மேலும் அறிய

Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Chennai Bengaluru Bullet Train: "சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம், புதிய டெண்டருடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது."

Chennai Bengaluru High Speed Rail: தென்னிந்தியாவின் மிக முக்கியமான இரு பெரும் பொருளாதார நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையே அதிவேக புல்லட் ரயில் (High-Speed Rail) திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் புதிய வேகத்தைப் பெற்றுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்தும் தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL), சென்னை - பெங்களூரு இடையேயான வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) புதுப்பிப்பதற்கும், புதிய பொறியியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் புதிய டெண்டர்களைக் கோரியுள்ளது. 

இதன் மூலம் இந்த மெகா திட்டம் தற்போது அடுத்த கட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை - பெங்களூரு - மைசூரு இடையேயான 449.5 கி.மீ அதிவேக வழித்தடத்திற்கான திட்ட அறிக்கையை NHSRCL சமர்ப்பித்திருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் 306.2 கி.மீ நீளமுள்ள சென்னை - பெங்களூரு வழித்தடப் பணிகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய திட்ட மாற்றத்திலும் தொடரும் பரந்தூர் ரயில் நிலையம் : Chennai Bengaluru bullet train speed

இத்திட்டத்தின் தற்போதைய டெண்டர் ஆவணங்களின்படி, தமிழக அரசால் பரந்தூர் பசுமை விண்பாதை (Greenfield Airport) விமான நிலையத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படும் சூழல் நிலவினாலும், புல்லட் ரயில் திட்டத்தில் பரந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரயில் பாதை தமிழகத்தின் சென்னை, பூந்தமல்லி ஆகிய பகுதிகள் வழியாகவும்; ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மற்றும் பங்காருபாளையம் வழியாகவும்; கர்நாடகாவின் கோலார், மாலூர், ஒயிட்பீல்ட் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் அமையவிருக்கும் புல்லட் ரயில் நிலையம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் தரைக்கடியில் (Underground Station) அமைக்கப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் நேரடியாக இணைக்கப்படவுள்ளது. பூந்தமல்லியில் அமையவுள்ள ரயில் நிலையம் தேசிய நெடுஞ்சாலை-4-ன் வடக்கு பகுதியில் தூண்களின் மீது (Elevated) உயர்த்தப்பட்ட நிலையமாக அமையவுள்ளது. இது சென்னை வெளிவட்ட சாலை, மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் சென்னை விமான நிலையத்துடன் இணைப்பை வழங்கும். அதேபோல், ரயில் நிலையம் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை (Expressway) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-48 ஆகியவற்றுடன் இணைப்புச் சாலைகள் வழியாக இணைக்கப்படும் வகையில் உயர்த்தப்பட்ட நிலையமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பொறியியல் ஆய்வுகளும் தொழில்நுட்ப சவால்களும்

தற்போது கோரப்பட்டுள்ள புதிய டெண்டரின்படி, தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனை நிறுவனம் ஏற்கனவே உள்ள திட்ட அறிக்கையை மறுமதிப்பீடு செய்து, புதிய வழித்தட மாற்றங்கள், ஹைட்ராலஜி (நீர்நிலை) ஆய்வுகள், ட்ரோன் மற்றும் லிடார் (LiDAR) கணக்கெடுப்புகள், சுரங்கப்பாதை ஆய்வுகள் மற்றும் மண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்து இறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகப் பகுதியில் இந்த அதிவேக ரயில் பாதை கடந்து செல்லும் கூவம், காவேரிப்பாக்கம்/கொசஸ்தலையார், பொன்னை/பகுதா மற்றும் பாலாறு ஆகிய முக்கிய நதிகளின் குறுக்கே பாலங்கள் கட்டுவதற்காக விரிவான ஹைட்ராலஜி ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. அதிகபட்ச வெள்ள அபாயக் அளவுகள் மற்றும் நதிப் படுகைகளின் தன்மைகளை ஆராய்ந்த பின்னரே பாலங்களின் இறுதி வடிவமைப்பு அங்கீகரிக்கப்படும்.

மேலும், சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மற்றும் ஐ.சி.எஃப் (ICF) இணைப்புப் பாதைகளின் மேல் அமையவுள்ள ரயில் மேம்பாலங்களுக்கான பொதுவான ஏற்பாட்டு வரைபடங்களும் (GAD) தயாரிக்கப்படவுள்ளன. இந்த தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வுகள் அனைத்தையும் டெண்டர் விடப்பட்ட 150 நாட்களுக்குள் (ஐந்து மாதங்கள்) முடித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத் தரவு சேகரிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் திட்டம்

இத்திட்டத்தின் துல்லியமான செயல்பாட்டிற்காக, பொதுப்பணித்துறை (PWD), சென்னை குடிநீர் வாரியம் (CMWSSB), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து நிலத்தடி நீர் விநியோகம், கழிவுநீர் உள்கட்டமைப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பெருநகர திட்டங்கள் (Master Plans) குறித்த முழுமையான தரவுகளைப் பெற ஆலோசனை நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த தரவுகளின் அடிப்படையில் புல்லட் ரயில் வழித்தடத்தில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் திட்டங்களையும் (Land Acquisition Plans) உடனுக்குடன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் சட்ட சிக்கல்கள் மற்றும் காலதாமதங்கள் தவிர்க்கப்படும்.

பயண நேரக் குறைப்பும் தென்னிந்திய பொருளாதார வளர்ச்சியும்

மத்திய அரசின் 2026-27 மத்திய பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கிய அதிவேக ரயில் திட்டங்களில் ஒன்றாக சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் திகழ்கிறது. தற்போதைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாகும் நிலையில், இந்த புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும்போது சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறையும். அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ வேகத்திலும், இயக்க வேகத்தில் மணிக்கு 320 கி.மீ வேகத்திலும் இயங்கும் வகையில் இந்த ஸ்டாண்டர்ட் கேஜ் (Standard Gauge) ரயில் பாதை வடிவமைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை - அகமதாபாத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் படிப்படியாகத் திறக்கப்படவுள்ள நிலையில், தென்னிந்தியாவின் இந்த சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு பெரும் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரங்களை மிக நெருக்கமாக இணைத்து, இப்பாதியிலுள்ள ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க! - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget