Breaking News LIVE: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும்
Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றச் சொன்ன உயர்நீதி மன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஊராட்சித் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மும்மை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 59,206 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்ஃடி 320 புள்ளிகள் சரிந்து 17,572 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
அடுத்த இரண்டு தினங்களில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடற்கரையை நெருங்கும் வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் 8 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி அதிமுக எடப்பாடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முறையீடு செய்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42.760-ஆக விற்பனையாகி வருகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,345 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 45,656 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,707 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பழம்பெரும் நடிகை ஜமுனா (86) ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு அருகே சாலையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வங்கியில் பணிபுரியும் பெண்கள் மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பிரியா என்பவர் உயிரிழந்துள்ளார்.
பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருப்பதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. சளி, காய்ச்சல் காரணமாக கடந்த 24ஆம் தேதி முதல் சிகிச்சை பெரும் நல்லகண்ணு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் சானியா மிர்சா- போபண்ணா இணை தோல்வியை தழுவியது.
இறுதி போட்டியில் ஸ்டெஃபானி-மெடோஸ் இணையிடம் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது.
தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.
சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதி பிலால் அல்-சுதானி உயிரிழந்துள்ளார். மேலும் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பிலால் உள்பட 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலை இல்லாதவர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 251வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 251ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (ஜனவரி.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -