<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை</title><atom:link href="https://tamil.abplive.com/lifestyle/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 17:51:12 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/shopping-cash-vs-card-which-saves-more-money-268551</link><comments>https://tamil.abplive.com/lifestyle/shopping-cash-vs-card-which-saves-more-money-268551#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:41:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/shopping-cash-vs-card-which-saves-more-money-268551</guid><description><![CDATA[&lt;h2&gt;ஷாப்பிங் செய்ய பணம்- கார்டு எது பெஸ்ட்.?&lt;/h2&gt;
&lt;p&gt;நவீன காலத்தில் உள்ளங்கைக்குள் உலகமே வந்து விட்டது. இதனால் வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு உலகத்தில் எந்த ஒரு இடத்தில் இருக்கும் எந்த ஒரு பொருளை கூட ஆர்டர் செய்யலாம். அப்படி இருக்கையில் சிலர் தினந்தோறும் ஷாப்பிங் செல்வார்கள், ஒரு சிலர் வாரம் ஒருமுறை செல்வார்கள். அதிலும் பலர் மாதம் ஒரு முறை குடும்பத்தோடு ஷாப்பிங் செல்வார்கள். தங்களது வருமானத்திற்கு ஏற்றார் போல ஷாப்பிங் செய்வார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இன்றைய காலத்தில் ஷாப்பிங் செய்யும்போது பணத்தைப் பயன்படுத்துவதா அல்லது கார்டு ஸ்வைப் செய்வதா என்பது பலரிடையே குழப்பமாகவும் விவாதமாக உள்ளது. இது தொடர்பாக நிதி நிபுணர்களின் கூறுகையில், காசை மிச்சப்படுத்துவது பயன்படுத்தும் முறையை விட, செலவைக் கட்டுப்படுத்தும் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது என தெரிவிக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;கார்டில் எவ்வளவு செலவு செய்கிறோம்.?&lt;/h2&gt;
&lt;p&gt;குறிப்பாக பணம் கொடுத்து பொருட்களை வாங்கும்போது, கையில் இருக்கும் பணம் எவ்வளவு என்பதை தெரிவதால் பொருட்களை வாங்குபவர்கள் தேவையற்ற செலவுகளை குறைக்க முடிகிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டைப் பின்பற்றவும், சேமிப்பை அதிகரிக்கவும் எளிதாக்குகிறது. அதே நேரம் கிரெடிட் கார் மூலம் ஸ்வைப் செய்வது எளிதாக இருப்பதால், எவ்வளவு செலவாகிறது என்ற உணர்வு உடனடியாக இருக்காது. மேலும் கிரெடிட் கார்டில் முழு பில்லை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் வட்டி மற்றும் கட்டணங்கள் சேர்ந்து செலவு அதிகரிக்கும். இதனால் திட்டமிட்டதை விட அதிகமாக செலவழிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;பணம் மூலம் ஷாப்பில் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;பணம் கையில் இருந்தால் செலவைக் கண்கூடாக உணரலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;கையில் உள்ள அளவிற்கே செலவு செய்வீர்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;பட்ஜெட்டை எளிதாகப் பின்பற்ற முடியும்.&lt;/li&gt;
&lt;li&gt;வட்டி கட்ட வேண்டிய நிலை வராது.&lt;/li&gt;
&lt;li&gt;பணம் முடிந்தால் ஷாப்பிங் நிற்கும்.&lt;/li&gt;
&lt;li&gt;தேவையில்லாத பொருட்களை வாங்கும் வாய்ப்பு குறையும்.&lt;/li&gt;
&lt;li&gt;அதிக செலவு செய்வது குறையும்.&lt;/li&gt;
&lt;li&gt;குழந்தைகளுக்கும் பணத்தின் மதிப்பை கற்றுக்கொடுக்கலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;கடன் சுமை ஏற்படாது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதால் ஏற்படும் குறைகள்:&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;செலவாகும் பணம் உடனடியாக தெரியாது.&lt;/li&gt;
&lt;li&gt;Credit Card-ல் அதிகம் செலவு செய்ய வாய்ப்பு உண்டு.&lt;/li&gt;
&lt;li&gt;தேவையற்ற பொருட்களையும் வாங்கத் தூண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;அதிக செலவு ஒரு பழக்கமாக மாறலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;பில் முழுவதும் கட்டவில்லை என்றால் வட்டி அதிகம்.&lt;/li&gt;
&lt;li&gt;தாமதக் கட்டணம் விதிக்கப்படும்.&lt;/li&gt;
&lt;li&gt;கடன் சுமை உருவாகலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;Offers கவர்ச்சியால் தேவையற்ற வாங்குதல் நடக்கலாம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h3&gt;காசை மிச்சப்படுத்த சில வழிகள்:&lt;/h3&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஷாப்பிங் பட்டியல் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற லிஸ்டை தயாரிக்கவும்.&lt;/li&gt;
&lt;li&gt;அந்த பட்டியலில் உள்ள பொருட்களை மட்டும் வாங்கவும்.&lt;/li&gt;
&lt;li&gt;Offer பார்த்து தேவையில்லாத பொருள் வாங்க வேண்டாம்.&lt;/li&gt;
&lt;li&gt;மாதம் மாதம் தங்களுரிய ஷாப்பிங் &amp;nbsp;பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;அவசரமில்லாமல் வாங்கும் பொருட்களை வாங்குவதை ஒரு நாள் தள்ளிப் போடவும்.&lt;/li&gt;
&lt;li&gt;தேவையானபொருட்களுக்கும், ஆசையாக வாங்கும் பொருட்களுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;சேமிப்பை முதலில் ஒதுக்கவும்.&lt;/li&gt;
&lt;li&gt;பிறகு செலவு செய்யவும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;திட்டமிட்ட சேமிப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;காசை மிச்சப்படுத்துவதில் பணம் &amp;nbsp;பெரும்பாலானவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும், ஏனெனில் அது செலவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. Credit Card-மூலம் ஷாப்பில் செய்வதால் பல குறைகள் இருந்தாலும், &amp;nbsp;முழு பில்லையும் சரியான நேரத்தில் செலுத்தும் போது &amp;nbsp;Cashback, Reward Points போன்ற நன்மைகளால் கூடுதல் சேமிப்பும் கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே, காசை மிச்சப்படுத்தும் உண்மையான வழி பணமா அல்லது கார்டா என்பதில் இல்லை. திட்டமிட்ட செலவு, தேவையான பொருட்களை மட்டுமே வாங்கும் பழக்கம் மற்றும் நிதி ஒழுக்கமே முக்கிய காரணங்கள் என பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/quick-way-to-fix-a-clogged-kitchen-sink-268532&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/025eee4fef9a40862f0b332a2d3bc14d17847015834431321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெண்கள் வளையல் அணிவதில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? பாரம்பரிய நம்பிக்கைகளும் மருத்துவ விளக்கங்களும்]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/what-are-the-scientific-facts-behind-women-wearing-bangles-traditional-beliefs-and-medical-explanations-tnn-268594</link><comments>https://tamil.abplive.com/lifestyle/what-are-the-scientific-facts-behind-women-wearing-bangles-traditional-beliefs-and-medical-explanations-tnn-268594#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:49:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/what-are-the-scientific-facts-behind-women-wearing-bangles-traditional-beliefs-and-medical-explanations-tnn-268594</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; இந்திய பெண்களின் பாரம்பரிய அணிகலன்களில் முக்கிய இடம் வகிப்பது வளையல். அழகை மேம்படுத்தும் அலங்காரப் பொருளாக மட்டுமல்லாமல், திருமணம், மங்களம், குடும்ப மரபு மற்றும் கலாசார அடையாளமாகவும் வளையல்கள் கருதப்படுகின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, கண்ணாடி, மண், சங்கு, லாக், மரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் திருமண மரபுகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகை வளையல்களை அணியும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பஞ்சாபில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பாரம்பரிய வளையல்கள், மேற்கு வங்கத்தில் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தின் போது சிவப்பு நிற வளையல்கள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பச்சை நிற வளையல்கள் ஆகியவை அந்தந்த மாநிலங்களின் கலாசார அடையாளங்களாக உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அறிவியல் ரீதியாக என்ன கூறப்படுகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் வளையல் அணிவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பரவலாக நம்பப்பட்டாலும், அவற்றில் அனைத்திற்கும் உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூற முடியாது. இருப்பினும், சில அம்சங்களுக்கு மருத்துவ ரீதியாக விளக்கங்கள் உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மணிக்கட்டு பகுதியில் வளையல்கள் தொடர்ந்து அசைவதால் தோலில் லேசான உராய்வு மற்றும் அழுத்தம் ஏற்படுகிறது. இது அப்பகுதியில் உள்ள தசைகள் மற்றும் மென்மையான திசுக்களுக்கு தூண்டுதலை வழங்குகிறது. கை அசைவுகளின் போது இரத்த ஓட்டம் இயல்பாகவே அதிகரிக்க உதவலாம். இருப்பினும், வளையல் அணிவதாலேயே உடல் முழுவதும் இரத்த ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் தற்போது இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதால் கை மூட்டுகளின் இயல்பான அசைவுகளை நினைவூட்டும் ஒரு உணர்வு ஏற்படலாம். இதன் மூலம் சிலருக்கு மன அமைதி அல்லது பழக்கத்தின் காரணமாக உளவியல் ரீதியான நிம்மதி கிடைக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கர்ப்பிணிகளின் வளைகாப்பு மரபு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெறும் வளைகாப்பு விழா சமூக மற்றும் குடும்ப ஆதரவை வெளிப்படுத்தும் பாரம்பரிய நிகழ்வாகும். இந்த விழாவில் அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன. வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது எழும் மென்மையான ஒலி தாய்க்கு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க உதவலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கர்ப்பகாலத்தின் இறுதிக்கட்டத்தில் கருவில் வளரும் குழந்தையின் செவித்திறன் வளர்ச்சியடைந்திருப்பதால், வெளிப்புற ஒலிகளை அது உணர முடியும் என்பது மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், வளையல் ஒலி குழந்தையின் செவித்திறனை மேம்படுத்துகிறது அல்லது அறிவுத்திறனை அதிகரிக்கிறது என்ற கருத்திற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கண்ணாடி வளையல்கள் குறித்து பரவும் நம்பிக்கைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கண்ணாடி வளையல்களின் ஒலி எதிர்மறை ஆற்றல்களை அகற்றும், உடலைச் சுற்றி பாதுகாப்பு வளையம் உருவாக்கும், சூரிய நாடியைத் தூண்டும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் போன்ற கருத்துகள் இந்து சமய மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளில் இடம்பெறுகின்றன. ஆனால் இவை மருத்துவ அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. அதேபோல், கண்ணாடி வளையல்கள் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்கின்றன என்பதற்கும் தற்போதைய மருத்துவ ஆய்வுகளில் உறுதியான ஆதாரம் இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாரம்பரியமும் நடைமுறையும் இணையும் இடம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வளையல்கள் பெண்களின் உடல் மொழி, கலாசாரம் மற்றும் குடும்ப மரபுகளை வெளிப்படுத்தும் முக்கிய அணிகலனாக இன்றளவும் திகழ்கின்றன. கண்ணாடி வளையல்களின் இனிமையான ஒலி பலருக்கு மகிழ்ச்சியையும் நேர்மறை உணர்வையும் அளிக்கக்கூடும். உளவியல் ரீதியாக மனநிலையை மேம்படுத்தும் சிறிய தாக்கம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் எந்தவொரு உடல்நலப் பிரச்சினைக்கும் வளையலை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக் கூடாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்தத்தில், வளையல் அணிவது இந்திய பெண்களின் கலாசார அடையாளமாகவும், சமூக மரபுகளின் தொடர்ச்சியாகவும் விளங்குகிறது. அதனுடன் தொடர்புடைய பல நம்பிக்கைகள் தலைமுறைகள் கடந்து பரவி வந்தாலும், மருத்துவ அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளையும் பாரம்பரிய நம்பிக்கைகளையும் தனித்தனியாக புரிந்துகொள்வதே சரியான அணுகுமுறையாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/a8d22b5296c8601231d0b210f5071e1e1784711572910733_original.png" width="220"/></item><item><title><![CDATA[மழைக்காலத்தில் தலைவலியாக அமையும் பல் பிரச்னை.. சிகிச்சையே இல்லாமல் தீர்ப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/how-to-resolve-gum-problems-and-bad-breath-during-the-monsoon-268529</link><comments>https://tamil.abplive.com/lifestyle/how-to-resolve-gum-problems-and-bad-breath-during-the-monsoon-268529#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:33:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/how-to-resolve-gum-problems-and-bad-breath-during-the-monsoon-268529</guid><description><![CDATA[&lt;p&gt;பருவமழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் நம் உடம்பில் சொல்லிக் கொள்ளாமல் ஏகப்பட்ட பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும். இவை எதையும் நாம் சாதாரணமாக எடுத்து விட முடியாது. அப்படியான ஒரு பிரச்னை தான் மழைக்காலத்தில் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் அதனால் உண்டாகும் வாய் துர்நாற்றம். இதை நீங்கள் நிறைய முறை கவனித்திருக்கலாம். கடந்தும் போயிருக்கலாம். ஆனால் இது பருவமழைக்காலத்தில் ஏற்படும் தற்செயலான நிகழ்வு கிடையாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பருவமழையே நேரடியாக ஈறு நோயையோ அல்லது வாய் துர்நாற்றத்தையோ ஏற்படுத்தாவிட்டாலும், பருவகால வாழ்க்கைமுறை மாற்றங்கள் அதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் &amp;nbsp;என மருத்துவர் ஜெயினீல் பரேக் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த மாற்றமானது நம் வாய் பகுதியில் &amp;nbsp;பாக்டீரியாக்கள் பெருகுவதை ஊக்குவித்து ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பருவமழைக் காலத்தில் மக்கள் பெரும்பாலும் அதிக சர்க்கரையுள்ள தின்பண்டங்களையும் பானங்களையும் உட்கொள்கிறார்கள். அதேசமயம் மழைக்காலத்தில் நாம் குறைவாக தண்ணீர் அருந்துகிறோம். இப்படியான நம்மை அறியாமலேயே &amp;nbsp;வாய் சுகாதாரப் பழக்கவழக்கங்களில் நாம் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Lorry Driver VS Police | &amp;rdquo;தளபதி &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; நம்பர் இருக்கு.. COMPLAINT பண்ணுறேன்&amp;rdquo; ஓட்டுநர் vs போலீஸ்&quot; src=&quot;https://www.youtube.com/embed/1dZD1QrEdEU&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதன் காரணமாக நம் உடம்பில் நீர்ச்சத்து குறைகிறது. பற்கறையை முறையாக அகற்றாததால் பாக்டீரியாக்கள் பெருகி வாய் துர்நாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வழக்கமான பல் துலக்குதல் மற்றும் வாய் கொப்பளித்தல் மூலம் பல்லில் சிக்கியுள்ள உணவுத்துணுக்குகள் நீக்கப்படாவில்லால் பற்சொத்தை எளிதில் உண்டாகும். இதனால் நீடித்த வாய் துர்நாற்றம் ஏற்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் மழைக்காலங்களில் எளிதில் பல் வலி, பற்கூச்சம், ஈறு வீங்குதல் போன்றவை உண்டாகும். அப்படி நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இத்தகைய பற்கள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவை என்பதாலும், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் நன்கு குணமாகவும் செய்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வாய் துர்நாற்றம் நீரிழப்பு, உணவுகள் போன்றவற்றால் மட்டுமே ஏற்படும் என்பது கிடையாது. ஆரோக்கியமற்ற ஈறுகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். ஒருவேளை இதற்கு நீங்கள் &amp;nbsp;சிகிச்சையளிக்காவிட்டால் ஈறு அழற்சிக்கு வழிவகுத்து பல்சூழ்திசு பிரச்னை உண்டாகும். பல் சூழ்திசு என்பது பற்களின் பிடிமானத்தை கொண்டுள்ள ஈறுகள் அதனை விடுத்து பற்கள் விழ நேரிடும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நீரிழிவு நோய் உள்ளவர்கள், வாய் சுகாதாரம் பேணாதவர்கள், புகைப்பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஈறு நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் பற்களில் கிளிப் அல்லது கம்பி அணிந்திருப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். கம்பிகள் காரணமாக பற்கறை மற்றும் உணவுத் துகள்கள் எளிதில் படிந்து பிரச்னை உண்டாகலாம். எனவே வாய் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/tips-for-how-to-easily-clean-white-shoes-268048&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/45841b74d9cee9401bf223dd785a53f017846966525141322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/health-benefits-of-sitting-on-floor-and-eating-scientific-reason-behind-this-268475</link><comments>https://tamil.abplive.com/lifestyle/health-benefits-of-sitting-on-floor-and-eating-scientific-reason-behind-this-268475#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:01:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/health-benefits-of-sitting-on-floor-and-eating-scientific-reason-behind-this-268475</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;இப்போதெல்லாம் சாப்பாடு என்பது சோபா மீது அமர்ந்து டிவியை பார்த்துக்கொண்டே உண்பது அல்லது டைனில் டேபிளில் சாப்பிடுவது என்று மாறிவிட்டது. ஆனால் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதால் ஏராளமான பலன்கள் உள்ளன. &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழர் மரபில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உணவு உண்பது வெறும் கலாச்சார பழக்கம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;தரையில் சம்மணமிட்டு அமரும்போது, நமது உடல் சுகாசனம் அல்லது பத்மாசனம் என்ற யோக நிலையை அடைகிறது. இந்த நிலை செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இதில் மேலும் என்னென்ன பலன்கள்? அதற்கான அறிவியல் விளக்கங்கள் என்ன? என்று காணலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;செரிமான&lt;/strong&gt; &lt;strong&gt;உறுப்புகளுக்கு&lt;/strong&gt; &lt;strong&gt;ரத்த&lt;/strong&gt; &lt;strong&gt;ஓட்டம்&lt;/strong&gt; &lt;strong&gt;குவிதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நாற்காலியில் கால்களைத் தொங்கவிட்டு அமரும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக உடலின் ரத்த ஓட்டம் கால்களை நோக்கி அதிகமாகச் செல்லும். ஆனால், தரையில் கால்களை மடக்கி சம்மணமிட்டு அமரும்போது, கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைக்கப்பட்டு, செரிமான உறுப்புகளான வயிறு, இதயம் மற்றும் குடல் பகுதிகளுக்கு அதிக ரத்தம் சீராகச் செல்கிறது. இந்த அதீத ரத்த ஓட்டம், செரிமான உறுப்புகளின் ஆற்றலை பலமடங்கு அதிகரிக்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வயிற்றுத்&lt;/strong&gt; &lt;strong&gt;தசைகளின்&lt;/strong&gt; &lt;strong&gt;இயக்கம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, தட்டை நோக்கி முன்னோக்கி வளைந்து, உணவை எடுத்த பின் மீண்டும் நிமிர்ந்து உட்காருவோம். இந்தத் தொடர்ச்சியான அசைவு, வயிற்றுத் தசைகளை சுருங்கி விரியச் செய்கிறது. இதனால் வயிற்றில் செரிமான அமிலங்கள் சரியான அளவில் சுரந்து, உணவு விரைவாகவும் முழுமையாகவும் செரிமானம் ஆக உதவுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ALSO READ | &lt;a href=&quot;https://tamil.abplive.com/auto/automobile-facts-scientific-reasons-behind-crushing-lemon-under-vehicle-tyre-astrology-facts-details-in-tamil-268363&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நரம்புத்&lt;/strong&gt; &lt;strong&gt;தூண்டலும்&lt;/strong&gt; &lt;strong&gt;அளவான&lt;/strong&gt; &lt;strong&gt;உணவும்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சம்மணமிட்டு அமரும் இந்த பத்மாசன நிலை, நமது உடலின் வேகஸ் நரம்பு அமைப்பைத் தூண்டுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலை ஓய்வு மற்றும் செரிமான நிலைக்குக் கொண்டு செல்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால், வயிறு நிறைந்த உணர்வை மூளை விரைவாக உணர்கிறது. இதன் விளைவாக, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் பருமன் குறைகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மூட்டு&lt;/strong&gt; &lt;strong&gt;மற்றும்&lt;/strong&gt; &lt;strong&gt;தண்டுவட&lt;/strong&gt; &lt;strong&gt;ஆரோக்கியம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தரையில் அமரும்போது முழங்கால், இடுப்பு மற்றும் கணுக்கால் மூட்டுகள் வலுவடைகின்றன. மூட்டுகளுக்கு இடையிலான உயவுத் தன்மை சீராகி, மூட்டு வலிகள் வருவது தடுக்கப்படுகிறது. மேலும், முதுகுத்தண்டு நேராக வைக்கப்படுவதால், உடல் Posture மேம்பட்டு முதுகுவலி பிரச்சனைகள் குறைகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;சுருக்கமாகச் சொன்னால், தரையில் அமர்ந்து உண்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், செரிமான அமைப்பையும் இயற்கையாகவே வலுப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான நடைமுறையாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/does-driving-a-car-on-a-slope-in-neutral-save-gasoline-268401&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/74421ef3158b279e3f0f6276df4c12c01784698205397332_original.png" width="220"/></item><item><title><![CDATA[Aarti: ’சுற்றி, சுற்றி ஆரத்தி எடுப்பது ஏன்?’ பின்னால் இருக்கும் ரகசியமும் அறிவியல் உண்மையும்..!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/why-do-we-perform-aarti-traditional-significance-reasons-behind-this-explained-268465</link><comments>https://tamil.abplive.com/lifestyle/why-do-we-perform-aarti-traditional-significance-reasons-behind-this-explained-268465#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 10:35:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அரூபி ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/why-do-we-perform-aarti-traditional-significance-reasons-behind-this-explained-268465</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருமணம், சடங்கு உள்ளிட்ட வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளின்போதும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வருவோர்களுக்கும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நமது பண்பாட்டிலேயே இருக்கிறது. பலருக்கு ஏன் ஆரத்தி எடுக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லாமல், அதை ஒரு பழக்கமாகவே செய்கின்றனர். குறிப்பாக, ஆரத்தி எடுத்தால் கண் திருஷ்டி உள்ளிட்ட திருஷ்டிகள் கழியும் என்ற நம்பிக்கையும் பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஆரத்தி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், ஆரத்தி எடுப்பதில் அறிவியல் ரீதியான பல நல்ல விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள், அதோடு ரசாயண கலவையான சுண்ணாம்பு சேர்த்து, அதோடு தண்ணிரை கலந்தால் இரண்டும் சிவப்பு நிறமாக மாறும். அதில் கற்பூரத்தை வைத்து தீ மூட்டுவதால் ஏற்படும் உஷ்ணம் மூலமாக காற்றில் உள்ள கிருமிகள் அழியும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இதை பற்றி பேசுபவர்கள். இதனால்தான் வெளிநாடு, வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியதாகவும், அவர்கள் பலருடன் பழகி, பல ஊர்களை கடந்து வீட்டுக்கு வருவதால் அவர்கள் மீது கிருமி தொற்று ஏற்பட்டு இருக்கும் என்பதால் இந்த வழிமுறையை கண்டுபிடித்து ஆரத்தி எடுக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டுவந்ததாகவும், கிருமிக்குதான் ஆரத்தி எடுக்கிறேன் என்று சொன்னால் பலரும் அதை தட்டிக் கழிப்பார்கள் என்பதாலேயே கண் திருஷ்டி நீங்கும் என்பதுபோன்ற கட்டுக் கதைகளை அதோடு சேர்த்து இந்த வழக்கத்தை கடைபிடிக்க வைத்ததாக சமய, பழக்க வழக்கங்கள் குறித்தும் ஆராயும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;அறிவியல் விஞ்ஞானி சொல்வது என்ன ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆராத்தி எடுக்கப்படும் மனிதர்களை சுற்றியுள்ள கிருமிகள் அவர்களை விட்டு நீக்கப்படுவதுதான் அறிவியல் ரீதியான உண்மை என பலரும் சொல்லியிருக்கும் நிலையில், &lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;இது குறித்து மூத்த விஞ்ஞானியும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான த.வி.வெங்கடேசுவரனிடம் பேசினோம். அதற்கு அவர் &amp;lsquo;மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து ஆரத்தி எடுப்பதால் கிருமிகள் காற்றில் உள்ள கிருமிகள் கொல்லப்படுவதாக சொல்வதெல்லாம் உண்மை இல்லையென்றும், இது ஒரு பண்பாட்டு, பாரம்பரிய வழக்கமாக மட்டுமே பின்பற்றப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதே நேரத்தில் ஆரத்தி பழக்கம் என்பது போர்களுக்கு படைவீரர்கள் செல்லும் முன்னரும், வெற்றி பெற்று அவர்கள் வீடும் திரும்பும்போதும் செய்யப்பட்ட பழக்கம் என்றும் இது வெற்றியின் வீரத்தின் அடையாளமாகவும் கருதப்படுவதே காரணம் என்றும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்பவர்கள் கூறுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எது எப்படியே, ஆரத்தி எடுப்பதில் எந்த தீமைகளும் இல்லை என்பதால் அதற்கு யாரும் இதுவரை தடை சொல்லவில்லை.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/6dfaaa3be02ca020376cdabcac692ccb1784634330048108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Drumstick Tree :  ‘முருங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா?’ பேய் குடியிருக்கும் என்பது உண்மையா?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/can-you-grow-a-drumstick-tree-at-home-is-it-true-that-it-attracts-ghosts-268457</link><comments>https://tamil.abplive.com/lifestyle/can-you-grow-a-drumstick-tree-at-home-is-it-true-that-it-attracts-ghosts-268457#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 16:20:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ வசந்த் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/can-you-grow-a-drumstick-tree-at-home-is-it-true-that-it-attracts-ghosts-268457</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிராமங்களில் முருங்கை மரமும் வேப்ப மரமும் இல்லாத வீடுகளே முன்னர் இருக்காது. ஆனால், காலப்போக்கில் சிலர் சொல்வதை கேட்டுக்கொண்டு முருங்கை மரங்களை வெட்டி வீசியவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, முருங்கை மரம் வீட்டில் இருந்தால் அதில் பேய், பிசாசு குடியிருக்கும் என்று யாரோ சொன்னதை பிடித்துக்கொண்டு பலரும் முருங்கை மரம் வைப்பதற்கு பயந்த கதைகள் கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமாக இருக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;முருங்கை மரம் வைத்தால் பேய் அதில் ஏறி குடியிருக்குமா?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்வெளிக்கு ராக்கெட் விட்டிருந்த காலம் போய் அங்கேயே மனிதன் சென்று குடியிருப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் பலர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை நம்பி ஏமாந்துபோயிருக்கின்றனர். அதிலும் முருங்கை மரத்தில் பேய் குடியிருக்கும் என்று சொல்லி வைக்கப்பட்ட பொய்யை நம்பி பலரும் வீட்டில் முருங்கை மரம் வைக்கவே அச்சப்பட்டு இருக்கின்றனர். அதற்கு காரணம், விக்கிரமாதித்தியன் கதைகளில் வேதாளம் முருங்கை மரத்தில் குடியிருக்கும் என்று சொல்லப்பட்டதுதான். அதன் தொடர்ச்சியாக வேதாளம், பேயாகி, பின்னர் பிசாசு ஆகி மோகினி, யட்சி என பல ஊர்களில் பல பெயர்களில் இல்லவே இல்லாத உருவத்தை முருங்கை மரத்தில் ஏற்றி பலர் அச்சமடைந்துள்ளனர். உண்மையில், முருங்கை மரம், புளியம் மரம் என எந்த மரத்திலும் பேய் குடியேறாது என்பதுதான் உண்மை. அதனினும் உண்மை பேய் என்ற ஒன்றே கிடையாது என்பது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;முருங்கை மரமும் பசு மாடும்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;எனவே, உடலுக்கு சத்துக் கொடுக்கும் முருங்கை மரத்தை தாராளமாக வீடுகளில் வைக்கலாம். &lt;/em&gt;&lt;/strong&gt;ஆனால், அதில் அதிகமாக பூச்சிகள் தாக்கும் என்பதால் ஜன்னலோரம் அல்லது கதவு அருகே முருங்கை மரத்தை வைக்கக் கூடாது. அதற்கு பதில் வீட்டு வேலியோரத்திலோ, வீட்டிற்கு சற்று அருகிலோ தாரளமாக முருங்கை மரத்தை நட்டு வளர்க்கலாம். முருங்கை மரமும் பசுமாடும் இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும் என்ற முதுமொழி இருக்கிறது. அதற்கு காரணமும் முருங்கை கீரை, தண்டு உள்ளிடவைகளை வைத்து சமைத்துக்கொள்ளலாம் என்பதும் பசுமாட்டின் பாலை குடித்தும், அதை விற்றும் தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதும்தான். ஒரு குடும்பத்தையே வாழ வைக்கும் முருங்கை மரத்தை போய் பேய் குடியிருக்கும் வீடு மாதிரி யாரோ சிலர் சித்தரித்தது இன்றும் பலரது நெஞ்சில் அச்சமாக மாறிக்கிடக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதோடு, வேப்பம் மரம் வைப்பதிலும் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால், வேப்பம் மரம் வீடுகளில் வளர்ப்பது அவ்வளவு நல்லது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காற்றை சுத்தப்படுத்தி தருவதிலும், அதன் இலையை அரைத்து பய்ன்படுத்தினால் கிருமி நாசினியாகவும் பயன்படும் வல்லமை கொண்டது இந்த வேப்பமரம். அதோடு, தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மரமாக இருக்கும் வேப்பம் மரத்தையும் எந்த தயக்கமும் இன்றி வீடுகளில் வளர்க்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/ebcbf8654dfcdec2438878fd0867f0c21784630993630108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!]]></title><link>https://tamil.abplive.com/health/how-to-know-the-body-health-symptoms-by-your-sweat-know-more-details-in-tamil-268249</link><comments>https://tamil.abplive.com/health/how-to-know-the-body-health-symptoms-by-your-sweat-know-more-details-in-tamil-268249#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 12:30:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/how-to-know-the-body-health-symptoms-by-your-sweat-know-more-details-in-tamil-268249</guid><description><![CDATA[&lt;p&gt;காலம் மாறி வரும் நிலையில் இன்று நம்மில் பலருக்கும் ஏசி ரூமில் அமர்ந்து வேலை செய்வதால் வியர்வை என்ற ஒன்றே இல்லை. ஒரு காலத்தில் நம் உடல் நன்றாக வேலை செய்கிறது என்பதை வியர்வை மூலம் அறிந்து மகிழ்வோம். இன்று அதே வியர்வை ஒவ்வாமையாக மாறி விட்டது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், அதைச் சமநிலையில் வைக்க தோல் வழியாக இயற்கையாக வெளியேறுவதே வியர்வையாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இது ஆவியாகும்போது உடலானது குளிர்வடைகிறது. இத்தகைய வியர்வையை தூண்ட அதிக வெப்பநிலை, கடுமையான வேலை, உடற்பயிற்சி, பயம், பதற்றம் என பல காரணிகள் இருக்கும். அதேசமயம் வியர்வை சிலருக்கு அதிகமாக வரும். சிலருக்கு வரவே வராது. பலருக்கு குறைவாக வரும். தோலில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையை சிதைக்கும்போது துர்நாற்றம் உருவாகிறது. இத்தகைய வியர்வை உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?... வியர்வை எப்போது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;DMK MLA Markandeyan Arrest | CM &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்கு மிரட்டல் திமுக MLA அதிரடி கைது கனிமொழி கடும் கண்டனம் | TVK&quot; src=&quot;https://www.youtube.com/embed/xJJrPNZsl-0&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;வியர்வை சொல்லும் சேதி என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;ஒரு மனித உடலில் சுமார் இரண்டு முதல் நான்கு மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் இருக்கிறது. இவை உடலின் வெப்பநிலையை சமப்படுத்துகிறது. உங்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதை உணரும்போது மூளை வியர்வையை வெளியிட சுரம்பிகளுக்குச் செய்தி அனுப்புகிறது. எனவே எப்போது வியர்த்தாலும் அதனை நல்ல விஷயமாகவே பார்க்கப் பழகுங்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வியர்வையானது தோலுக்குக் கீழே உள்ள சுரப்பிகளில் உருவாகி நுண்ணிய குழாய்கள் வழியாகப் பயணிக்கிறது. இதன்பின்னர் மேற்பரப்பை அடைந்து காற்றில் ஆவியாகிறது. இந்த இயற்கையான செயல்முறை குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதும் அல்லது வெப்பமான காலநிலையிலும் சீரான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இது 99 சதவிகிதம் நீரால் ஆனது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மீதமுள்ள 1% உப்புகள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், யூரியா மற்றும் பிற நுண் சேர்மங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வியர்ப்பது மாறுபடும். &amp;nbsp;மரபியல், உடல் அளவு, ஹார்மோன்கள், மருந்துகள், மன அழுத்தம், பதட்டம் என பல வகை காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. வியர்வைக்கு கிட்டத்தட்ட மணம் இருப்பதில்லை என்ற சூழலில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையில் உள்ள புரதங்களையும் கொழுப்புகளையும் சிதைக்கும்போது துர்நாற்றம் உண்டாகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Also Read: &lt;a title=&quot;வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?&quot; href=&quot;https://tamil.abplive.com/lifestyle/heat-wave-alert-physical-and-mental-effects-of-intense-summer-heat-261212&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?&quot;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சில உணவுகள் மற்றும் மருந்துகளும் இந்த துர்நாற்றத்தை உடலில் உண்டாக்கக்கூடும். உடலைக் குளிர்விக்க வியர்ப்பது அவசியம் என்ற நிலையில் அது வரவே இல்லை என்றால் மிகவும் ஆபத்தானது. இது உடல் வெப்பநிலையைச் சீராக்குவதைக் கடினமாக்கி, வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.உடல் வெப்பநிலை 40&amp;deg;C-க்கு மேல் உயரும்போது தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். இது மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;சில நேரங்களில் நம் சட்டைகளின் காலர் பகுதிகளில் மஞ்சள் நிற கறை இருப்பதைக் காணலாம். இது அலுமினியச் சேர்மங்களுடன் வியர்வை வினைபுரியும்போது &amp;nbsp;இத்தகைய கறைகள் உருவாகின்றன. சில துணிகளில் வெள்ளை கறைகள் உருவாகும். இது வியர்வை ஆவியான பிறகு இருக்கும் காய்ந்த உப்பினால் உண்டாகிறது. வியர்வையை முழுமையாகத் தடுப்பது ஆபத்தான ஒன்றாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/tips-for-how-to-easily-clean-white-shoes-268048&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/c8473c91df40eae0ba3b406adb7d66f717845306322411322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/thanjavur-s-spicy-adai-a-wholesome-food-cherished-by-people-across-generations-tnn-267569</link><comments>https://tamil.abplive.com/lifestyle/thanjavur-s-spicy-adai-a-wholesome-food-cherished-by-people-across-generations-tnn-267569#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 09:52:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/thanjavur-s-spicy-adai-a-wholesome-food-cherished-by-people-across-generations-tnn-267569</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர், கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மட்டுமல்லாமல், பாரம்பரிய உணவு வகைகளுக்கும் உலகப் புகழ்பெற்றது. அந்த வகையில் தஞ்சை வட்டாரத்துக்கே உரித்தான பிரத்யேக சுவையுடன், தலைமுறைகள் கடந்தும் மக்களின் ஒரு உன்னத உணவுதான் &quot;தஞ்சாவூர் உரப்பு அடை&quot;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாதாரண அடை தோசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட செய்முறையும், அசாத்திய சுவையும் கொண்டது இந்த பாரம்பரிய உணவு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உரப்பு அடையின் தனித்துவமான பின்னணி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை மாவட்டத்து சமையலில் பருப்பு வகைகளின் பயன்பாடு எப்போதுமே சற்றே தூக்கலாக இருக்கும். இந்த உரப்பு அடை என்பது வெறும் பசி ஆற்றுவதற்கான உணவு மட்டுமல்ல, அது உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் ஒருசேர வழங்கும் ஒரு சமச்சீர் உணவு (Balanced Diet). வழக்கமான அடைகளை விட இதில் காரமும் (உரப்பு), மசாலாப் பொருட்களின் நறுமணமும் அதிகமாக இருப்பதால் இதற்கு 'உரப்பு அடை' என்ற பெயர் வந்தது. சோழ நாட்டுப் பகுதிகளில் இன்றும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்க இந்த உரப்பு அடைதான் முதல் தேர்வாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுவையின் ரகசியம்: செய்முறை விசேஷம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் உரப்பு அடையின் அசாத்திய சுவைக்கு அதன் பக்குவமான அரைப்பு முறையே காரணம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பருப்பு மற்றும் அரிசி விகிதம்: பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகிய நான்கு முக்கிய பருப்புகளும் சம அளவில் சேர்க்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மசாலா சேர்க்கை: இதனுடன் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து, தண்ணீரை குறைவாக தெளித்து கரகரப்பாக (கொரகொரவென்று) அரைக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் சுவை: மாவை புளிக்க வைக்காமல், அரைத்த உடனே நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தாராளமாக துருவிய தேங்காய்ப் பூ சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மொறுமொறுப்பும் மணமும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அடையை சுடும்போது தஞ்சை மக்கள் காட்டும் பக்குவம் தனித்துவமானது. தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து, மாவை சற்றே தடிமனாக பரப்பி, நடுவில் ஒரு சிறிய துளையிட்டு, சுற்றிலும் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி சுட்டெடுப்பார்கள். அந்த துளையின் வழியே எண்ணெய் இறங்கி, அடையின் உள்பகுதி வரை வெந்து, வெளிப்புறம் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும். அப்போது வீசும் சோம்பு மற்றும் பெருங்காயத்தின் மணம், பசியைத் தூண்டவல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புரதச்சத்து நிறைந்தது: நான்கு வகையான பருப்புகள் சேர்க்கப்படுவதால், வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தாவரப் புரதம் (Plant Protein) இதில் முழுமையாகக் கிடைக்கிறது. செரிமானத்திற்கு நல்லது: சோம்பு, சீரகம், பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவை பருப்பினால் ஏற்படும் வாய்வுத் தொல்லையை நீக்கி, செரிமானத்தை எளிதாக்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீடித்த ஆற்றல்: இது ஒரு 'லோ-கிளைசெமிக்' (Low-Glycemic) உணவாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாமல், உடலுக்கு நீண்ட நேரத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சிறந்த காம்பினேஷன் எது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் உரப்பு அடையை பாரம்பரிய முறைப்படி &quot;வெல்லம் மற்றும் கெட்டி வெண்ணெய்&quot; தொட்டுச் சாப்பிடுவது ஆகச்சிறந்த சுவையைத் தரும். அடையின் காரத்திற்கும், வெல்லத்தின் இனிப்பிற்கும், வெண்ணெய்யின் மென்மைக்கும் இடையே உள்ள சுவைப்போர் அலாதியானது. இதுதவிர, காரசாரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி தொக்குடனும் இதனைப் பரிமாறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய நாகரிக உலகில் பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகள் நம்மை ஆக்கிரமித்தாலும், தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடு, ஆரோக்கியத்தையும் சுவையையும் வாரி வழங்கும் இந்த &quot;உரப்பு அடை&quot; என்றும் தமிழர்களின் எக்காலத்து ஸ்பெஷல் உணவே!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/d4da603f6018318b40653b81c12ff2a51784089278436733_original.png" width="220"/></item><item><title><![CDATA[நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/learn-how-to-make-the-popular-mango-puttu-that-everyone-loves-tnn-267566</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/learn-how-to-make-the-popular-mango-puttu-that-everyone-loves-tnn-267566#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 09:43:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/learn-how-to-make-the-popular-mango-puttu-that-everyone-loves-tnn-267566</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் புட்டுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. வழக்கமாக நாம் அரிசிப் புட்டு, ராகிப் புட்டு, கம்புப் புட்டு எனச் சாப்பிட்டிருப்போம். ஆனால், இப்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால், சந்தைகளில் விதவிதமான மாம்பழங்கள் மலிவாகக் கிடைக்கின்றன. இந்த சீசனை இன்னும் இனிமையாக்க, மாம்பழத்தை வைத்து வித்தியாசமான, சுவையான 'மாம்பழ புட்டு' எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சுவையான பலகாரத்தைச் செய்ய பெரிய அளவில் பொருட்கள் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் எளிமையான பொருட்களே போதுமானது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புட்டு மாவு (அரிசி மாவு): 2 கப்&lt;br /&gt;நன்றாகப் பழுத்த மாம்பழம்: 2 (நன்கு அரைத்த விழுது - 1 கப்)&lt;br /&gt;துருவிய தேங்காய்: 1 கப்&lt;br /&gt;சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை: 3 முதல் 4 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)&lt;br /&gt;ஏலக்காய்த் தூள்: அரை தேக்கரண்டி&lt;br /&gt;நெய்: 1 தேக்கரண்டி&lt;br /&gt;உப்பு: ஒரு சிட்டிகை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;செய்முறை விளக்கம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாம்பழ விழுது தயாரித்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலில் மாம்பழங்களின் தோலை நீக்கி, சதைப்பற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைஸான விழுதாக (Mango Puree) அரைத்து எடுத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாவை ஈரப்பதமாக்குதல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு அகலமான பாத்திரத்தில் புட்டு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். வழக்கமாக புட்டு செய்ய நாம் தண்ணீரைத் தெளிப்போம். ஆனால், இந்த மாம்பழ புட்டுக்கு தண்ணீருக்குப் பதிலாக நாம் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதைச் சேர்த்துப் பிசைய வேண்டும். மாவைக் கட்டிகள் இல்லாமல், உதிரி உதிரியாகவும் அதே சமயம் கையில் பிடித்தால் பிடிபடும் பதத்திற்கும் பிசைந்து கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேங்காய்க் கலவை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு சிறிய கிண்ணத்தில் துருவிய தேங்காய், ஏலக்காய்த் தூள் மற்றும் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாம்பழத்திலேயே இனிப்பு இருக்கும் என்பதால் சர்க்கரையை அளவாகச் சேர்க்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;புட்டுக் குழாயில் நிரப்புதல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புட்டு மேக்கர் அல்லது புட்டுக் குழாயில் முதலில் ஒரு ஸ்பூன் தேங்காய்க் கலவையைப் போடவும். அதற்கு மேல் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் மாம்பழப் புட்டு மாவைக் கொட்டவும். மீண்டும் தேங்காய், மீண்டும் மாவு என மாறி மாறி லேயர்களாக நிரப்பவும். இறுதியாக மேலே தேங்காய் துருவலோடு முடிக்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மிதமான தீயில் வேக வைத்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புட்டுக் குடத்திலோ அல்லது இட்லி பாத்திரத்திலோ தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். அதன் மேல் புட்டுக் குழாயை வைத்து, மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும். புட்டின் நறுமணமும் மாம்பழத்தின் வாசமும் இணைந்து வரும்போது அடுப்பை அணைத்துவிடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆரோக்கிய நன்மைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, செரிமானத்திற்கும் நல்லது. ஆவியில் வேக வைக்கப்படுவதால் இந்த உணவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு மாம்பழத்தை அப்படியே கொடுப்பதற்குப் பதிலாக, இப்படிப் புட்டாகச் செய்து கொடுத்தால் தட்டே காலியாகிவிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூடான மாம்பழப் புட்டின் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, கூடுதலாகச் சில மாம்பழத் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறினால் அதன் சுவை சொர்க்கமாக இருக்கும். இந்த கோடை கால மாலை நேரத்திற்கு இது ஒரு கச்சிதமான பலகாரம். நீங்களும் உடனே உங்கள் வீட்டில் இதைச் செய்து பார்த்து அசத்துங்கள்!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/1dbe8e4ba13407292aab0c07d3acb2251784088676277733_original.png" width="220"/></item><item><title><![CDATA[Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/sitting-continuously-for-more-than-half-an-hour-increases-risk-of-cancer-new-research-is-causing-concern-life-style-news-267173</link><comments>https://tamil.abplive.com/lifestyle/sitting-continuously-for-more-than-half-an-hour-increases-risk-of-cancer-new-research-is-causing-concern-life-style-news-267173#respond</comments><pubDate>Sun, 12 Jul 2026 12:25:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/sitting-continuously-for-more-than-half-an-hour-increases-risk-of-cancer-new-research-is-causing-concern-life-style-news-267173</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Cancer Risk:&lt;/strong&gt; புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் தொடர்பான புதிய மருத்துவ ஆய்வறிக்கையின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;புற்றுநோய் அபாயம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அலுவலகத்தில் கணினிக்கு முன்னால் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, வீட்டிலிருந்து வேலை செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது கைபேசிகளில் நேரத்தைச் செலவிடுவது போன்றவை மக்களின் அன்றாட பழக்கங்களாகிவிட்டன. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​ஒரு புதிய ஆய்வின்படி, 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் எழாமல் உட்கார்ந்திருப்பது புற்றுநோயால் இறக்கும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/why-do-many-planes-skip-seat-13-know-details-in-pics-267169&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;12 ஆண்டுகளாக உடல்நலக் கண்காணிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு, PLOS மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, UK பயோபேங்கில் பதிவுசெய்த 91,000-க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்தது. குறிப்பாக, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் உடற்பயிற்சி செய்த நேரம் உட்பட, அவர்களின் உண்மையான உடல் செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக, ஒரு வாரம் அணிவதற்கு மணிக்கட்டு டிராக்கர்களும் வழங்கப்பட்டன. பின்னர், சுமார் 12 ஆண்டுகளுக்கு அவர்களின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GTRItW1jyqw?si=O4_WPceLXG73pl-n&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;யாருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நாள் முழுவதும் தொடர்ந்து 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் அமர்ந்திருப்பவர்களுக்குப் புற்றுநோயால் இறக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் இந்த அபாயம் சுமார் 9 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. சுவாரஸ்யமாக, நாள் முழுவதும் அமர்ந்திருக்கும் மொத்த நேரத்தை விட, எழாமல் அமர்ந்திருக்கும் நேரமே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த ஆய்வில் சில நல்ல செய்திகளும் உள்ளன. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, இடையில் இலகுவான செயல்களைச் செய்வது ஆபத்தைக் குறைக்கும். ஆய்வின்படி, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஒரு சிறிய நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் அல்லது நடமாடுவது போன்ற இலகுவான உடல் செயல்பாடுகளைச் செய்வது, புற்றுநோய் இறப்பு அபாயத்தை சுமார் 12 சதவிகிதம் குறைக்கும். அதே நேரத்தில், சுமார் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது போன்ற செயல்பாடுகள் இந்த அபாயத்தை சுமார் 8 சதவிகிதம் குறைக்கும். மேலும், வெறும் 5 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்வது கூட, புற்றுநோய் இறப்பு அபாயத்தை 22 சதவிகிதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?&quot; href=&quot;https://tamil.abplive.com/education/first-in-5-years-tamil-nadus-mbbs-seats-up-by-100-awaiting-approval-for-an-additional-50-seats-to-tiruvallur-govt-medical-college-267161&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறை மூத்த விரிவுரையாளரான டாக்டர் ஃபிரடெரிக் ஹோ இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கினார். மக்கள் வழக்கமான உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல், தங்கள் உட்காரும் பழக்கங்களை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஒருவரால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் எழுந்து சில நிமிடங்கள் நடப்பது அல்லது இலகுவான செயல்களில் ஈடுபடுவது நன்மை பயக்கும் என்கிறார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது தசை செயல்பாட்டைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது ரத்த சர்க்கரை சமநிலையைக் குலைக்கிறது, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது, மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை வேகப்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆய்வு ஒரு தொடர்பை மட்டுமே காட்டுகிறது என்றும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது நேரடியாக புற்றுநோய் இறப்புகளுக்குக் காரணம் என்பதை இது நிரூபிக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; இந்தத் தகவல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் நிபுணர் கருத்தின் அடிப்படையில் அமைந்தது. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. எந்தவொரு புதிய செயலையும் தொடங்குவதற்கு முன், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.&lt;/em&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/f30300eee586e36aab08684b56681f891783839128752732_original.jpg" width="220"/></item></channel></rss>