ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? சட்ட அதிகாரி, மேனேஜர், உதவி மேனேஜர் பதவிகள்: உடனே விண்ணப்பியுங்கள்!
RESERVE BANK - பாதுகாப்பு பிரிவு உதவி மேனேஜர் பதவிக்கு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
ரிசர்வ் வங்கியில் பணி செய்ய விருப்பமுள்ளவர்கள், சட்டம், பொறியியல் படிப்பு முடித்திருப்பவர்கள், சட்ட அதிகாரி, மேனேஜர், உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான பணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மொத்தம் 21 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
அமைப்பின் பெயர் - ரிசர்வ் வங்கி
பதவியின் பெயர் - சட்ட அதிகாரி கிரேடு - பி , மேனேஜர் கிரேடு - பி, உதவி மேனேஜர் கிரேடு - ஏ
காலிப்பணியிடங்கள் - 21
இதற்கான விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் - https://opportunities.rbi.org.in/
அறிவிப்பு - ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2026
பதவியின் பெயர் மற்றும் எண்ணிக்கை விபரங்கள்
சட்ட அதிகாரி - 6
மேனேஜர் (சிவில்) - 2
மேனேஜர் (எலெக்ட்ரிக்கல்) - 1
உதவி மேனேஜர் (ராஜ்பாஷா) - 4
உதவி மேனேஜர் (பாதுகாப்பு) - 8
மொத்தம் - 21
பணியில் சேர விருப்பமுள்ளவர்களின் தகுதிகள்:
2026 பிப்ரவரி 1-ம் தேதியின்படி, இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. சட்ட அதிகாரி பதவிக்கு 21 முதல் 32 வரையும், மேனேஜர் பதவிக்கு 21 முதல் 35 வரையும், உதவி மேனேஜர் (ராஜ்பாஷா) பதவிக்கு 30 வரையும், பாதுகாப்பு பிரிவு உதவி மேனேஜர் பதவிக்கு 40 வயது வரையும் இருக்கலாம். சட்ட அதிகாரி பதவிக்கு இளங்கலை சட்டப்படிப்பை 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் வழங்கறிஞராக, சட்ட அதிகாரி அல்லது ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.
மேனேஜர் பதவிகளுக்கு சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை. ராஜ்பாஷா உதவி மேனேஜர் பதவிக்கு இந்தி மொழியை கொண்டு முதுகலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவு உதவி மேனேஜர் பதவிக்கு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
கிரேடு -ஏ பதவிகளுக்கு அடிப்படை சம்பளம் ரூ.62,500 ஆகும். ரூ.62,500 முதல் ரூ.1,26,100 வழங்கப்படும்.
கிரேடு-பி பதவிகளுக்கு ரூ.78,450 முதல் ரூ.1,41,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை, இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள். பதவிக்கு ஏற்ப எழுத்துத் தேர்வு அமைப்பு வடிவமைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வில் தேர்வாகும் நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் அறிவிப்பில் வெளியாகியுள்ளது. சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை , ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பிற்கு https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு மார்ச் 14-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100 வழங்கப்படும். ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
முக்கிய நாட்கள் மற்றும் தேதி விபரங்கள்,
விண்ணப்பிக்க கடைசி நாள் - 26.02.2026
எழுத்துத் தேர்வு - 14.03.2026
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். ரிசர்வ் வங்கியில் அதிக சம்பளத்தில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு ஆர்வமும் உரிய தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். பணிக்கான தன்மை மற்றும் தேர்வு பாடத்திட்டம் ஆகியவற்றை குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.























