தந்தையின் மனசோர்வு அவரின் குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவின் சோகமான மனநிலை குழந்தையின் இளமைப்பருவத்தில் அவர்களின் மனசோர்வையும் அதிகரிக்கும். மேலும் பெற்றோரின் மனசோர்வு குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை மேலும் அதிகரிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ‘டெவலப்மென்ட் அண்ட் சைக்கோபாதாலஜி’ இதழில் தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ச்சி தரும் ஆய்வு : சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை நிதியுதவி பெற்ற ஆசிரிய உறுப்பினர் மற்றும் உளவியல் மற்றும் மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகளின் புகழ்பெற்ற பேராசிரியரும் Jenae Neiderhiser இந்த பிரச்சனை குறித்த தனது கருத்தினை தெரிவிக்கையில், பல ஆராய்ச்சிகள் உயிரியல் ரீதியாக தொடர்புடைய குடும்பங்களுக்குள் ஏற்படும் மனசோர்வை மையமாக வைத்து ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய சூழலில் தத்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது கலப்பு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தகவல்கள் அவர்களின் மூலம் பெறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்