்படி, "CRS இன் அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றுகிறோம், மேலும் அவர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் குறித்த பணிகளை முடிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். அது முடிந்ததும், இணக்க அறிக்கையை நாங்கள் சமர்ப்பிப்போம், மேலும் பிப்ரவரி 25 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்று ஆய்வு மற்றும் வேக சோதனைகளுக்குப் பிறகு இந்த வழித்தடத்திற்கான அனுமதியைப் பெற முடியும்," என்று ஒரு அதிகாரி கூறினார்.
என்ன பிரச்னைகள் உள்ளன?
ஆய்வின் போது எழுப்பப்பட்ட ஒரு விஷயம், "ஆலப்பாக்கத்தில் ரயில் நடுவழியில் நின்றால், வடபழனி வரை பயணிகள் எப்படி தண்டவாளத்தில் நடக்க முடியும்" என்பதுதான் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆழ்வார்திருநகர் மற்றும் வளசரவாக்கத்தில் அவசரகால வெளியேற்ற படிக்கட்டுகள் கட்டும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ,மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
"ஆலப்பாக்கம் முதல் சாலிகிராமம் வரையிலான நிலையங்களில், நடைமேடையில் இருந்து ரயில் பாதைக்கு பயணிகளுக்கு அவசர படிக்கட்டுகள் இருந்தன. ஆனால் ரயில் பாதையிலிருந்து தெரு வரை, அவசரநிலை ஏற்பட்டால் பணிநிலைய படிக்கட்டுகளைப் பயன்படுத்த திட்டமிட்டோம். ரயில் நிறுத்தப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும், மேலும் பயணிகள் அவசர நடைபாதையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும், அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க நாங்கள் செயல்படுகிறோம், மேலும் இந்த இரண்டு நிலையங்களிலும் பிரத்யேக பயணிகள் நடைபாதை அமைக்கப்படும். இந்தப் பாதையில் மீதமுள்ள அனைத்து நிலையங்களிலும் பணிகள் முடிந்ததும் இந்த வசதி இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
உறுதி அளித்த அதிகாரிகள்:
இரட்டை அடுக்கு வழித்தடத்தில் டெக் ஸ்லாப் அமைக்கும் பணியை முடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "ரயில் இயக்க காலத்தில் ஆலப்பாக்கம் முதல் சாலிகிராமம் வரை கான்கிரீட் அமைக்கும் பணிகளை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். இரவில் மட்டுமே, இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வாரம் CRS-க்கு இது தொடர்பாக ஒரு பாதுகாப்பு கையேட்டை வழங்குவோம். 5வது வழித்தடத்திற்கான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டுமானத் திட்டத்திற்காக ஒரு பாதுகாப்பு தணிக்கையாளரையும் நாங்கள் ஈடுபடுத்துகிறோம்," என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
























