<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!</title><atom:link href="https://tamil.abplive.com/lifestyle/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 12:19:31 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/vinayagar-chathurthi-2026-poornam-kozhukattai-recipe-pachcharisi-thengai-vellam-274330</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/vinayagar-chathurthi-2026-poornam-kozhukattai-recipe-pachcharisi-thengai-vellam-274330#respond</comments><pubDate>Sat, 12 Sep 2026 19:32:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/vinayagar-chathurthi-2026-poornam-kozhukattai-recipe-pachcharisi-thengai-vellam-274330</guid><description><![CDATA[&lt;p&gt;செப்டம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாப்பட இருக்கிறது. அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர். வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பெண்கள் அதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; என்றாலே, விநாயகரின் சிலை, அருங்கம்புல், பலகாரம்தான் அனைவருக்கும் நினைவுவரும். முக்கியமாக பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையை அன்றைய தினம் செய்வார்கள். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை என பல கொழுக்கட்டைகளை செய்வார்கள். இதில் பூரண கொழுக்கட்டையை பலர் விரும்பி செய்வார்கள். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;சுவையான மற்றும் பூரணம் வெளிய வராத கொழுக்கட்டை செய்வதற்கான எளிய செய்முறை இதோ:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மேல் மாவிற்கு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பச்சரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - 1 கப்&lt;/p&gt;
&lt;p&gt;தண்ணீர் - 14 கப்&lt;/p&gt;
&lt;p&gt;நல்லெண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி&lt;/p&gt;
&lt;p&gt;உப்பு - ஒரு சிட்டிகை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உள் பூரணத்திற்கு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;துருவிய தேங்காய் - 1 கப்&lt;/p&gt;
&lt;p&gt;பொடித்த வெல்லம் - 3/4 கப்&lt;/p&gt;
&lt;p&gt;ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி&lt;/p&gt;
&lt;p&gt;நெய் - 1 தேக்கரண்டி&lt;/p&gt;
&lt;h2&gt;செய்முறை&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1. பூரணம் தயாரித்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கடாயில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயைச் சேர்த்து 1-2 நிமிடங்கள் லேசாக வதக்கவும். அதில் பொடித்த வெல்லம் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். வெல்லம் உருகி, தேங்காயுடன் சேர்ந்து கெட்டியாக வரும்போது ஏலக்காய் தூள் தூவி இறக்கி ஆறவைக்கவும். (பூரணம் ஆறினால் மேலும் கெட்டியாகும்).&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2. மேல் மாவு தயாரித்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் நெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், தீயைக் குறைத்து பச்சரிசி மாவை சிறுகச் சிறுகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, தட்டு போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். மாவு மிதமான சூட்டிற்கு வந்ததும், கைகளில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவி மாவை சப்பாத்தி மாவு போல மென்மையாக பிசைந்து கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3. மோதகம் செய்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, கிண்ணம் போல நடுவில் பள்ளம் செய்து கொள்ளவும். அதன் நடுவில் ஒரு சிறிய உருண்டை தேங்காய் பூரணத்தை வைக்கவும். மாவை மேல்நோக்கி ஒன்றாகக் கொண்டுவந்து, கூம்பு வடிவத்தில் கூர்மையாக மூடி ஒட்டவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தட்டில் துணி அல்லது எண்ணெய் தடவிய வாழைிலை விரித்து, செய்த மோதகங்களை வைக்கவும். மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை தயார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/vinayagar-chaturthi-2026-date-muhurat-pooja-tithi-timings-visarjan-date-all-details-274005&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/9855c2caf7efb5a35781fc013bcd7a341789215020148113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!]]></title><link>https://tamil.abplive.com/news/india/indian-railways-hydrogen-train-speed-upgrade-110-kmph-operational-speed-coming-soon-tnn-273736</link><comments>https://tamil.abplive.com/news/india/indian-railways-hydrogen-train-speed-upgrade-110-kmph-operational-speed-coming-soon-tnn-273736#respond</comments><pubDate>Sun, 6 Sep 2026 20:37:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/indian-railways-hydrogen-train-speed-upgrade-110-kmph-operational-speed-coming-soon-tnn-273736</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய இரயில்வே துறை, நாட்டின் முதல் ஹைட்ரஜன் இரயிலை மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ரயில்வே வாரியத்தின் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியுமான (CEO) சதீஷ் குமார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த இரயிலின் செயல்பாட்டு வேகம் இதுவரை மணிக்கு 75 கிலோமீட்டராக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திற்கான சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, தற்போது 110 கிலோமீட்டர் வேகத்தில் இதை இயக்குவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஹைட்ரஜன் இரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரம்பரிய மின்சார இரயில்களைப் போல மேல்நிலை மின் கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறாமல், இந்த இரயில் தன் பயன்பாட்டிற்கான மின்சாரத்தை இரயிலுக்குள்ளேயே உற்பத்தி செய்து கொள்கிறது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையேயான இரசாயன எதிர்வினை மூலம் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இதில் இருந்து நீராவியும் வெப்பமும் மட்டுமே கழிவுகளாக வெளிவருவதால், எவ்வித புகையோ அல்லது கார்பன் உமிழ்வோ ஏற்படுவதில்லை. நாட்டின் முதல் ஹைட்ரஜன் இரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் உள்ள ஜிந்த் - சோனிபட் இடையே அமைந்த 89 கிலோமீட்டர் பாதையில் துவக்கி வைத்தார். தற்போது புதிய பாதைகளில் இந்த இரயிலை இயக்குவது தொடர்பாகவும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு குறித்து வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் மற்றும் இரயில்வேயின் புதிய திட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஹைட்ரஜன் இரயில்கள் மட்டுமின்றி, பயணிகள் வசதிக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்களையும் இரயில்வே துறை விரிவுபடுத்தி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் ஹவுரா மற்றும் காமாக்யா இடையே இயக்கப்பட்டு வரும் சூழலில், மேலும் நான்கு இரயில்களின் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்குத் தயாராக உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 11 ஸ்லீப்பர் இரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) மாதிரியின் கீழ் 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்பு மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரயில்வே அமைப்பில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் நோக்கில், இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும், 2028-ஆம் ஆண்டு உஜ்ஜைனியில் நடைபெறவுள்ள சிம்ஹஸ்தா கும்பமேளா திருவிழாவிற்காக 100 முதல் 125 சிறப்பு இரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.18,500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்தூர் - மன்மாட் இரயில் பாதை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இத்திட்டம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் முழுமையடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/06/ab92d3808a49947a3182daee6eaacfc917887072388171319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-vinayagar-chathurthi-kozhukattai-neivedyam-tnn-273349</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-vinayagar-chathurthi-kozhukattai-neivedyam-tnn-273349#respond</comments><pubDate>Wed, 2 Sep 2026 21:58:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-vinayagar-chathurthi-kozhukattai-neivedyam-tnn-273349</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு முக்குறுணி விநாயகருக்கு&amp;nbsp; கொழுக்கட்டை நெய்வேத்தியம் இல்லை - கோயில் நிர்வாகம் அறிவிப்பு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் சிறப்பு கொழுக்கட்டை நெய்வேத்தியம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் சிறப்பு கொழுக்கட்டை நெய்வேத்தியம் மற்றும் விசேஷ பூஜை, அலங்காரங்கள் இந்த ஆண்டு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மற்றும் கொழுக்கட்டை நெய்வேத்தியம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அருள்மிகு முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்பட்டு, விசேஷ அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வரும் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி விநாயகருக்கு வழக்கமான கொழுக்கட்டை நெய்வேத்தியம் மற்றும் விசேஷ பூஜை, அலங்காரங்கள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மற்றும் கொழுக்கட்டை நெய்வேத்தியம் நடைபெறும் என்றும் கோயில் இணை ஆணையர்&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/3e3ae83985158daa08b1041f4049a050_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/what-happens-to-your-body-when-you-quit-sugar-for-a-month-5-changes-you-may-notice-health-update-272938</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/what-happens-to-your-body-when-you-quit-sugar-for-a-month-5-changes-you-may-notice-health-update-272938#respond</comments><pubDate>Sun, 30 Aug 2026 09:19:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/what-happens-to-your-body-when-you-quit-sugar-for-a-month-5-changes-you-may-notice-health-update-272938</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Sugar Cut: &lt;/strong&gt;ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உணவில் சர்க்கரை கட்..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இன்றை தினசரி வாழ்க்கை பயன்பாட்டில் உள்ள உணவு மற்றும் பானங்களில் சர்க்கரை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தேநீர், காஃபி, இனிப்புகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் பல பொட்டல உணவுகளில் சர்க்கரை இடம்பெற்றுள்ளது. இது பல்வேறு விதங்களில் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கருத்துகளை அறிந்து, உணவுப்பொருட்களில் சர்க்கரையை தவிர்ப்பது என்பது தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒருவர் ஒரு மாதத்திற்கு சர்க்கரையைத் தவிர்க்க முடிவு செய்தால், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம். ஆரம்பத்தில், இனிப்புகளின் மீதான ஆசை வலுவாக இருக்கலாம்,&amp;nbsp; சிலருக்கு அசௌகரியமும் ஏற்படலாம். இருப்பினும், காலப்போக்கில், இனிப்புகளின் மீதான ஆசை குறையக்கூடும். ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்த பிறகு உடலில் காணக்கூடிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/do-you-often-get-stones-details-in-pics-272841&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சுகர் கட்டால் ஏற்படும் டாப் 5 மாற்றங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;1. இனிப்பு சாப்பிடும் ஆசை படிப்படியாக குறையக்கூடும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தேநீர், இனிப்புகள், சாக்லேட், பிஸ்கட் அல்லது பிற உணவுகள் மூலம் நீங்கள் தினமும் அதிக சர்க்கரையை உட்கொண்டால், அதைத் திடீரென நிறுத்துவது சற்று கடினமாக இருக்கலாம். ஆரம்பத்தில், உங்களுக்கு மீண்டும் மீண்டும் சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படலாம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, உங்கள் உடல் குறைந்த சர்க்கரைக்கு பழகிவிடும். பழங்கள் போன்ற இயற்கையாகவே இனிப்பான உணவுகள் கூட முன்பை விட இனிப்பாகத் தோன்றலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/q_Rz-g2c7Fk?si=zBUA4eFZ9ZZZuicO&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;2. உடல் எடையைக் குறைக்க உதவலாம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அதிக சர்க்கரை கொண்ட உணவுகளில் கலோரிகளும் அதிகம். குளிர்பானங்கள், இனிப்புகள், கேக்குகள் மற்றும் சர்க்கரை கலந்த பொட்டல உணவுகளைக் குறைப்பது உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும். சமச்சீரான உணவைப் பின்பற்றி, ஒரு மாதத்திற்கு இந்த உணவுகளைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். இருப்பினும், உடல் எடையைக் குறைக்க சர்க்கரையை மட்டும் தவிர்ப்பது மட்டுமே ஒரே வழி அல்ல.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;3. நாள் முழுவதும் ஆற்றலில் மாற்றத்தை உணரக்கூடும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அதிக சர்க்கரை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தற்காலிகமாக ஆற்றலை அளித்தாலும், அது பிற்காலத்தில் சோர்வுக்கும் வழிவகுக்கும். அதிக சர்க்கரை உள்ள உணவுகளைக் குறைப்பது உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி, நாள் முழுவதும் ஏற்படும் ஆற்றல் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கும். சரியான அளவு சாப்பிடுவதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/world/jumped-off-bus-climbed-500-steps-how-indian-origin-couple-survived-nepal-floods-world-news-272929&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;4. பற்களுக்கு நன்மை பயக்கலாம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையைப் பயன்படுத்தும்போது, ​​அது பற்களைச் சேதப்படுத்தும் அமிலங்களை உற்பத்தி செய்யக்கூடும். எனவே, ஒரு மாதத்திற்கு இனிப்புகள், சர்க்கரை பானங்கள் மற்றும் பிற சர்க்கரை உணவுகளைக் குறைப்பது பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் பல் துலக்குவதும், நல்ல வாய் சுகாதாரத்தைப் பேணுவதும் அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;5. உணவுப் பழக்கங்களை மேம்படுத்த முடியும்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒரு மாதத்திற்கு சர்க்கரையைத் தவிர்ப்பது, நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஆரம்பத்தில் இது கடினமாகத் தோன்றினாலும், சர்க்கரை மீதான உங்கள் வேட்கை படிப்படியாகக் குறையக்கூடும். மேலும், சேர்க்கப்பட்ட சர்க்கரைக்காக உணவு பழக்கவழக்கங்களில் நீங்கள் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். இது நீண்ட காலத்திற்கு உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த உதவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/30/af5b45095c39c5127390c2594a94714d1788061653376732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/fsssai-bans-lg-and-everest-brand-compounded-hing-sale-over-on-sub-standard-quality-272930</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/fsssai-bans-lg-and-everest-brand-compounded-hing-sale-over-on-sub-standard-quality-272930#respond</comments><pubDate>Sun, 30 Aug 2026 07:10:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/fsssai-bans-lg-and-everest-brand-compounded-hing-sale-over-on-sub-standard-quality-272930</guid><description><![CDATA[&lt;p&gt;உணவுச்சந்தையில் பிரபலமான எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லால்ஜி கோது அண்ட் கம்பெனி ஆகியவற்றின் தயாரிப்புகள் தரம் குறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்நிறுவனங்கள் தங்க பெருங்காயப் பொடியை விற்பனை செய்ய &amp;nbsp;தடை விதித்து உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சந்தையில் விற்கப்படும் பொருட்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உணவுச்சந்தையில் உப்பு தொடங்கி பல்வேறு விதமான உணவுப் பொருட்கள், சமையலறை சாதனங்கள் என அனைத்தும் பல விதமான நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுகின்றன.&amp;nbsp; இந்தியாவில் FSSAI எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் இந்நிறுவனம் ஆய்வக சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.&lt;iframe title=&quot;MK Stalin Security | ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு Z பிரிவு SECURITY வாபஸ்! திமுக-வினர் அதிருப்தி&quot; src=&quot;https://www.youtube.com/embed/_wdZ9wv6GWQ&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்படியாக சமீபத்தில் FSSAI நிறுவனம் நடத்திய ஆய்வில் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் மற்றும் லால்ஜி கோது அண்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் பெருங்காயத் தூள் தயாரிப்புகள் தரம் குறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளப் பதிவு மூலம் FSSAI வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிக்கலில் எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத்தூள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எவரெஸ்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கலப்பு பெருங்காயத்தின் (பெருங்காயத் தூள்) பல்வேறு வகைகளின் விற்பனைக்கு FSSAI உடனடியாகத் தடை விதித்துள்ளது. இதன் பெருங்காயத்தூள் தரமற்றவையாக இருந்ததோடு, தவறான தகவல்களுடன் முத்திரையிடப்பட்டதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆயுர்வேத அல்லது மூலிகை மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டின் படி ஆல்கஹாலில் கரையக்கூடிய சாற்றின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 5 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டிய நிலையில் &amp;nbsp;உணவு பாதுகாப்பு விதிகளை அந்நிறுவனம் மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் நிறுவனத்தில் மஞ்சள் நிற பெருங்காயத்தூள் சதவிகிதம் 3.29 மற்றும் கருப்பு நிற பாக்கெட்டின் சதவிகிதம் 4.4 சதவிகிதமாக இருந்தது தெரிய வந்தது.&amp;nbsp;எவரெஸ்ட் நிறுவனம் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேசமயம் எல்ஜி நிறுவனத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனத்தின் பெருங்காயத் தூள் மற்றும் கட்டி பெருங்காயம் தரம் குறைந்ததாகவும் கலப்படம் செய்யப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பெருங்காயத்தில் உள்ள மாவுச்சத்தின் (ஸ்டார்ட்ச்) அளவு &amp;nbsp;எடையின் அடிப்படையில் 1 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இதில் 15 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டதால் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மூலிகையாக வகைப்படுத்தப்பட்டுள்ள பெருங்காயத்தில் மாவுச்சத்து அதிகமாக இருந்தால் &amp;nbsp;மருத்துவ வீரியம் குறைவதோடு, சமையல் தரம் மற்றும் நுகர்வோர் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். சந்தையில் விற்கப்படும் தூள் பெருங்காயத்தில் கோதுமை மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கப்படுவது இயல்புதான் என்றாலும், அது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது பிரச்னைகள் ஏற்படுகிறது. பெருங்காயத்தின் உண்மையான மருத்துவக் குணங்கள் அதன் Oleogum-resin எனப்படும் பசை பிசினில் தான் உள்ளது. மாவுச்சத்து அதிகமாகும்போது இந்த பிசின் அளவு குறைகிறது. இதனால் வாயு, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/what-happens-if-you-eat-guava-leaves-on-an-empty-stomach-272642&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/30/9f6d264473538900bef26dcf4c8d910017880529265981322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/breastfeeding-diet-requirements-essential-nutrients-protein-foods-details-in-tamil-272385</link><comments>https://tamil.abplive.com/lifestyle/breastfeeding-diet-requirements-essential-nutrients-protein-foods-details-in-tamil-272385#respond</comments><pubDate>Tue, 25 Aug 2026 13:52:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/breastfeeding-diet-requirements-essential-nutrients-protein-foods-details-in-tamil-272385</guid><description><![CDATA[&lt;p&gt;குழந்தைகள் வளர தாய்ப்பால் மிகவும் அவசியமாகும். அந்த குழந்தை வளரும் நேரத்தில் தாய் செய்யும் சிறிய தவறும் குழந்தையை கடுமையாக பாதிக்கும். இப்படியான நிலையில் குழந்தைப் பெற்ற பெண்கள் என்ன மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதை ஒவ்வொரு தாயும் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அதனைப் பற்றிக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள கருத்தின்படி, &amp;ldquo;ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. இந்தக் காலகட்டத்தில் உடலுக்குக் கூடுதல் ஆற்றல், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேசமயம் குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய, சமச்சீரான உணவை உண்பது முக்கியம் என்று சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Udhayanidhi Stalin | File எப்போ சார் திறப்பீங்க?10 மணிக்கே Assembly போயிட்டேன்&amp;quot; உதயநிதி கலகல | Vijay&quot; src=&quot;https://www.youtube.com/embed/_Zl6BADJ7HA&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பருப்பு வகைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா, முட்டை, மீன், கோழி, தயிர் மற்றும் பால் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சமச்சீரான உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து கிடைக்கும் புரதம், உடல் திசுக்களைச் சரிசெய்யவும் தசை ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் கீரை மற்றும் வெந்தயம் போன்ற பச்சை காய்கறிகளையும், கேரட், பீட்ரூட், சீமை சுரைக்காய், குடைமிளகாய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தை வழங்குகின்றன. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா மற்றும் மாதுளை போன்ற பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள் மூலம் தாய்க்கு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பழுப்பு அரிசி, ஓட்ஸ், ராகி, சோளம், தினை மற்றும் கோதுமை ஆகியவை ஆற்றலையும் நார்ச்சத்தையும் வழங்குகின்றன. கொட்டைகள், விதைகள், அவகேடோ மற்றும் மீன் போன்ற உணவுகளில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகளும் நன்மை பயக்கும். நிறைய தண்ணீர், சூப்கள் மற்றும் மோர் போன்ற பானங்களை அருந்தலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கேக்குகள், இனிப்புகள், குக்கீகள், சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், பிரெஞ்சு பிரைஸ், பாக்கெட் தின்பண்டங்கள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர், எனர்ஜி பானங்கள் மற்றும் சில குளிர்பானங்களில் காஃபின் உள்ளது. இவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் குழந்தைக்கு எரிச்சலையும், தூங்குவதில் சிரமத்தையும் ஏற்படுத்தும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சில உணவுகள் குழந்தைக்கு வாயுத்தொல்லை அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்று எண்ணி, தாய்ப்பால் கொடுக்கும் போது பால், தயிர், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்ற பல உணவுகளைத் தவிர்க்கிறார்கள். அவ்வாறு செய்வது தாய்க்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் குறைத்துவிடும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;குழந்தைக்கு தோல் தடிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம், அல்லது கடுமையான எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-make-fertilizer-from-onion-skins-272267&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/467a09a94289a19595e076218e7e507d17876461066871322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-arulmigu-meenakshi-sundareswarar-thirukalyanam-religious-events-ban-tnn-272321</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-arulmigu-meenakshi-sundareswarar-thirukalyanam-religious-events-ban-tnn-272321#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 23:19:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-arulmigu-meenakshi-sundareswarar-thirukalyanam-religious-events-ban-tnn-272321</guid><description><![CDATA[&lt;p&gt;பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் &amp;nbsp;சில பகுதிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு மதுரை அமர்வு உத்தரவு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை சேர்ந்த தாண்டீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், &quot; மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளையால் வழங்கப்படும் விருந்து &amp;nbsp;பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணை பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்துள்ளதால், திருக்கல்யாண விருந்தை மதுரை சேதுபதி பள்ளி மைதானத்தில் வழங்குவதில் சிரமம் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் &amp;nbsp;சில பகுதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்&quot;என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/14/6f94a776d2f4355a8fbf614d334b3353_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Kitchen Tips: மழைக்காலத்தில் அரிசியில் அதிகரிக்கும் வண்டுகள்... வராமல் தடுப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/how-to-prevent-bugs-in-rice-in-rainy-season-272252</link><comments>https://tamil.abplive.com/lifestyle/how-to-prevent-bugs-in-rice-in-rainy-season-272252#respond</comments><pubDate>Mon, 24 Aug 2026 13:48:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/how-to-prevent-bugs-in-rice-in-rainy-season-272252</guid><description><![CDATA[&lt;p&gt;பொதுவாக நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் சில நேரங்களில் புழுக்கள் தொடங்கி பூச்சிகள் வரை இருக்கக்கூடும். சமையலறை மட்டுமல்லாமல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மன உளைச்சல் ஏற்படும். அப்படியாக பூச்சிகள் உள்ளிட்டவை உணவுப்பொருட்களை நெருங்காமல் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி நாம் இங்கு காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மழைக்காலத்தில் அரிசியில் பூச்சிகளும் புழுக்களும் அதிகமாக தோன்றும். அதற்கு காரணம் வீட்டில் ஈரப்பதம் அதிகரிப்பதால் பூச்சிகள் சமையல் பாத்திரங்களில் மொய்க்கின்றன. அதேசமயம் அரிசிப் பாத்திரத்தை அடிக்கடி திறப்பது அதில் ஈரப்பதத்தை உருவாக்கி பூச்சிகளும் புழுக்களும் வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் அரிசிப் பாத்திரத்தின் மூடி இறுக்கமாக மூடப்படாவிட்டால், மீதமுள்ள அரிசி அல்லது ஈரமான அரிசி, பூச்சிகள் இன்னும் வேகமாக வளரக் காரணமாக அமையும்.&lt;/p&gt;
&lt;p&gt;அரிசியில் புழு, வண்டு, பூச்சிகள் போன்றவை இருந்தால் நாம் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால் பணமும் வீணாகிறது. இதனை வீட்டில் சில விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Hostel Food |&amp;quot;இது சாப்பாடா? கல்லா? கல்லு மாதிரி சத்தம் வருது&amp;rdquo;சமூக நீதி விடுதியின் அவலம்!வைரல் வீடியோ&quot; src=&quot;https://www.youtube.com/embed/VUBPhrzOuOc&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அரிசியில் புழுக்கள் வராமல் தடுப்பது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரிசி வைக்கும் பாத்திரத்தில் பிரியாணி இலைகளைப் போடுவதால் பூச்சிகள் நீங்குவது மட்டுமல்லாமல் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். பிரியாணி இலைகளில் ஒரு கடுமையான, நெடியுள்ள மணம் இருப்பதுதான் இதற்கு காரணமாகும். ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 காய்ந்த பிரியாணி இலைகளை போடலாம். இதனை ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கும் அவற்றை புதிய இலைகளால் மாற்ற வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல் அரிசி பாத்திரத்தில் &amp;nbsp;சில காய்ந்த வேப்ப இலைகளைச் சேர்க்க வேண்டும். வேப்ப இலைகளின் மணம் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. மேலும் அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாய்களை வைப்பது இதற்கு சிறந்த தீர்வாகும். எனினும் நீங்கள் எது செய்தாலும் அரிசி ஈரப்பதமில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஒருவேளை அரிசியில் புழுக்களைக் கண்டால் அதனை நன்றாக வெயிலில் பரப்பி உலர்த்த வேண்டும். அதை ஒரு சுத்தமான காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். பைகளில் வைத்தாலும் காற்று புகாமல் வைக்க வேண்டும். புதிய அரிசியை பழைய அரிசியுடன் ஒருபோதும் கலக்காதீர்கள். எத்தனை முறை முயன்றும் புழுக்கள் போகவில்லை என்றால், அந்த அரிசியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அரிசி மட்டுமில்லாமல் உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களை நன்கு கழுவி உபயோகியுங்கள். முடிந்தவரை ஈரப்பதம் இல்லாமல் சமையலறையை மழைக்காலத்தில் வைத்துக் கொள்ள பழகுங்கள். காற்றில் ஈரப்பதம் இருப்பது வேறு, நிலப்பரப்பில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதே பூச்சிகளை குறைக்கும் வழியாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/where-should-a-peacock-feather-be-placed-in-the-house-to-attract-a-flow-of-money-271998&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/24/4625b5ff742ae7e4a062cb62d5fd34c717875594453521322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/should-you-avoid-applying-henna-to-your-hair-details-in-tamil-272172</link><comments>https://tamil.abplive.com/lifestyle/should-you-avoid-applying-henna-to-your-hair-details-in-tamil-272172#respond</comments><pubDate>Sun, 23 Aug 2026 21:31:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/should-you-avoid-applying-henna-to-your-hair-details-in-tamil-272172</guid><description><![CDATA[&lt;p&gt;பலர் நரை முடியை மறைக்கவும், கூந்தல் பராமரிப்பிற்காகவும் தங்கள் தலையில் மருதாணியைப் பயன்படுத்துகின்றனர். &amp;nbsp;ஆனால் இதனைப் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது எதனால் என பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சமீபகாலமாக நரை முடியால் பாதிக்கப்பட்டவர்களும், முடிக்கு ஹேர் கலர் அடிக்க நினைப்பவர்களும் முதலில் மருதாணியை தான் பயன்படுத்துவார்கள். இது இயற்கையானது, பாதுகாப்பானது என்றெல்லாம் எண்ணம் நமக்குள் இருக்கும். இதை ஒரு இயற்கையான முடிச்சாயம் என்று கருதி சிறு வயது முதல் வயதானவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் அடிக்கடி தலைக்கு மருதாணி பூசுவது வறட்சி மற்றும் சொரசொரப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;DMK MLA Controversy speech |CM முதல் அமைச்சர்கள் வரை.. திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!உதயநிதி REACTION&quot; src=&quot;https://www.youtube.com/embed/N1L_YhbJjR8&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மருதாணியில் உள்ள ஒரு இயற்கைச் சாயமான லாவ்சோன், முடியில் உள்ள கெரட்டினுடன் பிணைந்து, ஆரஞ்சு-சிவப்பு முதல் பழுப்பு வரையிலான வண்ணங்களை அதற்கு அளிக்க முடியும். இந்தப் பிரச்சனை இயற்கையான மருதாணியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. சந்தையில் கிடைக்கும் சில மருதாணி முடிச்சாயப் பொருட்களில் மற்ற இரசாயனங்களும் சாயங்களும் கலந்திருக்கலாம். எனவே மருதாணி என்ற பெயரில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் இயற்கையானது இல்லை என்பதை உணருங்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மருதாணி &amp;nbsp;முடியை அடர்த்தியாகவும் வலிமையாகவும் உணரச் செய்யும். வறண்ட, சுருள் அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்கள் மருதாணி பயன்படுத்துவதை குறைத்து விடலாம். அதேபோல சாதாரண முடிச்சாயங்களில் உள்ள சில கடுமையான இரசாயனங்களைப் போல தூய மருதாணி முடியின் நிறத்தை வெளுக்காது. முடியின் மீது &amp;nbsp; மருதாணி இட்ட பிறகு ஈரப்பதமூட்டும் கண்டிஷனர் அல்லது பொருத்தமான முடி பராமரிப்பு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நரை முடியை மறைப்பதற்காக ஒவ்வொரு வாரமும் அல்லது அடிக்கடி மருதாணி பூச வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள். மருதாணி ஒருவரின் தலைமுடிக்குப் பலனளிப்பது மற்றொருவருக்கும் கட்டாயம் பலனளிக்கும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை. எனவே பயன்படுத்தும் முன் கவனம் தேவை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேசமயம் பிளாக் ஹென்னா என அழைக்கப்படும் கருப்பு மருதாணி &amp;nbsp;தயாரிப்புகளில் பாரா-ஃபீனைலெனெடியமைன் என்ற இரசாயனங்கள் இருக்கலாம். இது சிலருக்குக் கடுமையான தோல் ஒவ்வாமை, எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே பயன்படுத்தும் முன் அதில் உள்ள இடுபொருட்களை சோதனை செய்வது நல்லது. அரிப்பு, எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் அதை உங்கள் தலைமுடியில் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். கடுமையான பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருதாணி நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான சான்றுகள் எதுவும் இல்லை.மருதாணியை தலைமுடியில் பூசக்கூடாது என்பதை விட தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது நல்லது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/where-should-a-peacock-feather-be-placed-in-the-house-to-attract-a-flow-of-money-271998&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/23/8acac502c9213abc12d8c15a3ed9543e17875007556571322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/karaikudi-house-sparrow-builds-nest-human-cohabitation-beautiful-natural-bond-tnn-272159</link><comments>https://tamil.abplive.com/lifestyle/karaikudi-house-sparrow-builds-nest-human-cohabitation-beautiful-natural-bond-tnn-272159#respond</comments><pubDate>Sun, 23 Aug 2026 19:43:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/karaikudi-house-sparrow-builds-nest-human-cohabitation-beautiful-natural-bond-tnn-272159</guid><description><![CDATA[&lt;p&gt;&quot;காரைக்குடியில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு வித்தியாசமான, மகிழ்ச்சியான அனுபவம்&quot; - பகிர்ந்துகொள்கிறார் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்...&quot;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எங்கள் வீடே அதன் பாதுகாப்பான இடம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மனிதர்களுடன் இணைந்து வாழும் குருவி! மனிதர்கள் வசிக்கும் வீட்டிற்குள் குருவிகள் கூடுகட்டி, நம்மோடு இணைந்து வாழ்வதை நாம் எப்போதாவது பார்த்திருக்கிறோமா?. காரைக்குடியில் உள்ள எங்கள் வீட்டில் அப்படியொரு அழகான அனுபவம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எங்கள் வீட்டிற்குள் ஒரு குருவி அழகாகக் கூடு கட்டி, எங்களுடனேயே வசித்து வருகிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அளவில்லாத மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது. தொட்டில் கட்டிய கம்பியில் தொடங்கிய கூடு சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் தொட்டில் கட்டுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஒரு கம்பியில் அந்தக் குருவி சிறிது சிறிதாகக் கூடு கட்டத் தொடங்கியது. ஆரம்பத்தில், அது ஏதோ விளையாட்டாகவோ அல்லது தற்செயலாகவோ கூடு கட்டுகிறது என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால், நாட்கள் செல்லச் செல்லத்தான் எங்களுக்கு உண்மை புரிந்தது. எங்கள் வீடே அதன் பாதுகாப்பான இடம் என்று. அந்தக் குருவி தெரிந்தே, பாதுகாப்பான இடம் என்று எண்ணித்தான் எங்கள் வீட்டிற்குள் தனது கூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையும் அது கேட்டுக்கொண்டிருக்கிறது.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு சிறிய பறவை, மனிதர்கள் வாழும் வீட்டிற்குள் தனது கூட்டை அமைத்து, அங்கேயே தங்க முடிவு செய்திருப்பது எங்களுக்கு வியப்பாக இருந்தது. எங்களுடன் இணைந்த குருவியின் அன்றாட வாழ்க்கை. இப்போது அந்தக் குருவியின் அன்றாட வாழ்க்கையும் எங்களுடைய வாழ்க்கையோடு ஒருவிதமாக இணைந்துவிட்டது. மாலை சுமார் 5 மணியளவில் அது வீட்டிற்கு வந்து, மறுநாள் காலை சுமார் 7 மணி வரை எங்களுடனேயே தங்குகிறது. சில நேரங்களில் பகலில் வெளியே சென்று வருகிறது. பல நேரங்களில் தனது கூட்டிலேயே அமைதியாக அமர்ந்திருக்கிறது. வானொலியையும் கேட்கும் சின்னஞ்சிறு விருந்தினர். இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எங்கள் வீட்டில் வானொலி ஒலிக்கும்போது அதுவும் அமைதியாகக் கேட்பதுபோல் கூட்டில் அமர்ந்திருக்கிறது. நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையும் அது கேட்டுக்கொண்டிருக்கிறது. எங்களுடைய வீட்டுச் சூழலையும், எங்களுடைய இருப்பையும் அது இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டது போலத் தோன்றுகிறது. சிறியது குருவி&amp;hellip; பெரியது நம்பிக்கை. ஒரு சிறிய குருவி&amp;hellip; ஆனால் அது எங்களிடம் காட்டும் நம்பிக்கை மிகப் பெரியது. பொதுவாக, மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டு பறவைகள் அஞ்சுவது இயல்பு. ஆனால், இந்தக் குருவியோ எங்களை அச்சுறுத்தலாக நினைக்காமல், எங்கள் வீட்டையே தனது பாதுகாப்பான இருப்பிடமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான அழகான உறவு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் அந்த அழகான உறவை இந்தச் சிறிய குருவி எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு பறவை நம்மை நம்பி, நமது வீட்டிற்குள் கூடு கட்டி, நம்முடன் இயல்பாக வாழ்வது என்பது சாதாரண நிகழ்வு அல்ல. அது எங்களுக்கு கிடைத்த ஒரு வித்தியாசமான அனுபவம். எங்கள் வீட்டின் ஓர் அங்கமாகிவிட்டது. அந்தக் குருவி எங்கள் வீட்டின் ஓர் அங்கமாக மாறிவிட்டது என்ற உணர்வே இப்போது எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அது எங்களுடைய வீட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும், இயற்கை நம்மை எவ்வளவு நெருக்கமாகத் தொட்டுச் செல்ல முடியும் என்பதை உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இயற்கையை நேசிப்பவர்களுக்கு இதுபோன்ற சிறிய நிகழ்வுகள்கூட மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். பணத்தால் வாங்க முடியாத சில சந்தோஷங்கள், இயற்கையிடமிருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில், எங்கள் வீட்டிற்குள் குடியேறியிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு விருந்தினர் எங்களுக்குத் தந்துள்ள மகிழ்ச்சி அளவிட முடியாதது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஒரு குருவி&amp;hellip; ஒரு கூடு&amp;hellip; ஒரு நம்பிக்கை! &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மனிதர்களின் வீட்டில் ஒரு குருவி&amp;hellip; குருவியின் கூட்டில் ஒரு நம்பிக்கை&amp;hellip; அந்த நம்பிக்கைக்குள் எங்களுக்குக் கிடைத்த ஒரு பேரானந்தம். இந்த வித்தியாசமான, அழகான அனுபவத்தை நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இயற்கையை நேசிப்போம். இயற்கையை நேசிப்போம். பறவைகளைப் பாதுகாப்போம். அவற்றுக்கும் நம்மைப் போலவே இந்த உலகில் வாழும் உரிமை உண்டு என்பதை உணர்வோம்.&quot; எனவும் இயற்கை குறித்த நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/23/e0df20ecb0dba51d2f3c4d7a24825bd41787494392399184_original.jpeg" width="220"/></item></channel></rss>