அளவுக்கு அதிகமாக உணவு எடுத்து கொண்டாலே, விருந்துக்கு சென்று பிடித்த உணவுகளை எடுத்து கொண்டாலோ, ஹோட்டல் சென்று பிடித்த பல வகை உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டாலோ, வயிறு உப்புசம் வரும். சிலருக்கு வயிறு புண் காரணமாக கூட வயிறு உப்புசம் பிரச்சனை வரும். சில உணவுகள் கூட வயிறு உப்புசம் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை சரி செய்ய சில எளிமையான டிப்ஸ் இங்கே


தயிர் - தயிர் அல்லது மோர் வயிறு உப்புசம் பிரச்சனையை தீர்க்கும் சிறந்த உணவாகும். இது குடலில் இருக்கும் நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவியாக இருக்கும். செரிமான சக்தியை அதிகபடுத்தும். மேலும், உணவு செரிமானம் அடைந்து வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.




வெள்ளரிக்காய் - நீர் சத்து அதிகம் இருக்கும் காய்கள் பழங்கள் எடுத்து கொள்வது, வயிறு உப்புசம் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காய், தர்பூசணி, அன்னாசிப்பழம், திராட்சை வயிறு உப்புசம் குறைக்க உதவும். வயிறு உப்புசம் வரமால் தடுக்கும். இந்த பழங்களை ஸ்னாக்ஸ் ஆக எடுத்து கொள்ளலாம்.




இஞ்சி - இஞ்சி கஷாயம், இஞ்சி டீ போன்றவை எடுத்து கொள்வது, வயிறு உப்புசம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் இது செரிமானத்தை துரித படுத்தும். குடல் தசை இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.




வாழை பழம் - இதில் பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. வாழை பழம் சாப்பிடுவது, உப்புசம் பிரச்சனையை




தீர்க்கும்.சாப்பிட்டு முடிந்த 1 மணி நேரத்தில் எடுத்து கொள்ளலாம். சிலர் மூச்சு முட்ட முட்ட சாப்பிட்டு பின்னர் அவதி படுவார்கள். அந்த பிரச்சனைக்கு வாழை பழம் சிறந்த தீர்வு




எலுமிச்சை - எலுமிச்சை ஜூஸ் உடன் உப்பு சேர்த்து குடிப்பது, வயிறு உப்புசம் சரி செய்ய உதவும். இதில் சோடா சேர்க்காமல் வெறும் எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து குடிப்பது நல்லது.


இந்த உணவுகள் வயிறு உப்புசத்தை குறைக்கும். இருக்கும் இடத்தில் மேலே சொன்ன ஏதும் கிடைக்கவில்லை, என்ன செய்வது என்ற கேட்டால், சுடுதண்ணீர் போதுமானது. சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சுடுதண்ணீர் குடிப்பது நல்லது. இது செரிமானத்திற்கு தேவையான அமிலம் சுரப்பதை அதிகப்படுத்தும். அதனால் செரிமானம் அதிகமாகும். வயிறு உப்புசம் குறையும்.


மேலும், வயிறு புண், செரிமானமின்மை, கல்லீரல் பிரச்சனை , சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளாலும், இந்த வயிறு உப்புசம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகளால் அவதியுறுகின்றவராக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும். எந்த ஒரு சின்ன அறிகுறியும், நாளடைவில் மற்றொரு வியாதியாக மாறுகிறது. ஆரம்ப நிலையில் மருத்துவம் எடுத்து கொள்வது சிறந்தது.