<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chengalpattu</title><atom:link href="https://tamil.abplive.com/chengalpattu/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 06:37:54 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களே கவனம்! இன்று வானிலை எப்படி இருக்கும் முக்கிய தகவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-today-september-16-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-tnn-274656</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-today-september-16-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-tnn-274656#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 07:07:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-today-september-16-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-tnn-274656</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வானிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ மாவட்ட வாரியான முன்னறிவிப்பில் செப்டம்பர் 16ஆம் தேதி லேசான மழை பெய்யும் வாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பரவலான கனமழையை எதிர்பார்க்காமல், ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சூழலை எதிர்பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் பகுதியில் இன்று மேகங்கள் மற்றும் வெயில் மாறி மாறி காணப்படலாம். தற்போதைய உள்ளூர் முன்னறிவிப்பின்படி, சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது. பகல் நேரத்தில் வெப்பநிலை சுமார் 36 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாவட்ட வாரியான முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இந்த மாவட்டத்தில் மழையின் தீவிரம் அதிகரித்து மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானிலை அவ்வப்போது மேகமூட்டமாக மாறக்கூடும். மழை பெய்யும் நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசும் வாய்ப்பையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இன்றைய கனமழை எச்சரிக்கை பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் இரு மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்தடுத்த நாட்களில் மழை எப்படி?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதியும் இரு மாவட்டங்களிலும் மிதமான மழைக்கான வாய்ப்பு தொடரும். செப்டம்பர் 19ஆம் தேதி வட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் அடுத்த சில நாட்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கக்கூடும். இருப்பினும் மழையின் தீவிரம் மற்றும் பரவல் இடத்திற்கு இடம் மாறுபடலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் கவனிக்க வேண்டியது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்பதை தவிர்ப்பது பாதுகாப்பானது. மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் அருகே நிற்பதை தவிர்ப்பதுடன், மழை பெய்யும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் பயணம் செய்வது அவசியம். தற்போதைய அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பின்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முக்கியமாக ஆங்காங்கே லேசான மழைக்கான வாய்ப்பே காணப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/dcd788898d817dc3e3a14945de926bfa178937858282478_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/bridge-to-replace-part-of-pallavaram-thoraipakkam-radial-road-on-pallikaranai-marshland-2km-450cr-budget-project-details-deadline-274446</link><comments>https://tamil.abplive.com/news/chennai/bridge-to-replace-part-of-pallavaram-thoraipakkam-radial-road-on-pallikaranai-marshland-2km-450cr-budget-project-details-deadline-274446#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 09:29:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/bridge-to-replace-part-of-pallavaram-thoraipakkam-radial-road-on-pallikaranai-marshland-2km-450cr-budget-project-details-deadline-274446</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Pallavaram-Thoraipakkam Radial Road:&lt;/strong&gt; பல்லாவரம் - துரைப்பாக்கம் வழித்தட ரேடியல் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புதிய பாலம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நவீன தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலமான சென்னை ஒன் தொடங்கி காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரையிலான பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், சுமார் 2 கிலோ மீட்டர் பகுதி வெகுவிரைவில் இல்லாமலே போகும் என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நீர் எந்தவித இடையூறுமின்றி பாயும் வகையில், அந்த சாலை அமைந்துள்ள 7 ஹெக்டேர் நிலப்பரப்பு மீண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைய உள்ளதாம். இதற்கு மாற்றாக சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு பாலம் அமைக்கும் முடிவிற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி வடிவம் பெற்று வருகிறதாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/know-the-vastu-rules-regarding-the-direction-in-which-to-place-a-clock-in-the-house-details-in-pics-274285&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ட்ராஃபிக் ஓவர்? 6 வழி மேம்பால திட்டம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;துரைப்பாக்கம் பகுதியில் சென்னை ஒன் நிறுவனத்திற்கு முன்பாகத் தொடங்கி, காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு 100 மீட்டர் முன்பாக வந்து இறங்கும் வகையில், ஆறு வழித்தடங்களைக் கொண்ட உயர்மட்டச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளதாம். இந்த உயர்மட்டப் பாலத்தின் இடையில் அமைக்கப்படும் தூண்களின் நீளம் 200 மீட்டர் வரை இருக்குமாம். இதனால் பாலத்தின் மேல் கட்டமைப்பைத் தாங்கும் தூண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஒவ்வொரு தூணும் 2.5 மீட்டர் விட்டம் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி ஏதுமில்லை என்பதால், கட்டுமானப் பணிகளை முடிக்க இரண்டு ஆண்டுகள் போதுமானதாக கணிக்கப்பட்டுளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HO4ckVSV_C8?si=uNI7j7Rqq8M-ErEA&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.450 கோடி செலவில் மேம்பாலம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ரேடியல் சாலையில் அமைக்கப்பட உள்ள புதிய பாலத்திற்கான கட்டுமானச் செலவு மட்டும் சுமார் 450 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.&amp;nbsp; கட்டுமானப் பணிகளின்போது போக்குவரத்து மாற்றங்களைச் செய்வது மட்டுமே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. ராஜீவ் காந்தி சாலையை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் ஜிஎஸ்டி (GST) சாலை ஆகியவற்றுடன் இணைக்கும் இந்தச் சாலையைப் பயன்படுத்தி தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.25 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள சாலையை அகற்றி புதிய மேம்பாலம் அமைக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ராம் நகர், வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு ஒரு தீர்வாக அமையும். இந்த வழித்தடம் வாயிலாக சுமார் 15,000 கன அடி நீர் ஒக்கியம் மடுவை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, ​​2,100 மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலையில் 90 மீட்டர் தூரத்தில் மட்டுமே நீர்வழிப் பாதைகள் (culverts) உள்ளன. வெள்ள நீர் தடையின்றிச் செல்ல இது போதுமானதாக இல்லை. எனவே சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள ஒரு சாலை அகற்றப்படுவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்&quot; href=&quot;https://tamil.abplive.com/sports/cricket/bcci-took-stand-to-not-receive-womens-asia-cup-from-pakistans-mohsin-naqvi-coach-muzumdar-cricket-news-274437&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரேடியல் சாலையின் முக்கியத்துவம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கான பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை (200 அடி) சென்னையின் தெற்கு/மேற்கு நுழைவாயில்களுக்கும் கிழக்கு தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களுக்கும் இடையேயான பயணத்திற்கு ஒரு முக்கிய இணைப்பாகும்&lt;/li&gt;
&lt;li&gt;பல்லாவரத்தில் உள்ள க்ராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலையை, துரைப்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப வழித்தடத்துடன் நேரடியாக இணைக்கிறது&lt;/li&gt;
&lt;li&gt;தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் குன்றத்தூர் போன்ற தெற்கு/மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கும், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் போன்ற கிழக்கு தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கும் இடையே செல்லும் போக்குவரத்து, கிண்டி மற்றும் கத்திப்பாரா போன்ற நகரின் உட்புறத்தில் உள்ள நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்க்க வழிவகை செய்கிறது&lt;/li&gt;
&lt;li&gt;சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான அணுகலை வழங்குகிறது.&lt;/li&gt;
&lt;li&gt;தென்மாவட்ட பயணங்களுக்கான முக்கிய இணைப்பு சாலையாகவும் ரேடியல் சாலை அமைந்துள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட ரேடியல் சாலை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ரேடியல் சாலை மற்றும் பல்லாவரம் &amp;ndash; குன்றத்தூர் சாலை, ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆரின் சில பகுதிகள், சோழிங்கநல்லூர் &amp;ndash; குடிமியான் தோப்பு சாலை, கோடம்பாக்கம் &amp;ndash; ஸ்ரீபெரும்புதூர் சாலை மற்றும் சென்னை புறவழிச்சாலை உள்ளிட்ட சாலைகள் அனைத்தும், சி.எம்.டி.ஏ-வால் அமைக்கப்பட்ட 'சென்னை பகுதி போக்குவரத்து ஆய்வுப் பிரிவு' மூலமாகவே திட்டமிடப்பட்டன. குறைந்தது 15 சாலைகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இச்சாலைகளை அமைப்பதற்காக 1998-1999 காலகட்டத்தில் ஒரு தனி தலைமைப் பொறியாளர் பிரிவு உருவாக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகள் மற்றும் சில வகையான குப்பைகளைக் கூடப் பயன்படுத்தி அந்த &amp;lsquo;ரேடியல்&amp;rsquo; சாலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய முன்னாள் துறைசார் பொறியாளர்கள், &amp;ldquo;சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு செயல்படும் என்பது குறித்து தெரியாததால், சாலையின் சில பகுதிகள் உள்வாங்கிக் கொண்டன. அக்காலத்தில் போதிய சுற்றுச்சூழல் குறித்த புரிதல் எங்களுக்கு இல்லை&amp;rdquo; என்று குறிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/f4e8cf0b1f0649a7995c13d0cde64cee1789358181317732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இன்று மழை பெய்யுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வந்த முக்கிய வானிலை அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-today-september-13-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-today-tnn-274367</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-today-september-13-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-today-tnn-274367#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 07:26:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-today-september-13-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-today-tnn-274367</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் வானிலை மாறுபட்ட நிலையில் காணப்பட உள்ளது. சில இடங்களில் மேகமூட்டம் அதிகரித்து லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு நீடிக்கிறது. தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சூழல் நிலவுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தகவலின்படி, சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் இன்று வெப்பநிலை சுமார் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய வானிலை நிலையில் வெப்பத்துடன் கூடிய மேக வளர்ச்சி ஏற்படும் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மழை பரவலாக ஒரே நேரத்தில் பெய்யும் நிலை இல்லாமல், சில இடங்களில் மட்டும் திடீரென மழை பெய்யக்கூடிய சூழல் காணப்படலாம். இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது வானிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வானிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதுடன், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்ந்தாலும், பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு மழை பெய்யக்கூடிய சூழல் உருவாகலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் பகுதியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம் என தற்போதைய முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம் போன்ற மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பிற்பகல் முதல் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், மகாபலிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருப்போரூர் மற்றும் ஒரகடம் சுற்றுவட்டாரத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்புகளிலும் இன்று மழைக்கான வாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இன்று மழை பெய்யும் வாய்ப்பை கருத்தில் கொண்டு பயணங்களை திட்டமிடுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் தற்போது பொதுவாக மேகமூட்டமான வானிலை காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை நகர முன்னறிவிப்பின்படி, செப்டம்பர் 13ஆம் தேதிக்கான அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம். சென்னை புறநகரை ஒட்டிய காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதால், மாலை நேரத்தில் வானிலை திடீரென மாறினால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெப்பநிலை எப்படி இருக்கும்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழை வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேர வெப்பம் தொடரும். மேகமூட்டம் மற்றும் மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை ஓரளவு குறையக்கூடும். காஞ்சிபுரம் பகுதியில் இன்று அதிகபட்சமாக சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று கனமழை எச்சரிக்கை உள்ளதா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான கனமழை எச்சரிக்கை இருப்பதாக தற்போதைய தகவல்கள் காட்டவில்லை. எனவே இன்று முக்கியமாக ஆங்காங்கே பெய்யக்கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மழை வாய்ப்பையே கவனத்தில் கொள்ள வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலான கனமழையை விட சில பகுதிகளில் பெய்யக்கூடிய மழைக்கே அதிக வாய்ப்பு காணப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த சில நாட்களில் மழை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் அடுத்த சில நாட்களிலும் இடையிடையே மழை வாய்ப்பு நீடிக்கலாம். காஞ்சிபுரத்திற்கான முன்னறிவிப்பில் செப்டம்பர் 14ஆம் தேதி சிறிய அளவிலான மழைக்கும், அதன் பின்னர் மீண்டும் இடியுடன் கூடிய மழை வாய்ப்புக்கும் இடம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் தமிழக மக்கள் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பது நல்லது. மழை பெய்யும் நேரங்களில் சாலைகள் வழுக்கும் வாய்ப்பு இருப்பதால் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/cde3fdcc18b8f722c75ae6e0b6170ff91789240364759485_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[46 வயதில் 61 தேர்தல்கள்! மதுராந்தகம் இடைத்தேர்தலில் களம் காணும் ‘அக்னி’ ஆழ்வார்!]]></title><link>https://tamil.abplive.com/elections/maduranthakam-bypoll-agni-alwar-files-nomination-for-set-to-contest-61st-election-tnn-273987</link><comments>https://tamil.abplive.com/elections/maduranthakam-bypoll-agni-alwar-files-nomination-for-set-to-contest-61st-election-tnn-273987#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 11:41:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/maduranthakam-bypoll-agni-alwar-files-nomination-for-set-to-contest-61st-election-tnn-273987</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் சார்பில் 46 வயதான &amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;61-வது தேர்தல் போட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வாரின் வேட்புமனு தாக்கல் தற்போது தேர்தல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. காரணம், இது அவரது 61-வது தேர்தல் போட்டியாகும். கடந்த காலங்களில் பல்வேறு தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் அவர், தற்போது மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது தேர்தல் பயணம் குறித்து அவர் தெரிவிக்கையில், இதுவரை 60 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும், தற்போது 61-வது முறையாக தேர்தலை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு தேர்தல் முறைகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்ட அனுபவம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வார், சாதாரண சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் மட்டுமின்றி, நாட்டின் உயரிய பதவிகளுக்கான தேர்தல்களிலும் போட்டியிட முயன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் முதல் மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம், தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கான போட்டி மட்டுமல்ல; ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் அரசியல் பங்கேற்புக்கான வாய்ப்பு என்பதையும் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் &amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வார், ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தொடர்ந்து முன்வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், ஊழல் எதிர்ப்பு மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தனது நோக்கம் என அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ச்சியாக பல தேர்தல்களில் வேட்பாளராக களம் காணும் அவரது பயணம், தேர்தல் அரசியலில் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்து தனது கருத்தையும் கொள்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தேர்தல் களம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் பல்வேறு அமைப்புகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட முன்வருவதால், தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக மாறி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சூழலில், 60 தேர்தல்களை கடந்து 61-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் &amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வாரின் வேட்புமனு தாக்கல், மதுராந்தகம் தொகுதி தேர்தல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வரும் அவரது முயற்சி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/b7ff20596e8468be508e44701321e3e217889342834601319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurantakam By Election: பாமகவை நம்பும் இபிஎஸ்.. அன்புமணி எடுக்கப்போகும் முடிவு என்ன? மதுராந்தகத்தில் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/elections/madurantakam-by-election-aiadmk-pmk-alliance-talks-eps-eyes-anbumani-support-tnn-273981</link><comments>https://tamil.abplive.com/elections/madurantakam-by-election-aiadmk-pmk-alliance-talks-eps-eyes-anbumani-support-tnn-273981#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 10:53:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/madurantakam-by-election-aiadmk-pmk-alliance-talks-eps-eyes-anbumani-support-tnn-273981</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக வகுத்து வருகின்றன. குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாமகவை எதிர்பார்க்கும் அதிமுக&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பா.ம.க.வின் வாக்கு வங்கி முக்கியமானதாக இருந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக, வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் பா.ம.க.வின் ஆதரவைப் பெறுவது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்கிடுவதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தி.மு.க.வின் ஆளுமையை எதிர்கொள்வதுடன், தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ள த.வெ.க.வின் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தலைமையிலான அரசியல் நகர்வுகளையும் சமாளிக்க வேண்டிய சூழல் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொகுதியில் ஏற்கனவே வாக்கு செல்வாக்கு கொண்ட பா.ம.க.வுடன் இணைந்து செயல்படுவது தேர்தல் கணக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் பா.ம.க.வின் ஆதரவைப் பெற்று, மதுராந்தகம் மட்டுமின்றி தாராபுரம் தொகுதியிலும் தேர்தல் வெற்றியை உறுதி செய்ய முடியும் என அ.தி.மு.க. கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பட்சத்தில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், தேர்தல் களத்தில் நிலவும் ஒவ்வொரு அரசியல் நகர்வும் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அன்புமணியின் நிலைப்பாடு என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அ.தி.மு.க. தரப்பில் பா.ம.க.வை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பா.ம.க. தரப்பில் அன்புமணி ராமதாஸ் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பாரா அல்லது கட்சியின் எதிர்கால அரசியல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனித்த முடிவை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியில் பா.ம.க.வின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், அன்புமணியின் முடிவு அ.தி.மு.க.வின் தேர்தல் கணக்கில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் முடிவுகள் சொல்லும் கணக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியின் கடந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, பா.ம.க.வின் வாக்கு செல்வாக்கை புறக்கணிக்க முடியாது என்பது தெளிவாகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 16,215 வாக்குகளைப் பெற்றது. இது அந்தத் தேர்தலில் சுமார் 9.12 சதவீத வாக்குகளாக அமைந்தது. தனித்துப் போட்டியிட்ட நிலையிலும் பா.ம.க. பெற்ற இந்த வாக்குகள், தொகுதியில் அக்கட்சிக்கு இருந்த ஆதரவை வெளிப்படுத்தின.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் &lt;strong&gt;அ.தி.மு.க.&amp;ndash;பா.ம.க&lt;/strong&gt;. கூட்டணி அமைந்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 86,646 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கூட்டணி வாக்குகள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2026 தேர்தலிலும் தொடர்ந்த போட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதுராந்தகம் தொகுதியில் கடுமையான போட்டி நிலவியது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. மற்றும் த.வெ.க. வேட்பாளர்களிடையே போட்டி நிலவிய நிலையிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வின் அடிப்படை வாக்கு வங்கியுடன் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். குறிப்பாக பா.ம.க.வுக்கு உள்ள வாக்கு செல்வாக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் பலமாக அமையலாம் என்பதே எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இடைத்தேர்தலில் மாறப்போகும் அரசியல் கணக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெற கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதன் மூலம் வேட்பாளர் தேர்வுக்கான பணிகளையும் அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் விரைவில் மேலும் சூடுபிடிக்கும் நிலையில், அ.தி.மு.க.&amp;ndash;பா.ம.க. இடையேயான பேச்சுவார்த்தை எந்த முடிவை எட்டுகிறது என்பது முக்கியமானதாக மாறியுள்ளது. பா.ம.க. ஆதரவு அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா, அன்புமணி ராமதாஸ் எத்தகைய அரசியல் முடிவை எடுக்கப் போகிறார் என்பதே தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/46470904c2dd94f4ce76d80dc225dd3817889314052391319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்... 2.13 லட்சம் வாக்காளர்கள் தயார்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-by-election-2026-nomination-filing-begins-polling-on-october-6-2026-tnn-273966</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-by-election-2026-nomination-filing-begins-polling-on-october-6-2026-tnn-273966#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 08:22:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-by-election-2026-nomination-filing-begins-polling-on-october-6-2026-tnn-273966</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதையொட்டி மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தொகுதி முழுவதும் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 16 வரை வேட்புமனு தாக்கல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல், வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் அட்டவணையின்படி, அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2.13 லட்சம் வாக்காளர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 1,04,886 ஆண் வாக்காளர்களும், 1,08,738 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலக அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 குழுக்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் இடம்பெற்றிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களையும் 72 மணி நேரத்திற்குள் அகற்ற அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;SUVIDHA மூலம் முன்அனுமதி கட்டாயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், பிரசார வாகனங்களைப் பயன்படுத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் SUVIDHA செயலி மூலம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களும் புகார் அளிக்கலாம். இதற்காக C-Vigil செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1950, 1800-425-7088 மற்றும் 044-27427412 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணிகள் வேகம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/20867fcd741b7ded3715f325c3c4c5bd17889223173851319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களே கவனம்! இன்று வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய தகவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/kanchipuram/tamil-nadu-weather-today-september-9-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-tnn-273962</link><comments>https://tamil.abplive.com/news/kanchipuram/tamil-nadu-weather-today-september-9-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-tnn-273962#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 07:12:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ காஞ்சிபுரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/kanchipuram/tamil-nadu-weather-today-september-9-2026-rain-forecast-for-kanchipuram-chengalpattu-tnn-273962</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் நேரங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு உள்ளது. எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்ப்பது பாதுகாப்பானது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வானிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளுக்கான பொதுவான முன்னறிவிப்பில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. எனினும் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் சூழல் தற்போது இல்லை. காஞ்சிபுரத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என தற்போதைய முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று வானிலை மாறுபட்ட நிலையில் காணப்படலாம். சில இடங்களில் மேகமூட்டம் அதிகரித்து, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் வானிலை மாற்றம் ஏற்படக்கூடும். இருப்பினும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று தனியாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் பரவலாக கனமழையை எதிர்பார்க்காமல், ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையாகவே தற்போதைய நிலவரத்தை பார்க்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வாய்ப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் ஓரளவு மேகமூட்டம் காணப்படலாம். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்தடுத்த நாட்களில் மழை எப்படி?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 10ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று கனமழை எச்சரிக்கை உள்ளதா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தமிழகம் முழுவதும் பரவலான கனமழைக்கான எச்சரிக்கை இல்லை. ஆனால் இடியுடன் கூடிய மழை மற்றும் ஓரிரு இடங்களில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய முன்னறிவிப்பின்படி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முக்கியமாக ஆங்காங்கே பெய்யக்கூடிய லேசான மழைக்கான வாய்ப்பையே எதிர்பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/9ad42625a474fff296d8a5f3c72ac36e17888963848351373_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tambaram Railway Station: தாம்பரம் ரயில் நிலையம் இனி வேற லெவல்! ₹19 கோடியில் அதிரடி மேம்பாடு.. பயணிகளுக்கு குவியும் வசதிகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/tambaram-railway-station-expansion-15-tracks-9-lifts-10-escalators-planned-19-crore-infrastructure-upgrades-tnn-273940</link><comments>https://tamil.abplive.com/news/chennai/tambaram-railway-station-expansion-15-tracks-9-lifts-10-escalators-planned-19-crore-infrastructure-upgrades-tnn-273940#respond</comments><pubDate>Tue, 8 Sep 2026 18:23:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/tambaram-railway-station-expansion-15-tracks-9-lifts-10-escalators-planned-19-crore-infrastructure-upgrades-tnn-273940</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை புறநகர் ரயில் போக்குவரத்தில் முக்கிய மையமாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்தவும், இங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே முக்கிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தின் தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் தொலைதூர ரயில்களை கையாளும் வகையில் நிலையம் தயார்படுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;10 தண்டவாளங்கள் 15 ஆக அதிகரிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது 10 ரயில் தண்டவாளங்கள் உள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கையை 15 ஆக உயர்த்த தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் தொலைதூர ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தண்டவாளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ரயில்களை நிறுத்துவதற்கும், இயக்குவதற்கும் கூடுதல் வசதியை ஏற்படுத்தும். இதன் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நிலவும் ரயில் இயக்க நெருக்கடியையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தண்டவாள விரிவாக்கப் பணிகளுடன், நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;₹19 கோடியில் பயணிகளுக்கு புதிய வசதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தண்டவாள விரிவாக்கப் பணிகளுக்கு இணையாக, பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் ₹19 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் இரண்டாவது நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய நடைமேம்பாலத்தில் உயர்த்தப்பட்ட மின்சார பயணச்சீட்டு வழங்கும் மையம் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு எளிதாக செல்லும் வசதி கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;9 லிப்ட், 10 எஸ்கலேட்டர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 9 மின்தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. இதனுடன் பயணிகள் விரைவாக நடைமேடைகளுக்கு செல்லும் வகையில் 10 நகரும் படிக்கட்டுகளும் நிறுவப்பட உள்ளன. மேலும், ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் பரதமாதா சாலையுடன் இணைக்கும் வகையில் புதிய அணுகுசாலையும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலையத்திற்கு வரும் பயணிகளின் போக்குவரத்து வசதியும் மேம்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆண்டுக்கு 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாம்பரம் ரயில் நிலையம் ஆண்டுதோறும் 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான &amp;lsquo;கேடகரி 1&amp;rsquo; ரயில் நிலையமாக உள்ளது. சென்னை நகரின் மூன்றாவது ரயில் முனையமாகவும் தாம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 தண்டவாளங்கள் கொண்டதாக நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, திட்டமிடப்பட்டுள்ள புதிய வசதிகளும் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால், தாம்பரம் ரயில் நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் சென்னையின் முக்கிய ரயில் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக தாம்பரம் மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முழுமையான மறுசீரமைப்புக்கு தயாராகும் தாம்பரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கிடையில், ரயில் நிலப்பரப்பு மேம்பாட்டு ஆணையமான RLDA சார்பிலும் தாம்பரம் ரயில் முனையத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய விரிவாக்கப் பணிகளுடன் எதிர்கால மறுசீரமைப்பு திட்டங்களும் இணைந்தால், தாம்பரம் ரயில் நிலையம் பயணிகள் வசதி, ரயில் இயக்கம் மற்றும் தொலைதூர ரயில் சேவைகள் என பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்தும் திட்டம், புதிய நடைமேம்பாலம், 9 லிப்ட்கள், 10 எஸ்கலேட்டர்கள் மற்றும் புதிய அணுகுசாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டால், தாம்பரம் ரயில் நிலையம் சென்னையின் மிக முக்கியமான ரயில் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/08/e32da0980fe44a7ea0c252600b18177917888719914821319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! ]]></title><link>https://tamil.abplive.com/elections/madurantakam-assembly-by-election-2026-schedule-out-polling-date-helpline-numbers-rules-tnn-273937</link><comments>https://tamil.abplive.com/elections/madurantakam-assembly-by-election-2026-schedule-out-polling-date-helpline-numbers-rules-tnn-273937#respond</comments><pubDate>Tue, 8 Sep 2026 17:58:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/madurantakam-assembly-by-election-2026-schedule-out-polling-date-helpline-numbers-rules-tnn-273937</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம், 35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, கடந்த 07.09.2026 முதல் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி, செப்டம்பர் 16-ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெறுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 17 வியாழக்கிழமை அன்று மேற்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19 சனிக்கிழமை கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் அக்டோபர் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் அலுவலர்கள் நியமனம் மற்றும் கட்டுப்பாட்டு அறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088 மற்றும் 044-27427412 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாக சுழற்சி முறையில் பணியாற்றும் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியர் திரு. கே.ஆர். நரேந்திரன் (9445000415) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. ராஜேஷ் (8056835165), மதுராந்தகம் வட்டாட்சியர் திரு. பெருமாள் (9445000503) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் திரு. வீரமணி (9597671072) ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாகச் செயல்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்காளர்கள் எண்ணிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு குழுக்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியில் 1,04,886 ஆண் வாக்காளர்கள், 1,08,738 பெண் வாக்காளர்கள் மற்றும் 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 167 அமைவிடங்களில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்காளர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் பொருட்டு 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் தங்களது வீடுகளிலிருந்தே அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கும் சிறப்பு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளம்பரங்கள் அகற்றம் மற்றும் அனுமதி பெறும் நடைமுறைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு சொத்துக்கள், பொது இடங்கள், இரயில் நிலையங்கள், மின்சார கம்பங்கள் மற்றும் உள்ளாட்சி கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. தனியாருக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்களை 72 மணி நேரத்திற்குள் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டங்கள், ஒலிபெருக்கி பயன்பாடு, வாகனப் பிரச்சாரம், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் 'SUVIDHA' செயல செயலி மூலம் விண்ணப்பித்து முன்அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை 'C-Vigil' செயலி மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/08/73aed1d8692eb1041f2b433905ca2d6517888703811561319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurantakam By Election: மதுராந்தகம் தொகுதியில் என்ன நடக்கிறது? 2026 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? முழு பின்னணி இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-assembly-constituency-history-political-background-2026-election-results-tnn-273925</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-assembly-constituency-history-political-background-2026-election-results-tnn-273925#respond</comments><pubDate>Tue, 8 Sep 2026 14:57:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-assembly-constituency-history-political-background-2026-election-results-tnn-273925</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சென்னைக்கு அருகாமையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இத்தொகுதி, காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் தனித்தொகுதி (SC) ஆகும். ஆன்மீகப் பாரம்பரியம், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், பெரிய நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்கள் என பல்வேறு சிறப்புகளை ஒருங்கே கொண்ட பகுதியாக மதுராந்தகம் விளங்குகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏரிகாத்த ராமர் முதல் வேடந்தாங்கல் வரை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புகழ்பெற்ற ஏரிகாத்த ராமர் திருக்கோயில். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுராந்தகம் ஏரியின் கரை உடையும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாகக் கூறப்படும் வரலாற்றுச் சம்பவத்துடன் இக்கோயில் தொடர்புபடுத்தப்படுகிறது. வைணவ மரபிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தப் பகுதி, இராமானுஜர் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொண்ட புனிதத் தலமாகவும் போற்றப்படுகிறது. இதனுடன் தமிழகத்தின் மிகப்பெரிய நீர்நிலைகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயத்தை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுராந்தகம் ஏரி மற்றும் கிளியாறு மூலம் கிடைக்கும் பாசன வசதியை பயன்படுத்தி நெல், கரும்பு, நிலக்கடலை மற்றும் பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக நெல் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அதனைச் சார்ந்த அரிசி ஆலைகளும் இப்பகுதியின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. படாளம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொழில் வாய்ப்பை நோக்கி நகரும் இளைஞர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ளதுடன், முக்கிய சாலைப் போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருப்பதால், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் விரிவடைந்துள்ளன. மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் சென்னை, மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொழில் மையங்களுக்குச் சென்று பணிபுரிந்து வருகின்றனர். இதனால் விவசாயத்தை மட்டுமே சார்ந்திருந்த பொருளாதாரம், படிப்படியாக தொழில் மற்றும் சேவைத் துறைகளையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திராவிடக் கட்சிகளின் போட்டி நிறைந்த தேர்தல் வரலாறு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி, தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் எழுச்சியுடன் திமுக மற்றும் அதிமுக இடையேயான முக்கியப் போட்டித் தொகுதியாக மாறியது. திமுக சார்பில் போட்டியிட்ட &amp;lsquo;மதுராந்தகம்&amp;rsquo; சி. ஆறுமுகம் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து தொகுதியில் தனக்கென அரசியல் செல்வாக்கை உருவாக்கினார். அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.டி. உகம்சந்த் இருமுறை வெற்றி பெற்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, திமுக ஐந்து முறையும் அதிமுக ஏழு முறையும் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் அதிமுகவுக்கு சற்றே கூடுதல் அரசியல் செல்வாக்கு உள்ள தொகுதியாக மதுராந்தகம் பார்க்கப்பட்டாலும், தேர்தல் களத்தில் திமுக&amp;ndash;அதிமுக இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிலவி வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2026 தேர்தலில் உருவான முக்கோணப் போட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மதுராந்தகம் தொகுதியின் அரசியல் வரலாற்றில் முக்கியமான தேர்தலாக அமைந்தது. அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடுமையான முக்கோணப் போட்டி உருவானது. குறிப்பாக புதிதாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்குகள், தொகுதியின் தேர்தல் கணக்கீடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;7,194 வாக்குகளில் அதிமுக வெற்றி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே. மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,090 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் எஸ். அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றார். இதன்மூலம் அதிமுக 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, அதிமுகவின் வெற்றி உறுதியானதாக இருந்தபோதிலும், &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; பெற்ற 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தன. திமுகவும் கணிசமான வாக்குகளைப் பெற்ற நிலையில், மூன்று கட்சிகளும் வாக்கு எண்ணிக்கையில் நெருக்கமாக இருந்தது மதுராந்தகம் தொகுதியில் நிலவும் மாறிவரும் அரசியல் சூழலை வெளிப்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எதிர்கால அரசியலில் முக்கியமான தொகுதியாக மதுராந்தகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாற்று பின்னணி, விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம், சென்னையை ஒட்டியுள்ள புவியியல் அமைப்பு மற்றும் வேடந்தாங்கல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அடையாளங்கள் என மதுராந்தகம் பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், 2026 தேர்தலில் மூன்று கட்சிகளும் நெருக்கமாகப் பெற்ற வாக்குகள், இடைத்தேர்தலில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மரகத குமரவேல், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/08/eefaf22cd30bcf121a50e2ffd384da6017888596304791319_original.jpg" width="220"/></item></channel></rss>