குளிர்காலத்தில் தலைமுடி அதிகம் வறண்டு போகும். அத்தகைய நிலையில், உலர்ந்த மற்றும் கரடுமுரடான தலைமுடிப் பிரச்சனைகளில் இருந்து விடுபட பல விலையுயர்ந்த தலைமுடி பராமரிப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், இவை இரசாயன பொருட்களே மேலும் அவை எந்த வகையிலும் பயனுள்ளதாகவும் இருக்காது. ஆனால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்கள் இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், எந்த பக்க விளைவுகளும் இல்லை. 
 அதனால் இரசாயனம் அல்லாத ஷாம்பூவை தேங்காய்ப்பாலைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இந்த ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, பட்டுப்போன்ற, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடியை உங்களுக்கு வழங்கும்.


பால் புரதங்களின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது, இது தோல் மற்றும் முடிக்கு சரியான ஈரப்பதமூட்டும் பொருளாகவும் உள்ளது. மறுபுறம், தேங்காய் பாலில் இருந்து வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஷாம்பு உங்கள் தலைமுடியை சிறப்பாக கவனிப்பதற்கும், பல முடி பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்கும். இதிலே இயற்கையாகவே ஈரப்பதம் இருப்பதால் கண்டிஷனர் தனியாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எனவே வீட்டிலேயே தேங்காய் பால் ஷாம்பு தயாரிப்பதற்கான உதவிக்குறிப்புகளை அறிந்து கொள்வோம், இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கலாம். 


தேங்காய் பால் ஷாம்பு செய்ய தேவையான பொருட்கள்


தேங்காய் பால் ஷாம்பு செய்ய, அரை கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் 2 சொட்டு தேயிலை மர எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.


தேங்காய் பால் ஷாம்பு செய்வது எப்படி?


தேங்காய் பால் ஷாம்பு செய்ய, முதலில் அரை கப் தேங்காய் பால் மற்றும் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் ஒரு மிக்ஸியில் சேர்த்துக் கிளறவும். இப்போது, இதனுடன் 2 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் வீட்டிலேயே இயற்கையான தேங்காய்ப் பால் ஷாம்பு தயார். இதனை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.


தேங்காய் பால் ஷாம்பூவை எவ்வாறு பயன்படுத்துவது


தேங்காய் பால் ஷாம்பூவைப் பயன்படுத்த, வெதுவெதுப்பான நீரில் முடியை ஈரப்படுத்தவும். இப்போது தேங்காய் பால் ஷாம்பூவை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவி, பின் கைகளால் தலையை லேசாகப் 10 நிமிடம் மசாஜ் செய்யவும். இப்போது உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, நன்கு துவட்டி உலர வைக்கவும்.தேங்காய் பால் ஷாம்பூவை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலைமுடியில் பயன்படுத்தி வர...சிறப்பான பலன் கிடைக்கும், தலைமுடியும் நன்கு மெருகூட்டத்துடன் இருக்கும்!