<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>food</title><atom:link href="https://tamil.abplive.com/food/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 07:34:12 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/vinayagar-chathurthi-2026-poornam-kozhukattai-recipe-pachcharisi-thengai-vellam-274330</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/vinayagar-chathurthi-2026-poornam-kozhukattai-recipe-pachcharisi-thengai-vellam-274330#respond</comments><pubDate>Sat, 12 Sep 2026 19:32:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/vinayagar-chathurthi-2026-poornam-kozhukattai-recipe-pachcharisi-thengai-vellam-274330</guid><description><![CDATA[&lt;p&gt;செப்டம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாப்பட இருக்கிறது. அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர். வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பெண்கள் அதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; என்றாலே, விநாயகரின் சிலை, அருங்கம்புல், பலகாரம்தான் அனைவருக்கும் நினைவுவரும். முக்கியமாக பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையை அன்றைய தினம் செய்வார்கள். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை என பல கொழுக்கட்டைகளை செய்வார்கள். இதில் பூரண கொழுக்கட்டையை பலர் விரும்பி செய்வார்கள். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;சுவையான மற்றும் பூரணம் வெளிய வராத கொழுக்கட்டை செய்வதற்கான எளிய செய்முறை இதோ:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மேல் மாவிற்கு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பச்சரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - 1 கப்&lt;/p&gt;
&lt;p&gt;தண்ணீர் - 14 கப்&lt;/p&gt;
&lt;p&gt;நல்லெண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி&lt;/p&gt;
&lt;p&gt;உப்பு - ஒரு சிட்டிகை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உள் பூரணத்திற்கு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;துருவிய தேங்காய் - 1 கப்&lt;/p&gt;
&lt;p&gt;பொடித்த வெல்லம் - 3/4 கப்&lt;/p&gt;
&lt;p&gt;ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி&lt;/p&gt;
&lt;p&gt;நெய் - 1 தேக்கரண்டி&lt;/p&gt;
&lt;h2&gt;செய்முறை&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1. பூரணம் தயாரித்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கடாயில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயைச் சேர்த்து 1-2 நிமிடங்கள் லேசாக வதக்கவும். அதில் பொடித்த வெல்லம் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். வெல்லம் உருகி, தேங்காயுடன் சேர்ந்து கெட்டியாக வரும்போது ஏலக்காய் தூள் தூவி இறக்கி ஆறவைக்கவும். (பூரணம் ஆறினால் மேலும் கெட்டியாகும்).&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2. மேல் மாவு தயாரித்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் நெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், தீயைக் குறைத்து பச்சரிசி மாவை சிறுகச் சிறுகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, தட்டு போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். மாவு மிதமான சூட்டிற்கு வந்ததும், கைகளில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவி மாவை சப்பாத்தி மாவு போல மென்மையாக பிசைந்து கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3. மோதகம் செய்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, கிண்ணம் போல நடுவில் பள்ளம் செய்து கொள்ளவும். அதன் நடுவில் ஒரு சிறிய உருண்டை தேங்காய் பூரணத்தை வைக்கவும். மாவை மேல்நோக்கி ஒன்றாகக் கொண்டுவந்து, கூம்பு வடிவத்தில் கூர்மையாக மூடி ஒட்டவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தட்டில் துணி அல்லது எண்ணெய் தடவிய வாழைிலை விரித்து, செய்த மோதகங்களை வைக்கவும். மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை தயார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/vinayagar-chaturthi-2026-date-muhurat-pooja-tithi-timings-visarjan-date-all-details-274005&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/9855c2caf7efb5a35781fc013bcd7a341789215020148113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-vinayagar-chathurthi-kozhukattai-neivedyam-tnn-273349</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-vinayagar-chathurthi-kozhukattai-neivedyam-tnn-273349#respond</comments><pubDate>Wed, 2 Sep 2026 21:58:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-vinayagar-chathurthi-kozhukattai-neivedyam-tnn-273349</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு முக்குறுணி விநாயகருக்கு&amp;nbsp; கொழுக்கட்டை நெய்வேத்தியம் இல்லை - கோயில் நிர்வாகம் அறிவிப்பு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் சிறப்பு கொழுக்கட்டை நெய்வேத்தியம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் சிறப்பு கொழுக்கட்டை நெய்வேத்தியம் மற்றும் விசேஷ பூஜை, அலங்காரங்கள் இந்த ஆண்டு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மற்றும் கொழுக்கட்டை நெய்வேத்தியம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அருள்மிகு முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்பட்டு, விசேஷ அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வரும் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி விநாயகருக்கு வழக்கமான கொழுக்கட்டை நெய்வேத்தியம் மற்றும் விசேஷ பூஜை, அலங்காரங்கள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மற்றும் கொழுக்கட்டை நெய்வேத்தியம் நடைபெறும் என்றும் கோயில் இணை ஆணையர்&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/3e3ae83985158daa08b1041f4049a050_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/what-happens-to-your-body-when-you-quit-sugar-for-a-month-5-changes-you-may-notice-health-update-272938</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/what-happens-to-your-body-when-you-quit-sugar-for-a-month-5-changes-you-may-notice-health-update-272938#respond</comments><pubDate>Sun, 30 Aug 2026 09:19:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/what-happens-to-your-body-when-you-quit-sugar-for-a-month-5-changes-you-may-notice-health-update-272938</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Sugar Cut: &lt;/strong&gt;ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உணவில் சர்க்கரை கட்..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இன்றை தினசரி வாழ்க்கை பயன்பாட்டில் உள்ள உணவு மற்றும் பானங்களில் சர்க்கரை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தேநீர், காஃபி, இனிப்புகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் பல பொட்டல உணவுகளில் சர்க்கரை இடம்பெற்றுள்ளது. இது பல்வேறு விதங்களில் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கருத்துகளை அறிந்து, உணவுப்பொருட்களில் சர்க்கரையை தவிர்ப்பது என்பது தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒருவர் ஒரு மாதத்திற்கு சர்க்கரையைத் தவிர்க்க முடிவு செய்தால், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம். ஆரம்பத்தில், இனிப்புகளின் மீதான ஆசை வலுவாக இருக்கலாம்,&amp;nbsp; சிலருக்கு அசௌகரியமும் ஏற்படலாம். இருப்பினும், காலப்போக்கில், இனிப்புகளின் மீதான ஆசை குறையக்கூடும். ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்த பிறகு உடலில் காணக்கூடிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/do-you-often-get-stones-details-in-pics-272841&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சுகர் கட்டால் ஏற்படும் டாப் 5 மாற்றங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;1. இனிப்பு சாப்பிடும் ஆசை படிப்படியாக குறையக்கூடும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தேநீர், இனிப்புகள், சாக்லேட், பிஸ்கட் அல்லது பிற உணவுகள் மூலம் நீங்கள் தினமும் அதிக சர்க்கரையை உட்கொண்டால், அதைத் திடீரென நிறுத்துவது சற்று கடினமாக இருக்கலாம். ஆரம்பத்தில், உங்களுக்கு மீண்டும் மீண்டும் சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படலாம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, உங்கள் உடல் குறைந்த சர்க்கரைக்கு பழகிவிடும். பழங்கள் போன்ற இயற்கையாகவே இனிப்பான உணவுகள் கூட முன்பை விட இனிப்பாகத் தோன்றலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/q_Rz-g2c7Fk?si=zBUA4eFZ9ZZZuicO&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;2. உடல் எடையைக் குறைக்க உதவலாம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அதிக சர்க்கரை கொண்ட உணவுகளில் கலோரிகளும் அதிகம். குளிர்பானங்கள், இனிப்புகள், கேக்குகள் மற்றும் சர்க்கரை கலந்த பொட்டல உணவுகளைக் குறைப்பது உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும். சமச்சீரான உணவைப் பின்பற்றி, ஒரு மாதத்திற்கு இந்த உணவுகளைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். இருப்பினும், உடல் எடையைக் குறைக்க சர்க்கரையை மட்டும் தவிர்ப்பது மட்டுமே ஒரே வழி அல்ல.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;3. நாள் முழுவதும் ஆற்றலில் மாற்றத்தை உணரக்கூடும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அதிக சர்க்கரை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தற்காலிகமாக ஆற்றலை அளித்தாலும், அது பிற்காலத்தில் சோர்வுக்கும் வழிவகுக்கும். அதிக சர்க்கரை உள்ள உணவுகளைக் குறைப்பது உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி, நாள் முழுவதும் ஏற்படும் ஆற்றல் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கும். சரியான அளவு சாப்பிடுவதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/world/jumped-off-bus-climbed-500-steps-how-indian-origin-couple-survived-nepal-floods-world-news-272929&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;4. பற்களுக்கு நன்மை பயக்கலாம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையைப் பயன்படுத்தும்போது, ​​அது பற்களைச் சேதப்படுத்தும் அமிலங்களை உற்பத்தி செய்யக்கூடும். எனவே, ஒரு மாதத்திற்கு இனிப்புகள், சர்க்கரை பானங்கள் மற்றும் பிற சர்க்கரை உணவுகளைக் குறைப்பது பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் பல் துலக்குவதும், நல்ல வாய் சுகாதாரத்தைப் பேணுவதும் அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;5. உணவுப் பழக்கங்களை மேம்படுத்த முடியும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒரு மாதத்திற்கு சர்க்கரையைத் தவிர்ப்பது, நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஆரம்பத்தில் இது கடினமாகத் தோன்றினாலும், சர்க்கரை மீதான உங்கள் வேட்கை படிப்படியாகக் குறையக்கூடும். மேலும், சேர்க்கப்பட்ட சர்க்கரைக்காக உணவு பழக்கவழக்கங்களில் நீங்கள் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். இது நீண்ட காலத்திற்கு உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த உதவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/30/af5b45095c39c5127390c2594a94714d1788061653376732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/fsssai-bans-lg-and-everest-brand-compounded-hing-sale-over-on-sub-standard-quality-272930</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/fsssai-bans-lg-and-everest-brand-compounded-hing-sale-over-on-sub-standard-quality-272930#respond</comments><pubDate>Sun, 30 Aug 2026 07:10:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/fsssai-bans-lg-and-everest-brand-compounded-hing-sale-over-on-sub-standard-quality-272930</guid><description><![CDATA[&lt;p&gt;உணவுச்சந்தையில் பிரபலமான எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லால்ஜி கோது அண்ட் கம்பெனி ஆகியவற்றின் தயாரிப்புகள் தரம் குறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்நிறுவனங்கள் தங்க பெருங்காயப் பொடியை விற்பனை செய்ய &amp;nbsp;தடை விதித்து உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சந்தையில் விற்கப்படும் பொருட்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உணவுச்சந்தையில் உப்பு தொடங்கி பல்வேறு விதமான உணவுப் பொருட்கள், சமையலறை சாதனங்கள் என அனைத்தும் பல விதமான நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுகின்றன.&amp;nbsp; இந்தியாவில் FSSAI எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் இந்நிறுவனம் ஆய்வக சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.&lt;iframe title=&quot;MK Stalin Security | ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு Z பிரிவு SECURITY வாபஸ்! திமுக-வினர் அதிருப்தி&quot; src=&quot;https://www.youtube.com/embed/_wdZ9wv6GWQ&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்படியாக சமீபத்தில் FSSAI நிறுவனம் நடத்திய ஆய்வில் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் மற்றும் லால்ஜி கோது அண்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் பெருங்காயத் தூள் தயாரிப்புகள் தரம் குறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளப் பதிவு மூலம் FSSAI வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிக்கலில் எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத்தூள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எவரெஸ்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கலப்பு பெருங்காயத்தின் (பெருங்காயத் தூள்) பல்வேறு வகைகளின் விற்பனைக்கு FSSAI உடனடியாகத் தடை விதித்துள்ளது. இதன் பெருங்காயத்தூள் தரமற்றவையாக இருந்ததோடு, தவறான தகவல்களுடன் முத்திரையிடப்பட்டதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆயுர்வேத அல்லது மூலிகை மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டின் படி ஆல்கஹாலில் கரையக்கூடிய சாற்றின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 5 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டிய நிலையில் &amp;nbsp;உணவு பாதுகாப்பு விதிகளை அந்நிறுவனம் மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் நிறுவனத்தில் மஞ்சள் நிற பெருங்காயத்தூள் சதவிகிதம் 3.29 மற்றும் கருப்பு நிற பாக்கெட்டின் சதவிகிதம் 4.4 சதவிகிதமாக இருந்தது தெரிய வந்தது.&amp;nbsp;எவரெஸ்ட் நிறுவனம் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேசமயம் எல்ஜி நிறுவனத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனத்தின் பெருங்காயத் தூள் மற்றும் கட்டி பெருங்காயம் தரம் குறைந்ததாகவும் கலப்படம் செய்யப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பெருங்காயத்தில் உள்ள மாவுச்சத்தின் (ஸ்டார்ட்ச்) அளவு &amp;nbsp;எடையின் அடிப்படையில் 1 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இதில் 15 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டதால் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மூலிகையாக வகைப்படுத்தப்பட்டுள்ள பெருங்காயத்தில் மாவுச்சத்து அதிகமாக இருந்தால் &amp;nbsp;மருத்துவ வீரியம் குறைவதோடு, சமையல் தரம் மற்றும் நுகர்வோர் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். சந்தையில் விற்கப்படும் தூள் பெருங்காயத்தில் கோதுமை மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கப்படுவது இயல்புதான் என்றாலும், அது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது பிரச்னைகள் ஏற்படுகிறது. பெருங்காயத்தின் உண்மையான மருத்துவக் குணங்கள் அதன் Oleogum-resin எனப்படும் பசை பிசினில் தான் உள்ளது. மாவுச்சத்து அதிகமாகும்போது இந்த பிசின் அளவு குறைகிறது. இதனால் வாயு, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/what-happens-if-you-eat-guava-leaves-on-an-empty-stomach-272642&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/30/9f6d264473538900bef26dcf4c8d910017880529265981322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-arulmigu-meenakshi-sundareswarar-thirukalyanam-religious-events-ban-tnn-272321</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-arulmigu-meenakshi-sundareswarar-thirukalyanam-religious-events-ban-tnn-272321#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 23:19:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-arulmigu-meenakshi-sundareswarar-thirukalyanam-religious-events-ban-tnn-272321</guid><description><![CDATA[&lt;p&gt;பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் &amp;nbsp;சில பகுதிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு மதுரை அமர்வு உத்தரவு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை சேர்ந்த தாண்டீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், &quot; மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளையால் வழங்கப்படும் விருந்து &amp;nbsp;பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணை பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்துள்ளதால், திருக்கல்யாண விருந்தை மதுரை சேதுபதி பள்ளி மைதானத்தில் வழங்குவதில் சிரமம் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் &amp;nbsp;சில பகுதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்&quot;என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/14/6f94a776d2f4355a8fbf614d334b3353_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை ஆவணி திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்.. பக்தர்கள் பரவசம் !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-sivaperuman-pittukku-mansumantha-leelai-tnn-272318</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-sivaperuman-pittukku-mansumantha-leelai-tnn-272318#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 22:57:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-sivaperuman-pittukku-mansumantha-leelai-tnn-272318</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா - 9ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை விமர்சையாக நடைபெற்றது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரைத் திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிவபெருமானின் &amp;nbsp;லீலைகளை எடுத்துக்கூறும் வகையிலான நாள்தோறும் ஒவ்வொரு லீலைகள் நடைபெற்று அதன் பின்னர் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றுவருகிறது. இதையடுத்து &amp;nbsp;சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது போன்ற சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 7ஆம் நாள் நிகழ்வாக சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 8ஆம்நாள் நிகழ்வாக இரவு நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பிட்டுக்கு மண் சுமந்த லீலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதன் தொடர்ச்சியாக விழாவின் சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது. &amp;nbsp;இதற்காக கோவிலில் இருந்து சுந்தரேஸ்வரர், மீனாட்சிஅம்மன், பிரியாவிடையுடன் ஆரப்பாளையம் வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினர். மேலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், திருவாதவூர் அருளாளர் மாணிக்கவாசகர் ஆகியோரும் எழுந்தருளியிருந்த சேதுபதி மண்டபத்தில் புட்டுத் திருவிழா பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் சுவாமி வேடமணிந்த &amp;nbsp;சிவாச்சாரியாரும், மன்னர் வேடமணிந்த சிவாச்சாரியாரும் சுவாமியின் பிட்டுக்கு மண்சுமந்த லீலையை நிகழ்த்தினர். பின்னர் வந்தியக் கிழவிக்கும், மக்களுக்கும் சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பது போல பூஜைகள் நடந்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. &amp;nbsp;விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி பல்வேறு வகையான புட்டுக்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/24/6250805d1aaa68b077f7f416632d78461787592404561184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/fssai-bans-dabur-from-selling-honey-ghee-with-100-percent-claims-food-safety-protocal-270008</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/fssai-bans-dabur-from-selling-honey-ghee-with-100-percent-claims-food-safety-protocal-270008#respond</comments><pubDate>Tue, 4 Aug 2026 10:21:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/fssai-bans-dabur-from-selling-honey-ghee-with-100-percent-claims-food-safety-protocal-270008</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;FSSAI Bans Dabur Products:&lt;/strong&gt; டாபர் நிறுவனத்தின் தேன் மற்றும் நெய் போன்ற பொருட்களை விற்பனை செய்ய விதித்த தடைக்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;டாபர் பொருட்களுக்கு அதிரடி தடை..!&lt;/h2&gt;
&lt;p&gt;டாபர் நிறுவனம் தேன் மற்றும் நெய் போன்ற பொருட்களை விற்பனை செய்ய &amp;nbsp;உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், &amp;rdquo;நிறுவனத்தின் பொருட்களின் மீது 100 சதவிகிதம் என்ற சொல் தெளிவற்றதாகவும், சரிபார்க்க முடியாததாகவும், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடியதாகவும் இருப்பதால் , அத்தகைய கூற்றுகளைக் கொண்ட பல உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்&amp;rdquo; என டாபர் இந்தியாவுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. அதன்படி 100 சதவிகிதம் என்ற கூற்றைக் கொண்டுள்ள தேன், ஆப்பிள் சைடர் வினிகர், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், இளநீர் மற்றும் தேங்காய்ப் பால் உள்ளிட்ட பொருட்களுக்குத் தனது தடை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-mistake-can-ruin-an-engine-details-in-pics-270005&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;டாபர் பொருட்களில் கலப்படமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;FSSAI அறிக்கையின்படி, டாபரின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட தயாரிப்புகள் &amp;rdquo;100 சதவிகிதம் இயற்கையானது, 100 சதவிகிதம் தூய்மையானது, 100 சதவிகிதம் தூய்மைக்கு உத்தரவாதம், 100 சதவிகிதம் ஆர்கானிக் மற்றும் 100 சதவிகித இளநீர்&quot; போன்ற கூற்றுகளைக் கொண்டிருந்தன. இத்தகைய கூற்றுகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறைகள், 2018-ஐ மீறுவதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த நடவடிக்கை பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டவை அல்லது பாதுகாப்பற்றவை என்ற குறிக்காது,&amp;nbsp; FSSAI-இன் ஆட்சேபனைகள், அவை லேபிளிடப்பட்டு சந்தைப்படுத்தப்படும் விதம் தொடர்பானவை மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/pQTvSsHdB5Y?si=yAm2oM5ipjRxfd1Z&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;ldquo;100 சதவிகித&amp;rdquo; விவகாரம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஒழுங்குமுறை ஆணையம், மே 2025-ல், உணவு வணிகங்கள் தங்கள் லேபிள்கள், பேக்கேஜிங் மற்றும் விளம்பரப் பொருட்களில் &quot;100 சதவிகிதம்&quot; என்ற கூற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டு, தொழில் துறை முழுவதற்குமான ஓர் அறிவுரையை வெளியிட்டிருந்தது. தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் அந்தச் சொல் வரையறுக்கப்படவில்லை என்றும், அது முழுமையான தூய்மை அல்லது மேன்மை குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குற்றச்சாட்டுகள் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முறையான FSSAI அங்கீகாரம் இல்லாமல், டாபர் ஹிமாலயன் ஆர்கானிக் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் டாபர் ஆர்கானிக் தேன் ஆகியவை ஜெய்விக் பாரத் சின்னத்தைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவாம். ஜெய்விக் பாரத் முத்திரையானது, சான்றளிக்கப்பட்ட இயற்கை உணவை அடையாளம் காணப் பயன்படுகிறது. மேலும் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை தரநிலைகளுக்கு இணங்குவதைக் குறிக்கிறது. 100 சதவிகித தூய்மை என்ற கூற்றுடன் சந்தைப்படுத்தப்பட்ட டாபர் ஹோம்மேட் தேங்காய் பாலையும் ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. தவறான 100 சதவிகிதம் என்ற கூற்றுகளை நிறுத்துமாறு டாபர் நிறுவனத்திற்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்ததாகவும், ஆனால் அந்நிறுவனம் திருப்திகரமான திருத்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் FSSAI தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;டாபர் நிறுவனம் விளக்கம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;FSSAI-இடமிருந்து அறிவிப்பு கிடைத்திருப்பதாகவும், ஒழுங்குமுறை ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளடக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும் டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், &quot;FSSAI-இடமிருந்து எங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எங்கள் இணையதளத்தில் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்&quot; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/04/47590f8695c9335eaedd177ac27aa6e21785819021484732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dangerous-foods-avoid-drinking-alcohol-severe-heartburn-digestion-problems-268799</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dangerous-foods-avoid-drinking-alcohol-severe-heartburn-digestion-problems-268799#respond</comments><pubDate>Fri, 24 Jul 2026 09:27:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dangerous-foods-avoid-drinking-alcohol-severe-heartburn-digestion-problems-268799</guid><description><![CDATA[&lt;p&gt;மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனாலும் அதை மீறி மது அருந்துபவர்கள், மதுவுடன் சேர்ந்து துணைக்கு சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். ஆனால் மது அருந்திய பிறகு சில உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மது அருந்துவது உடலுக்குக் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், மது அருந்துபவர்கள் அதனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் சில வகையான துணை உணவுகள் (Side dishes), கடுமையான நெஞ்செரிச்சல், ஜீரணக் கோளாறுகள் மற்றும் உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;அகத்தி கீரை மற்றும் கீரை வகைகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;மது அருந்திய பிறகு கீரை வகைகளைச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, அகத்தி கீரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மதுவோடு அகத்தி கீரை சேரும் போது அது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, மாரடைப்பு வரை கொண்டு சென்று உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்:&lt;/h3&gt;
&lt;p&gt;மது குடித்த பிறகு பால் அல்லது பாலாடைக்கட்டி (Cheese) போன்ற பால் பொருட்களை உட்கொள்வது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை முற்றிலும் பாதிக்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;பர்கர் மற்றும் பேக்கிங் உணவுகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;அதிக கலோரிகளும் கொழுப்பும் கொண்ட பர்கர் போன்ற உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தும். மது அருந்துவதற்கு முன்போ அல்லது பின்புறமோ பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட பேக்கிங் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;அசைவ உணவுகள் மற்றும் முட்டை:&lt;/h3&gt;
&lt;p&gt;மது அருந்தும்போது பெரும்பாலானோர் அசைவ உணவுகள் மற்றும் முட்டையைத் தான் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், வாயுத் தொல்லை (Gas problem) மற்றும் ஆசிட் ரிப்ளக்ஸ் (Acid reflux) பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;எண்ணெயில் பொரித்த உணவுகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை மதுவோடு சேர்த்துச் சாப்பிடுவது செரிமானத்தைப் பாதிப்பதோடு, உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டை (Dehydration) தீவிரமாக்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;சாக்லேட்:&lt;/h3&gt;
&lt;p&gt;சாக்லேட்டில் உள்ள கொக்கோ மற்றும் காஃபின் உடலின் வாயுத் தொல்லையை அதிகரிக்கும். மதுவினால் ஏற்கனவே வயிற்றில் ஆசிட் சுரப்பு அதிகமிருக்கும் சூழலில், சாக்லேட் சாப்பிடுவது வயிற்றைக் கடுமையாகப் பாதிக்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்கள்:&lt;/h3&gt;
&lt;p&gt;ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட், மதுவினால் ஏற்படும் ஆசிட் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி, உடலில் உள்ள நீர்ச்சத்தையும் வேகமாகப் போக்கிவிடும்.&lt;/p&gt;
&lt;h3&gt;அதிக உப்பு மற்றும் காரமான உணவுகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;அதிக சோடியம் நிறைந்த உப்பு நொறுக்கு தீனிகள் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் மது அருந்தும் தூண்டுதலை உண்டாக்கும். அதேபோல, காரமான உணவுகள் வயிற்றின் உட்புறச் சுவர்களைப் பாதித்துச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.&lt;/p&gt;
&lt;h2&gt;மருத்துவர்களின் அறிவுரை:&lt;/h2&gt;
&lt;p&gt;பொதுவாகவே மது அருந்துவதைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. மீறி மது அருந்தினாலும், அதன்பின் உட்கொள்ளும் உணவுகள் மிக எளிதாக ஜீரணமாகக் கூடியவையாக இருப்பது அவசியம். நொறுக்கு தீனிகள் மற்றும் ஆபத்தான உணவுச் சேர்க்கைகளைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற உடல்நலச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: இந்தச் செய்தியில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியான சந்தேகங்களுக்குத் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/f6e5bc6e068ac198708d541aee17e08e1784865385033194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-sarguru-football-world-cup-idli-celebration-tnn-268724</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-sarguru-football-world-cup-idli-celebration-tnn-268724#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 15:53:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-sarguru-football-world-cup-idli-celebration-tnn-268724</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : கால்பந்து உலகக் கோப்பை தொடர், பரபரப்பான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த உலகக் கோப்பை கொண்டாட்டத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடும் வகையில், புதுச்சேரியின் பிரபலமான தனியார் உணவகம் கால்பந்து வடிவில் இட்லியை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;கால்பந்து வடிவில் இட்லி&lt;/h2&gt;
&lt;p&gt;உலகமே கூர்ந்து கவனித்த கால்பந்து உலகக் கோப்பை தொடர், விறுவிறுப்பான இறுதிப் போட்டியுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தொடரின் கிளைமாக்ஸில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களைக் கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில், இந்த உலகக் கோப்பை உற்சாகத்தைத் தனது பாணியில் வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்த புதுச்சேரியின் பிரபல &amp;lsquo;சற்குரு&amp;rsquo; தனியார் உணவகம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் &amp;lsquo;கால்பந்து வடிவ இட்லி&amp;rsquo; தயாரித்து வழங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;இட்லியா? கால்பந்தா? &amp;ndash; அசர வைக்கும் வடிவமைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;சாதாரண இட்லிகளைப் போலன்றி, கால்பந்தின் வடிவத்தை அப்படியே பிரதியெடுக்கும் வகையில் இந்தச் சிறப்பு இட்லி வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;வடிவமைப்பு: வழக்கமான வெள்ளை நிற இட்லியின் மேற்பரப்பில், உண்மையான கால்பந்தில் இருப்பது போன்ற கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டங்களின் டிசைன் அச்சு அசலாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;ரசிகர்கள் வரவேற்பு: பார்ப்பதற்கே உண்மையான கால்பந்து போலக் காட்சியளிக்கும் இந்த இட்லியை, உணவகத்திற்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சுவைத்து மகிழ்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;உணவக நிர்வாகம் கூறியது என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;இதுகுறித்து உணவக நிர்வாகத்தினர் பேசுகையில்: &quot;உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பது விளையாட்டுப் பிரியர்களுக்கு மிகப்பெரிய திருவிழா. அந்த உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, எங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் வழங்க விரும்பினோம். அதன் விளைவாகவே இந்த &amp;lsquo;கால்பந்து வடிவ இட்லி&amp;rsquo; யோசனை உதித்தது.&quot;&lt;/p&gt;
&lt;h2&gt;இணையத்தில் வைரல் - பொதுமக்கள் பாராட்டு&lt;/h2&gt;
&lt;p&gt;விளையாட்டையும் நமது பாரம்பரிய உணவான இட்லியையும் இணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுவாரசியமான முயற்சிக்கு புதுச்சேரியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்:&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த கால்பந்து இட்லியின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்தச் சிறப்பு இட்லியை நேரில் பார்த்துச் சுவைப்பதற்காகவே உணவகத்திற்குத் திரண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளூர் தொழில்முனைவோரின் இந்த அளப்பரிய படைப்பாற்றல் மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் உத்தியைப் புதுச்சேரி மக்களும் சமூக வலைதளவாசிகளும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். உலகக் கோப்பையின் ஆட்டக் களம் தந்த உற்சாகம், தற்போது புதுச்சேரி உணவகத்தின் தட்டிலும் &amp;lsquo;கால்பந்து இட்லி&amp;rsquo;யாக மணக்கத் தொடங்கியுள்ளது!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/780fcd1123402878cc6342af9fffc5dc1784802073809194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/how-does-water-get-inside-a-coconut-it-s-no-mystery-just-nature-s-amazing-science-tnn-267835</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/how-does-water-get-inside-a-coconut-it-s-no-mystery-just-nature-s-amazing-science-tnn-267835#respond</comments><pubDate>Fri, 17 Jul 2026 07:22:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/how-does-water-get-inside-a-coconut-it-s-no-mystery-just-nature-s-amazing-science-tnn-267835</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? விதைக்குள் உருவாகும் &amp;lsquo;திரவ உணவு&amp;rsquo; முதல் சுவையான இளநீர் வரை தேங்காயின் உள்ளே நடக்கும் வியப்பூட்டும் உயிரியல் செயல்முறை பற்றி தெரியுங்களா?&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காயை உடைத்தவுடன் உள்ளே இருக்கும் தண்ணீரைப் பார்த்து, &amp;ldquo;இந்தத் தண்ணீர் எப்படி தேங்காய்க்குள் வந்தது?&amp;rdquo; என்ற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கும். மரத்தின் வேர்கள் உறிஞ்சும் தண்ணீர் அப்படியே தேங்காய்க்குள் சேமிக்கப்படுகிறதா? அல்லது தேங்காயின் ஓடு தண்ணீரை வெளியில் இருந்து உறிஞ்சுகிறதா? அறிவியல் கூறும் உண்மை இதைவிட மிகவும் சுவாரசியமானது. தேங்காய்க்குள் இருக்கும் திரவம் வெறும் சாதாரண தண்ணீர் அல்ல. தாவரவியலில் இது திரவ எண்டோஸ்பெர்ம் எனப்படுகிறது. வளர்ந்து வரும் தேங்காய் விதையின் கருவுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் இயற்கையான உயிரியல் திரவமே நாம் பருகும் தேங்காய் நீர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முதலில் உருவாகுவது இதுதாங்க... விதையின் உள்ளே இருக்கும் திரவப்பகுதி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காய் மரத்தில் பூக்கள் உருவாகி, மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் நடைபெற்ற பிறகு, பழத்தின் உள்ளே இருக்கும் விதைப்பை பகுதியில் வளர்ச்சி தொடங்குகிறது. அப்போது எண்டோஸ்பெர்ம் எனப்படும் ஊட்டச்சத்து திசு உருவாகத் தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காயின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த எண்டோஸ்பெர்ம் ஆரம்பத்தில் திடமான சதைப்பகுதியாக உருவாகாது. முதலில் அது திரவ நிலையில் உருவாகிறது. செல்கள் உருவாகும் முன், எண்டோஸ்பெர்ம் அணுக்கள் பல முறை பிரிந்து, திரவத்துக்குள் சுதந்திரமாக காணப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேங்காயின் உள்ளே ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தேங்கத் தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மரத்திலிருந்து தண்ணீர் எவ்வாறு செல்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மண்ணில் உள்ள தண்ணீரை தேங்காய் மரத்தின் வேர்கள் உறிஞ்சுகின்றன. அந்த நீர், மரத்தின் கடத்துத் திசுக்களின் வழியாக தண்டு, இலைகள் மற்றும் வளர்ந்து வரும் பழம் நோக்கி செல்கிறது. இலைகளில் நடைபெறும் நீராவிப் போக்கு மற்றும் தாவரத்தின் உட்புற நீர்ச் சுழற்சி ஆகியவை இந்த நீர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், வேரிலிருந்து வந்த தண்ணீர் அப்படியே ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கப்படுவது போல் தேங்காய்க்குள் தேங்குவதில்லை. வளர்ந்து வரும் விதையின் உயிரியல் தேவைக்கேற்ப, மரத்திலிருந்து கிடைக்கும் நீர் மற்றும் கரைந்துள்ள சர்க்கரைகள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளிட்ட பொருட்கள் விதையின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, எண்டோஸ்பெர்ம் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தேங்காய் நீர் என்பது தண்ணீருடன் தாவர ஊட்டச்சத்துக்கள் கலந்த இயற்கையான உயிரியல் திரவமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளநீரில் ஏன் இனிப்பு இருக்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இளநீரில் இருக்கும் இனிப்புக்கு முக்கிய காரணம் இயற்கையான சர்க்கரைகள். தேங்காய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் அதன் சர்க்கரை மற்றும் கனிமச் சத்துகளின் அளவு மாறுபடும். பழம் முதிரும் காலத்தில் தேங்காய் நீரின் வேதியியல் அமைப்பும் மாறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காய் நீரில் சர்க்கரைகள் மட்டுமல்லாமல், பொட்டாசியம் உள்ளிட்ட கனிமங்கள், சில அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஹார்மோன்கள் போன்ற பல்வேறு சேர்மங்களும் காணப்படுகின்றன. இதனால் இளநீர் வெறும் சுவையான பானமாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் விதைக்கு தேவையான ஊட்டச்சத்து திரவமாகவும் செயல்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேங்காய் சதை எப்படி உருவாகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காய் வளர வளர, ஆரம்பத்தில் திரவமாக இருந்த எண்டோஸ்பெர்ம் படிப்படியாக திடமான வடிவம் பெறத் தொடங்குகிறது. முதலில் தேங்காயின் உள் சுவரை ஒட்டி மெல்லிய, ஜெல்லி போன்ற சதைப்பகுதி உருவாகும். பின்னர் அது தடிமனாகி, இறுதியில் நாம் சாப்பிடும் வெள்ளை தேங்காய் சதையாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது, திரவ எண்டோஸ்பெர்மில் இருந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் திட எண்டோஸ்பெர்ம் எனப்படும் தேங்காய் சதைப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தேங்காய் முதிரும்போது, உள்ளே இருக்கும் தண்ணீரின் அளவு பொதுவாகக் குறைந்து, சதைப்பகுதி தடிமனாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளநீர் அதிகமாக இருப்பது ஏன்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இளம் தேங்காய், குறிப்பாக இளநீர் பருகப்படும் வளர்ச்சி நிலையில், அதன் உள்ளே திரவ எண்டோஸ்பெர்ம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சதைப்பகுதி இன்னும் முழுமையாகத் தடிமனாகி இருக்காது. எனவே தேங்காயை உடைக்கும்போது அதிக அளவு இளநீர் கிடைக்கிறது. பழம் தொடர்ந்து முதிரும்போது, திரவத்தின் ஒரு பகுதி சதைப்பகுதி உருவாக்கத்திற்கும், விதையின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக முழுமையாக முதிர்ந்த தேங்காய்களில் இளநீர் அளவு குறைவாகவும், திடமான சதைப்பகுதி அதிகமாகவும் காணப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேங்காயை ஆட்டினால் சத்தம் ஏன் கேட்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முழுமையாக முதிர்ந்த தேங்காயில் உள்ள திரவத்தின் அளவு குறையும்போது, உள்ளே வெற்றிடப்பகுதி அல்லது காற்று இடம் உருவாகலாம். இதனால் தேங்காயை ஆட்டும்போது உள்ளே திரவம் அசையும் சத்தம் கேட்கும். அதே நேரத்தில், தேங்காயின் முதிர்ச்சியை அறிய மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் ஒரு வழியாகவும் இந்த சத்தம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு தேங்காயின் வகை, வயது மற்றும் வளர்ச்சி நிலை மாறுபடுவதால், சத்தத்தை மட்டும் வைத்து அதன் தரத்தை முழுமையாகத் தீர்மானிக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தண்ணீர் அல்ல... விதையின் இயற்கை உணவு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால், தேங்காய்க்குள் இருக்கும் நீர் என்பது வெளியில் இருந்து ஓட்டையில் புகுந்த தண்ணீரோ, மழைநீர் சேமிப்போ அல்ல. மரத்தின் வேர் உறிஞ்சும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தாவரத்தின் கடத்துத் திசுக்களின் வழியாக வளர்ந்து வரும் பழத்திற்குச் செல்கின்றன. பின்னர் விதையின் வளர்ச்சிக்குத் தேவையான உயிரியல் செயல்முறைகளின் மூலம், ஊட்டச்சத்து நிறைந்த திரவ எண்டோஸ்பெர்ம் உருவாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் அதே திரவ எண்டோஸ்பெர்மின் ஒரு பகுதி படிப்படியாக திடமடைந்து தேங்காய் சதையாக மாறுகிறது. அதாவது, நாம் பருகும் இளநீர் என்பது தேங்காய் விதையின் வளர்ச்சிக்காக இயற்கை உருவாக்கிய ஒரு திரவ ஊட்டச்சத்து அமைப்பு. ஒரு சிறிய தேங்காயின் உள்ளே நீர் சுழற்சி, தாவர ஊட்டச்சத்து பரிமாற்றம், விதை வளர்ச்சி மற்றும் திசு மாற்றம் என பல அறிவியல் செயல்முறைகள் ஒன்றாக நடைபெறுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு தேங்காயை உடைக்கும் போது கிடைக்கும் இளநீர் &amp;mdash; இயற்கை உருவாக்கிய ஒரு சாதாரண பானம் அல்ல; வளரும் விதைக்காக மரம் தயாரிக்கும் உயிரியல் உணவு!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/17/f9dfbd34675f26ae8ebc91729ea4f43c1784253107758733_original.png" width="220"/></item></channel></rss>