Breaking LIVE : கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்; மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
ABP NADU Last Updated: 22 Nov 2022 12:59 PM
Background
இதுதொடர்பான அறிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூரிலும் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:முன்னதாக, தென்மேற்கு...More
இதுதொடர்பான அறிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூரிலும் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:முன்னதாக, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வட-வடகிழக்கே 410 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா-வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து, பிற்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.கனமழை எச்சரிக்கை:இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்; மாநகராட்சி ஆணையர் உத்தரவு
கரூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சுக்காலியூர் பகுதியில் விஷ வாயு தாக்கி நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் தங்கமணியை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.