தமிழ்நாடு:



  • மாண்டஸ் புயல் காரணமாக 27 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

  • மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • அரியலூர் விவசாயி மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

  • மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்

  • மதுரையில் இன்று தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

  • மெரினா கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

  • அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

  • தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 


இந்தியா:



  • மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

  • இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

  • வட்கம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக  ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றுள்ளார்.

  • குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி பதவி ஏற்கிறார்.

  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்களில் நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துள்ளார்.

  • பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

  • விளையாட்டுத்துறையில் சாதி ஆதிக்கம் உள்ளதை களைய வேண்டும் என மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு.  


உலகம்:



  • உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க்.

  • பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ. 44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்

  • இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.77 கோடியாக உயர்ந்துள்ளது.

  • இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

  • சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


விளையாட்டு:



  • ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  • அறுவை சிகிச்சையின்போது ஒருவர் உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரை பார்த்து ரசித்த சுவாரசிய சம்பவம் போலந்தில் நடைபெற்றுள்ளது.

  •  வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது சிக்ஸரை அடித்ததன்மூலம், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

  • ஃபிபா உலகக்கோப்பை கால்பந்தில் கால் இறுதிப் போட்டி இன்று முதல் நடக்கவுள்ளது.

  • இந்தியா - வங்காளதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. 

  • இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 3 மாதங்களுக்கு அடுத்தடுத்து பங்கேற்க உள்ள,  கிரிக்கெட் தொடர்களுக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.