<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chengalpattu</title><atom:link href="https://tamil.abplive.com/chengalpattu/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 07:35:37 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[செங்கல்பட்டு: விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு! நீதிபதி சசிகலா திடீர் பணியிட மாற்றம்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/judge-who-was-hearing-the-divorce-case-filed-by-tvk-leader-vijay-s-wife-sangeeta-has-been-transferred-tnn-257992</link><comments>https://tamil.abplive.com/news/politics/judge-who-was-hearing-the-divorce-case-filed-by-tvk-leader-vijay-s-wife-sangeeta-has-been-transferred-tnn-257992#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:38:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/judge-who-was-hearing-the-divorce-case-filed-by-tvk-leader-vijay-s-wife-sangeeta-has-been-transferred-tnn-257992</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு தற்போது தமிழக அரசியலிலும், திரைத்துறையிலும் பேசுபொருளாகியுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா, தற்போது அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கின் பின்னணி மற்றும் தற்போதைய நிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நிலுவையில் இருந்து வந்தது. கடந்த 20-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, விசாரணையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே மாதத்தில் அதிரடி மாற்றம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீதிபதி சசிகலா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மாற்றப்பட்டிருப்பது நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் பணியிட மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வமான அல்லது முழுமையான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மீண்டும் பொறுப்பேற்கும் நீதிபதி சுஜாதா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீதிபதி சசிகலாவின் மாற்றத்தைத் தொடர்ந்து, காலியான அந்த இடத்திற்குப் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சுஜாதா, மீண்டும் அதே இடத்திற்கு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் இந்த உயர்மட்ட விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/b5580593b3365ac1780b2cefb71a712417775400936121319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உஷார் மக்களே! நேபாள பெண்ணை வேலைக்கு வைத்த தம்பதிக்கு நேர்ந்த கதி - 51 சவரன் அவுட்!]]></title><link>https://tamil.abplive.com/crime/police-are-searching-for-a-nepalese-woman-who-drugged-a-couple-near-kilambakkam-and-stole-51-sovereigns-of-jewelry-tnn-257820</link><comments>https://tamil.abplive.com/crime/police-are-searching-for-a-nepalese-woman-who-drugged-a-couple-near-kilambakkam-and-stole-51-sovereigns-of-jewelry-tnn-257820#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 09:33:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/police-are-searching-for-a-nepalese-woman-who-drugged-a-couple-near-kilambakkam-and-stole-51-sovereigns-of-jewelry-tnn-257820</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே, ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில், தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து 51 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தின் பின்னணி என்ன ?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் அடுத்த கொளப்பாக்கம், டி.வி.எஸ். கிரீன் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (61). மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடன், இவரது மனைவி உஷாராணி (57) வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களுக்கு வீட்டு வேலை செய்வதற்கு உதவியாக, கடந்த வாரம் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டமிட்டு நடந்த சதி செயல்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று முன்தினம் இரவு, ராஜேந்திரன் மற்றும் உஷாராணி தம்பதியினர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இரவு உணவு முடித்துவிட்டு உறங்கச் செல்லும் வேளையில், அந்த வேலைக்காரப் பெண் அவர்களுக்குப் பால் கொடுத்துள்ளார். அந்தப் பாலை அருந்திய சிறிது நேரத்திலேயே இருவரும் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மறுநாள் காலை தம்பதியினர் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, உஷாராணி அணிந்திருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், வேலைக்காரப் பெண் வீட்டில் இல்லாததும், வீட்டின் வெளிக்கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. உடனடியாக இது குறித்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் அருந்திய பாலில் அந்தப் பெண் மயக்க மருந்து கலந்ததும், அவர்கள் மயங்கிய பிறகு 51 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடியதும் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த நேபாளப் பெண்ணைப் பிடிப்பதற்காகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/ba37bf92d5d55bcb22e48c62ba518fb617774353675251319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா: பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தேரோட்டம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chithirai-festival-procession-of-achirubakkam-adeeswarar-temple-in-chengalpattu-district-was-held-with-great-enthusiasm-tnn-257772</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chithirai-festival-procession-of-achirubakkam-adeeswarar-temple-in-chengalpattu-district-was-held-with-great-enthusiasm-tnn-257772#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 16:45:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chithirai-festival-procession-of-achirubakkam-adeeswarar-temple-in-chengalpattu-district-was-held-with-great-enthusiasm-tnn-257772</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது அச்சிறுபாக்கம் அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி கணபதி பூஜையுடன் இனிதே தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொடியேற்றத்துடன் தொடங்கிய வசந்த விழா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவிழாவின் முதல் நிகழ்வாக ஏப்ரல் 21-ஆம் தேதி வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் மூன்றாம் நாளன்று 'அதிகார நந்தி' சேவையில் ஆட்சீஸ்வரரும் இளங்கிளி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து சிவனடியார்களின் பெருமையைப் போற்றும் வகையில் 63 நாயன்மார்களின் வீதி உலா மிகச் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருக்கல்யாண வைபவமும் தேரோட்டமும்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக, உலக நன்மையை முன்னிட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு மாங்கல்ய பாக்கியம் வேண்டி வழிபட்டனர். விழாவின் உச்சகட்ட நிகழ்வான ஏழாம் நாள் தேரோட்டம் இன்று அதிகாலை முதலே களைகட்டியது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சீஸ்வரர் மற்றும் இளங்கிளி அம்மனுக்குத் தைலம், பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்த பக்தர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் ஆட்சீஸ்வரரும், சிறிய தேரில் இளங்கிளி அம்மனும் எழுந்தருளினர். பின்னர், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் &quot;தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி&quot; மற்றும் &quot;அரோகரா&quot; என விண்ணதிர முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிவ வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அச்சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பொதுமக்கள், வீடுகள் தோறும் தேருக்குத் தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செம்மையாகச் செய்திருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/3084fcfea0f227e59dc82846d214fa4e17773748462541319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[செங்கல்பட்டில் பரபரப்பு: தேர்தல் நேரத்தில் வீடு இடிப்பு! அதிமுக ஒன்றிய செயலாளர் திடீர் தர்ணா!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-aiadmk-executives-protested-demanding-action-against-those-who-demolished-and-defaced-houses-tnn-257750</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-aiadmk-executives-protested-demanding-action-against-those-who-demolished-and-defaced-houses-tnn-257750#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 14:34:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-aiadmk-executives-protested-demanding-action-against-those-who-demolished-and-defaced-houses-tnn-257750</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் நிலத் தகராறு காரணமாக வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமாருக்குச் சொந்தமான 40 சென்ட் நிலம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தநிலையில், கடந்த 23-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்றிருந்தனர். அங்குள்ள வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்த மூன்று குடும்பத்தினரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சென்றிருந்த சமயம் பார்த்து, எதிர் தரப்பினர் ஜே.சி.பி., இயந்திரத்தைக் கொண்டு வீடுகளைத் தரைமட்டமாக இடித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையின் மெத்தனப்போக்கு: பாதிக்கப்பட்டவர்களின் குமுறல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், புகார் அளித்து ஆறு நாட்கள் ஆகியும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு நீதி வழங்க காவல்துறை தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. காவல்துறையினரின் இந்த மெத்தனப்போக்கு பாதிக்கப்பட்டவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை: அதிமுகவினர் தர்ணா போராட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் செங்கல்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நீதி கோரி முழக்கம்: நிலவும் பரபரப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டப்பூர்வமாக நீதிமன்றம் மூலம் நிலத்தை வாங்கிய பிறகும், அத்துமீறி வீடுகள் இடிக்கப்பட்டிருப்பது சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் துறையின் தோல்வி எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். வீடுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக தெரிவித்ததால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/e7c51d9d26c1739e465db958d4181baa17773668640621319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Kilambakkam Railway Station: பேருந்தில் இறங்கி அப்படியே ரயிலுக்கு போகலாம்! கிளாம்பாக்கம் பயணிகளின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kilambakkam-skywalk-with-450-metre-with-79-crores-kilambakkam-railway-station-to-open-in-may-2026-tnn-257710</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kilambakkam-skywalk-with-450-metre-with-79-crores-kilambakkam-railway-station-to-open-in-may-2026-tnn-257710#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 10:38:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kilambakkam-skywalk-with-450-metre-with-79-crores-kilambakkam-railway-station-to-open-in-may-2026-tnn-257710</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Kilambakkam Bridge:&lt;/strong&gt; &quot;தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும், ஸ்கை வாக் பணிகள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Stand&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில், புதிய பேருந்து நிலையம் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்திருப்பதால், பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக கிளாம்பாக்கம் ஸ்கைவாக் அமைப்பது, தொடர்பான பிரச்சனை இழுப்பறியாகவே இருந்து வருகிறது. சில மாதங்களில் முடிய வேண்டிய பணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் ரயில் நிலையம் Kilambakkam Railway Station&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும் என்றால், பேருந்து மூலமாகவோ அல்லது சொந்த வாகனத்திலோ வரவேண்டிய சூழல் இருக்கிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்காக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் ஆகாய நடைமேடை&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் ரயில் நிறுத்த நிலையத்தையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் ₹79 கோடி செலவில் அமைக்கப்படும் 450 மீட்டர் நீள ஆகாய நடைபாதை (Pedestrian skywalk) அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்தது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்ட பிறகும், பணிகள் தொடங்குவது பிரச்சனைகள் இருந்தன. தனியாரிடமிருந்து இந்த திட்டத்திற்காக ஒரு ஏக்கர் நிலம் வரை கையகப்படுத்த வேண்டிய சூழலில் இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பம்சங்கள் என்ன? Key Features of Kilambakkam SkyWalk&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில், இருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதி அடையும் வகையில், 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திறப்பு விழா எப்போது? Kilambakkam Skywalk Opening Date&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையிலான சாலைக்கு மேல் பகுதியில் கிளாம்பாக்கம் ஸ்கைவாக்கம் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதேபோன்று 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது. செங்கல்பட்டு முதல் தாம்பரம் இடையிலான சாலைக்கு மேல் பகுதியில் மட்டும், நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாலத்தின் ஒரு பகுதி தயாராக உள்ளது. ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே பாலத்தின் அடுத்த பகுதியை நிலைநிறுத்த போக்குவரத்து காவல்துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. மே 4-ம் தேதிக்குப் பிறகு இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணி பெரும்பாலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும்.வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், நடைமேம்பாலம் மற்றும் நடைமேடைகளுக்கான படிக்கட்டுகள் முழுமையாக அமைக்கப்பட்ட பின்னரே இரயில்கள் அங்கு நிறுத்தப்படும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, சரியான போக்குவரத்து இணைப்பு (Multi-modal integration) இல்லாதது பயணிகளுக்குப் பெரும் சிரமமாக இருந்தது. இந்த ஸ்கைவாக் மற்றும் புதிய இரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/31/f4ea750d5027e1ed28cce5159b1b59c91706675457200113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[24 முறை ஃபைன்.. அடங்காத வாலிபர்! காதலியுடன் செய்த முகம் சுளிக்க வைக்கும் காரியம் - வைரல் வீடியோ!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/a-romantic-couple-embarked-on-an-adventurous-journey-on-the-national-highway-in-chengalpattu-district-leaving-the-public-in-awe-tnn-257673</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/a-romantic-couple-embarked-on-an-adventurous-journey-on-the-national-highway-in-chengalpattu-district-leaving-the-public-in-awe-tnn-257673#respond</comments><pubDate>Mon, 27 Apr 2026 20:47:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/a-romantic-couple-embarked-on-an-adventurous-journey-on-the-national-highway-in-chengalpattu-district-leaving-the-public-in-awe-tnn-257673</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போக்குவரத்து விதிமுறைகளைத் துச்சமாக மதித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேசிய நெடுஞ்சாலையில் அநாகரீக பயணம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் வாக்குப்பதிவை முடித்துவிட்டு தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி நேற்று இரவு ஏராளமானோர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுராந்தகம் சுங்கச்சாவடி அருகே காரில் வந்து கொண்டிருந்த பயணிகள், தங்களுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அந்த வாகனத்தில் ஒரு காதல் ஜோடி, போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக மீறி, பெண்ணை பெட்ரோல் டேங்க் மீது (முன்புறம்) அமர வைத்து, கட்டி அணைத்தபடி ஆபத்தான முறையில் பயணித்தனர். இரவு நேரத்தில் பொதுமக்களும், மற்ற வாகன ஓட்டிகளும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த இந்தச் செயலை, பின்னால் வந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;24 முறை அபராதம்: கண்டுகொள்ளாத வாகன ஓட்டி ?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 24 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இத்தனை முறை அபராதம் விதிக்கப்பட்டும், சட்டத்தை மதிக்காமல் மீண்டும் அதே போன்ற அநாகரீகமான மற்றும் ஆபத்தான செயலில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார் என்பது வாகன ஓட்டிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையினருக்கு கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவெளியில் கண்ணியமற்ற முறையிலும், மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையிலும் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெறும் அபராதத்தோடு நிறுத்தாமல், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் அந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இருவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/27/3c3c35d96313d6c19638780c2808cbef17773030403061319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேர்தல் முடிந்து மக்கள் வருவார்கள் என்று தெரியாதா? ஸ்தம்பித்த நெடுஞ்சாலை! எங்கே போலீஸ்?]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/heavy-traffic-jam-in-the-sinhaperumal-temple-area-on-the-chennai-trichy-national-highway-tnn-257599</link><comments>https://tamil.abplive.com/news/chennai/heavy-traffic-jam-in-the-sinhaperumal-temple-area-on-the-chennai-trichy-national-highway-tnn-257599#respond</comments><pubDate>Mon, 27 Apr 2026 08:02:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/heavy-traffic-jam-in-the-sinhaperumal-temple-area-on-the-chennai-trichy-national-highway-tnn-257599</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் மக்களின் கூட்டத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் முடிந்து திரும்பும் மக்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காகச் சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்தனர். வார இறுதி நாட்களுடன் தேர்தல் விடுமுறையும் இணைந்ததால், தென் மாவட்டங்களுக்குச் சென்ற மக்கள் அனைவரும் நேற்று மாலை முதல் மீண்டும் சென்னை நோக்கித் திரும்பத் தொடங்கினர். இன்று திங்கட்கிழமை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் என்பதால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் படையெடுத்தன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;3 கிலோமீட்டர்... 2 மணிநேர காத்திருப்பு!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று மாலை முதலே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன வரத்து பல மடங்கு அதிகரித்தது. அரசு விரைவுப் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், சிங்கப்பெருமாள் கோவில் சந்திப்பில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பால் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்தவர்களும், முதியவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆம்புலன்ஸ் வாகனங்கள் முடக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நெரிசலின் உச்சகட்டமாக, உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சைரன் ஒலியுடன் முன்னேறிச் செல்ல முடியாமல் கார்ப்பரேட் வாகனங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டன. &quot;நிமிடங்கள் மிக முக்கியம்&quot; என்ற நிலையில், ஆம்புலன்ஸ்கள் வழி கிடைக்காமல் நின்றது அங்கிருந்தவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திணறும் காவல்துறை - திட்டமிடல் குறைபாடா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து வாகனங்கள் வந்துகொண்டே இருப்பதால், செங்கல்பட்டு மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் பணியிலிருந்த போக்குவரத்துப் போலீசார் கூட்டத்தைச் சீர்செய்ய முடியாமல் திணறினர். &quot;தேர்தல் முடிந்து மக்கள் திரும்புவார்கள் என்பது தெரிந்தும், போதிய போக்குவரத்துத் திட்டமிடல் இல்லாததே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம். கூடுதல் போலீசாரை முக்கிய சந்திப்புகளில் நியமித்திருக்க வேண்டும்,&quot; என வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/27/f04b4ed8d4122427f28011497afefa4b17772570690671319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!]]></title><link>https://tamil.abplive.com/crime/madhuranthakam-family-drowns-in-well-three-relatives-die-saving-children-tnn-255437</link><comments>https://tamil.abplive.com/crime/madhuranthakam-family-drowns-in-well-three-relatives-die-saving-children-tnn-255437#respond</comments><pubDate>Sun, 5 Apr 2026 07:42:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/madhuranthakam-family-drowns-in-well-three-relatives-die-saving-children-tnn-255437</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தில், துணி துவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பாட்டி மற்றும் அவரது பேரன், பேத்தி என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தின் பின்னணி:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த ருத்திரகுமார் என்பவரின் மனைவி சாந்தி (65). இவர், கோடை விடுமுறை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது பேரன் மற்றும் பேத்தியுடன் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றிற்கு துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். சாந்தியுடன் அவரது பேரன், மதுராந்தகத்தில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வந்த தஷ்வந்த் (13) மற்றும் 6-ஆம் வகுப்பு பயின்று வந்த பேத்தி கௌசிகா (11) ஆகியோரும் சென்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நடந்தது என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிணற்றின் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தஷ்வந்த் அல்லது சிறுமி கௌசிகா ஆகியோரில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில், தனது கண் முன்னே தத்தளித்த பேரக்குழந்தைகளை எவ்வாறாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் சாந்தியும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் மூவருமே ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மீட்புப் பணிகள்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மதுராந்தகம் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சோகத்தில் கிராமம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், அதுவும் பள்ளிச் சிறுவர்கள் பாட்டியுடன் உயிரிழந்த சம்பவம் கீழ் சிலாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈடு செய்ய முடியாத இழப்பாகவும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/05/7ff830c11f1f79fc84bd32267b7eca1a17753551217521319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/anbumani-ramadoss-begins-election-campaign-thirupporur-kandasamy-murugar-temple-tamil-nadu-tnn-255344</link><comments>https://tamil.abplive.com/news/politics/anbumani-ramadoss-begins-election-campaign-thirupporur-kandasamy-murugar-temple-tamil-nadu-tnn-255344#respond</comments><pubDate>Sat, 4 Apr 2026 05:54:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/anbumani-ramadoss-begins-election-campaign-thirupporur-kandasamy-murugar-temple-tamil-nadu-tnn-255344</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு திருப்போரூர் கந்தசாமி முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என முழங்கினார். திருப்போரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், நிர்வாகத் திறனற்ற திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் முன்னெடுத்த 100 நாள் நடைபயணம் திருப்போரூரில் தொடங்கியதாலேயே வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார். அதே சென்டிமென்ட் அடிப்படையில் தற்போதும் இங்கிருந்தே பிரச்சாரத்தைத் தொடங்குவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 62,000 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 27,000 போக்சோ வழக்குகள் அடங்கும் என்றும் சுட்டிக்காட்டினார். நாளொன்றுக்கு சராசரியாக 35 குற்றங்கள் நடப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மூன்று மகள்களைப் பெற்ற தந்தை என்ற முறையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இந்த அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். &lt;a title=&quot;முதலமைச்சர் ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/cm-mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;முதலமைச்சர் ஸ்டாலின்&lt;/a&gt; அவர்கள் நாட்டில் நடப்பவற்றை அறியாமல் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும், அவரைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பட்டியலின மக்கள் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்தார். வேங்கைவயல் முதல் கள்ளக்குறிச்சி வரை பல்வேறு சம்பவங்கள் நடந்தும் திருமாவளவனுக்கு திமுக வெறும் 5 முதல் 8 இடங்களை மட்டுமே ஒதுக்குவதாகவும், அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்கள் கடைசி வரிசையிலேயே அமர வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். கலைஞர் மறைவுடன் திமுகவில் சமூக நீதி முடிந்துவிட்டது என்றும், தான் தான் இந்தியாவிலேயே பட்டியலின மக்களுக்காக இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவன் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மீனவ சமுதாயத்திற்கு MBC பிரிவில் உள் ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என்ற வாக்குறுதியை அவர் அளித்தார். அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றிவிட்டதாகக் கூறிய அவர், தமிழகத்தில் எந்தப் பிரச்சனை நடந்தாலும் பாஜக மீது பழியைப் போட்டு திமுக தப்பிக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார். ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களின் கனவான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசிய அவர், திமுக தலித் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதாகச் சாடினார். கடந்த ஐந்தாண்டுகளை இழந்துவிட்ட தமிழக மக்கள், மீண்டும் திமுகவிற்கு வாய்ப்பு வழங்கி ஏமாற வேண்டாம் என அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/03/094b38019e1e5d6f013f278ec14e8eb817752369908291319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[E Rajasekar Profile: செய்யூர் அதிமுக வேட்பாளர் ராஜசேகர்! கிளைச் செயலாளர் To வேட்பாளர்! 49 வருட அரசியல் பயணம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/who-is-perumbakkam-e-rajasekar-candidate-admk-tn-election-2026-know-age-biography-education-details-tnn-254636</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/who-is-perumbakkam-e-rajasekar-candidate-admk-tn-election-2026-know-age-biography-education-details-tnn-254636#respond</comments><pubDate>Fri, 27 Mar 2026 15:40:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/who-is-perumbakkam-e-rajasekar-candidate-admk-tn-election-2026-know-age-biography-education-details-tnn-254636</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக பெரும்பாக்கம் இ. ராஜசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசியல் பின்னணி மற்றும் கட்சிப் பதவிகள்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிமுகவில் சுமார் 49 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வரும் பெரும்பாக்கம் ராஜசேகர், தற்போது அதிமுக புரட்சித்தலைவி பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராகவும், பரங்கிமலை தெற்கு ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் கிளைச் செயலாளராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர், மாவட்ட பிரதிநிதி, மாவட்ட மாணவரணிச் செயலாளர், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிமுகவின் முக்கிய முகமாக இவர் திகழ்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உள்ளாட்சித் தேர்தலில் செல்வாக்கு:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெரும்பாக்கம் பகுதியில் இவரது குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் நீடித்து வருகின்றனர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாக்கம் ஊராட்சியின் 12 வார்டுகளையும் இவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர். ஆளுங்கட்சித் தரப்பில் கடும் போட்டி நிலவிய போதிலும், இவரது ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் களம் மற்றும் எதிர்பார்ப்பு:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ராஜசேகர், 3,64,571 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அந்தத் தேர்தலின் போதே செய்யூர் சட்டமன்றத் தொகுதி மக்களிடையே இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்யூர் தொகுதியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதால், இந்த முறை இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். அதன்படியே வேட்பாளர் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ராஜசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/27/afab6f099ae02045b348fbd54e22895617746060324441319_original.jpg" width="220"/></item></channel></rss>