சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் 


சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் (Chennai Beach to Chengalpattu Train) சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். 


பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். அதே போன்று ரயில் கட்டணமும் மிகக் குறைவு என்பதால் வேலைக்கு செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்வது கட்டணம் குறைவு என்பதால், தினமும் வேலைக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை விரும்புவார்கள்.


பராமரிப்பு பணிகள் 


பொதுவாக மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது ரயில்கள் தாமதமாகுவதும், அல்லது ரயில்கள் பாதி வழியில்லையோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் முக்கிய ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது


ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் அதற்கு மாற்றாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 நிமிட இடைவெளியில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று 20 நிமிட இடைவெளியில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


சிறப்பு மின்சார ரயில்கள்


இதேபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில்களும் அதே போன்று செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படவுள்ளது. இதுபோக ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செல்லும் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்ததை போல் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.