<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chengalpattu</title><atom:link href="https://tamil.abplive.com/chengalpattu/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 15:58:57 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மக்களே உஷார்! ஜூலை 25 வரை செம்ம ட்விஸ்ட்... சென்னை வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-and-chengalpattu-weather-forecast-for-july-22-imd-predicts-light-to-moderate-rainfall-with-thunder-lightning-and-strong-winds-till-july-25-tnn-268521</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-and-chengalpattu-weather-forecast-for-july-22-imd-predicts-light-to-moderate-rainfall-with-thunder-lightning-and-strong-winds-till-july-25-tnn-268521#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 08:49:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-and-chengalpattu-weather-forecast-for-july-22-imd-predicts-light-to-moderate-rainfall-with-thunder-lightning-and-strong-winds-till-july-25-tnn-268521</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல சுழற்சி மற்றும் பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனையொட்டி, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய (ஜூலை 22) அறிவிப்பில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர நிலவரம் மற்றும் வெப்பம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேவேளையில், ஒருசில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக மதுரையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் &amp;amp; செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய புறநகர் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே போன்ற வானிலை நீடிக்கும் என்றும், இந்த மழைப்பொழிவு வரும் ஜூலை 25-ஆம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/451eae5ae5ae5224037dd701f9d0b79b1784570809372129_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திடீரென மாறிய வானிலை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/imd-issues-a-rain-alert-for-tamil-nadu-till-july-24-check-today-s-weather-forecast-for-chennai-kanchipuram-and-chengalpattu-tnn-268364</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/imd-issues-a-rain-alert-for-tamil-nadu-till-july-24-check-today-s-weather-forecast-for-chennai-kanchipuram-and-chengalpattu-tnn-268364#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 08:35:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/imd-issues-a-rain-alert-for-tamil-nadu-till-july-24-check-today-s-weather-forecast-for-chennai-kanchipuram-and-chengalpattu-tnn-268364</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த நாளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம், சங்கரிதுர்க்கத்தில் 4.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேவேளையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஜூலை 23 வரை இடி, மின்னல் எச்சரிக்கை:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று (ஜூலை 21) முதல் வரும் 23-ம் தேதி வரை, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்பு:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெப்பநிலை மற்றும் சென்னை நிலவரம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேநேரம், தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் இன்றைய (ஜூலை 21) நிலவரம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் வேளையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை அல்லது இடி-மின்னலுடன் கூடிய தூறல் பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் (தாம்பரம், மறைமலைநகர், மதுராந்தகம் உள்ளிட்ட இடங்கள்) இன்று வளிமண்டல மேகமூட்டம் நிலவும். ஒருசில இடங்களில் மாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/451eae5ae5ae5224037dd701f9d0b79b1784570809372129_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Weather Update: திடீர் மாற்றம்! அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-update-rain-alert-issued-for-chennai-kanchipuram-chengalpattu-for-next-5-days-tnn-268218</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-update-rain-alert-issued-for-chennai-kanchipuram-chengalpattu-for-next-5-days-tnn-268218#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 09:13:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-update-rain-alert-issued-for-chennai-kanchipuram-chengalpattu-for-next-5-days-tnn-268218</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;5 days rain forecast Tamil Nadu:&lt;/strong&gt; &lt;/span&gt;தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து, பகல் நேரங்களில் கடுமையான வெப்பக்காற்று வீசியது. இந்த திடீர் வெப்பநிலை உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் 5 நாள் மழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஜூலை 20-ஆம் தேதியான இன்று முதல் ஜூலை 24-ஆம் தேதி வரையிலான அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று நாள்முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை அல்லது தூறல் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான புழுக்கம் தணிந்து, மாலையில் குளிர்ந்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தின் இன்றைய வானிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் இன்று வானிலை மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய வானிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடலோர மாவட்டமான செங்கல்பட்டில், கடலிலிருந்து வீசும் ஈரப்பதக் காற்றின் காரணமாகக் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர்ப்புற பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் கடற்கரையை ஒட்டியுள்ள இடங்களில் ஆங்காங்கே லேசான தூறல் அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பும் உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/4826ee54d6fa563924ff0f605b15f7bf17844322893201319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[செங்கல்பட்டு மக்களுக்கு செம குட் நியூஸ்! செய்யூரில் உருவாகும் பிரம்மாண்ட தீம் பார்க் & ரிசார்ட்ஸ்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-to-get-massive-theme-park-and-resorts-on-abandoned-sipcot-land-at-850-acre-tnn-268178</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-to-get-massive-theme-park-and-resorts-on-abandoned-sipcot-land-at-850-acre-tnn-268178#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 19:21:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-to-get-massive-theme-park-and-resorts-on-abandoned-sipcot-land-at-850-acre-tnn-268178</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அனல் மின் நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் பிரம்மாண்டமான சுற்றுலா தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தீம் பார்க், ரிசார்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகவுள்ள இந்தத் திட்டத்தை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் மிக விரிவான முறையில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செய்யூர் அனல் மின் திட்டப் பின்னணி:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில், பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) வாயிலாக ஒரு பிரம்மாண்ட அனல் மின் நிலையம் அமைக்க மத்திய மின் துறை முன்பு முடிவு செய்திருந்தது. சுமார் 26,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறனுடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதற்காகச் செய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வருவாய்த் துறை மூலமாக நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக மின் வாரியம் தீவிரமாக மேற்கொண்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டெண்டர் ரத்தும் திட்டக் கைவிடலும்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு மின் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தகுதியான கூட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்ய 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் 'டெண்டர்' கோரப்பட்டது. ஆனால், இந்த டெண்டர் நிபந்தனைகளைத் தளர்த்துமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத காரணத்தால், டெண்டர் செயல்பாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக விலகின. இதன் விளைவாக, கடந்த 2014-ஆம் ஆண்டில் அந்த டெண்டர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செய்யூர் அனல் மின் திட்டம் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிப்காட் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், அதற்காக ஏற்கனவே 850 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நிலத்தைப் பயனுள்ள வழியில் பயன்படுத்துவதற்காக, அங்கு ஒரு நவீன தொழில் பூங்காவை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கையகப்படுத்தப்பட்ட இந்த 850 ஏக்கர் நிலமும், கடந்த 2025-ஆம் ஆண்டில் 'சிப்காட்' நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சுற்றுச்சூழலுக்கு மாசற்ற சுற்றுலா தொழில் பூங்கா:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது சிப்காட் வசம் உள்ள அந்த நிலத்தில், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் ஒரு பிரம்மாண்ட சுற்றுலா தொழில் பூங்காவை (Eco-friendly Tourism Industrial Park) அமைக்க இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தீம் பார்க், தங்கும் விடுதிகள் (Resorts) போன்றவற்றை உருவாக்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசின் 'வழிகாட்டி நிறுவனம்' (Guidance Bureau) தற்போது தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/13c9808f85167b21484da787972a9cd417844690757341319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-traffic-update-massive-jam-on-trichy-chennai-highway-near-chengalpattu-vandalur-tnn-268174</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-traffic-update-massive-jam-on-trichy-chennai-highway-near-chengalpattu-vandalur-tnn-268174#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 19:08:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-traffic-update-massive-jam-on-trichy-chennai-highway-near-chengalpattu-vandalur-tnn-268174</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்று, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சொந்த ஊர் திரும்பிய மக்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த வெள்ளிக்கிழமை மாலை வார விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவடைவதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிப் பொதுமக்கள் மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடி, மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் வழியாகவே கடந்து செல்ல வேண்டும் என்பதால், இந்த முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேம்பாலப் பணிகளால் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு இருசக்கர வாகனங்கள், கார்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் படாளம், புக்கத்துறை, கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, படாளம் மற்றும் புக்கத்துறை ஆகிய பகுதிகளில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலைப் பணிகளின் காரணமாகச் சாலைகள் குறுகலாக மாறியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த வாகனங்கள் அனைத்தும், இந்தத் திடீர் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன. நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த பொதுமக்கள், இந்த முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் தங்களின் இலக்குகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் படும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். நள்ளிரவையும் தாண்டி இந்த நெரிசல் நீடிக்கும் என்பதால், போக்குவரத்தைச் சீரமைக்கக் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/816a49251a188c03251d8c55cfe7e4b917844682606781319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பள்ளிக்கரணையில் கொட்டித்தீர்த்த மழை.. காஞ்சி, செங்கல்பட்டு நிலவரம் என்ன தெரியுமா? உடனே படியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-update-low-pressure-system-brings-rain-warning-for-next-3-days-check-affected-districts-tnn-268107</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-update-low-pressure-system-brings-rain-warning-for-next-3-days-check-affected-districts-tnn-268107#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 09:10:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-weather-update-low-pressure-system-brings-rain-warning-for-next-3-days-check-affected-districts-tnn-268107</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Tamil Nadu Weather Update:&lt;/strong&gt; தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, சென்னை பள்ளிக்கரணையில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இரு இடங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய வானிலை நிலவரத்தின்படி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த சில நாட்களுக்கான மழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வளிமண்டல சுழற்சிகளின் விளைவாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்றும், வரும் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் இன்றைய வானிலை நிலவரம்: Kanchipuram Today Weather Forcast&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 33&amp;deg;C வரையும், இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26&amp;deg;C வரையும் பதிவாக வாய்ப்புள்ளது. பகல் பொழுதில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 25% ஆகவும், இரவில் 10% ஆகவும் உள்ளது. மேற்கில் இருந்து மணிக்கு 8 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஈரப்பதம் 64% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் Chengalpattu Weather Forcast Today&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 34&amp;deg;C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27&amp;deg;C வரையும் நிலவக்கூடும். பகல் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு 10% ஆகவும், இரவு நேரத்தில் 20% ஆகவும் இருக்கும். தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 மைல் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம் 66%&amp;nbsp; ஆக பதிவாகக் கூடும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/4826ee54d6fa563924ff0f605b15f7bf17844322893201319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tamil Nadu railway news 2026: சென்னைவாசிகள் செம ஹேப்பி! தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளுக்கு வந்த அதிரடி அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/tambaram-chengalpattu-4th-railway-line-project-approved-southern-railway-allocates-2-576-cr-tnn-268103</link><comments>https://tamil.abplive.com/news/chennai/tambaram-chengalpattu-4th-railway-line-project-approved-southern-railway-allocates-2-576-cr-tnn-268103#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 08:52:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/tambaram-chengalpattu-4th-railway-line-project-approved-southern-railway-allocates-2-576-cr-tnn-268103</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;Southern Railway new projects:&lt;/strong&gt; &lt;/span&gt;தெற்கு ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, தாம்பரம் &amp;ndash; செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் உட்பட மொத்தம் மூன்று முக்கிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரயில்வே மிக விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் ரயில் பாதைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெற்கு ரயில்வேயில் எப்போதும் நெரிசல் மிகுந்த மிக முக்கியமான முதன்மை வழித்தடங்களில், தடையற்ற ரயில் போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே வாரியம் தொடர்ந்து ஒப்புதல் வழங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் மிக அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ள வழித்தடமாகத் தாம்பரம் &amp;ndash; செங்கல்பட்டு தடம் விளங்குகிறது. இந்தத் தடத்தில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்காவது புதிய ரயில் பாதை அமைப்பதற்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரக்கோணம், ஈரோடு வழித்தட மேம்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தாம்பரம் &amp;ndash; செங்கல்பட்டு தடம் மட்டுமன்றி, மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் இரட்டைப் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, அரக்கோணம் &amp;ndash; செங்கல்பட்டு வழித்தடத்தில் 929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதேபோல், ஈரோடு &amp;ndash; கரூர் வழித்தடத்தில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைப் பாதை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கியத் திட்டங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,576 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ரயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்டப் பணிகளைத் தெற்கு ரயில்வே தற்போதே உடனே தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தெற்கு ரயில்வேயின் அசுர வளர்ச்சி மற்றும் வருவாய்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்துத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் விரைவு ரயில்கள், குறுகிய தூரப் பயணியர் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் எனத் தினசரி சுமார் 1,400 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 152.75 கோடி மக்கள் தெற்கு ரயில்வே மூலமாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக ரயில்வே துறைக்கு 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;டெண்டர் மற்றும் எதிர்கால இலக்குகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பது, முக்கிய ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது, பண்டிகைக் கால சிறப்பு ரயில்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ரயில்வே துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய மூன்று ரயில் பாதை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மற்றும் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான 'டெண்டர்' விரைவில் வெளியிடப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுமட்டுமன்றி, திருச்சி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் பல்வேறு புதிய ரயில் பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடந்து வருகின்றன. இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் போது, வரும் 2030-ஆம் ஆண்டில், தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/729ee7fe2141f987819ab7d68a7c858e17844312150101319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திடீரென மாறிய வானிலை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் செம மழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?]]></title><link>https://tamil.abplive.com/news/kanchipuram/tamil-nadu-weather-update-july-18-rain-alert-for-kanchipuram-chengalpattu-and-coastal-districts-tnn-267971</link><comments>https://tamil.abplive.com/news/kanchipuram/tamil-nadu-weather-update-july-18-rain-alert-for-kanchipuram-chengalpattu-and-coastal-districts-tnn-267971#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 09:33:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ காஞ்சிபுரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/kanchipuram/tamil-nadu-weather-update-july-18-rain-alert-for-kanchipuram-chengalpattu-and-coastal-districts-tnn-267971</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூலை 18) ஒருசில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதால், பரவலாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பாதை:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, வடதமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோரத் தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் இதர சில பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். இதே நிலைமை அடுத்த நான்கு நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெப்பநிலை மற்றும் சென்னை புறநகர் நிலவரம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேநேரத்தில், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இன்றைய நேரடி வானிலை:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை இன்று காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. தற்போது வெப்பநிலை 29&amp;deg;C ஆக பதிவாகியுள்ள போதிலும், காற்றில் உள்ள ஈரப்பதம் (67%) காரணமாக உடலுக்கு 34&amp;deg;C போன்ற வெப்ப உணர்வு ஏற்படுகிறது. மேற்கு திசையில் இருந்து மணிக்கு 9 மைல் (9 mph) வேகத்தில் காற்று வீசுகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 33&amp;deg;C வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26&amp;deg;C வரையிலும் இருக்கும். பகலில் மழைக்கான வாய்ப்பு 35 விழுக்காடாக உள்ள நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு 65 விழுக்காடாக உயரும் என்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவக்கூடும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/16/87cf40a729cb426a310d9a382bc72914178422589236678_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பொதுமக்களுக்கே தெரியாமல் கல்பாக்கத்தில் நடந்த பலப்பரீட்சை.. 7 மணி நேரம் நீடித்த பரபரப்பு.. முழு விவரம் உள்ளே!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kalpakkam-nuclear-plant-emergency-exercise-successfully-completed-tnn-267937</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kalpakkam-nuclear-plant-emergency-exercise-successfully-completed-tnn-267937#respond</comments><pubDate>Fri, 17 Jul 2026 21:07:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kalpakkam-nuclear-plant-emergency-exercise-successfully-completed-tnn-267937</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய அரசின் அணுசக்தித் துறையின் (DAE) கீழ் கல்பாக்கத்தில் மதராஸ் அணுமின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), மற்றும் 06.04.2026 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்கிரிட்டிக்காலிட்டி நிலையை எட்டிய 'பாவினி' (BHAVINI) நிறுவனத்தின் முன்மாதிரி வேக ஈனுலை (PFBR) உள்ளிட்ட முக்கிய அணுசக்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (AERB) விதிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருங்கிணைந்த வெளித்தள (Off-Site) அவசரநிலைப் பயிற்சி, இன்று (17.07.2026) கல்பாக்கம் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அணுமின் நிலையங்கள் &quot;Defence in Depth&quot; எனப்படும் பல அடுக்கு பாதுகாப்பு தத்துவத்தின்படி இயங்குவதால் இத்தகைய அவசரநிலைகள் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அணுசக்தி வளாகத்தின் தயார்நிலையை மதிப்பிடுவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியர் தலைமையில் திட்டமிடப்பட்ட பயிற்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பயிற்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும், சம்பவக் கட்டளைத் தலைவருமான (Incident Commander)&amp;nbsp; மு. வீரப்பன்,&amp;nbsp;தலைமையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை (DDMA) மூலம் நடத்தப்பட்டது. இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை கல்பாக்கம் அவசர நிலை குழுவின் (KEC) தலைவர் எஸ். பி. செல்வகுமரன் மற்றும் PFBR நிலைய இயக்குநர் அல்லு அனந்த் ஆகியோர் வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம், ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு மற்றும் மீட்பு (ICCR) முறையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. பயிற்சியின் காலவரிசை முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அதிகாரிகள் இயல்பான சூழலைப் போலவே துரிதமாகச் செயல்பட்டனர். அதேநேரம், தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்க ஊடகங்கள் வாயிலாக முன்னரே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கற்பனைச் சூழலும் மீட்பு நடவடிக்கைகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பயிற்சியின் போது, PFBR அணு உலையில் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட ஒரு கற்பனை நிகழ்வு (Notional), பின்னர் வெளித்தள அவசரநிலையாக மாற்றப்பட்டது. நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, தள அவசரநிலை இயக்குநர் (SED) கொடுத்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை களத்தில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போதைய வானிலைச் சூழலைக் கருத்தில் கொண்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) தேசிய கதிர்வீச்சு அவசரநிலைப் பதிலளிப்பு இயக்குநர் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகையில் ஆரம்பாக்கம், மணமை, கடம்பாடி, மாமல்லபுரம் உள்ளிட்ட 10 கிராமப் பகுதிகள் கற்பனை அடிப்படையில் உட்படுத்தப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அவசரநிலைத் தயார்நிலைப் பயிற்சியில் மாவட்ட வருவாய்த் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுத் துறைகளும், அரக்கோணத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) இணைந்து செயல்பட்டன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (NDMA, SDMA), AERB ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 15 மூத்த அதிகாரிகள் இப்பயிற்சியை நேரில் பார்வையிட்டு, இதன் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகப் பாராட்டினர். பயிற்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன், இந்த ஒத்திகை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் இன்றி இது மிகக் கவனமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/17/7374684992d7c986197b71495d31b02c17843026078901319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?]]></title><link>https://tamil.abplive.com/crime/748-kg-of-contraband-worth-1-crore-destroyed-near-chengalpattu-tnn-267912</link><comments>https://tamil.abplive.com/crime/748-kg-of-contraband-worth-1-crore-destroyed-near-chengalpattu-tnn-267912#respond</comments><pubDate>Fri, 17 Jul 2026 16:20:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/748-kg-of-contraband-worth-1-crore-destroyed-near-chengalpattu-tnn-267912</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கமாக சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டி அழிப்பது வழக்கம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;133 வழக்குகளில் சிக்கிய போதைப்பொருட்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது காஞ்சிபுரம் சரக மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 133 வழக்குகளில், சுமார் 748 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்த போதைப்பொருட்களை முழுமையாக அழிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உயரதிகாரிகள் முன்னிலையில் எடை சரிபார்ப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் அனைத்தும் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள எரியூட்டும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சசங் சாய் முன்னிலையில், கஞ்சா மூட்டைகளின் எடை துல்லியமாக சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர், அவை அனைத்தும் தீயிட்டு முழுமையாக எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மதிப்பு மற்றும் பங்கேற்ற அதிகாரிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தீயிட்டு அழிக்கப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அழிப்புப் பணியின் போது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மல் ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் பங்கேற்று கண்காணித்தனர். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிரான காவல்துறையின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/17/ccd7deebf7031ade7bed7ba8e10d542717842853730771319_original.jpg" width="220"/></item></channel></rss>