கன்னாபின்னாவென ஆட்டம்போட்ட உலக அரசுகளைக்கூட சின்னாபின்னமாக்கி, ஆட்டம் காட்டிவருகிறது, உயிர்க்கொல்லி கொரோனா துயரம். மருத்துவ வல்லுநர்களுக்கே சவால் விடும்படியாக இருக்கின்றன, கொரோனா உண்டாக்கும் புதுப் புது நோய்களும் உடல், மனக் கோளாறுகளும். இதில், ரத்த சர்க்கரை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் ஆபத்தும் முக்கியமானது.
ஆனால், இவை எதுவும் அன்றாட வாழ்க்கையோட்டத்தில் பெரிய சிக்கலாகவோ உயிரிழப்பு ஆபத்தாகவோ உருவாகவில்லை. இந்தியாவில் முதல் அலையைவிட இரண்டாவது அலையின்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவும் குறுகிய காலத்திலும் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் படிப்படியாக அதிகரித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மே மாதம் உச்சத்துக்குச் சென்றது. இந்த அலையில், அன்றாடத் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துவருவது ஒரு புறம் இருக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இந்திய அளவிலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் மாநில அளவிலும் பொதுவாகவே இந்த நிலையைப் பார்க்கமுடிகிறது. இதற்கு முக்கிய காரணம், தொற்று ஏற்பட்டவருக்கு கொரோனா கிருமியால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல் மட்டும் இல்லாமல், உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இதய அறுவை செய்தது போன்ற கூடுதல் சிக்கல்களும் மரணம்வரை கொண்டுபோய் விட்டுவிடுகின்றன. இரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை இதில் முக்கியமான காரணங்கள்.
கோவிட் சிகிச்சை மையங்களில் தினமும் ஒரு முறையாவது நோயாளிக்கு உணவுக்கு முன்னரும் பின்னரும் இரண்டு முறை இரத்த சர்க்கரை அளவை எடுக்கவேண்டும்; சர்க்கரை நோய் உறுதிசெய்யப்படும் யாருக்கும் அதற்குரிய உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில், நோயாளிகள் விரைவில் நலமடைய வேண்டுமானால் உணவு நேரத்தையும் அளவையும் கறாராகக் கடைப்பிடிப்பது அவசியம்.” என்று கூறியிருக்கிறார், தேசிய சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர், மருத்துவர் நிபன் ஜிண்டால்.