மேலும் அறிய

திடீரென வந்த புகை.. பாதியில் நின்ற முதலமைச்சர் சென்ற ரயில்.. செங்கல்பட்டு அருகே பரபரப்பு..

"செங்கல்பட்டு அச்சரப்பாக்கம் அருகே முதலமைச்சர் சென்று கொண்டிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது" 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்ற சோழன் விரைவு ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. விவசாய நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டமே ரயில் நிறுத்தத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அரசு நிகழ்ச்சிகள், 'ஓர் அணியில் தமிழ்நாடு' என்ற திமுகவின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, மற்றும் ரோட் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார்.

சமீபகாலமாக ரயில் பயணத்தை விரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மயிலாடுதுறையில் இருந்து சோழன் விரைவு ரயில் மூலம் சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாய நிலத்தில் இருந்து வந்த புகை

விசாரணையில், ரயில்வே இருப்புப் பாதை அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்து புகை மூட்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த புகை தண்டவாளப் பகுதிக்கு பரவியதால், ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ரயிலை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.

புகை சூழ்நிலை சீரானவுடன் ரயில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் பயணித்த ரயில் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு நடைமுறைகளின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகை மூட்டம் கட்டுக்குள் வந்த பிறகு, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget