Calcium Essential : பிரசவத்துக்குப் பின் தாய்மார்களுக்கு இந்த சத்துக்குறைபாடா? தீவிரமாக கவனிக்க வேண்டியவை..
இயற்கையாக நிகழும் அந்த ஒரு குழந்தை பேறுக்கு அவர்கள் உடல் அளவில் தயாராகும்போது, அதற்குப் பின்னான காலத்திலும் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதனை வளர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
Continues below advertisement

பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் அவசியம்
பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாமல் பிரசவத்திற்கு பின்னரும் உடலை மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். இயற்கையாக நிகழும் அந்த ஒரு குழந்தை பேறுக்கு அவர்கள் உடல் அளவில் தயாராகும் போது, அதற்குப் பின்னான காலத்திலும் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதனை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஆகவே உடலளவில் அவர்கள் விட்டமின்களை சேர்த்து சக்தி மிக்கவர்களாக தங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுவாக
அசைவ உணவை விட சைவ உணவு பெண்களுக்கு போதுமான கால்சியத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.
இயற்கையான சுகப்பிரசவம் மற்றும் நல்ல சக்தி மிக்க குழந்தை குறைபாடு இல்லாத குழந்தை பிறப்பதற்கு கால்சியம் மிக மிக அவசியமாகும்
கர்ப்ப காலத்தில், ஒரு தாயின் உடல் மிகப்பெரும் வலிகளை தாங்கும் தியாகத்தின் இறுதிச் செயலைச் செய்கிறது . ஒரு தாய் சரியான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளவில்லை என்றால், அவளுடைய உடலில் உள்ள அந்த ஊட்டச்சத்தை அகற்றி குழந்தைக்கு ஊட்டும் செயலில் கால்சியம் ஈடுபடுகிறது.
கர்ப்ப காலத்தில், பெண் உடலில் வைட்டமின் டி, இரும்பு, ஃபோலிக் ஆசிட், கொழுப்பு அமிலங்கள், செலினியம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடுகிறது. மேலும், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தால், அவளுக்கு கால்சியம் ஏராளமாக தேவைப்படும், ஏனெனில் பாலூட்டும்போது உடலுக்கு இந்த தாது அதிகமாக தேவைப்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் என்பது அறிந்ததே. சத்துமிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளும் அதேவேளை மருத்துவர்களின் பரிந்துரையின்படி தாய்மார்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் அளவை குறிப்பிட்ட உணவு மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்துவரும் பட்சத்தில் தாயின் எலும்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த எலும்பு நோய்களை தடுக்க கால்சியம் மிக மிக அவசியமாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதல் குழந்தை வளர்ப்பு அறிக்கையின்படி, வளரும் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து கால்சியத்தை எடுத்துக்கொள்வதால், பாலூட்டும்போது பெண்கள் 3-5% எலும்பை இழக்கிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குறைவான ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறார்கள், இது எலும்புகளைப் பாதுகாக்கிறது, இது உடலுக்குத் தேவையான அனைத்தையும் நிரப்புவதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் 1000 மில்லிகிராம் கால்சியத்தை உட்கொள்வது அவசியம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அசைவ உணவை விட சைவ உணவு உடலுக்கு போதுமான கால்சியத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சைவ உணவுகளான (பனீர், தயிர், பால் மற்றும் பால் பொருட்கள் நிறைந்தது) ஒரு நாளைக்கு சுமார் 600-700 மில்லிகிராம் கால்சியம் மட்டுமே வழங்குகிறது. செயற்கையான மருந்து மாத்திரைகள் பவுடர்கள் என சப்ளிமெண்ட்ஸை நம்புவதற்குப் பதிலாக, தாய்மார்கள் கால்சியம் நிறைந்த இயற்கையான உணவுகளை உண்ண வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், நீங்கள் உணவில் கூடுதல் சேர்க்க விரும்பினால், மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுக்கொள்ளலாம்.
Continues below advertisement
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.