Mutton Biryani: நாளைக்கு சண்டே.. சுவையான மொகல் மட்டன் பிரியாணி செஞ்சு அசத்துங்க

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

Continues below advertisement

மட்டன் - 1 கிலோ,  பாசுமதி அரிசி - 3 கப்,  தயிர் - 1 1/2 கப்,  வெங்காயம் - 4 (வெட்டியது),இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 6, மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்,   தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன், சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன், கரம்மசாலா - 1 டீஸ்பூன், பட்டை - 2 ,மிளகு - 6, கிராம்பு - 5 ஏலக்காய் - 5 பிரியாணி இலை - 1 குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது) முந்திரி - 15 உலர் திராட்சை - 20 நெய் - தேவைக்கு ஏற்ப எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

மட்டனை பொடியாக நறுக்கி நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 

கழுவிய மட்டனில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மிக்ஸ் செய்து,  1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்கி விடவேண்டும்.  பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.  பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

 ஊற வைத்துள்ள மட்டனை அதில் சேர்த்து 5 நிமிடம், வதக்கி விட வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் கலக்குமாறு வதக்கி, பின் மூடி போட்டு,  10 நிமிடம் தீயை குறைவாக வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

இன்னொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் முந்திரி, உலர் திராட்சையை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கி விட வேண்டும். பாசுமதி அரிசியைதண்ணீரில் கழுவி, குக்கரில் சேர்த்து  அரிசியை 5 நிமிடம் வறுத்து விட வேண்டும். 

மற்றொரு அடுப்பில் உள்ள மட்டன் பாதி அளவு வெந்து கிரேவி பதத்தில் இருக்கும்.  இப்போது மட்டன் கிரேவியை குக்கரில் அரிசியுடன் சேர்த்து நன்றாக கிளரி,  3 கப் தண்ணீர் சேர்த்து, தயிர், உப்பு  தேவையான அளவு சேர்க்க வேண்டும்.  தீயை குறைவாக வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

அரிசி மற்றும் மட்டன்  நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, நெய்யை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும். 

மேலும் படிக்க

BJP MP: கீழ்த்தரமான வார்த்தைகளை சொல்லி திட்டிய பா.ஜ.க. எம்பி.. மனம் நொந்த பகுஜன் சமாஜ் எம்பி

Yercaud Traffic: ஏற்காடு போறீங்களா நாளை? போக்குவரத்தில் அதிரடி மாற்றம் - காரணம் இதுதான்!

Continues below advertisement
Sponsored Links by Taboola