Travel : புத்தகயாவுக்கு போகணும்னு நினைச்சிருக்கீங்களா? மிஸ் பண்ணவேகூடாத சூப்பரான 6 இடங்கள் இதோ..

புனிதமான போதி மரத்தின் அடியில் புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்கும் வகையில் புத்தகயா கோவில் கட்டப்பட்டது.

Continues below advertisement

ஆசையே அழிவிற்கு காரணம்  என்று  சொன்ன புத்த பகவான்  பௌத்த மதத்திற்கு அடிகோலியவர் . சித்தார்த்தனாக இருந்த இவருக்கு  ஞானம் கிடைத்த இடம் தான் புத்தகயா .

Continues below advertisement

இது பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள  ஒரு கிராமம் ஆகும்.  பௌத்த மதத்தை தழுவிய மக்களுக்கு மிக முக்கியமான பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது,ஒரு புனிதமான போதி மரத்தின் அடியில் புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டது. முன்னதாக, புத்தகயா உருவேலா என்று அழைக்கப்பட்டது, இங்குதான் அசோக மன்னன் ஒரு கோயிலைக் கட்டினான். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் பல சுற்றுலாத் தலங்களில் இந்த இடம் ஒன்றாகும். புத்தகயாவில் பார்க்க வேண்டிய பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன, இங்கே சில இடங்களை பட்டியலிட்டுள்ளோம்.

பெரிய புத்தர் சிலை

பௌத்தர்கள் மற்றும் இந்துக்களின் புனித யாத்திரையில் தவிர்க்க முடியாத  அவசியம் பார்க்க வேண்டியது  இங்கு அமைய பெற்றிருக்கும்  மிக பெரிய புத்தர் சிலையாகும்.இந்த சிலை 64 அடி உயரம் மற்றும் திறந்த வெளியில் தாமரையில் அமர்ந்திருக்கும் புத்தரின் தியான முத்திரையில் உள்ளது. இந்த அழகிய சிலை புத்தகயாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

மகா புத்தகயா கோவில்

  இந்துக்களும் மற்றும் பௌத்தர்களும் வருகை தரும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த இடம் புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்கிறது. அந்த இடத்தில், புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் உண்மையான போதி மரத்தின் வழிவந்த தற்போதைய மரத்தினை காணலாம். எனவே, இந்த இடம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்தர்கள் மற்றும் இந்துக்களின் புனித யாத்திரைக்கான முக்கிய அம்சமாகும்.

தாய் மடாலயம்

1956 இல்  அப்போதைய பிரதமரின் வேண்டுகோளின்படி இந்த மடாலயம் தாய்லாந்து மன்னரால் புத்தகயாவில்  தாய்லாந்து மடாலயம் கட்டப்பட்டது. இந்த  தாய்லாந்து மடாலயமானது  இந்தியாவில் இருக்கின்ற ஒரே ஒரு மூலகோவில் ஆகும்.இந்த மடாலயம் மிகவும் தனித்துவமானது.
இந்த மடாலயம் தாய்லாந்தின் கட்டிடக்கலையின் தனித்துவமான நேர்த்தியைக் காட்டுகிறது. இந்த இடத்தை பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைக்கும்.இந்த மடாலயத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட புத்தரின் பெரிய சிலை உள்ளது.

ராயல் பூட்டான் மடாலயம்  :

ராயல் பூட்டான் மடாலயமானது புத்தகயாவில் இருக்கும்  மிக அழகான மடங்களில் ஒன்றாகும். புத்தரின் வாழ்க்கை வரலாறு ஆனது அழகிய களிமண்களால் செதுக்கப்பட்டு இந்த மடாலயத்தில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .
உலகம் முழுவதிலும் இருந்து பௌத்தர்கள் இந்த மடத்தை காண்பதற்காகவே இங்கு வருகிறார்கள். புத்தருக்கு காணிக்கையாக பூட்டான் மன்னரால் கட்டப்பட்ட இந்த மடாலயத்தில் புத்தரின் உருவம் கொண்ட கோவிலும் உள்ளது. நீங்கள் மடாலயத்தின் தன்மைகளையும் பௌத்தத்தையும் தெரிந்து கொள்ள  விரும்பினால், நீங்கள் தங்கக்கூடிய விசாலமான விருந்தினர் அறைகளும் உள்ளன.

இந்தோ ஜப்பானிய கோயில்

 ஜப்பானிய கட்டிடக்கலை வடிவத்தை பிரதிபலிக்கும்  இந்த கோவிலானது புத்தகயாவிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  புத்தகயாவில் இருக்கின்ற  மிகப் பிரபலமான கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று .இந்த கோவில் 1972 இல் கட்டப்பட்டது.

மெட்டா புத்தராமர் கோயில்

தாய்லாந்து மக்களால் கட்டப்பட்ட இந்த கோவிலானது வெள்ளிக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது ஆகச்சிறந்த அற்புதமான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.கோவிலின் பின்புறம் வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை உள்ளது.
கோவிலின் முக்கிய அம்சம் என்னவெனில் அங்கு நிறைந்திருக்கும் மிகவும் சிக்கலான வசீகரம் நிறைந்த மர வேலைப்பாடுகள் ஆகும்.புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் ஜப்பானிய ஓவியங்களை பார்வையாளர்கள் காணும் காட்சிக்கூடம் கோயிலில் உள்ளது. இந்த அற்புதமான கோவிலின் சூழலையும் அமைதியையும் பார்வையாளர்கள் அனுபவிக்கின்றனர். இப்படியாக புத்தகயாவை சுற்றி நீங்கள் பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன. புத்தர் ஞானம் அடைந்த இடத்தோடு கூட , சுற்றிலும் இருக்கும் அனைத்து கோவில்களையும் நிதானமாக கண்டுணர்ந்து புத்தரின் ஆசியை பெறுங்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola