மனதின் உற்சாகத்திற்கு ஏற்ப உடலை ரிதம் போட வைக்க சில டிடாக்ஸ் பானங்களை உங்களைக்கு அறிமுகப்படுத்துகிறோம்.


தண்ணீர்


தண்ணீர் உண்மையிலேயே உயிரின் அமுதம் என்றால் அது மிகையாகாது தான். உங்கள் உடலில் நீர்ச்சத்தை பேண தண்ணீர் அருந்துவது அவசியம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. போதுமான தண்ணீர் குடிப்பது சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் அதன் உயிரணுக்களுக்குள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், செரிமானத்திற்கு உதவவும் இதைப் பயன்படுத்துகிறது.


மேலும், இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது, உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டுகளை மெருகேற்றவும், ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும் நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிப்பது முக்கியம்.


சரியான வழி இருக்கிறது." உதாரணத்துக்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மூட்டுவலியைத் தூண்டும் மற்றும் உடல் அமைப்பின் வழியாக நீர் பயணிக்கும் வேகம் அதிகரிக்கும் போது நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.


தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி இருக்கிறது. முதலில் நேராக அமர்ந்தபடி உட்கொள்வது அவசியம். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தை சமாளிக்கிறது. மேலும் செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படு. தாமிரத்தின் குளிர்ச்சியான பண்புகள் உடலை நச்சு நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் இரத்த சோகையைக் குறைக்கவும் உதவுகிறது.


ப்ரோபயாடிக் பானம்


இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.


நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். 
தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு. இவை உடலில் இருந்து நச்சை வெளியேற்றும்.


தேங்காய் தண்ணீர்


தண்ணீர் நம் உடலில் நீர்ச்சத்தை காக்கவும், ஜீரணத்துக்கும் அவசியமாகும் சூழலில் தேங்காய் தண்ணீர் உடலில் எலக்ட்ரோலைட்ஸை சேர்க்கிறது. தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதனால் அதனை தொடர்ந்து குடிப்பதன் மூலம் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் செரிமான பிரச்சனை குணமடையும். தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


முட்டை


உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய முட்டைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் முட்டைக்கு மனம் மயங்காத ஆட்கள் இருக்க முடியாது. இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை தவிர்ப்பவர்கள் கூட, ‘எக்கீடேரியன்’ (முட்டை மட்டும் சாப்பிடுபவர்) என வலம் வருவது உண்டு. ஆகையால் பார்ட்டி கொண்டாட்டங்களுக்குப் பின்னர் நல்ல ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் உணவை ஆரம்பிக்கும்போது முட்டையுடன் தொடங்கினால் நல்லதொரு புத்துணர்ச்சி கிடைக்கும்.


இஞ்சி தேநீர்


2 கப் தண்ணீரில் 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து, சுவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, சுடச்சுட ஒரு கப் இஞ்சி தேநீர் அருந்துவது, மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உங்கள் உடலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பயனளிக்கும். ஆண்டு இறுதியின் விற்பனை டிசம்பர் 25 முதல் 31 வரை- லேப்டாப்ஸ் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 45% வரை தள்ளுபடி மனமோ, உடலோ சோர்வாக இருக்கும் போது சுவையான உணவும் பானமும் புத்துணர்ச்சியளிக்கும். அந்த வகையில், இஞ்சி தேநீர் சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானது கூட.